முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு
Posted in இலங்கை செய்திகள்

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு

முரசுமோட்டையில் கத்தியால் குத்திவாலிபர் வடலிக்குள் வீச்சு

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு சம்பவ பெரும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

முகநூல் வாயிலாக பரவிய காணொளி

முகநூல் வாயிலாக பரவிய காணொளியில் பலத்த கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் வாலிபர் ஒருவர் வடலிக்குள் உயிருடன் துடித்து கொண்டிருக்கும் காட்சி காணப்படுகிறது .

இறந்து விட்டதாக மக்கள் நினைத்திருக்கும் பொழுது அவர் உயிருடன் உள்ளது தெரியவந்த நிலையில் ஆட்டோ பிடித்து அவர் காப்பாற்ற படுகின்றார் .

ஆன் பெண்கள் இணைந்து அந்த வாலிபரை காப்பாற்றியுள்ளனர் .

முரசு மோட்டை மூன்றாம் யூனிட்டைஸ் இருந்த நபர் என தெரிவிக்க பட்டுளள்து .

முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு
முரசுமோட்டையில் கத்தியால் குத்தி வாலிபர் வடலிக்குள் வீச்சு

கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார்

இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

தற்போது அனுரா ஆட்சியில் மலிந்து கிடக்கிறது வன்முறைகள்.

Select கத்தி முனையில் மாணவியை கடத்த முயன்றவர் கைது கத்தி முனையில் மாணவியை கடத்த முயன்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவி கடத்தல் கத்தி முனையில்

மாணவி கடத்தல் கத்தி முனையில்

மாணவி கடத்தல் கத்தி முனையில் கத்தி முனையில் தாயாருடன் சென்ற மாணவியை கடத்த முயற்சித்த நபர் கைது செய்யபப்ட்டுள்ளார்.

அனுர ஆட்சியில் கடத்தல், கொலை கொள்ளை, ஊழல் துப்பாக்கிச் சூடு, கைதுகள் என தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி,

மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி காரை செலுத்திச் செல்லுமாறு தாயிடம் கூறியுள்ளார்.

இதன்போது தாயும் மாணவியும் காரில் இருந்து இறங்கி சத்தமிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

சந்தேக நபர் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கப்பம் கோரும் நோக்கத்தில் மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவியை கடத்துவதற்காக சந்தேக நபர் நீண்ட நாட்களாக திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலைசெய்ய பட்டுள்ளார்.

பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடியுள்ளார்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

அதன்பின், வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், இருவரும் இறந்தவரின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் மத்துகம வெத்தவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வெலிபென்ன பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடு புகுந்து தாய் 3 பிள்ளைகள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

கத்திக்குத்துக்குள்ளாகி கடற்படை வீரர் உயிரிழப்பு

கத்திக்குத்துக்குள்ளாகி கடற்படை வீரர் உயிரிழப்பு

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கடற்படை வீரரொருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்பவமொன்று புதன்கிழமை (08) பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாவிக நெவி பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Posted in இலங்கை செய்திகள்

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

உடப்புஸ்ஸலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரப்பாணக் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ரப்பாணக் தோட்டத்தை சேர்ந்த ஐவர் கொண்ட இளைஞர் குழு ஒன்றுக்கிடையில் (29) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இளைஞர்

ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த படுகொலை சம்பவத்தில் வி.தனோஷன் (வயது 19) என்ற இளைஞர் கத்தி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அதேநேரத்தில் இக்குழு சண்டையில் (21) வயதுடைய இளைஞர் ஒருவரும் பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நுவரெலியா மாவட்ட

வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உடப்புஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் கத்தி வெட்டை நடத்திய இளைஞர் தானாகவே பொலிஸ் நிலையத்திற்கு சென்று ஆஜராகியுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலிக்கு சண்டை போட்ட நண்பர்கள் கத்தி வெட்டு தாக்குதல்

அத்துடன் குறித்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் மரண

விசாரணையை வலப்பனை நீதிமன்ற நீதிவான் மேற்கொண்ட பின் சடலத்தை பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது.

இந்த கத்தி வெட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் நண்பர்கள் இவர்கள் அனைவரும் (29) மாலை மது அருந்திய பின் காதல் பிரச்சினை ஒன்றுக்காக ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் மோதலில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன்போது கத்தி வெட்டை நிகழ்த்திய இளைஞரை ஏனைய இளைஞர்கள் சரமாறியாக தாக்கியுள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்

உடப்புஸ்ஸலாவை நகரில் உள்ள ஹாட்வெயார் ஒன்றில் வெட்டு கத்தி ஒன்றை பணம் கொடுத்து வாங்கி சென்று தன்னை தாக்கிய இளைஞர்களை வெட்டியுள்ளார்.

