Posted in மருத்துவம்

பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..

பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..

தாம்பத்தியம் மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ

சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும்.

பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..
பெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..


ஆண்களுக்கு இருப்பதை போன்று பெண்களுக்கான வயகராவான பில்பென்சரின் ஆகஸ்ட் மாதம் 2015_ஆம் வருடம்

அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்களுக்கான வயகரா அவர்களின் மேற்கொள்ளும் உடலுறவில் விறைப்பு பிரச்சினையை

குணப்படுத்தி நீண்ட நேரம் உறவில் ஈடுபட உதவும். ஆனால் பெண்களுக்கான வயகரா வேறுமாதிரி வேலை செய்யும். இது பிங்க் நிறத்தில் சிறிய அளவிலான மாத்திரையாக இருக்கும்.

உடலுறவு மற்றும் வயகரா மாத்திரை தொடர்பாக பெண்கள் மருத்துவரிடம் சில ஆலோசனை பெற்ற பிறகு மருத்துவ

சோதனைகள் செய்யப்பட்ட பின் பெண்களுக்கு இந்த வயகரா மாத்திரை பரிந்துரைக்கப்படும். இந்த மாத்திரையை மதுவுடன்

சேர்த்து உட்கொள்ளக் கூடாது.அப்படி செய்தல் உங்கள் இரத்த அழுத்தம் கீழ்நிலைக்கு சென்று உயிரே போய் விடும்.

இந்த வயகராவை பெண்கள் எப்போதும் படுக்கைக்கு செல்வதற்கு முன்பாக உட்கொள்ள வேண்டும். இதனுடைய பலன் ஏதும்

தெரியவில்லை என்றால் உட்கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆண்கள் வயகரா அவர்களின் ஆணுறுப்பின் மீது செயல்படுவது போல இல்லாமல் இது பெண்களின் பிறப்புறுப்பை

காட்டிலும் அவர்களின் மூளையின் மீது செயல்பட்டு உறவில் அதிக நாட்டத்தை ஏற்படுத்தும். இது மூளையில் செயல்பட்டு

மனஅழுத்தத்தை போக்குவதுடன் மகிழ்ச்சியை உண்டாக்கும் ஹார்மோன்களான டோபமைன் போன்றவற்றை சுரக்க வைக்கிறது.

தாம்பத்தியத்தில் திருப்தி இருக்கும் பெண்களுக்கு இது தேவையில்லை. அதே போல கல்லீரல் பிரச்சினைகள், நரம்பு மண்டல பிரச்சினைக்காக வேறு மருந்துகளை எடுத்து

கொள்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்தக் கூடாது. ஆண்கள் வயகரா பொதுவாக உடனடியாக வேலை செய்யும், ஆனால் பெண்கள் வயகரா அப்படியில்லை, இதை நீங்கள்

தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இது வேலை செய்ய தொடங்க ஒரு மாதமாவது தேவைப்படும். சில பெண்களுக்கு எட்டு வாரங்கள் கூட ஆகலாம்.

இது ஆண்கள் வயகரா செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆண்களின் பயன்படுத்தும் வயகரா விறைப்பு பிரச்சினையை குணப்படுத்தி அவர்களை நன்றாக செயல்பட

வைக்கும். பெண்கள் பயன்படுத்தக் கூடிய இந்தவகையான வயகராவோ பாலியல் ஆசை இல்லாத பெண்களுக்கு பாலியல்

ஆசையை பெருக்கி அவர்களின் மகிழ்ச்சிக்கான ஹார்மோன்களை சுரக்கவைத்து செக்ஸ் ஆசையை தூண்டி விடுகின்றது.

நாம் பயன்படுத்துவதில் பக்க விளைவுகள் இல்லாத பொருட்கள் என்று எதுவும் கிடையாது. அதே போன்று இந்த வயகரா மாத்திரையால் சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை

பயன் படுத்தும் பெண்களுக்கு தலைவலி, தூக்கமின்மை, சோர்வு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.பெண்கள் பயன்படுத்தக்கூடிய இந்த வகையான வயகராவில் மேலும் சில

குறைபாடுகளும் உள்ளது. இந்த வயகரா மாத்திரைகளை கருத்தடை மாத்திரைகள் எடுத்து கொள்ளும்போதும், மது அருந்தும்போதும் பெண்கள் உட்கொள்ளக் கூடாது

வயகரா
வயகரா
      Posted in மருத்துவம்

      கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

      கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

      கர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன்? என்பது குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

      கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் ?
      கர்ப்பிணி


      கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும்

        மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.

        தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை

        பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

        500 பேருக்கு பரிசோதனை

        மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள்

        அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான

        பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

          கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள

          59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை

          போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும்

          500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

          கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும்

          கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

          ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

          அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து

            கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

            கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும்

            பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம்

            பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து

            நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

            தனிமைப்படுத்தவும்

            கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

            அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு

            இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

            ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

            கொரோனா
            கொரோனா
                Posted in மருத்துவம்

                தூக்கத்தினை பாதிக்கும் காரணங்கள்

                தூக்கத்தினை பாதிக்கும் காரணங்கள்

                நமக்கு தூக்கம் நல்ல ஆழ்தூக்கமாக இல்லாது இருந்தால் காலையில் 8 மணி வரை தூங்கிய பிறகும் நான் சோர்வாகவே இருக்கின்றேன்

                என்று சொல்லுவோம் ஆக நம் ஆழ் தூக்கத்தினை பாதிக்கும் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்து கொள்வோம்.


                நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம்

                என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப் பற்றி நீ சத்தமாக குறட்டை விடுகிறாய், ரொம்பவும் பிரண்டு பிரண்டு படுக்கின்றாய்

                என சொன்னால் மட்டுமே தெரியும். நமக்கு தூக்கம் நல்ல ஆழ்தூக்கமாக இல்லாது இருந்தால் காலையில் 8 மணி வரை

                தூங்கிய பிறகும் நான் சோர்வாகவே இருக்கின்றேன் என்று சொல்லுவோம் ஆக நம் ஆழ் தூக்கத்தினை பாதிக்கும் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்து கொள்வோம்.

                • தூங்கி எழுந்த பிறகு தலை வலி (அ) வறண்ட தொண்டை ஆகிய தொந்தரவு இருக்கின்றதா? 4.5 சதவீதம் ஆண்களும், 2.8
                • சதவீதம் பெண்களும் 30-60 வயதில் இரவில் தூங்கும் பொ-ழுது மவுனமாகவோ சத்தமாகவோ குறட்டை விடுகின்றனர்.
                • மூக்கின் பாதை குறுகியதாலும் அடைபாட்டினாலும் இது ஏற்படுகின்றது. இவ்வாறு இருப்பவர்கள் இரவு படுக்கப் போகும்
                • முன் வெது வெதுப்பான நீரில் குளித்தால் இந்த பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

                மேலும் இவர்கள் நிமிர்ந்து படுக்காமல் பக்கவாட்டில் படுத்தால் நன்கு உறங்க முடியும். அதிக எடை கூடியவர்கள் எடையினை

                குறைத்து கொள்வது நல்லது. ஹார்மோன் மாறுதல்கள், மது இவையும் தசைகளை தளர்த்தி மூக்கு வழிபாதை தடுப்பினை

                  ஏற்படுத்தும், ஆகவே ஹார்மோன் சிகிச்சை மதுவினைத் தவிர்த்தல் ஆகியவைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

                  • பகலில் ஏதோ ஒரு படபடத்த விதமாகவே இருக்கின்றதால் இதற்கும் இரவு சரியான தூக்கமின்மை ஒரு காரணமாக இருக்கலாம். தூக்கம், லேசான தூக்கம், ஆழ்ந்த தூக்கம், கனவு
                  • என 90 நிமிடங்கள் ஒரு சுற்றாக வருகின்றது. கெட்ட கனவுகள் ஒருவரின் மன உளைச்சலாலும் ஏற்படுகின்றன. யாரிடமும்
                  • எதையும் சொல்லாது மனதிலேயே புழுங்கும் பொழுதும், பகலில் இப்பிரச்சினைகளுக்கான தீர்வினை காணாத
                  • பொழுதும் அவை கெட்ட கனவாக இரவில் வெளிப்படுவதாக மனநல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

                  நமக்கு நல்ல கனவுகள் வந்தாலும் கெட்ட கனவுகளே மனதில் நின்று அச்சுறுத்துகின்றன. ஆகவே, மனஉளைச்சல், பிரச்சினைகளை

                  நம்பகமானவர்களோடு பகிர்ந்து கொள்வது இரவில் நல்ல தூக்கத்தினை தரும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

                  • சிலருக்கு திடீரென தூக்கத்தில் விழிக்கும் பொழுது கை, கால் அசைக்க முடியாதது போன்ற ஓர் உணர்வு சில நொடிகள் இருக்கும். 40 சதவீதம் மக்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது
                  • இதை அனுபவிக்கின்றார்கள். மனஉளைச்சல், படபடப்பு, விபத்துக்குள்ளான அதிர்ச்சி இப்படி பல காரணங்களை இதற்கு கூறலாம். பொதுவில் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு அதிக
                  • உணவு, காபி, மது இவைகளை கண்டிப்பாக தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றனர். மன நல மருத்துவர் உதவியும் சிலருக்கு தேவைப்படுகின்றது.
                  • சிலருக்கு தூக்கத்தில் ஆடைகள் நனையும் அளவு வியர்த்துக் கொட்டும். பொதுவில் தூங்கும் பொழுது நமது உடலின் உஷ்ண நிலை ஒரிரு டிகிரி இறங்குவது இயல்பு.உங்கள் உடலில் உள்
                  • உஷ்ணம் கூடுதலாக இருந்தால்.
                  • காற்றோட்டமான அறை, மெல்லிய பருத்தி ஆடைகள், பருத்தி போர்வை போன்றவை உதவும். மேலும் இரவில் மசாலா
                  • உணவுகள் விருந்து போன்றவற்றினை தவிர்த்துவிட வேண்டும்.
                  • பல் கடித்தல்
                  • தூக்கத்தில் நடத்தல்
                  • தூக்கத்தில் பேசுதல்

                  இவை அனைத்திற்குமே மருத்துவ உதவி பெறுதல் நல்லது.

                    உங்கள் உடல் உங்களைப் பற்றி சொல்பவை என்ன?

                    • முறையான நிலையில் நிற்காமல் கோணல், மானலாக நிற்பதும், தறையை பார்த்தபடியே நிற்பதும் ஒருவர் சோர்வாக கவலையாக இருப்பதனைக் குறிக்கும்.
                    • தலைவலி என்றால் முதலில் உடலில் நீர் சத்து குறைந்துள்ளதா, கண்ணுக்கு அதிக ஸ்ட்ரெயின் அல்லது கோணல் மாணலாக
                    • அமர்வது நிற்பது, படுப்பது போன்றவை கூட காரணமாக இருக்கலாம்.
                    • சோர்ந்து தொய்வாக நடந்தால் நீங்கள் சக்தியற்று இருப்பதனையும் மனம் ஈடுபடாமல் இருப்பதனையும்
                    • சொல்கின்றது. வயிறு சரியின்மை, மன உளைச்சல் முதலில் வயிறு சரியின்மையில்தான் காண்பிக்கும். படபடப்பு
                    • இருந்தால் வயிற்றுப் போக்கு கூட இருக்கும். வயிறு சரியின்மைக்கு ஜீரணக் கோளாறு உள்பட மற்ற மருத்துவ காரணங்களும் உள்ளது.
                    • உள்ளங்கையில் வியர்வை அதிக சூடு, மன உளைச்சல் போன்றவை காரணமாக இருக்கலாம்.
                    • இரு கைகளையும் விரல்களை மடித்து பந்து போல் இருப்பது குழப்பம், படபடப்பு இருப்பதனை உணர்த்துகின்றது.

                    முறையான உறக்கம், யோகா, உடற்பயிற்சிக்கு இவைகள் தரும் பலன் கொஞ்ச நஞ்சமல்ல. ஆகவே அவைகளை விடாது

                    செய்யுங்கள். எல்லா வேலைகளும் உங்கள் தலையில் என்றால் ஸ்ட்ரெஸ்தான். ஆகவே மென்மையாக உறுதியாக நோ சொல்ல

                    கற்றுக் கொள்ளுங்கள். சிறு சிறு மாற்றங்கள் நல்ல பலனைத் தரும். எனவே முறையாய் அதனை கடை பிடிக்க வேண்டும்.

                    தூக்கத்தினை பாதிக்கும்
                    தூக்கத்தினை பாதிக்கும்
                        Posted in மருத்துவம்

                        முதுகு, தோள் பட்டை வலியை குறைக்க இதை பண்ணுங்க

                        முதுகு, தோள் பட்டை வலியை குறைக்க இதை பண்ணுங்க

                        இந்த ஆசனத்தை செய்வதால் முதுகில் ஏற்படும் இறுக்கம் வலியை குறையும். ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.

                        முதுகு, தோள் பட்டை வலியை குறைக்கும் ஆகர்ண தனுராசனம்
                        ஆகர்ண தனுராசனம்
                        வில்லிலிருந்து அம்பை இழுப்பது போன்ற நிலை.

                        செய்முறை :

                        விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும். இடது

                        கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்து இழுத்து மார்புக்கு அருகில்

                        அணைத்துக் கொள்ள வேண்டும். பின் வலது கையால் இடது காலின் கட்டை விரலை பிடிக்க வேண்டும்.

                        வலது காலின் விரல்களை இடதுபக்க செவிக்கருகில் கொண்டு வர முயற்சி

                        செய்ய வேண்டும். கண் பார்வையை ஒரே இடத்தில் வைக்க வேண்டும்.

                        சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின் மெதுவாக வலது காலை விலக்கி

                        சாதாரண நிலைக்கு வர வேண்டும். பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

                        ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 25 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.

                        முதுகெலும்பு சிப்பி விலகல் இடுப்பு கூடு பிரச்சனை உள்ளவர்கள் தகுந்த யோக நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது உத்தமம்.

