Tag: அமைச்சர்
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர்
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர்
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர்
அதானி காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை அமைச்சர் ,அதானி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த காற்றாலை மின் திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்று மின்துறை அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
சமீபத்தில் (06) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் எரிசக்தி தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தின் போது அமைச்சர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசாரித்தபோது, அதானி நிறுவனத்தின் மின் திட்டத்தின் விலை அதிகமாக இருந்ததால், இந்த விவகாரம் மறுபரிசீலனைக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர்
குமார ஜெயக்கொடி மேலும் தெரிவித்தார். அந்த நேரத்தில், இந்திய அதானி தாய் நிறுவனம் இந்தத் திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு வாரியத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது, அதன்படி, முதலீட்டு வாரியம்
இது குறித்து அமைச்சகத்திற்குத் தெரிவித்திருந்தது என்று அமைச்சர் மேலும் கூறினார். இருப்பினும், காற்றாலை மின் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் இலங்கையில் உள்ள அதானியின் பிரதிநிதி
நிறுவனத்துடன் நடத்தப்பட்டன, எனவே, இந்த விஷயத்தை பரிசீலிக்க அந்த நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பிறகு இரண்டு வாரங்களுக்குள் இந்த விவகாரம் தொடர்பான பதில் எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்த இரண்டு வாரங்களுக்குள் எதிர்மறையான பதில் கிடைத்தால் மட்டுமே மாற்று வழியை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
கூடுதலாக, எதிர்காலத்தில், இதுபோன்ற திட்டங்கள் அரசாங்கத்திற்கு அரசு (G2G) ஒப்பந்தங்கள் மற்றும் போட்டி கொள்முதல் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரணவீர தப்பியோட்டம் ,கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள்
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவைக் கைது செய்ய, களனியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, அவர் தனது வீட்டை விட்டு ஓடிவிட்டதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு அதிகாரிகள் குழு ஒன்று பிரசன்ன ரணவீரவைக் கைது செய்யச் சென்றிருந்தது.
அந்த நேரத்தில் பிரசன்ன ரணவீரவின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்ததாகவும், குற்றப் புலனாய்வுத் துறையினர் அவரது
மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும், பின்னர் ரணவீரவின் சாரதியிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிக்கு போலியான பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் களனி பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ,இந்திய கடற்பரப்பிற்குள் யாரும் அத்துமீறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனையே நாங்களும் செய்கிறோம்.
தொப்புள் கொடி ஊறவுகளாக இருக்கிற தமிழக மீனவர்களை நாங்கள் திட்டமிட்டு கைது செய்யவில்லை என இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,
“ இலங்கை கடற்பரப்பில் இலங்கை மீனவர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது இந்திய மீனவர்கள் தான். அதாவது இந்திய மீனவர்களின் தொடரும் அத்துமீறல்களினால் தான் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உண்மையான நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது இந்தியாவில் எமக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்துகின்றனர்.அந்தப் பேரணியில் தமிழகத்தின் கனிமொழி உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஆகையால் கனிமொழி உள்ளிட்டவர்களிடம் நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது, உங்களுடைய நாட்டு படகுகள் உங்கள் எல்லையை மீற வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள்.
மேலும் கனிமொழிக்கும் அமைச்சருக்கும் நாங்கள் சொல்ல வேண்டியது வேறேதுமில்லை. நாங்கள் தொப்புள் கொடி உறவுகள் தான். எனினும் தொப்புள் கொடியாக இருந்தாலும் எங்கள் கடலுக்கு வந்து எங்கள் மீன்களை பிடிக்க வேண்டாம். எங்கள் வளத்தை அழிக்க வேண்டாம் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
அதே நேரத்தில் இந்திய மீனவர்கள் யாரும் இங்கு வெறுமனே கைது செய்யப்படவில்லை. உங்கள் கடல் எல்லையை தாண்டி எமது கடல் எல்லைக்கு வருகிற போதே நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் கடல் எல்லைக்குள் யாரும் வருகின்ற போது நீங்கள் எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்குறீர்களோ அதேபோல் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகிற போது நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம்.