இதில் ஒரு இளைஞரின் உயிர் பரிபோகியுள்ளது, மேலும் ஒரு இளைஞர் வெட்டு காயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில்


அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

    கத்தி முனையில் மனைவியை கடத்தி வெட்டி கொன்ற கணவர் – இரு பெண்கள் காயம்

    இலங்கை Webada in Weliweriya பகுதியில் கடலுக்கு சென்று திரும்பிய மனைவியை கத்தி

    முனையில் கடத்திய கணவன் அவரை வெட்டி கொன்றார் ,மேலும் அவரது சகோதரி

    ,மற்றும் நண்பி ஆகியோர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

    குறித்த சம்பவம் தொட்ரபிள் போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      Posted in இலங்கை செய்திகள்

      கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

      கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை

      இலங்கை வெல்லம்பிட்டிய காவல்துறை பகுதியில் இரு பேக்கரி ஊழியர்களுக்கு

      இடையில் இடம்பெற்ற சண்டையை அடுத்து ஒருவர் குத்தி படுகொலை செய்ய பட்டுளளார்

      குற்றவாளி கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,பகைமை காரணமாக இந்த கொலை


      இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        கத்திகள் எழுகிறது …!

        கத்திகள் எழுகிறது …!

        வன்னி மைந்தன் கவிதைகள்

        திண்ணையில உட்க்கார்ந்து
        தீங்குரைக்கும் நெஞ்சுகளே
        குஞ்சுகளை காணாது
        குருவிகள் அலைகிறதாம்

        பஞ்சு வெடிக்கின்ற
        பங்குனி வெய்யிலில்
        கஞ்சிக்கு வழியில்லா
        கால்கள் நடக்கிறதாம்

        இதயம் இருக்கென்று
        இன்றமர்ந்து பேசும்
        கோடிகளில் கொஞ்சத்தை
        கொட்டி கொடுங்கள்

        கேடில்லை தான்
        கேட்பாரும் இல்லைத்தான்
        நாட்டை தின்றுவிட்டு
        நம் வயிற்றில் அடித்தீரே

        கோடிகளில் கொஞ்சத்தை
        கொட்டி கொடுங்கள்
        பாவ சுமையில்
        பாதி கழுவட்டும்

        ஆளை கொன்று
        அரியணை பிடித்தீர்
        அம் மக்கள் விழித்தார்
        ஆட்சி துறப்பீர்

        கஞ்சா காடழிக்க
        கத்திகள் எழுகிறது
        நாடு சுத்தமிட
        நல்புரட்சி வெடிக்கிறது …!

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் 31-03-2022

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை

          லண்டனில் -இளம் வாலிபர் கதற கதற வெட்டிக் கொலை

          கடந்த தினம் இரவு ஒன்பது மணியளவில் லண்டன் Paddington Green பகுதியில் பத்தொன்பது வயதுடைய வாலிபர் ஒருவர் ,

          மர்ம நபர் ஒருவரால் சரமாரியாக கத்தியால் குத்தியும் ,வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்

          தகவல் அறிந்து விரைந்து வந்த அம்புலன்ஸ் பாதிக்க பட்ட

          வாலிபருக்கு சிகிச்சை வழங்கிய பொழுதும் ,அது பயனின்றி அவர் பத்து மணியளவில் இறந்துள்ளார்

          மேற்படி சம்பவம் தொடர்பில் குற்ற தடுப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்

          Home » கத்தி
          Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

          காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்

          காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்

          அமெரிக்கா ஹாரோலினா பகுதியில் காதலியை காதலன் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்

          பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் போட்ட சத்தத்தில் அயலவர்கள்

          விரைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விரைந்த வந்த

          போலீசார் பலத்த காயத்தில் இருந்த அவரை மீட்ட பொழுதும் சம்பவ இடத்தில அவர் பலியானர்

          காதலன் கொலை குற்ற சாட்டில் கைது செய்ய ப்பட்டுள்ளார் ,இவருக்கு

          குழந்தை உள்ளது ,இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராரே இந்த கொலையில் முடிவடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

          Posted in உலக செய்திகள்

          இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

          இஸ்ரேலில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் – போலீசார் குவிப்பு photo

          இன்று செவ்வாய் க்கிழமை மத்திய இஸ்ரேலின் – Kfar Saba பகுதியில் வீதியால்

          பயணித்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


          இதில் இரு பெண்கள் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளள்னர்

              இந்த தீவிரவாத தாக்குதலை பலஸ்தீனத்தை சேர்ந்த நபர் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

              இந்த மக்கள் மீதான தாக்குதலுக்கு பலஸ்தீன பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்த கூடுமென எதிர் பார்க்க படுகிறது

              மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்

                  சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்

                  அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்

                  நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .

                  ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை

                  செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .

                  இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத

                  செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

                  சுட்டியல் கத்தி துப்பாக்கியுடன்
                  சுட்டியல் கத்தி துப்பாக்கியுடன்
                  Posted in இலங்கை செய்திகள்

                  வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

                  வாய் சண்டையில் ஒருவர் வெட்டிக்கொலை

                  இலங்கை நுகொட பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது படுகொலையில் முடிவடைந்துள்ளது .

                  64 வயது நபர் ஒருவர் கத்தியால் குத்தியும் ,வெட்டியும் கோரமாக படுகொலை செய்யப் பட்டுளளார்

                  .இலங்கையில் இவ்வாறான கத்தி குத்து தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருகின்றமையும் அதனை தடுக்க காவல்துறையினர் தவறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது