Tag: விஜய்
இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்
இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்
இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம் ,இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக
ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத்
தலையிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

முதலமைச்சர் விஜய்-யின் முதல் உரை.. | CM Vijay Full Speech
முதலமைச்சர் விஜய்-யின் முதல் உரை.. | CM Vijay Full Speech
முதலமைச்சர் விஜய்-யின் முதல் உரை.. | CM Vijay Full Speechதமிழக முதல்மசஹாராக தமிழ் திரையுலக நடிகர் விஜய் அவர்கள் பதவி ஏற்றுள்ளார் ,வறுமை மற்றும் பசி என்றால் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என முதல் அமைச்சர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார் .
இதில் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க போகிறேன் ,தமிழக அரசு கஜானவை வழித்து துடைத்து விட்டு சென்றுள்ளார்கள் என திராவிட முன்னேற்ற கழகத்திற்கு விஜய் சாட்டை அடி கொடுத்துள்ளார் .
நேரு அரங்கம் விசில் அடியாள் அலறியது .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு
ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு
ஆலோசனை கூட்டத்திற்கு முன் விஜய்யுடன் ஆனந்த் பேச்சு ,தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதன்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம்பிடித்து உள்ளது.
இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய்,
இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய், ஆளுநர் அர்லேகரை சந்தித்து த.வெ.க.வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.
ஆனால் ஆளுநர் அர்லேகர், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால்,
118 எம்.எல்.ஏ.க்கள் பெயர் பட்டியலை வழங்கினால்தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளிடம் ஆதரவு
கேட்டு விஜய் கடிதம் எழுதினார். மேலும் த.வெ.க. நிர்வாகிகளை நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று 5 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி மட்டும் த.வெ.க.வுக்கு கைகொடுத்தது. மற்ற கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசித்து இன்று முக்கிய முடிவை அறிவிக்க உள்ளனர்.
தவெக தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு
இந்நிலையில், தவெக தலைவர் விஜயின் நீலாங்கரை இல்லத்திற்கு சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தவெக எம்.எல்.ஏக்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு முன்பு விஜயை சந்தித்து அவர் பேசினார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்
விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல், இலங்கையுடன் மேலும் நேர்மறையான உறவுக்கு அழைப்பு விடுத்தார்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் “மகத்தான வெற்றி” பெற்றதாக வர்ணித்த இந்திய நடிகரும் அரசியல்வாதியுமான ஜோசப் விஜய் சந்திரசேகருக்கு,
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட அவர், “உண்மையான பணி இப்போதுதான் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டதோடு, வரவிருக்கும்
சவால்களை வென்று மக்களுக்கு அர்த்தமுள்ள பலன்களை வழங்குவதற்கான வலிமையையும் உறுதியையும் விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் வழங்க வாழ்த்தினார்.
இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் விடயங்களில்
இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் விடயங்களில் “இலங்கையுடன் வலுவான மற்றும் நேர்மறையான உறவு” ஏற்பட வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
விஜய்க்கும் அவரது குழுவினருக்கும் தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய

- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை

- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு

- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு

- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்திக்கிறார் விஜய்
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்திக்கிறார் விஜய்
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை சந்திக்கிறார் விஜய் ,கரூரில் த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை
விஜய் திட்டமிட்டுள்ளார்
பனையூருக்கு வரவழைத்து சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் கடந்த செப்ரெம்பர் .27 இல் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிந்தனர். 110 பேர் காயமடைந்தனர்.
தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கிடையில், கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கிக் கணக்கில் தவெக சார்பில் தலா 20 லட்சம் இந்திய ரூபா வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
இதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய உள்ளூர் த.வெ.க. நிர்வாகிகள், “கரூரில் மண்டபம் கிடைக்காததால் விஜய் வரமுடியவில்லை.
இதனால், பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து வசதி செய்து கொடுத்தால் வருவீர்களா?” என்று கேட்டறிந்தனர். எனினும், இதற்கான திகதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது
விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்
விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்
விஜய் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம் ,த.வெ.க. நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர்.
கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு
இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 27 ஆம் திகதி த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக கரூர் நகர பொலிஸ் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்துள்ளார்
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய் ,விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்
தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடந்த தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார்.
“உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எங்கள் உறவினர்களான ஈழத் தமிழ் மக்கள், தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, அவர்களுக்காகப் பேசுவது எங்கள் கடமை.”எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாகப்பட்டினம் போன்ற பெரிய கடற்றொழில் சமூகம் உள்ள பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய்
2008 ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அரசியல்
விமர்சகர்கள் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரபாகரனைப் புகழ்வதைத் தவிர, கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தனது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று விஜய் கூறினார். மேலும், எம்.கே. ஸ்டாலின் அரசாங்கத்தையும் விமர்சித்த அவர்,
மீன்பிடிப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது கட்சி நீண்ட கடிதங்களை எழுதாது, மாறாக தீர்வுகளைத் தேடும் என்றும் கூறினார்.
“கடற்றொழிலார்களின் உயிர்கள் முக்கியம். ஆனால் ஈழத் தமிழர்களின் உயிர்களும் எங்களுக்கு சமமாக முக்கியம்” என்று கூறி முடித்தார்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய் ,நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு 40 இந்திய ரூபா என பல கோடி ரூபாய் கொமிஷனாகப் பெறப்படுகிறது.
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்,
டெல்டா பகுதியில இருக்கற விவசாயிங்க ஒரு கொடுமைய அனுபவச்சிகிட்டு இருக்காங்க. அதுபற்றி புகார் ஒன்று வந்தது.
அது என்னன்னா, இந்த மாவட்டத்துல இருக்கிற நெல் கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டைக்கு 10 ரூபா கொடுக்கறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபா கொமிஷன் வாங்கறாங்க.
ஒரு டன்னுக்கு 1,000 ரூபா கொமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, கடந்த நான்கரை வருடங்கள்ல இந்த டெல்டா பகுதி விவசாயிங்க கிட்ட இருந்து கொமிஷனா பல கோடி புடுங்கி இருக்காங்க.
இதை வேற யாராவது சொல்லி இருந்தாகூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஆனா, எங்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க.
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க. தீர்வைத் தேடி தீர்வை நோக்கி போவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சியமே.
எங்கள் தேர்தல் அறிக்கையில் இதை விளக்கமாக தெரிவிப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம்.
எது நடப்பதற்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டுமே சொல்லுவோம், அதை செய்வோம் என்றார்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார் ,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்தது
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள்
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை – நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்,
தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம்.
இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
விஜய்யின் வீட்டு வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர், மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் அமர்ந்திருந்ததை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கவனித்துள்ளனர்.
அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
பின்னர் அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிடிபட்ட அந்த இளைஞரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம்
பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை பொலிஸார் சேர்த்தனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பை மீறி அந்த இளைஞர் விஜய் வீட்டுக்குள் நுழைந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்
விஜய் திருச்சியில் இன்றுபிரச்சாரம்
விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம் ,தமிழ் திரைப்பட நடிகர் விஜய் திருச்சியில் இன்று சூறாவளி பிரச்சாரம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.Vijay campaigning in Trichy today
தீவிர பிரச்சார பணி Intensive propaganda work
தேர்தலை மையப்படுத்தி தற்பொழுது கட்சிகள் தமது தீவிர பிரச்சார பணிகளை ஆரம்பித்துள்ளார்கள் .
அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் தனது கட்சி சார்பாக பரப்புரையை மேற்கொள்ள உள்ளார் .
மேலும் அண்ணா எம்ஜிஆர்க்கு நடுவில் விஜய் இருப்பது போன்ற படமும் பேருந்தில் ஓட்டப்பட்டு இந்த தேர்தல் பரப்புரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் Tamil Nadu Victory Club President Vijay
மிக பெரும் வெற்றியை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெற்றுக்கொள்வார் என நம்பப்படுகிறது.
ரசிகர் கூட்டத்தை நம்பி தேர்தல் இறங்கும் நடிகர் விஜய் இந்த தேர்தல் வெற்றி பெற்றால் அவருக்கு பலம் உண்டு.
அவர் இல்லாவிட்டால் தமிழகத்தில் இனி வரும் காலங்களில் எந்த நடிகரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்பதற்கு இது முன்னுதாரணமாக விளங்கும்.
இம்முறை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்
விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான்
விஜய்யுடன் கூட்டணி வைப்பேன் சீமான் ,2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் அவர்கள் வந்தால் என்னுடன் ஒன்றிணைந்தால் ,
அவருடன் கூட்டணி வைத்து நாங்கள் இருவரும் ஒன்றாக களத்தில் நிற்பதற்கு நான் தயக்கம் காட்ட மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .
சீமானுடன் விஜய் கூட்டணி வைத்து புதிய தேர்தலை சந்திப்பார் எனவும் ,கூட்டணி ஆட்சியை தமிழகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் 40 விழுக்காடு வாக்களி பெறுவதற்கான வாய்ப்புகள் விஜய் சீமான் இணைந்தால் நடப்பதற்கு சாத்தியம் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர் .
சீமான் விஜய் கூட்டணி தெறிக்கும் தமிழகம்
அதன் அடிப்படையில் தற்போது சீமானுடன் விஜய் சேதுவார் என்ற தகவல் இந்தியாவை தமிழகத்தை கொளுத்தி போட்ட வருகின்றது .
விஜய் ரசிகர் மத்தியில் சீமானுக்கான ஆதரவும் ,தற்போது இதன் ஊடாக பெருகி வருவதாக தெரிய வருகின்றது .
மக்களவைத் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்று சாதித்து நிற்கின்றார், சட்டமன்ற தேர்தலில் 25 வீதத்திற்கு க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி நிலைக்கு அல்லது சட்டமன்றத்தில் நுழைந்து அங்கு பெறும் கலவரங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக நம்பப்படுகிறது.
அது உச்ச நம்பிக்கையுடன் காணப்படும் சீமான் கூட்டிணைந்தால் அதுவே தமிழகத்தில் உள்ள ஏனைய காட்சிகளுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .
எனவும் அவர்களால் இவர்களுக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் ,பணத்தை கொடுத்து ஆட்சியில் இணைந்த இவர்கள் காணாமல் ஆக்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்க படுகிறது .
அதனால் விஜய் சீமானுக்கு கூட்டணி தொடர்பாக தற்பொழுது தமிழகமே அலறிக் கொண்டிருக்கின்றது.
- எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