அதாவது எமது கடல் எல்லைக்குள் யாரும் நுழைகிற போது கடற்படையினர் கைது செய்கின்றனர். இவ்வாறு கைது செய்பவர்களை நீதிமன்றத்தில் கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து நீதிமன்றில் பாரப்படுத்துகிற போது நீதி மன்றமே தீர்ப்பை வழங்குகிறது.
குறிப்பாக யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்கள் இப்போது தான் ஓரளவிற்கு தலைதூக்கி கொண்டு வருகின்றனர்.
ஆனால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உங்களது ஆயிரக்கணக்கான படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி எமது கடல்வளத்தை நாசமாக்கி செல்கின்றனர்.
இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது. எனவே எமது கடல் பரப்பிற்குள் அத்துமீற வேண்டாம் ” என தெரிவித்துள்ளதுடன் இந்திய மீனவர்களுக்கு முதலில் கூறி அத்துமீறுவதை தடுத்து நிறுத்துங்கள் எனவும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம்
பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம்
பொலிஸ் அமைச்சர் மீது நாமல் கடும் விமர்சனம் ,நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நேரத்தை செலவிடுவதற்குப் பதிலாக, எமது குடும்ப உறுப்பினர்களை வேட்டையாடுவதற்கே இந்த அரசாங்கம் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக குற்றம்சாட்டியுள்ளார்.
யோஷித ராஜபக்ஷவை இன்று (27) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த நிலையில், அப்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியவர் தாம் என்றாலும், அதற்கான விலையை தனது சகோதரர் கொடுக்க வேண்டியிருந்தது என்று அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
” ஏன் இதைச் செய்கிறார்கள் என்று என்னிடம் கேட்க வேண்டாம்.”
அதனை பிரதி பாதுகாப்பு அமைச்சர், பொலிஸ் அமைச்சர் மற்றும் நாட்டின் ஜனாதிபதியிடம் கேளுங்கள்.
ஆனால், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குச் செலவிட வேண்டிய நேரத்தை, அரசியல்வாதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் வேட்டையாடுவதற்கு அரசாங்கம் பயன்படுத்துகிறது.
பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியது நான் தான். சிறைக்கு செல்வது எனது தம்பி.
நெடுஞ்சாலை வழியாக பெலியத்த வரை வந்து அவரைக் கைது செய்தது வீண். எங்களை வர சொன்னால் நாங்கள் வருவோம் அல்லவா.
எரிபொருளை நிரப்பிவிட்டு பெலியாத்தவுக்குச் சென்றது வீண்தானே. அழைத்திருந்தால் வந்து உங்கள் சாட்சியத்தை அளிப்போம்.
நாங்கள் தவறு செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். ஊடகங்களுக்கு படம் காட்டி மக்களின் பணத்தை வீணாக்காதீர்கள்.
இந்த வழக்கை, ஊழல் தடுப்புக் குழுவின் செயலாளரான தற்போதைய பொலிஸ் அமைச்சரே தொடங்கினார்.
அவர் தனது கடந்த கால ஆதாரங்களைப் பயன்படுத்தி, இன்று அதே வழியில் தனது அரசியல் வேட்டையை செயல்படுத்த முயற்சிக்கிறார்.
அரசாங்கம் எதிர்க்கட்சிகளை அடக்கி, தனது சொந்த அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கிறது.
நாங்கள் தெளிவாகத் தவறு செய்திருந்தால், அந்தத் தவறை நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். “ஊடகங்களுக்கு படம் காட்டி பணத்தை வீணாக்காதீர்கள்.” என்றார்.
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர்
அர்ச்சனாவுக்கு சவுக்கடி கொடுத்த அமைச்சர் ,அர்ச்சனாவுக்கு மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் சவுக்கடி கொடுத்துள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம் பெற்றிருக்கிறது .
பாராளுமன்ற உறுப்பினர் எந்த அரச நிறுவனங்களுக்கும் செல்ல முடியும் ஆனால் அவர்கள் சென்று அங்கு பயன்படுத்துகின்ற வார்த்தைகள் சொல்லாடுகள் மிக
முக்கியமானதாக இருக்கப்பட வேண்டும் என அர்ஜுனா இராமநாதன் மண்டையில் எட்டி கொட்டியிருக்கிறார் அமைச்சர் சந்திரசேகரம் .
இவ்வாறு தெரிவித்து அர்ச்சுனாவுக்கு சவுக்கடி வழங்கி இருக்கின்றார் .