                        பயன்கள் :

                        நெஞ்சுப்பகுதி நன்கு விரிந்து நுரையீரல் நன்கு வேலை செய்து சுவாச மண்டல பிரச்சனைகள் சரியாகிறது. புஜங்கள் பலமாகிறது.

                        முதுகில் ஏற்படும் இறுக்கம் குறைகிறது. ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.

                        முதுகு தோள் பட்டை
                        முதுகு தோள் பட்டை
                          Posted in மருத்துவம்

                          இரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?

                          இரத்தம் சிவப்பாக இருப்பது ஏன்?

                          இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது தெரியுமா? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இரத்தத்திலுள்ள பொருள்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.


                          ஒரு மனிதனின் உடலில் சுமார் 3 முதல் 4 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. திறப்பில்லாத தமனி, சிரை தந்துகிகளின் வழியாக

                          இரத்தம் உடல் முழுவதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. உலகிலுள்ள எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஆண்கள், பெண்களின் உடலில் ஓடுவது சிவப்பு நிற ரத்தமே.

                              இரத்தத்தின் நிறத்திற்கும் தோலின் நிறத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இரத்தம் ஏன் சிவப்பாக உள்ளது தெரியுமா? இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இரத்தத்திலுள்ள

                              பொருள்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இரத்தத்தில் பிளாஸ்மா, இரத்த வெள்ளைஅணுக்கள், இரத்த சிவப்பு அணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில்

                              பாதியளவுக்கு மேல் பிளாஸ்மா நிரம்பி உள்ளது. இது மஞ்சள் நிறமுள்ள தடித்த திரவமாகும். இதில் புரதம், ஆன்டிபாடி, பைபிரி

                              னோஜின், மாவுப் பொருள், கொழுப்பு, உப்புகள் முதலானவை உள்ளன.

                              உடல் வளர புரதமும், விஷக்கிருமிகளை கொல்லவும், அவற்றின் விஷ நீரின் வீரியத்தைக் குறைக்க ஆன்டிபாடியும் வெட்டுக் காயத்திலிருந்து வரும் இரத்தத்தை நிறுத்த பைபிரினோஜினும்

                              உதவுகின்றன. இரத்த வெள்ளைஅணுக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவும், பருமனில் பெரியதாகவும் உள்ளன. இவை சுமார் 0.001 மி.மீ. பருமன் உள்ளன. 700 இரத்த சிவப்பணுவிற்கு ஒரு

                              வெள்ளையணு வீதம் உள்ளன. இவை உடலில் நுழைந்து நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து உடலை நோய்த் தாக்குதலில் இருந்து காப்பாற்றி பாதுகாக்கின்றன.

                              இரத்த சிவப்பணு ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இவை தட்டுப் போன்று வட்டமாக இருபுறமும் குழியாக உட்கரு இன்றி உள்ளன. இவை சுமார் 0.008 மி.மீ. பருமனுள்ளவை.

                              பிராண வாயுவை நுரையீரல்களிலிருந்து உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. இதனுள் சிவப்பு நிற ஹீமோகுளோபின் துகள்கள் நிறைந்துள்ளன. இவை சிவப்பாக இருப்பதுடன்

                                  இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. இத்துகள்கள் இரும்பையும் புரதத்தையும் கொண்டுள்ளன.

                                  பெண்ணின் ஒரு கியூபிக் மி.மீ. ரத்தத்தில் சுமார் 4.5 மில்லியன் இரத்தச் சிவப்பணுக்கள் உள்ளன. இரத்த சிவப்பணுக்கள்

                                  குறைந்தால் அனீமியா நோய் தோன்ற வாய்ப்புள்ளது. சிவப்பணு சுமார் 4 மாதங்கள் ஆயுள் கொண்டவை. இவை எலும்பு மஜ்ஜையில் தோன்றி மண்ணீரலில் அழிகின்றன.

                                  இரத்தத்தட்டுகள் மிகச்சிறியவை 0.002 மி.மீ. பருமனுள்ளவை. ஒரு கியூபிக் மி.மீ. இரத்தத்தில் சுமார் ஒன்றரை லட்சம் முதல் 4 லட்சம்

                                  இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தம் உறைதலுக்கு இத்தட்டுக்கள் முக்கியமானவை. இரத்த தானத்தால் உடல் புத்துணர்வு பெறுகிறது

                                  . மேலும் மாரடைப்பு உள்பட பல பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்கிறது.

                                  இரத்தம் சிவப்பாக இருப்பது
                                  இரத்தம் சிவப்பாக இருப்பது
                                      Posted in மருத்துவம்

                                      முதுமையில் தொற்றும் நோய்கள்

                                      முதுமையில் தொற்றும் நோய்கள்

                                      முதியோர் வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,

                                      பக்கவாதம், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

                                      முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர்.

                                        உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.

