Posted in இலங்கை செய்திகள்

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை , கொழும்பு ; அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்

கலந்துரையாடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான

சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.அரசாங்கத் தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் இதில் கலந்துகொண்டார்.

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்;

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மறுசீரமைக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காக சகல அமைச்சுகளினதும் வரவுசெலவுகள் கடந்த சில தினங்களில் ஆராயப்பட்டன என்று தெரிவித்த அமைச்சர்,எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு

அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.எரிபொருள் விநியோகத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு ஆலோசனைக் குழுவொன்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்படும்.

இதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. எரிபொருள் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு கியு.ஆர்.குறியீட்டு

முறைப்பிரகாரம் அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

குறியீட்டு முறைமை தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. 40 லட்சம் பேர் இதில் தம்மைப் பதிவு செய்துள்ளனர். இலங்கை போக்குவரத்துச்

சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் என்பன எரிபொருளை விநியோகிக்கின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள், தனியார் பஸ்கள், பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸகள், பாடசாலை வான், அம்புலன்ஸ் வண்டிகள், விவசாய உபகரணங்கள் உட்பட தொழில் பேட்டைகளுக்கு எரிபொருள்

நிலையங்களுக்குப் புறம்பாக இலங்கை போக்குவரத்துச் சபைக்குரிய 107 டிப்போக்கள் ஊடாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.

விவசாய உரத்திற்கான தட்டுப்பாடுக்கு ஒருவாரத்தில் தீர்வு:

இதேவேளை, விவசாய உரத்திற்கான தட்டுப்பாடு ஒருவார காலப்பகுதியில் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று விவசாய அமைச்சர்,

அமைச்சரவைக் கூட்டத்தின்போது தெரிவித்தாகவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் கூறினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்

    கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்

    பிரான்ஸ் ; தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர்

    போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

    போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின்

    கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.

    அந்தவகையில் தற்போது ஒரு நாட்டின் அதிபருக்குரிய இராஜீக வரப்பிரசாதங்கள் ஏதுமன்ற ஓர் சாதாரண பொதுமகனாக சிங்கப்பூரில்

    நிற்கின்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா என பல்வேறு நாடுகளிலும் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்

    கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதோடு கோரிக்கை மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

    கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என

    ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள்

    தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான

    குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான

    குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம்

    நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும்,

    தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

    இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான
    கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை


    நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என தெரவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம்,
    தமிழினத்தின் மீது இனப்படுகொலையினை புரிந்தவர்களுக்கு எதிரான உளவியல் யுத்தமாகவும் இது
    உள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்

      அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் நிறுத்தம்

      தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை

      பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.

      பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். அதன்போது பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

      எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை அமைச்சர்கள் நியமனம் தொடர்பிலும் தீர்மானங்களை எடுத்துள்ளோம்.

      அவர்கள் அமைச்சர்களுக்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
      அதேபோன்று அமைச்சர்களுக்கான சலுகைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

        Posted in இலங்கை செய்திகள்

        நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்

        நாங்கள் ஆட்சி அமைக்க உதவுங்க -நாமல் மன்றாட்டம்

        இலங்கையில் ராஜபக்ச குடும்ப ஆட்சியை முற்றாக அகற்ற மக்கள் தொடர்

        போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

        இவர்களின் இந்த போரட்டம் காரணமாக இயல்பு நிலை பாதிக்க பட்டுள்ளது

        ,
        இவ்வாறான கால பகுதியில் தாம் ஆட்சியமைக்க அணைத்து கட்சிகளும்

        ஒன்றிணையுமாற மகிந்த மகன் நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்

        அடித்த கொள்ளை பணத்தை பாதுகாக்க தற்போது ஆட்சி அதிகாரம் அவசியமாகிறது ,அதனால் தமது அதிகாரத்தை தக்க வைத்து


        கொள்வதில் ஆளும் கோட்டா அரசு தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          தமிழ் அமைச்சர் வீடு முன்பாக மக்கள் போராட்டம்

          ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

          அந்தவகையில் லிந்துலை எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெரயா, ஹென்போல்ட், திஸ்பனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள்

          , இளைஞர், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

          இந்த போராட்டமானது எல்ஜீன் பிரதேசத்திலிருந்து பேரணியாக திஸ்பனை சந்தி வரை சென்று மீண்டும் போராட்டகாரர்கள் லிந்துலை மெராயா பிரதேசத்தில் உள்ள

          இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்னால் போராட்டத்தை தொடர்ந்தனர்.

          மேலும், அவ்விடத்தில் சவப்பெட்டி, டயர், உருவ பொம்மை ஆகியன எரித்து மலையக மக்களுக்கு துரோகம் செய்த அரவிந்தகுமார் ஒழிய வேண்டும் என கோஷங்களை

          எழுப்பினர். இதனால் அந்தபகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதோடு, போக்குவரத்து சேவையும் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

          இதன்போது அமைச்சரின் வீட்டிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படாத வகையில் லிந்துலை, நானுஓயா,


          அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

            Posted in Uncategorized

            அமைச்சர் வீடு முற்றுகை – போலீசார் மக்கள் மோதல் – video

            அமைச்சர் வீடு முற்றுகை – போலீசார் மக்கள் மோதல் – video

            அமைச்சர் கேரத் வீட்டை மக்கள் சுற்றி வளைத்தனர்

            இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது

            இவர் மகிந்தவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்

            இதனால் சீற்றம் உற்ற மக்கள் அவர் வீட்டை சுற்றிவளைத்தனர் ,இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது

            மக்கள் பொலிசாருக்கு இடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது

            இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

            https://www.youtube.com/watch?v=6eI29vu1Dlk
              Posted in Uncategorized

              கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்

              கோட்டா கபடி ஆட்டம் – நிதி அமைச்சர் – சட்ட அமைச்சர் ஆனார்

              இலங்கையில் மூன்று வாரத்திற்குள் நிதி அமைச்சராக விளங்கிய அலிசப்ரி மீண்டும்

              நீதி அமைச்சராக மாற்றம் பெற்றுள்ளார்

              இவர்களின் இந்த அமைச்சு பதவி கபடி ஆட்டம் ,உலகில் சல சலபப்பை ஏற்படுத்தியுள்ளது

                Posted in Uncategorized

                புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்

                தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில்

                செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தார்.

                காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட

                ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்

                இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்களவர்கள், வட,கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்நாட்டில் காணிகள் உள்ளன.

                ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்றார்.

                புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்

                தொழிலாளர்கள், தொழில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் வாழ்வதற்கென ஒரு வீடு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே

                காணப்படுகிறது. வாக்குரிமை இல்லாத காலத்திலும் வாக்குரிமை பெற்றப் பின்னரும் மலையக மக்களுக்கு காணி உரிமைகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

                மாகாணசபைகளை முதலில் அமைத்து அதன் ஊடாக காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், முப்பது வருடங்கள் யுத்தம் செய்தும் நாட்டை பிரபாகரனால் அழிக்க முடியவில்லை.

                ஆனால் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற இரண்டே வருடங்களில் நாட்டை அவர் அழித்துவிட்டார் என்பதுபோல ஒரு கேலிசித்திரத்தை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

                  30 அமைச்சர்களாக்கும் கோட்டா – குழப்பத்தில் அரசியல்வாதிகள்

                  அமைச்சரவை இப்படிதான் மாற்றப்படும்

                  அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                  இலங்கையிலுள்ள 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றும் வேலைத்திட்டத்தை

                  ஆரம்பித்து வைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

                  மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் வேலைத்திட்டம், இன்று (07) முன்னெடுக்கப்பட்டது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                  பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே குழுவாக இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அனைத்து பின்னடைவுகளையும் குழுவாக நிவர்த்தி செய்வது கூட்டுப் பொறுப்பாகும்.

                  குறைபாடுகளை மாத்திரம் விமர்சித்தால் அது குறித்த நபரின் திறமையின்மையையே வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

                  மேலும், மக்கள் சார்பாக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்

                    Posted in Uncategorized

                    அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்


                    அமெரிக்காவின் முன்னாள் அமைச்சர் கொலின் பவூல் மரணம்

                    அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு மற்றும் இராயங்க செயலராக விளங்கிய கொலின் பவூல் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி தனது 84 வது வயதில் மணமாகியுள்ளார்

                    கறுப்பின மக்களின் முதலாவது அதி உயர் அதிகாரியாக இவர் அமெரிக்கா வரலாற்றில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்

                    இவர் கடும் போக்கு நிலையை கொண்டவர் என்பதும் ,புலிகள் தொடர்பில் அதே நிலையை கட்டிபிடித்து வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை

                      பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை

                      இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு ஆட்சியில் அமர்ந்த நிலையில்

                      தற்பொழுது பழி வாங்கும் அரசியல் தீவிரம் பெற்றுள்ளது,

                      இவ்வேளை முன்னாள் நிதி அமைச்ச மங்கள சமரவீர ஐந்து மணித்தியாலங்கள்

                      குற்றப்புலானய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்த பட்டார்

                      தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் அரசின் இந்த செயல் பாடுகள்

                      பெரும் அரசியல் எதிரொலியை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது