Tag: மாங்குளத்தில்
மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு
மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு
மாங்குளத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ,முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள
தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு
தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று சனிக்கிழமை (04) அடையாளம் காணப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஞாயிற்றுக்கிழமை (05) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியில் ஒரு பகுதி பற்றைக் காடாக காணப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் நபர் ஒருவர்
உயிரிழந்து பல நாட்களாகிய நிலையில் எலும்புக்கூடு மாத்திரம் காணப்பட்டுள்ளது
சனிக்கிழமை (04) மாலை குறித்த பகுதிக்கு சென்ற நபர் ஒருவர் அதனை அவதானித்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார்
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் பொலிஸார் குறித்த பகுதியில் இருந்த மனித உடலின் எச்சங்கள் பொருட்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி திருமதி நேரோஜினி ஆர்த்தனன் குறித்த எலும்புக்கூட்டு தொகுதியை
பார்வையிட்ட பின்னர் பதில் நீதிபதி முன்னிலையில் சட்ட வைத்திய அதிகாரி தடயவியல் பொலிஸார் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த எலும்புக்கூடு
பாகங்கள் மற்றும் தடய பொருட்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த காணியில் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் சிறு தொகை பணம் நஞ்சு மருந்து கான் ஆடைகள் என்பன குறித்த இடத்தில் காணப்பட்டதோடு
பல நாட்களான நிலையில் மனித உடற்பகுதிகள் நாய்கள் மற்றும் இதர விலங்குகளால் சிதறடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது
இந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து மூவர் மரணம் ,மாங்குளத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர்சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிக சொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ,மாங்குளம் பனிக்கம் நீராவி பகுதியில் தரித்து நின்றுள்ளது .
அதன் பொழுது பேருந்துக்கு பின்புறத்தில் இருந்து மூன்று பேர் உரையாடி கொண்டு இருந்துள்ளனர் .
லொறி பேரூந்தின் பின்புறத்தில் மோதியது
வேகமாக வந்த லொறி அவ்வேளை பேரூந்தின் பின்புறத்தில் மோதியது .
இதன்போது அதிலிருந்து மூன்று பெரும் தூக்கி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர் ,பேருந்து பின்புறம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த பேரூந்து விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு விதிமுறைகளை உள்வாங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே இந்த விபத்தை ஏற்பட்டுள்ளதாக ஒரு தர தகவல் தெரிவிக்கின்றது .
எனினும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ,அவர்கள் தரும் தகவலை அடிப்படையில் யார் மீது தவறு என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் பேருந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சாரதிகளின் அலட்சியின்மையை காரணம்
இது சாரதிகளின் அலட்சியின்மையை காரணமாகவும் , வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து நமது தமிழர்கள் வீதிகளை உலாவி வருவதும் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மதிக்க மறப்பதே இந்த வீதி விபத்து அதிகமாக இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நாள்தோறும் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு இலங்கை போலீசார் தவறான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதன் காரணமாக.
இவ்வாறான தவறான வீதி விபத்துக்கள் தொடராக இடம் பெற காரணம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.