                                        வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதய

                                        கோளாறு, மன அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

                                        இதுபோன்ற பிரச்சினைகளால் கடந்த 5 ஆண்டுகளாக முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர்.

                                        அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு

                                        மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

                                        முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகிறது. அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையை கவனிப்பது போன்றது. அதே

                                        மாதிரி தான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

                                        சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும், அடிக்கடி கீழே விழும்

                                          முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. முதியோர் மருத்துவ மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா

                                          , ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

                                          வெளிநாடுகளில் முதியோருக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறைகள், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான

                                          நடைமுறைகள் பற்றி தற்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

                                          முதுமையில் தொற்றும் நோய்கள்
                                          முதுமையில் தொற்றும் நோய்கள்
                                              Posted in மருத்துவம்

                                              மனைவிக்கு ‘அந்த’ மூடு வருவதை கணவர் அறிந்து கொள்வது எப்படி?

                                              மனைவிக்கு ‘அந்த’ மூடு வருவதை கணவர் அறிந்து கொள்வது எப்படி?

                                              எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

                                              இந்தியா முழுவதும் கொரானா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருக்கும் கணவன்

                                              மனைவி இருவருக்குள்ளும் புரிதல் ஏற்பட இந்த தனிமை உதவும். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் கணவர் மனைவியின்

                                                ஆசையை அறிந்து செயல்படுவது தாம்பத்தியத்தை திருப்பி அடையச்செய்யும்.

                                                எதற்கும் ஒரு நேரம் காலம் உண்டு அல்லவா. அதுபோல, பெண்கள் உடலுறவு கொள்ள விரும்புவதற்கும் ஒரு நேரம், காலம் உண்டு. அது பற்றி கணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

                                                கிரியேட்டிவ் மூட்:

                                                உங்கள் மனைவி எப்போதுமே சிறப்பாக சமைப்பவர்தான் என்றாலும், கூடுதலான ஸ்பெஷல் ஐட்டங்களை ரசித்து ருசித்து செய்தி வைத்திருக்கிறார் என்றால் “மூடில்” இருக்கிறார் என்று அர்த்தம்.

                                                சமையல் என்றில்லை… அழகான பெயிண்டிங் வரைந்திருக்கிறார் என்றாலோ, தோட்டத்தை அழகுற சீரமைத்திருக்கிறார் என்றாலோ

                                                இதே அர்த்தம்தான். காரணம், கிரியேட்டிவாக செயல்படும்போது, மனது உற்சாகமாக இருக்கும் “அந்த” ஆசை வேர்விடும். இதுபோன்ற

                                                சந்தர்ப்பங்களில் உங்களுக்கு ஒரு நல்ல செக்ஸ் உறவு அமையலாம். தவறவிட்டுவிடாதீர்கள்!

                                                சில, பல நாட்கள் கணவரை பிரிந்திருக்கும் மனைவிமார்களுக்கு கணவர் வந்த பிறகு லவ் மூட் ஸ்டார்ட் ஆகிவிடும்.

                                                பெரும்பாலான பெண்கள் முழு “நீல”ப்படத்தை விரும்புவதில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? இலைமறை காயான – ஓரளவு

                                                செக்ஸ் காட்சிகள் – தான் அவர்களுக்கு மூடை ஏற்படுத்தும். ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதைப்போல, இதில் ஓவர் டோஸ் மனதுக்கு ஆகாது என்பது பெரும்பாலான பெண்களின் எண்ணம்.

                                                .உற்றார் உறவினர் இல்ல விசேசங்களுக்கு கணவனுடன் சென்று வந்த பிறகு, மனைவி மார்களுக்கு ஜாலி மூட் வருமாம். பொறாமையும் செக்ஸ் மூடை ஏற்படுத்துமாம்.

                                                ஆம்… வேறு பெண்கள் தங்கள் கணவனை நெருங்க முயலும் போதும் கணவன் வேறு பெண்கள்மீது அதீத உரிமையுடன் பேசும்போதும் மனைவிமார்களுக்கு பொறாமை உணர்ச்சி ஏற்படும்.

                                                இது போன்ற நேரங்களில் கணவனுடன் உறவு கொள்ள மனைவிமார்கள் விரும்புகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காரணம்,

                                                தனது கணவனிடம், நான்தான் உன்னுடையவள் என்பதை உணர்த்தும்படியாக செக்ஸை நினைக்கிறார்கள்.

                                                ஏதோ பெரும் கவலை அல்லது பதட்டமான நேரத்திலும் கணவனின் அருகாமையை செக்ஸை விரும்புகிறார்கள் மனைவிமார்கள்.

                                                செக்ஸ் உறவு கொண்டால் மன அழுத்தம் குறைவதாக பெண்கள் நம்புகிறார்கள்.

