மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கஹதுடுவைக்கு அருகில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடுகளில் இயங்கி வரும் பெரும்

போதைப்பொருள் கடத்தல்காரரான எல்லாவல லியனகே தர்மசிறி பெரேரா என்றழைக்கப்படும் ‘தர்மசிறி’யின் மூத்த சகோதரர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான எல்லாவல லியனகே டன்ஸ்டன் பிரசாத் பெரேரா, பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் ஆகியோர், செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, ​​BIA இல் வைத்து கைது செய்யப்பட்டனர்.

41 வயதான சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை கஹதுடுவ இடைமாற்றுக்கு அருகில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர், வேலை முடிந்து வீடு திரும்பும் போது தாக்குதலுக்கு உள்ளானார்.

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளையும் அவரையும் வேறொரு நபருடன் விட்டுச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், பல நாட்களில் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் காரில் வந்து, வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைகளின்படி, அவர் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும் கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று செவ்வாய்கிழமை மதியம் அவளை அழைத்துச் செல்லச் சென்ற போதும், அவர் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவளைக் கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிய வந்ததாகவும், பின்னர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு சந்தேகநபர் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு குறித்த பெண் தனது கணவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவத்திற்காக சந்தேகநபர் வந்த காரை, சந்தேகநபரின் பெக்ககம வீட்டுக்கு முன்பாக நேற்று பிற்பகல் கஹதுடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை

வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை

கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த வீட்டில் வசித்து வந்த 81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (05) பிற்பகல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நேற்று காலை வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பூஜை செய்து விட்டு வீடு திரும்பியது தெரியவந்துள்ளது.

வீட்டில் உள்ள பொருட்களை திருட வந்த நபர் அல்லது குழுவால் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

வீடு ஒன்றிற்குள் கை கால்களை கட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் படுகொலை

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அம்பலாந்தோட்டை 100 அடி வீதியில் பல்லகஸ்வெவ சந்திக்கு அருகாமையில் நேற்று படுகொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் பாரகம, அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 4 ஆம் திகதி பிற்பகல் முதல் காணாமல் போயுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸில் இவரின் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர், அப்பகுதி மக்களுடன் சேர்ந்து காணாமல் போனவரை தேடியபோது, ​​அந்த இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்

கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்த விதவை பெண் மித்ராணி பெர்னாண்டோவின் கொலைக்கான மூல காரணம் தற்போது அம்பலமாகியுள்ளது.

கொழும்பு தெற்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச். டி. எம் அபேவர்தனவின் பணிப்புரைக்கமைய, கொழும்பு தெற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சந்தேகநபர் அளித்த வாக்குமூலத்தை அடுத்து பல தகவல்கள் வௌியாகியுள்ளன.

திருமதி மித்ராணியின் கணவரான பியானோ ஒரு ஆசிரியர். 75 வயதான அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி இரவு திருமதி மித்ராணி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதன்படி, உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது, ​​வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த பெண்ணின் முகம் மற்றும் கைகளில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை சந்தேகநபரின் வாக்குமூலம்

பெண் இறந்த இடம் சுத்தப்படுத்தப்பட்டதுடன், வீட்டின் டிரிப் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததையும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

தரையை சுத்தம் செய்யும் மின்சார இயந்திரம் மூலம் அந்த இடத்தை சுத்தம் செய்ததாகவும், அந்த உபகரணத்தின் வயரும் உடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், விசாரணைகளின் பின்னர், மரணம் கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அங்கு இருந்த சிசிடிவி கெமராவை பரிசோதித்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து வெளியேறிய விதம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகநபர் கொழும்பு வீடுகளில் தோட்டங்களை சுத்தம் செய்யும் தொழிலாளி எனவும் அவர் திருமணமாகாதவர் எனவும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (02) காலை சந்தேக நபரான தொழிலாளியை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.

இவர் கடந்த 14 ஆம் திகதி மித்ராணி பெர்னாண்டோ என்பவரின் வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அதற்கு முன் பல்வேறு வேலைகளுக்காக இந்த வீட்டிற்கு வந்திருந்ததால், மித்ராணியும் அவருக்கு நன்கு தெரிந்தவர்.