- திருச்சியில் திரண்ட மக்கள்படை சீமான் ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்

- நான் தேர்தலில் நிற்கிறேன் சீமான் அதிரடி பேட்டி

- திமுக கூட்டணியில் தேமுதிக சீமான் கொடுத்த நச் பதில்

- தவெக Vs நாம் தமிழருக்குதான் போட்டியா தெறிக்கும் சீமானின் பதில்கள்

- தண்ணீர் மாநாடு – சீமான் உயிரின் உரை

- அண்ணன் வாறான் அண்ணன் சீமான் வாறாண் |Annan Varan Annan Seeman Vaaran|சீமான் புதிய பாடல்

- நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் சீமான்

- தீயாக பேசிய சீமான்

- அணில் ஏன் UNCLE என கத்துகிறது சீமான்

- விஜய் மாநாடு விவகாரம் சீமான் பரபரப்பு

- மரங்களின் மாபெரும் மாநாடு Seeman latest news

- மே18 சீமான் தலைமையில் பேரெழுச்சி

- விஜய் கூட்டணி சீமான் பேச்சு

- சீமான் செய்தியாளர் சந்திப்பு

தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்
தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய்
நாட்டுக்கு முக்கியமான நல்ல தலைவர்களை தேர்ந்தெடுங்க விஜய் இப்படி மக்கள் மத்தியில் தனது விருப்பை தெரிவித்துள்ளார் .
விஜய் பேச்சு ஒரு பகுதி கீழே
இந்த சந்தர்ப்பத்துல நான் என்னுடைய ஒரு சின்னதா ஒரு கேரியர் உங்ககிட்ட ஷேர் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன்.
பொதுவா நம்ம வந்து ஒரு தொறையை தேர்ந்தெடுக்கும் போது அதில் எவ்வளவு டிமெண்ட் இருக்கு அப்படின்னு பார்ப்போம் இல்லையா.
சூப்பர் எக்ஸாம்பிள் மருத்துவம் பொறியியல் மட்டும் தான் நல்ல ஃபீல்ட்ன்னு சொல்ல முடியாது .
இன்னும் சொல்லப்போனால் நம் தமிழ்நாட்டில உலகத்துல டாக்டர் இன்ஜினியர்ஸ் லாயர்ஸ் எல்லாம் அதிகமாக இருக்காங்க .