                                                  மகிழ்ச்சியான தருணங்களிலும் உறவு கொள்ள விரும்புகிறார்கல். கணவன் சர்ப்பிரைஸாக பரிசு அளிக்கும்போது, பிறந்த நாள்,

                                                  பிரமோசன் போன்ற மகிழ்ச்சியான தருணங்கள் மனைவிகளுக்கு செக்ஸ் மூடை ஏற்படுத்துகிறதாம்.

                                                  ஓகே.. கணவாஸ்… மனைவி மனசை அறிந்து கொண்டீர்கள். மகிழ்ச்சி தானே!

                                                    Posted in மருத்துவம்

                                                    தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

                                                    தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

                                                    ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு.

                                                    எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

                                                    ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்


                                                      ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்


                                                      ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

                                                      சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி

                                                      இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு

                                                      கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.

                                                      விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை

                                                      கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த

                                                      விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.

                                                      ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

                                                      உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.

                                                      தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி

                                                        பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

                                                        தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை

                                                        செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.

                                                          Posted in மருத்துவம்

                                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

                                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் – தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?

                                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் கல்யாணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? என்ற சந்தேகங்களுக்கான விடையை இங்கே அறிந்து கொள்ளலாம்.

                                                          வலிப்பு நோயுள்ள பெண்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா?
                                                          வலிப்பு நோயுள்ள பெண்


                                                          வலிப்பு நோய் சார்ந்த அணுகுமுறை ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரிதான் என்றாலும் பெண்களுக்கு

                                                            கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. மாதவிலக்கு, பேறு காலம், பிரசவ காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் மற்றும் குழந்தை

                                                            வளர்ப்பு போன்ற பல நிலைகளிலும் ஹார்மோன்களினால் பெண்களின் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் வலிப்பு நோய் வரக்கூடும்.

                                                            இது சமுதாயத்தில் எல்லோருடைய மனதிலும், அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தோன்றும் முக்கியமான கேள்வி. நிச்சயமாக

                                                            கல்யாணம் செய்துகொள்ளலாம். வலிப்பு நோயும் மற்ற நோய்களைப் போன்று தீர்க்கக்கூடிய நோய்தான். தீர்க்க முடியாத

                                                            வலிப்பு நோய் என்பது மிகக்குறைந்த சதவிகிதம்தான் உள்ளது. அதனையும் தகுந்த மாத்திரைகள் மூலம் கட்டுப்பாட்டுக்குள்

                                                            கொண்டு வர முடியும். ஆனால், பிறவியிலேயே மூளை வளர்ச்சி குன்றி இருப்பவர்களுக்கும் வலிப்பு நோய் இருக்கலாம். அவ்வாறு இருப்பவர்களுக்கு அறிவுத்திறன் குறைவாக இருக்கும்.

                                                            தன் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவாகவே இருந்தாலும், வலிப்பு நோய் கூடவே இருந்தாலும் அவர்களுக்கும் கல்யாணம்

                                                            செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோர்களின் மனதிலும் கண்டிப்பாக இருக்கும். இதற்கான பதில் மூளை

                                                            நரம்பியல் மருத்துவரிடம்தான் உள்ளது. அப்பெண்களின் அறிவுத்திறனை ஆராய்ந்து அவர்களால் ஒரு குடும்பத்தை

                                                            நடத்தக்கூடிய அளவிற்கு மூளை வளர்ச்சி மற்றும் மூளையின் செயல்திறன் உள்ளதா என்பதை அறிந்து ஆராய்ந்து மருத்துவரின்

                                                              ஒப்புதலுக்கு பின்பே திருமணம் நடத்துவதைப் பற்றி பெற்றோர்கள் எண்ணிப்பார்ப்பது நல்லது. இவ்வாறு மூளைவளர்ச்சி குன்றி வலிப்பு

                                                              நோயுடன் இருக்கும் பெண்களை தவிர்த்து மற்ற அனைத்து வலிப்பு நோய் உள்ள பெண்களும் திருமணம் செய்து கொள்வதில் தடையேதுமில்லை.

                                                              வலிப்பு நோய் உள்ள பெண்களிடம் தாம்பத்தியத்தில் ஈடுபடலாமா? கண்டிப்பாக ஈடுபடலாம். வலிப்பு நோய்க்கும் தாம்பத்ய உறவிற்கும்

                                                              எந்தவித சம்பந்தமும் கிடையாது அது பரவும் நோயும் அல்ல. அதனால்

                                                              வலிப்பு நோய் தங்களுக்கும் வந்துவிடுமோ என்ற எண்ணம் ஆண்களின் மனதில் வரத் தேவையே இல்லை.

                                                                Posted in மருத்துவம்

                                                                எப்போது அருந்தினால் என்ன பலன்

                                                                தண்ணீரை எப்போது அருந்தினால் என்ன பலன்

                                                                தண்ணீர் அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.


