Posted in இலங்கை செய்திகள்

கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது

கடல் கரையில் கிசு கிசுவில் ஈடுபட்ட 38 காதல் ஜோடி கைது

இலங்கை சிலாபம் கடற்கரையில் உல்லாச கூத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுமார் 38 காதல் ஜோடிகள் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

ஜோடிகளாக வருகை தந்த அவர்கள் குடையை பிடித்து கொண்டு இந்த காம கலியாட்டத்தில் ஈடுபட்ட பொழுதே கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறான செயல் பாடுகள் அங்கு ஒரு மாடலாக இடம்பெற்று வருகிறது .

பெண்கள் ஆண்களுடன் கூடி வரும் ,ஆண்கள் ,பெண்கள் தாம் உழைத்து சாப்பிட துணிவில்லை ,பெற்றவர்கள்

பணத்தில் உண்டு ,உலவி வரும் இவர்கள் தமது எதிர்காலம் எவ்வாறு இருக்கும் எமது வருமானம் என்ன என்பதை பற்றி எல்லாம் கவலை இல்லாது .

காதல்; கசமுசாவில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

கடல் கரையில் சிசு கிசுவில்
கடல் கரையில் சிசு கிசுவில்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரால் 20 பேர் கைது

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் ஊடக வாகனங்களை பரிசோதனைக்கு

உட்படுத்தபட்ட போதே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து ஒரு தொகை கேரளா கஞ்சா, மதனமோதகம், சட்டவிரோதமான சிகரட்டுகள் என்பன மீட்கபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, மாத்தறை, காலி, குருணாகல் போன்ற பகுதிகளை

சேர்ந்தவர்கள் என குற்றதடுப்பு பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை சிவனொளி பாதமலைக்கு வருகின்ற பக்த அடியார்கள் போதைப்பொருளை கொண்டுவர வேண்டாமென பொலிஸார் கோரியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் குற்றதடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

இலங்கையில் – புத்தளம் பகுதியில் பணி புரிந்து வந்த கான்ஸடபிள்,மற்றும் இன்ஸபெக்டர் தர காவல்துறை

அதிகாரிகள் இருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்தனர் .

இந்த குற்ற சாட்டில் சிக்கிய இவர்களுக்கு சுமார் 28 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .இலங்கை சட்டத்தின்

நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது .

இந்த தீர்ப்பிலேயே இவ்வாறு 28 வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .

லஞ்சம் பெரும் அரச ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் ,அவர்கள் பணியில் இருந்து நீக்க படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என

கோட்டா அதிரடியாக அறிவித்து ,இரகசிய போலீசார் 2500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்

இலங்கையில் -பொலிசாரை கடித்த பிரிட்டன் பெண்

இலங்கை – காலி பகுதியில் பெண் காவல்துறை ஊழியர் ஒருவரை பிரிட்டன் பெண் ஒருவர் கடித்துள்ள சுவாரசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பிரிட்டன் பெண் தங்கியிருந்த விடுதியை காவல்துறையினர் சோதனை புரிந்த போதே கணவனுடன் தங்கி இருந்த பிரிட்டன் பெண் இவ்வாறு அந்த பெண்ணின் கையை கடித்துள்ளார்

இலங்கைக்கு வருடம் தோறும் சுற்றுலா வரும் இவர்கள் விசா முடிவடைந்த நிலையில் அங்கு மேலதிகமாக தங்கி இருந்த சூழலில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

பெண் காவல்துறை ஊழியரை கடித்த குற்ற சாட்டில் இப்பொழுது அவர் கைது செய்யப் பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

காட்டில் -புலியை அடித்து கொன்ற கும்பல் கைது

இலங்கை – உடைவளவ தேசிய பூங்காவை அண்மித்த பகுதியில் உலவிய புலியை நான்கு பேர் இணைந்து அடித்து கொன்றுள்ளனர் .


மேற்படி புலியை கொன்ற நபர்கள் தற்போது கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

புலியை அடித்து கொன்ற
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய யூலியின் யூட் காணாமல் போனவர் சடலமாக இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை வீட்டில் இருந்து கடற்கரைக்கு சென்று வருவதாக வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அன்றைய தினம் வீடு திரும்பாத நிலையை அடுத்து உறவினர்கள் அவரை தேடி வந்துள்ளதுடன்

சனிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவதினமான நேற்று கல்லடி சுனாமி நினைவு துாபிக்கு அருகிலுள்ள கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போனவர் சடலமாக
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்

தேர்தல் கண் காணிப்பில் 41,000 காவல்துறையினர்

இலங்கையில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிக்கும் பொருட்டு சுமார் 41,000 காவல் துறையினர் பணியில் ஈடுப்படுத்த பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,மேலும் 7000 ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவமும் பாதுகாப்பபில் ஈடுபடுகின்றனராம்

Posted in இலங்கை செய்திகள்

10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

10.ஆயிரம் லஞ்சம் பெற்று இரு போலீஸ் அதிகாரிகள் அதிரடி கைது

இலங்கை – அனுராதபுர பகுதியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறை கான்ஸ் டபிள்கள் காவல்துறை விசேட அணியினரால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் நிலை படுத்த பட்டுள்ளனர் , இலங்கையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மீளவும் இவை சாட்சிகளாகி பதிவாகியுள்ளன