அதன்படி, டிசம்பர் 15 ஆம் திகதி காலை மித்ராணியின் வீட்டை சுத்தம் செய்வதற்காகச் சென்ற அவர், அவரை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கம்பியால் கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர், சமையல் அறையில் இருந்த இறந்த பெண்ணின் மொபைல் போன், லேப்டாப், கம்ப்யூட்டர் மற்றும் கேஸ் சிலிண்டர்களை திருடி பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குரந்துவத்தை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (03) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வீடியோ

இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி

இஸ்ரேல் கொலை வெறியாட்டம் அப்பாவி மக்கள் பலி

இஸ்ரேல் அரச இராணுவம் நடத்தி வரும் கொலை வெறியாட்டம் ஆடி அப்பாவி மக்கள் பலி எடுத்து வருகிறது .

அவ்வாறு இறந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்களை இவ்வாறு குழிகள் தோண்டி விதைக்க படும் காட்சிகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்புக்கு தண்டனை வழங்குவது யார் ..?

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் சடலமாக மீட்பு யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள்

யாழில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .வீடு ஒன்றில் இருந்து இவர் சடலமாக மீட்க பட்டார் .

இவ்வாறு இறந்தவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியை சேர்ந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுளளார் .

இவரது மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரியவரவில்லை .விசாரணைகள் தொடர்கிறது .

யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொலைகள் என்று நிறுத்த படும் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு

அலவ்வ, மாபோபிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் அவரது மகனால் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைச் சம்பவம் நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாபோபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாயை கொலை செய்த மகன் தலை மறைவு

கொலையை செய்த சந்தேக நபர் உயிரிழந்தவரின் இளைய மகன் என்பதும், அவர் குடித்துவிட்டு வந்து தனது தாயுடன் தகராறு செய்த நிலையில் கொலையை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு

பெண் மர்மமான முறையில் மரணம் சடலம் மீட்பு

கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மித்ராணி பெர்னான்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த

பெண்ணின் சடலம் தரையில் கிடந்ததாகவும், வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தாயை கொலை செய்த மகள் கைது

தாயை கொலை செய்த மகள் கைது

கஹவத்தை, வெல்லதுர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் 71 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் அவரது வீட்டில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த பெண் தனது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், மகள் வீட்டை விட்டு வெளியே சென்ற போதே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தாயை கொலை செய்த மகள் கைது

இந்த சந்தேகத்திற்கிடமான கொலைச் சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த பெண்ணின் மகளே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி இன்று அதிகாலை 38 வயதான சந்தேக நபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பில் கஹவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

பாலஸ்தீனத்தில் 90 ஊடகநபர் கொலை 50 கட்டடங்கள் இடிப்பு

இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 90 ஊடக நபர்கள் பிழையாகியுள்ளனர்

மேலும் ஐம்பது ஊடக கட்டடங்கள் அடித்து நொறுக்க பட்டுள்ளன .

ஊடக நபர் காயமடைந்து இரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த பொழுதும் ,அவருக்கு சிகிச்சை அளிக்கவிடாது தடுத்து படுகொலை வெறியாட்டத்தை நடத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இனப்படுகொலையை தொடர வேடிக்கையை பார்த்து கொண்டுள்ளது .

வீடியோ

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் கொலை செயாயும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் கொலை செயாயும் இஸ்ரேல்

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் அநியாயமாக கொலை செயாயும் இஸ்ரேல்தான் உண்மையான பயங்கரவாத நாடு.

இந்த அராஜக இஸ்ரேலிய இராணுவத்திற்கு உதவும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா நாடுகள் பயங்கரவாதத்திற்கு உதவும் நாடுகள். அத்தோடு கொலைகளுக்கு உதவும் நாடு…..

உண்மையில் ஐ.நா. வினதோ சர்வதேச நாடுகளினதோ பேச்சைக் கேட்காத வரம்பு மீறும் கொலைகார இஸ்ரேலிய நாடு, முழு உலகிற்குமே ஆபத்தானதாகும்.