                                                                மனிதன் உயிர்வாழ மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர். ஆனால் அது இப்போதெல்லாம் போதுமான அளவுக்கு மக்களுக்கு கிடைப்பதில்லை. போதிய மழையின்மை காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது.

                                                                தண்ணீரின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி சொல்லக்கூடிய அளவுக்கு காலம் மாறிவிட்டது. தண்ணீர்

                                                                அருந்துவது மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பல உண்டு.

                                                                தண்ணீரை எப்போது அருந்தினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

                                                                • உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படும்.
                                                                • உடற்பயிற்சி செய்ய தொடங்கும் முன் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராகும்.
                                                                • வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதும், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த உடனும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும்.
                                                                • விடியற்காலையில் எழுந்ததும் 2 டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடலின் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்கும்.

                                                                *3 வேளையும் சாப்பிடும் முன் தண்ணீர் அருந்துவது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.

                                                                • போதுமான அளவு தண்ணீர் அருந்தினால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
                                                                • தண்ணீர் அருந்துவது நல்லதுதான். அதற்காக தாகம் இல்லாமல் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவதும் கூடாது.
                                                                • அதிகமாக தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாக தாகம் எடுக்க வேண்டும். அதற்கு உடல் உழைப்பு மிகவும் அவசியம். நாம்
                                                                • அருந்தும் தண்ணீரை நன்கு காய்ச்சி மிதமாக சூட்டில் பருகுவது மிகவும் நன்மை தரும்.
                                                                தண்ணீரை
                                                                தண்ணீரை
                                                                Posted in மருத்துவம்

                                                                டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு

                                                                டி.வி. பார்ப்பதாலும், செல்போன் பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு

                                                                ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் இடைவிடாமல் டி.வி., பார்ப்பதாலும், செல்போனை

                                                                பயன்படுத்துவதாலும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.

                                                                கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்கள் பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்ற னர்.

                                                                அத்தியாவசிய தேவைக்காக மட்டும் பொதுமக்கள் காலை நேரங்களில் வெளியில் வருகின்றனர். மற்ற நேரங்களில் மக்கள்

                                                                வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இவ்வாறு வீட்டில் இருக்கும்போது, பொதுமக்கள் பலர், குறிப்பாக இளைஞர்கள்,

                                                                சிறுவர்-சிறுமிகள் டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலர் மூழ்கி விடுகின்றனர்.

                                                                டி.வி., செல்போனை இடைவிடாமல் தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகலாம்

                                                                எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த கண் மருத்துவ சிகிச்சை பெண் நிபுணர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

                                                                பொதுவாக டி.வி., செல்போன் அதிகம் பார்ப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஊரடங்கில் செல்போனை

                                                                பயன்படுத்துவதும், டி.வி. பார்ப்பதும் அதிகரித்துள்ளது. செல்போனில் உள்ள வெளிச்சம் கண்களை பாதிப்படையாமல்

                                                                இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவர்கள் இருளில் அமர்ந்து செல்போனை பார்க்க

                                                                கூடாது. தொடர்ந்து இடைவிடாமல் செல்போனை பயன்படுத்தக்கூடாது. இதனால் கண்களில் விழித்திரை பாதிப்படையும்.

                                                                கண் பார்வையை பாதிக்காத வகையில் கண்ணாடிகள் அணியலாம். குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு செல்போன்

                                                                பயன்படுத்தலாம், டி.வி. பார்க்கலாம். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையும், செல்போன் பயன்படுத்து

                                                                வதையும் தவிர்த்து விட வேண்டும். இதேபோல குழந்தைகளும் அதிகம் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

                                                                கண்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வைட்டமின் ‘ஏ‘ வகை உணவுகளான பால், கேரட், தக்காளி, மாம்பழம், மீன், ஆட்டு

                                                                இறைச்சி, கீரை ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படாது.

                                                                இவ்வாறு அவர் கூறினார்.

                                                                Posted in மருத்துவம்

                                                                இருமலை போக்க இதை சாப்பிடுங்க

                                                                இருமலை போக்க இதை சாப்பிடுங்க

                                                                இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

                                                                இருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்
                                                                அதிமதுரம் தேங்காய் பால்
                                                                தேவையான பொருட்கள்:

                                                                அதிமதுரம் – 5 துண்டுகள்

                                                                தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
                                                                சுக்கு பொடி – 1 டீஸ்பூன்


                                                                தூளாக்கிய வெல்லம் – தேவைக்கு
                                                                ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்

                                                                அதிமதுரம் தேங்காய் பால்

                                                                செய்முறை:

                                                                அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

                                                                பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

                                                                வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

                                                                நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

                                                                மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

                                                                இதனை ஆறவைத்து பருகலாம்.