அவதூறான வகையிலே பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா ராமநாதன் பல விடயங்களை பேசியிருந்தார் ,அதுவே பல சர்ச்சைகளை உலகளாவிய மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது .
அதனை அடுத்து இந்த இடத்தை இந்த கூட்டத்தில் அமர்ந்திருக்கின்ற பொழுது அவருக்கு எதிராக தெரிவித்து இருந்தார்.
ஆனால் படிக்காதவர்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆட்சி வராமல் தான் தெரிவித்திருந்தார்.
அதற்கு சந்திரசேகரன் இறுதி கருத்தையும் தெரிவிக்காமல் அங்கு காண முடிந்தது .
ஆக இதன் ஊடாக நாங்கள் சந்திர சேகர் உள்ளிட்டவருடன் நெருக்கமாக பழகுகிறோம் தம்பி நீ இப்படி பேசு அண்ணா நான் இப்படி செய்கிறேன் இவர்கள் செயல் பட்டு வருவது இந்து இடம் பெற்ற இந்த நிகழ்வில் அம்பலப்பட்டு இருக்கிறது .
அல்லது மொழி தெரியாதவன் படிப்பறிவு இல்லாதவர் என அர்ச்சுனா ராமநாதன் சந்திரசேகரன் தெரிவித்திருந்தார் .
ஆங்கில மொழி தெரியாதவரிடமும் அப்படி என்றால் அவர் படிப்பறிவு இல்லாதவர் என்பதாக பொருட்படுகிறது.
அதற்கு இந்த இடத்தில் வைத்து அர்ச்சனாவுடன் சந்திரசேகரன் அமைச்சர்கள் எது வித கேள்வி கேட்காதே மௌனமாக இருந்தது ஏன்.
அந்த கேள்வியின் பின்புறத்தில் இருந்து இந்த சந்தேகங்கள் இவர்கள் எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதும் ஒன்றாக செயல்படுகிறது இது காட்டி கொடுக்கிறது.
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம்
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம்
15 அமைச்சர்கள் ஊழல் அம்பலம் 15 முன்னாள் அகடந்த காலங்களில், 15 முன்னாள் அமைச்சர்கள் இலங்கை விமானப்படையின் விமானங்களை பல்வேறு பயண மற்றும் போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியதாக, இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த அமைச்சர்களின் போக்குவரத்து தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 66 ஆகும்.
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு பத்து விமானங்களும் முன்னாள் அமைச்சர் தயாகமகேவுக்கு ஒரு விமானமும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் ரவி
கருணாநாயக்கவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மூன்று விமானங்களும், முன்னாள் அமைச்சர் சாகல
ரத்நாயக்கவுக்கு மூன்று விமானங்களும் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீமுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் அஜித் நிவாட்
கப்ராலுக்கு இரண்டு விமானங்களும் முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு ஒரு விமானமும், முன்னாள் அமைச்சர் நாமல்
ராஜபக்ஷவுக்கு ஆறு விமானங்களும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இருபத்தைந்து விமானங்களையும் முன்னாள் அமைச்சர் அலிசப்ரிக்கு இரண்டு விமானங்களையும் பெற்று பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த அமைச்சர்கள் 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், விமானப்படை விமானங்களை தமது போக்குவரத்து தேவைகளுக்காக பயன்படுத்தியுள்ளனர்.
இந்த விமான பயணங்களில் பெரும்பாலானவை அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து கிடைத்த பதில்
அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.மைச்சர்களின் விமான பயண விபரங்கள் கசிவு
அமைச்சர்களின் சலுகைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
அமைச்சர்களின் சலுகைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு
அமைச்சர்களின் சலுகைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை
செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை
திங்கட்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற
உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன
அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் ரமேஷ் ரோஷன்பிரசன்னா ஆகியோர் சிஐடிக்கு வருகை
முன்னாள் அமைச்சர்கள் ரமேஷ் ரோஷன்பிரசன்னா ஆகியோர் சிஐடிக்கு வருகை
முன்னாள் அமைச்சர்கள் ரமேஷ் ரோஷன்பிரசன்னா ஆகியோர் சிஐடிக்கு வருகை ,தரமற்ற போதைப்பொருள் ஊழல்: முன்னாள் அமைச்சர்கள் ரமேஷ், ரோஷன், பிரசன்னா ஆகியோர் சிஐடிக்கு வருகை
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் வாக்குமூலங்களை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்களான
ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) வந்துள்ளனர்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக நாளை (22) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அப்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் 18
பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நவம்பர் 12ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின் பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல்
சிறிபால உள்ளிட்ட 18 பேரிடம் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது. அப்போதைய சுகாதார அமைச்சர் கெஹலியவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு
அங்கீகாரம் வழங்கிய அமைச்சரவையில் அங்கத்தவர்கள் சர்ச்சைக்குரிய போதைப்பொருளை இறக்குமதி செய்ததற்காக ரம்புக்வெல்ல.