பலஸ்தீன பெண்களையும் சிறுவர்களையும் கொலை செயாயும் இஸ்ரேல்

மனித நேயமற்ற காட்டுமிராண்டித்தனமான இஸ்ரேலிய நாட்டை ஒழிப்பது, இல்லாமல் ஆக்குவது அனைத்துலக நாடுகளுக்கும் கடமையாகும்.

தற்போது இந்த அராஜக இஸ்ரேலை அழிப்பதில் ஹமாஸ் போராளிகள் மட்டும் ஈடுபடுகிறார்கள்.

உண்மையில் எல்லோரும் இணைந்து செய்ய வேண்டிய பணியை ஹமாஸ் மட்டும் செய்கிறது.. ..


ஆமாம் இந்த அராஜக அமெரிக்க இஸ்ரேலிய சியோனிஸ்ட்களை ஒழிக்கும் வேலை ஹமாஸ் உடையது மட்டுமல்ல. அனைவருடையதுமாகும்.

Israel is the real terrorist state that unjustly kills Palestinian women and children. America and Britain are the countries that support this anarchist Israeli army and support terrorism. And the country that helps the murders…..


In fact, the U.N. The transgressive murderous Israeli state that does not listen to foreign or international nations is dangerous to the entire world.

It is the duty of the international nations to eliminate the inhuman barbaric state of Israel. Currently only Hamas fighters are involved in destroying this anarchic Israel.

In fact, Hamas is the only one doing the work that everyone should be doing together.. ..

Yes, Hamas is not the only one who is doing this anarchist American Israeli Zionist job. belongs to all.

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் – மேற்பார்வையாளரான பெண் கைது

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில்

கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த நாராயண ஆனந்ததேவன் தர்சாத் எனும் 14 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சிறுவன் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்

தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த சிறுவனை அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.

குறித்த சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த காப்பகத்தில் சம்பவ தினமான இரவு உணவினை உட்கொண்ட பின்னர் பாடசாலை வளாகத்தில்

நின்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என தெரியவில்லை என முன்னுக்கு பின்னான வாக்குமூலங்கங்கள் வழங்கியதை தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் பாடசாலை மேற்பார்வையாளரான அப்பெண் பொலிஸ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்தார்.

சிறுவன் அடித்து கொலை ரவுடி மயமாகும் இலங்கை

பின்னர் சனிக்கிழமை(2) இரவு கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தனது மகனின் மரணத்தில் பலவிதமான பொய் குற்றச்சாட்டுகளையும் பாடசாலையின் நிர்வாகம் முன் வைப்பதாகவும் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் நாங்கள் எமது பிள்ளைக்கு நடந்த இதே போன்ற சம்பவங்கள்

யாருக்கும் இடம் பெறக் கூடாது என்றும் பிள்ளையின் மரணத்தில் ஒரு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் மரணம் அடைந்தவரின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை

வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுதியில் இன்று(30) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

செட்டிகுளம் பிரதானவீதியில் குறித்த தம்பதிகளின் மகன் வியாபாரநிலையம் ஒன்றை நடாத்திவரும் நிலையில் அதற்கு பின்னால் உள்ள தங்கும் இடத்தில் குறித்த தம்பதிகள் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் நேற்றயதினம் (29) இரவு வழமைபோல அவர்களது மகன் வியாபாரநிலையத்தை மூடிவிட்டு அண்மையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது குறித்த தம்பதிகள் வியாபாரநிலையத்திற்கு பின்பாகவுள்ள தங்கும் இடத்தில் உறங்கச்சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று (30) காலை வியாபாரநிலையத்தை திறப்பதற்காக வருகைதந்த மகன் தனது தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் கிடந்தமை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வவுனியாவில் தம்பதி வெட்டிக்கொலை

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் செட்டிகுளம் பகுதியைசேர்ந்த பசுபதிவர்ணகுலசிங்கம் வயது72 என்ற முதியவரும், அவரது மனைவியான 68வயதான கனகலட்சுமி என்பவருமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களது சடலங்களுக்கு அருகில் மூன்று கத்திகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வெட்டிக்கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவத்தில் 5 பவுண் பெறுமதிமிக்க தங்கநகை ஒன்றும் காணாமல்போயுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என திருட்டில் ஈடுபடும் போது இடம்பெற்றதா என்ற கோணத்திலும் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

video

யாழில் ஒருவர் அடித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஒருவர் அடித்துக் கொலை

யாழில் ஒருவர் அடித்துக் கொலை

யாழ்ப்பாணம் உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் நேற்று இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்கிற 66 வயதான முதியவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

யாழில் ஒருவர் அடித்துக் கொலை

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44

வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை

அமெரிக்கா Memphis பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு தாக்குதலில் நான்கு பெண்கள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .

ஆயுதம் தரித்த நபர் நடத்திய திடீர் சுட்டு தக்குதலில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .


குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .

அமெரிக்காவில் 4 பெண்கள் சுட்டு கொலை

நாள் தோறும் அமெரிக்காவில் 360 சூட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதிகரித்து செல்லும் துப்பாக்கி பாவனையே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .

மக்கள் இந்த துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ,போராட்டங்கள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முதியவரை அடித்து கொலை ஒருவர் கைது

முதியவரை அடித்து கொலை ஒருவர் கைது


யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறிபிபிட்ட உணவகத்தில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவந்துள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்த வாய் பேச இயலாத 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்கா இராணுவ குடும்பம் மொத்தமாக கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவ குடும்பம் மொத்தமாக கொலை

அமெரிக்கா இராணுவ குடும்பம் மொத்தமாக கொலை

அமெரிக்கா Fort Stewart in Georgia பகுதியில் உலகள இராணுவ தளம் அருகே வசித்து வந்த இராணுவ குடும்பம் நால்வர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .

இந்த நால்வர் ஏன் கொலை செய்யப்பட்டனர் என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

இராணுவ உள்ளக சண்டை காரணமாக இவர்கள் கொலை செய்யப்பட்டனரா என்ற ரீதியில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

எனினும் இந்த மரணம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் உடனடியாக தெரியவரவில்லை .

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர் கொலை நால்வர் கைது

இளைஞர் கொலை நால்வர் கைது

தலவாக்கலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொலிரூட் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளைஞர் கொலை நால்வர் கைது

இந்த சம்பவம் தொடர்பில் 21 முதல் 24 வயதுகளுக்கிடைப்பட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவருக்கு வெட்டுக் காயங்கள் காணப்பட்டமையினால் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் காயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

பழைய பகைமை காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் தலவாக்கலை நகரில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும், அதன்பின்னர் உயிரிழந்தவரும், அவரது நண்பர்களும் ஆட்டோவில் வீடு நோக்கி

பயணித்துள்ளனர் எனவும், இவர்களை மற்றுமொரு ஆட்டோவில் துரத்தி வந்த குழுவினர், ஹொலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வைத்து வழி

மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர்.

குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை

விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களை லிந்துலை பிரதேசத்தில் வைத்து லிந்துலை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன், இருவரும் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் பயணித்த ஆட்டோக்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம் சஞீவன் (வயது 22) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியைக் கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

மனைவியைக் கொலை செய்த கணவர் தூக்கிட்டுத் தற்கொலை

அளுத்கம, பெனிபெந்திகொட பிரதேசத்தில் தனது மனைவியைக் கொலை செய்த நபர் ஒருவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக கணவர் தனது மனைவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலை செய்த பின்னர் வீட்டுக்குள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான மனைவி மற்றும் 36 வயதான கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in உலக செய்திகள்

கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை

கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை

ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டை வசிப்பிடமாக கொண்ட22 வயதுடைய இஸ்ரேல் பெண் Shani Louk,
ஷானி லூக் படுகொலை செய்ய பட்டு உள்ளார் என்ற தகவலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது .

கடத்தி செல்ல பட்ட ஜெர்மன் இஸ்ரேல் பெண் படுகொலை

இவர் தலையை இல்லது செய்து மரணம் ஏற்படுத்தி இருக்க கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர் ,
இறந்த ஐம்பது கைதிகளில் இவரும் ஒருவராக இருக்கலாம் என்கிறது இஸ்ரேல்

இவரை போல ஏனைய கைதிகளும் காணாமல் ஆக்க படுவார்களா அல்லது அவர்களும் வெற்றிகரமாக விடுவிக்க படுவார்களா
என்ற விடயம் உலக அரங்கத்தில் விவாதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீடியோ