Tag: விவகாரம்
இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்
இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம்
இலங்கை விவகாரம் ஜெய்சங்கருக்கு விஜய் கடிதம் ,இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்
சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 6 மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வரத் தேவையான தூதரக
ரீதியிலான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த விவகாரத்தில் உடனடியாகத்
தலையிட வேண்டும் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- அமெரிக்காவின் MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானத் தொகுப்பில் 20 சதவீதத்தை ஈரான் அழித்தது

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

- கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் எபோலா பயணத் தடை

- அமெரிக்கா உளவுத்துறை இலங்கையில் இல்ல அமெரிக்கா

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- அத்தநாகலு ஓயா படுகைக்கான வெள்ள எச்சரிக்கை

இருமல் மருந்து விவகாரம் 22பலி
இருமல் மருந்து விவகாரம் 22பலி
இருமல் மருந்து விவகாரம் 22பலி ,மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் இருமல் மருந்து உட்கொண்டதில் குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரவீன் சோனி கைது
இந்த சம்பவத்தில், அலட்சியத்துடன் செயல்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளான டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, தமிழகத்தில் செயல்பட கூடிய, கோல்ட்ரிப் எனப்படும் இருமல் மருந்து உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மருந்து நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு பதிவாகி உள்ளது.
குழந்தைகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த விவகாரத்தில் குழந்தைகளின் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனை சிந்த்வாராவின் கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் திரேந்திரா சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது உறுதி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இழப்பீடுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களுடைய கணக்கிற்கு பணம் சென்று விட்டது என்றும் கூறினார்.
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது.
விஷால் என்ற 5 வயது குழந்தை சனிக்கிழமை (11) மாலை உயிரிழந்தது. இதன்பின்னர், இரவில் மயங்க் சூரியவன்ஷி என்ற 4 வயது குழந்தையும் உயிரிழந்தது.
இந்த 2 குழந்தைகளும் சிந்த்வாரா மாவட்டத்தின் பராசியா நகரை சேர்ந்தவர்கள் ஆவர்.
கலப்பட இருமல் மருந்து குடித்ததில் அந்த குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர். அதில் கலந்திருந்த நச்சு, உடலின் உள்ளுறுப்புகளை பாதித்து உள்ளது.
சில குழந்தைகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த சூழலில், தமிழ்நாட்டை அடிப்படையாக கொண்ட ஸ்ரேசன் மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதன் கோவிந்தன் சென்னையில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டார்.
சிறப்பு விசாரணை குழு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. மருந்து நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என
பராசிய துணை மண்டல பொலிஸ் அதிகாரி ஜிதேந்திரா சிங் ஜாட் கூறியுள்ளார்.
அவரை சென்னையில் இருந்து நாளை பராசியா நகருக்கு அதிகாரிகள் கொண்டு செல்வார்கள்
தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு
தாய்வான் விவகாரம் அமெரிக்கா சீன அதிபர்கள் போனில் பேச்சு
தாய்வான் விவகாரம் தொடர்பில் சீனா அதிபர் மற்றும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் தொலைபேசி மூலம் பேச்சில் ஈடுபட்டனர்.
இந்த பேச்சின் மூலமாக தாய்வானை ஆக்கிரமிக்க முனையும் சீனா விட்டு கொடுப்புகளுடன் பதட்டத்தை தணிக்குமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
விசேட தாக்குதல் மூலம் தாய்வானை ஆக்கிரமிக்கும் நகர்வில் சீனா ஈடுபட கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
அதனால் அமெரிக்கா சீனாவுடன் அவசரமாக தொலைபேசி மூலம் பேச்சுக்களில் ஈடுபட்டதாக தெரிவிக்க படுகிறது.
இந்த சீனா அமெரிக்காவுக்கு இடையிலான பேச்சு சுமுகமாக முடிந்துள்ளதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது.