இந்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கிய மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, இந்த விடயம் தொடர்பில் 18 முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார்.
அக்டோபர் 2023 இல், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA), இரத்த பிளாஸ்மா செல்களால் உற்பத்தி செய்யப்படும் மனித இம்யூனோகுளோபுலின் என்ற ஆன்டிபாடியைக் கொண்ட ஒரு தொகுதி
குப்பிகளை வாங்குவதற்கு சுங்க அனுமதிக்காக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதைக் கண்டறிந்தது, அது பின்னர் தர சோதனைகளில் தோல்வியடைந்தது.
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம்
சற்றுமுன் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
முதலாவதாக கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
பிரதமர் ஹரிணி – கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
விஜித ஹேரத் – வெளிநாட்டமைச்சு, வெளிநாட்டலுவல்கள் மற்றும் சுற்றுலா அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் சந்தன அபேரத்ன – பொதுநிர்வாகம் , மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
பேராசிரியர் ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சரோஜா சாவித்ரி போல்ராஜ் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
கே.டி.லால்காந்த – விவசாயம் , கால்நடை , நீர்ப்பாசனம் , காணி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அநுர கருணாதிலக – நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
இராமலிங்கம் சந்திரசேகர் – கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சுனில் ஹந்துன்நெத்தி – கைத்தொழில், தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆனந்த விஜேபால – பொதுமக்கள் பாதுகாப்பு ,பாராளுமன்ற விவகார அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து , நெடுஞ்சாலைகள், துறைமுக, சிவில் விமான சேவை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட ., சமூக அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நளிந்த ஜெயதிஸ்ஸ – சுகாதாரம் , ஊடகம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சுனில் குமார கமகே – இளைஞர் விவகாரம் ,விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
வசந்த சமரசிங்க – வர்த்தக , வாணிப , உணவுப்பாதுகாப்பு , கூட்டுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன – விஞ்ஞானம் , தொழிநுட்பம் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
குமார ஜெயக்கொடி – வலுசக்தி அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
தம்மிக்க பட்டபெந்தி – சுற்றாடல் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடில்லை ,கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான பணி என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்றத்தில் எந்தவொரு அமைச்சருக்கும் அரசாங்கம் கொழும்பில் வீடுகளை வழங்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு அவர்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி, மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்
“இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான இணைப்பாக தனது பங்கை மாற்றியமைக்கும் அமைச்சரவையும் அரசாங்கமும் நவம்பர் 14ஆம் திகதிக்கு பின்னர் உருவாக்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு அன்றாடம் தீர்வுகளை வழங்குவதற்கு மக்களுக்கு நெருக்கமான மக்கள் தலைவர்களை கட்டியெழுப்புவது அவசியமாகும்.
மக்களிடம் இருந்து தொலைவில் உள்ள தலைவர்கள் அல்ல. வாக்குகளை பெற்று கொழும்பில் இருக்கும் தலைவர்கள் அல்ல.
அதனால்தான் எந்த அமைச்சருக்கும் கொழும்பில் வீடுகள் இல்லை. அரசாங்கம் தரப்போவதும் இல்லை.
கிராமத்திற்கு வாருங்கள், கிராமத்தின் பிரச்சனைகளைப் பாருங்கள். மக்களைத் திரட்டி இந்தப் பணியைச் செய்யுங்கள்.
இலங்கையில் இவ்வாறான அரசாங்கங்கள் உருவாகவில்லை. கிராமப்புற வறுமையை ஒழிப்பதே தேசிய மக்கள் சக்தி அரசின் தலையாய பணியாகும் என்றார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ
வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.
இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ம் திகதி கண்டறியப்பட்டது.
குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த
3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் மற்றும் சாவி இல்லாத அந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் பென்டகன் பயணத்தை ரத்து செய்தார் ,ஈரானின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடிக்கு பிராந்தியம் தயாராகி வரும் நிலையில், ரத்து செய்யப்பட்ட பயணம் வந்துள்ளது.
கடந்த வாரம் ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு இஸ்ரேல் எதிர்பார்க்கும் பதிலடிக்கு பிராந்தியம் பிரேஸ் செய்வதால்,
இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டினை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார்.
பென்டகனின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று காலன்ட் தனது பயணத்தை நிறுத்தியதை உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஜனாதிபதி ஜோ பிடனுடன் “தொலைபேசி அழைப்பை” பெறும் வரையில் கையொப்பமிட மறுத்ததால்
பயணம் கைவிடப்பட்டது என்ற செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்க பென்டகன் மறுத்துவிட்டது, மேலும் இஸ்ரேலிய அமைச்சரவை ஈரானுக்கான பதிலை அங்கீகரிக்கிறது.
“நான் இஸ்ரேலிய அரசியலில் இருந்து விலகி இருக்கப் போகிறேன்” என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் செய்தியாளர்களிடம் கூறினார். “நான் அதைப் பற்றி அதிகம் படிக்க மாட்டேன்.”
ஆஸ்டின் மற்றும் கேலன்ட் ஒரு “சிறந்த உறவை” கொண்டுள்ளனர் மற்றும் 80 முறைக்கு மேல் பேசியுள்ளனர், சிங் மேலும் கூறினார்.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள்
இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள்
இஸ்ரேல் அமைச்சரை சுத்தி வளைத்து தாக்கிய மக்கள் ,இஸ்ரேல் இனவாத அமைச்சர் ஒருவரை போராட்ட நடத்திக் கொண்டிருக்கின்ற மக்கள் முன்பாக காரில் பயணித்துக் கொண்டிருந்தார் .
அவரை வழிமறித்த போராட்ட நடத்திக் கொண்டிருந்த மக்கள் அவர் கார் மீது சரமாரி தாக்குதலை நடத்தினர்.
இதில் அமைச்சருக்கு காயங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை.
காசா ,ரபா , தாக்குதல்
இஸ்ரேல் ராணுவம் காசா ,ரபா , தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரியும் சிறை பிடித்து செல்லப்பட்ட கைதிகளை மீட்டரும்படி கோரி இந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .
அவ்வாறு போராட்டம் நடத்துகின்ற மக்கள் மத்தியில் பயணித்த இவரது காரை சுற்றி வளைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கோபம் கொண்டு தாக்கினர் .
இஸ்ரேலிய அமைச்சரவையில் இனவாத அமைச்சராகவும் ஆளுமையுள்ள அமைச்சராகவும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆதரவை பெற்று விளங்கக்கூடிய மிக முக்கியமான ஒருவராக செல்வாக்கு நிறைந்த ஒருவராக காணப்படும் அமைச்சர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நடத்திய இந்த தாக்குதல் உலகளாவிய ரீதியில் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
முடிவில்லாது தொடரும் இந்த போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து எமது கைதிகளை விடுவித்து தரும்படியும், போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தி கோருகின்றனர் .
விழுந்து போன எங்களது பொருளாதாரம் வியாபாரங்களை கட்டி எழுப்ப இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .
பிரதமர் நெதன்யாகு கடும்போக்குத்தனம்
ஆனால் அந்த மக்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்து தமது அரசியல் அபிலாசைகளை தக்க வைத்துக் கொள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது கடும்போக்குத்தனத்தை காண்பித்து வருகின்றார் .
280க்கும் மேற்பட்ட நாள்கள் கடந்து பயணிக்கின்ற இந்த மக்கள் போராட்டத்திற்கு ஏதும் மதிப்போம் அளித்ததாக தெரியவில்லை.
தொடர்ந்தும் இவ்வாறான போராட்டங்கள் எடுத்துச் சென்றால் இஸ்ரேல் பிரதமர் வதிவிடங்கள் மற்றும் வீடுகள்,
என்பன சுற்றிவளைக்க வைக்கப்பட்டு மக்கள் உள் நுழைந்து தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் ,சில செய்திகள் இப்படி தெரிவித்தனர்.