இங்க நம்ம கிட்ட என்ன இல்ல அப்படின்னா, இங்க நமக்கு எது இன்னும் அதிகமா தேவைப்படுது அப்படின்னா,
அரசியல் தலைவரா நீங்க வாங்க விஜய்
நல்ல தலைவர்கள், நாம் தலைவர்கள்ன்னு சொன்னது, வெறும் அரசியல் ரீதியாக மட்டும் சொல்லல ,
இப்ப நீங்க ஒரு துறைக்கு போறீங்க ,அதுல நீங்க சிறந்து விளங்கினீங்கன்னா அந்த ஒரு தலைமை இடத்துக்கு உங்களால் ஈஸியா வர முடியும் அதைத்தான் நான் சொன்னேன் .
இன்னும் நமக்கு நிறைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்று ,அது மட்டும் இல்ல எதிர் காலத்தில , அரசியலும் ஏன் வந்து ஒரு கேரியர் ஆப்ஷனா வரக்கூடாது .
அப்படி வரணும்ன்றது என்னுடைய விருப்பம் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,உங்கள தான் கேட்கிறேன் ,நல்லா படிச்சவங்க அரசியலுக்கு வரணுமா வேண்டாமா ,
நல்லா படிச்சவங்க தலைவர்களாக வரணுமா வேண்டாமா ,அதே மாதிரி நீங்க படிக்கும்போதே மறைமுகமாகவே நீங்க அரசியல்ல ஈடுபட முடியம் .
எப்படின்னா ரொம்ப சிம்பிள் ,நீங்க ஒன்னும் இல்ல நீங்க டெய்லி இந்த நியூஸ் பேப்பர்ல படிங்களேன்,
தலைவர் நான் தான் சிரிச்ச படி சொன்ன விஜய்
படிக்க படிக்க உங்களுக்கே தெரியும் ,ஒரே செய்தியை ஒரு நியூஸ் பேப்பர் ஒரு மாதிரி எழுதுவாங்க ,
அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்ப,ர் இன்னொரு மாதிரி எழுதுவாங்க ,ஒரு செய்தியை ஒரு நியூஸ் பேப்பர்ல, ஃப்ரண்ட் பேஜ்ல ஹெட்லைன்ஸில் போடுவாங்க
அதே செய்தியை இன்னொரு நியூஸ் பேப்பர்ல, கடைசி பக்கத்துல கூட போட மாட்டாங்க .
நியூஸ் வேற, ஒப்பினியன் வேற, செய்தி வேற ,கருத்து வேறங்குறது, உங்க எல்லாருக்குமே தெரியவரும் .
இப்ப எல்லாம் பார்த்தீங்கன்னா ,நிறைய இந்த மெயின் ஸ்ட்ரீம் மீடியாவுக்கு ஈக்வலா நிறைய அந்த சோசியல் மீடியா சேனல்ஸ் எல்லாம் ,இந்த நல்லது கேட்டது இந்த ஒப்பினையெல்லாம் கிரியேட் பண்றாங்க.
மக்கள் கூட்டத்தை கண்டு மிரண்ட விஜய்
அதெல்லாம் நீங்க பாத்தீங்கன்னா ,ரொம்ப ஈஸியா, ஒரு நல்லதா கெட்டதாவும், கெட்டதும் நல்லதாகவும் ,
கெட்டவங்க மாதிரியும், கெட்டவர்களை நல்லவங்க மாதிரி ,இந்த மாதிரி பொரணி பேசி ப்ரொஜெக்ட் பண்றது எல்லாம் இந்த மீடியா ,சோசியல் மீடியால எல்லாம் நம்ம பார்க்கிறோம் .
இல்லையா நீங்க எல்லாமே பாருங்க ,நீங்க எல்லாமே படிங்க, பட் எது உண்மை பொய் என்று மட்டும் அனலைஸ் பண்ண மட்டும் கத்துக்கோங்க.
அப்பதான் இந்த உண்மையிலேயே நம்ம நாட்டில் ,என்ன பிரச்சனை, நாட்டோட மக்களுக்கு, என்ன பிரச்சனை, இந்த சமூக தீமைகள் பத்தி எல்லாம் உங்களுக்கு தெரிய வரும் .
அது தெரிஞ்சுக்கிட்டாலே, இந்த ஒரு சில அரசியல் கட்சிகள் ,செய்யற இந்த பொய்யான பிரச்சாரங்களை எல்லாம் நம்பாமல்.
எது கரெக்ட்டு எது தப்பு எது உண்மை பொய் என்று அனலைஸ் பண்ணி பாத்துட்டு, நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய, ஒரு விசாலமான ஒரு உலக பார்வை உங்களால வளத்துக்க முடியும் .
அது வந்துட்டாலே அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாதுங்க.
அதைவிட நம்ம நாட்டோட வளர்ச்சிக்கு, நீங்கள் செய்யப் போற அந்த பங்களிப்பு ,வேற எதுவுமே இருக்க முடியாது அப்டின்னு இளைய தளபதி பேசி அசத்தி இருக்காரு .
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

விஜய் மக்கள் கட்சி பதிவு
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என நடிகர் விஜயின் கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடிகர் விஜய் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல்
பெறப்பட்டுள்ளது. விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்கள் சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்கிற app தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் கட்சி பதிவு
புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு app நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
விஜய் மக்கள் இயக்கம், புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என முன்னர் தகவல் வெளியாகியிருந்த நிலையில்
சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதவில்லை
நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதவில்லை
நடிகர் விஜய்க்கு நாம் எந்த கடிதம் எழுதவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதவில்லை
அக்கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சி.வி.விக்னேஸ்வரன் , த. சித்தார்த்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் கையொப்பமும் கடிதத்தில் காணப்பட்டது.
குறித்த கடிதம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை. அப்படி ஒரு படம் வர போற விடயமே எமக்கு தெரியாது.
வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை பூரண கதைவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்களும் கதவடைப்புக்கு ஆதரவு தருவார்கள் என மேலும் தெரிவித்தனர்.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்
ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்
ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்
ஏழை மக்களுக்கு நடிகர் விஜய் தமிழகத்தில் விலையில்லா உணவு , இலவச
உணவு வழங்கி வருகிறார் .
இந்த உணவு வழங்கும் நிகழ்வு காட்சிகள் ,
தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது .
அந்த மகராசன் நீண்ட நாட்கள் வாழனும் என மக்கள் விஜயை வாழ்த்தி செல்கின்றனர் .
இந்த காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சாய்பல்லவி எடுத்த முடிவு.. வருத்தத்தில் ரசிகர்கள்
சாய்பல்லவி
மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய
அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து மலையாளத்தில் முன்னணி நடிகைகளில்
ஒருவரானார். பின்னர் ‘பிடா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்குக்குச்
சென்ற சாய் பல்லவி, விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
தற்போது சாய்பல்லவி படங்களில் நடிப்பதைக் குறைத்து கொண்டு வருகிறார் என்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஷியாம் சிங்காராய் படம்
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வந்தும் எந்த படத்திலும் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை.
அவரது கடைசி படமாக ராணா டகுபதியுடன் விராட பர்வம் என்ற படத்தில் நடித்திருந்தார். இதன் வெளியீடு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
சமீபத்தில் தயாரிப்பாளர்கள் ஜூலை 1-ம் தேதி இப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். ஆனாலும் இதன் பிறகு வேரு எந்த படங்களிலும் சாய் பல்லவி
நடிக்க சம்மதிக்காதது ரசிகர்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாய்
பல்லவிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறதோ என்பதுதான் அந்த சந்தேகம்.
இது பற்றி இணையத்தில் ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து
பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து
சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் வெற்றிக்கு அப்படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்துள்ளார்.
‘பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து
பீஸ்ட்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,
விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி
தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது, ‘எங்களுக்கு இந்த விருந்து வழங்கியதற்கு நன்றி விஜய் சார். இது படக்குழுவுடன் வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத மாலை நேரம்.
விஜய் கொடுத்த விருந்து
விஜய் கொடுத்த விருந்து
விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணியாற்றியது சிறப்பான தருணம். நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான்
உண்மையாக மதித்திக்கிறேன். உங்களின் அழகும் கவர்ச்சியும், சூப்பர் ஸ்டார்டமும் இந்தப் படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன்
மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கும் இந்தப் படத்தை ஒன்றிணைத்ததற்கும் நன்றி.
எங்களின் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. தடைகளை தகர்த்தெறிந்து, அன்பையும் ஆதரவையும் பொழிந்த பார்வையாளர்கள்
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல நீங்கள் அனைவரும் விஜய் மற்றும் படக்குழுவினருடன்
நின்று இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறீர்கள். சியர்ஸ்’ என்று கூறியுள்ளார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு
- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு
விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்
விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்
விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்
விஜய்
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன்
இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி
செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம்
வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்த அந்த பிரபலங்கள்
நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் சிலரை அழைத்து சென்று சுற்றிக் காட்டியுள்ளார். அதில் பயணித்தவர்கள் குறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
விஜய்யுடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணித்தது யார் தெரியுமா?
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் வருகின்ற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பீஸ்ட் படத்தின் டீசர் மற்றும் டிரைலர்
வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் 3 பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.
இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிரூத் இசையில்,
சிவகார்த்திகேயன் எழுதிய ‘அரபிக் குத்து’ பாடல் யூ-டியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது.
விஜய்யுடன் காரில் பயணித்தவர்கள்
விஜய்யுடன் காரில் பயணித்தவர்கள்
இந்த நிலையில் பீஸ்ட் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ‘பீஸ்ட்’ படக்குழுவினரை அழைத்துச் சென்றுள்ளார். இயக்குனர் நெல்சன், மனோஜ்,
அபர்ணா தாஸ், பூஜா ஹெக்டே, சதீஷ் ஆகியோர் விஜய்யின் காரில் ஜாலியாக பயணம் செய்த காட்சிகள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது











