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம்
ஈரான் வெளியுறவு அமைச்சர் உடலுடன் சொலைமாணி மோதிரம் அடக்கம் ,ஈரான் எஜனாதிபதியுடன் விபத்தில் பலியான ஈரான் வெளியுறவு
அமைச்சர் ஹொசைன் அமீர் அப்புத்துலாகின் சடலம் நல்லடக்கம் செய்ய பட்டது .
இதன் பொழுது ஈராக்கில் வைத்து படுகொலை செய்ய பட்ட ,
தளபதி காசிம் சொலைமாநி அணிந்திருந்த மோதிரம் அவரது உடலோடு அடக்கம் செய்ய பட்டுள்ளது .
ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு
ஈரான் வெளியுறவு அமைச்சருக்கும் ,தளபதி காசீம் சோலைமணிக்கும் இடையில் ,சிறந்த நட்புறவு காணப்பட்டது .
அவ்வாறான நிலையில் தற்போது ,அந்த உறவின் உன்னதத்தை மதிக்கும் வகையின்,காசிம் சோலைமணியின் மகள் இந்த மோதிரத்தை ,
அவரது சடலத்துடன் இனைத்து நல்லடக்கம் செய்திட வழங்கியுள்ளார் .
இந்த செயல்பாடானது இராணுவ தளபதிக்கு ,வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் எவ்விதமான நெருங்கிய உறவு நிலை காணப்பட்டது என்பதை இந்த விடயம் உலக வெளியில் பகிரங்க படுத்தியுள்ளது .
ஈரானிய மக்கள் விடுதலைக்கு முன்னல் இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தளிவருமாக விளங்கிய சோலைமானி அவர்கள் ஆற்றிய பெரும் சாதனை எவை என்பதை அவரது மரண நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் கணப்பித்தனர் .
தனது தேசம் நாடு ,மக்கள் என் ஆவர் அள்ளும் பகலும் உறங்காது ,நாட்டை காக்க சிந்தித்து செயல்பட்ட விடயம் மேற்படி விடயத்தை காண்பித்துள்ளது .
பிளவு பட்ட அமைப்புக்களி ஒன்றினைத்த சாதனை
பிளவு பட்ட அமைப்புக்களி ஒன்றினைத்து ஒரு அணியில் இணைத்து அவர் பயணித்த அந்த பயணம் என்பதே ,ஈரானின் இன்றைய அசுரர் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியது .
அதனாலே இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ,சோலைமானி மிக பெரும் அச்சுறுத்தும் நபராக காணப்பட்டார் .
இன்று மட்டும் இந்த வீர தளபதி உயிருடன் இருந்திருந்தால் இஸ்ரேல் மிக பெரும் அழிவை சந்தித்து இருக்கும் என்பதற்கு ,சான்றாக மாறி இருக்கும் .
அதனை நினைவு கூர்ந்தே அவரது மகள் .ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு தந்தையின் மோதிரத்தை அணிவித்து ,கவுரவித்துள்ளார் ,
தந்தையின் பணியை இவர் செய்தார் என்பதே அந்த மரியாதை ஊடக இந்த நிகழ்வு காண்பித்துள்ளது .
இதுவே இப்போது அரபுலகில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
Featured
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம் .இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவீர் பயணித்த வண்டி கவிழ்ந்தத்தில் அவர் காயம் அடைந்துள்ளனர் .
இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் முக்கியமானவராக விளங்கிய இவரே இஸ்ரேல் பாலஸ்தீன போர் நீடித்து செல்ல காரணமானவர் .
அவ்வாறான அமைச்சு பெருமானே வீதி விபத்தில் காயமடைந்துள்ளார் .
இஸ்ரேல் போர் அமைச்சர்
இஸ்ரேல் நாட்டின் போர் அமைச்சராக விளங்கியவரும் ,இனவாதியும் கடும் போக்காளருமான ,பெண் கிவீரே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் .
காயங்களுடன் தப்பியவர் ,உயிரிழக்காது தப்பித்துள்ளார் .

இஸ்ரேலிய உளவுத்துறையால் நன்கு திட்டமிட்டு இவர் வீதி விபத்தில் இவ்விதம் போட பட்டுள்ளார் என்பதாகவே விபத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது .
பாதுகாப்பு வண்டிகள் பயணித்த பொழுது ,இவ்விதம் இவர் விபத்தில் சிக்கியதால் இருந்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது .
அப்பவி பாலஸ்தீன காசா மக்கள் பல்யாகவே ,இந்த இனவாதியே காரணமாக விளக்கியவர் .
இவர் இவ்விதம் காயமடைந்த செயல் கண்டு அரேபிய மக்கள் குஷியில் உறைந்துள்ளான் .

நெதன்யாகுவுக்கு நெருக்கடி அமைச்சர்களுக்குள் அடிதடி
வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்
வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட ஆய்வில், பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமரின் கேள்வி நேரத்தில், SJB பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, VAT அதிகரிக்கப்பட்ட போதிலும்
தேங்காய் எண்ணெய், பருப்பு, கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் விலை வற் அதிகரிப்பிற்கு முன்னரும் தற்போதும் ரூ.600 ற்கே விற்பனையாகிறது.
வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்
ஒரு கிலோ கிராம் பருப்பு ரூ. 320 ,ஒரு கிலோ கிராம் கோதுமை மா ரூ. 220 என அதே விலையில் விற்பனையாகிறது.
VAT அதிகரித்த பின்னல் ஒரு முட்டையின் விலை ரூ.60 இலிருந்து ரூ.51 ஆக குறைந்துள்ளது.
” VAT அதிகரிப்பு குறித்து எம்.பி.க்கள் மத்தியில் பரபரப்பு இருந்தாலும்,சந்தை பரபரப்படையவில்லை,” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த எம்.பி. மரிக்கார், நாட்டில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடியின் சுமார் 500 விற்பனை நிலையங்கள் புத்தாண்டு தொடக்கத்திற்குப் பிறகு தங்கள் விற்பனை வீழ்ச்சியின் விளைவாக மூடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்
காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்
கடந்த தினம் பலஸ்தீனம் காசா மீது அணுகுண்டுகளை வீசி தாக்கி அந்த
பகுதியை காணாமல் ஆக்க வேண்டும் என முழங்கிய ,இஸ்ரேல் நாட்டின்
பழமைவாத அமைச்சர் பதவி நீக்கம் செய்ய பட்டுள்ளார் .
இவரது சர்ச்சைக்குரிய இந்த பேசினால் சர்வதேச ரீதியில் கொந்தளிப்பது ஏற்பட்டது
காசா மீது அணுகுண்டு வீசுக முழங்கிய அமைச்சர் பதவி நீக்கம்
இதனை தொடர்ந்து இஸ்ரேலிய ஆளும் அதிபர் நெதன்யாகு விடுத்த கட்டளையின் கீழ் இவர் பதவி
நீக்கம் செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேல் புரிந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மக்கள்
கொந்தளித்துள்ள நிலையில் ,இவ்வேளை
இவர் பேசிய இந்த் சர்ச்சை இனவாத பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி
வந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்ததன் மூலம் கொந்தளிப்பு தணிக்க பட்டுள்ளது
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி
- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்
- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது
- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு
கஞ்சாவினால் இலங்கை முதலிடம் வகிக்கும் அமைச்சர் அம்மணி கூவல்
கஞ்சாவினால் இலங்கை முதலிடம் வகிக்கும் அமைச்சர் அம்மணி கூவல்
இலங்கையில் ஆளும் அரசு க்ளஞ்சா செய்யகையை உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்க சட்டம் ,
இதனால் இலங்கை உலகில் இதற்கான முதலிடத்தை வகிக்கும் என ,சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார் .
குற்றங்கள் ,வன்முறைகள் அதிகரிக்கவும் ,நாடு சீரழிந்து செல்வதற்கும் நிலைப்பாடு அடித்தளமாக மாற்றம் பெறுகிறது .
,அரசியல் தலைகள் மில்லியன் கணக்க்கில் சம்பாதிக்க உருவாக்க பட்டுள்ளதே இந்த சட்டம் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு
by நிருபர் காவலன் - உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி
by நிருபர் காவலன் - நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
by நிருபர் காவலன் - 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது
by நிருபர் காவலன் - மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா
by நிருபர் காவலன்











