                                                                இருமலை போக்க இதை சாப்பிடுங்க
                                                                இருமலை போக்க இதை சாப்பிடுங்க
                                                                Posted in மருத்துவம்

                                                                முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு

                                                                முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு

                                                                சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய ஒரு சிறந்த ஃபேஸ்பேக் எப்படி வாழைப்பழத்தை

                                                                பயன்படுத்தி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

                                                                முகப்பரு, கரும்புள்ளிக்கு நிரந்தர தீர்வு தரும் வாழைப்பழம்
                                                                வாழைப்பழ பேஸ்பேக்


                                                                இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அதிகம் சரும பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள்

                                                                அனைத்தும் சரும அழகையே பாதிக்கின்றன. இவை அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய வாழைப்பழம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது.

                                                                ஒரு பவுலில் பாதியளவு வாழைப்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி போட்டு நன்றாக மசித்து கொள்ளவும். பின் அதனுடன் ஒரு

                                                                ஸ்பூன் மைதா மாவு அல்லது கோதுமை மாவினை சேர்த்து கொள்ளவும். அதன் பிறகு 1/4 ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், அரை ஸ்பூன்

                                                                எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இவற்றை

                                                                பயன்படுத்துவதற்கு முன். முகத்தை 5 நிமிடங்கள் வரை ஆவி பிடிக்கவும்.

                                                                பின்பு முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு. பின்பு தயாரித்த வாழைப்பழ ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்யுங்கள்.

                                                                இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறைந்து சருமம் பளபளப்பாக மற்றும் வெள்ளையாக காணப்படும்.

                                                                சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும். அப்படிப்பட்டவர்கள் பாதியளவு வாழைப்பழத்தை எடுத்து நன்றாக

                                                                மசித்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்து, 15

                                                                நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு

                                                                முறை செய்து வர சருமத்தில் உள்ள கருமைகள் மறைந்து, சருமம் பொலிவுடன் காணப்படும்.

                                                                சன்லையிட் காரணமாக சருமம் வறட்சி அடைத்து காணப்படும். இந்த சரும வறட்சியை சரி செய்ய வாழைப்பழம் சிறந்த

                                                                ஃபேஸ்பேக்காக பயன்படுகிறது. இதற்காக கடைகளில் விற்கப்படும் கண்டகண்ட ஃபேஸ்வாஷினை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

                                                                எனவே ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றில் அரை வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக மசித்து

                                                                கொள்ளவும். பின் அதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கினை சருமத்தில் நன்றாக அப்ளை

                                                                செய்து நன்றாக மசாஜ் செய்யவும், பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும்.

                                                                பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த முறையை தினமும் பின்பற்றலாம் அல்லது வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை

                                                                பின் பற்றலாம். இவ்வாறு அப்ளை செய்வதினால் சரும வறட்சி நீங்கி சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் காணப்படும்.

                                                                முகப்பரு கரும்புள்ளிக்கு
                                                                முகப்பரு கரும்புள்ளிக்கு
                                                                Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

                                                                மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க

                                                                மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க

                                                                நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்

                                                                முதன்முறையாக மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க
                                                                மேக்கப் போட


                                                                இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான்

                                                                இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன்.

                                                                நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்.

                                                                கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக

                                                                மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா ..?

                                                                வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை

                                                                அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும்.

                                                                முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை

                                                                முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத்

                                                                தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

                                                                அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம்

                                                                இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!

                                                                வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ

                                                                க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

                                                                சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது.

                                                                மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

                                                                ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால்

                                                                மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க

                                                                வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து

                                                                மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.

                                                                உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத்

                                                                தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது.

                                                                லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்!

                                                                மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

                                                                மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின்

                                                                மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

                                                                கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை

                                                                மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

                                                                பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள்

                                                                ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

                                                                  Posted in மருத்துவம்

                                                                  உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?

                                                                  உடல் பருமன் கர்ப்பமடைவதை பாதிக்குமா?

                                                                  உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்

                                                                  அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

                                                                  கருமுட்டைகள் உற்பத்தி திறன், உடல் பருமன் அதிகமாவதால் ஹார்மோன்

                                                                  மாற்றங்கள் ஏற்பட்டு கருமுட்டைகள் வளர்வதில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

                                                                  உடல் பருமன் அதிகரிப்பதால் கருமுட்டை வளர்ச்சி, கருமுட்டை முதிர்ச்சி, கருமுட்டை வெளியாக்கும் திறன், கருமுட்டை

                                                                  கருவாக்கும் திறனை பாதித்து குழந்தையின்மையை ஏற்படுத்துகிறது.

                                                                  இதற்கு முக்கிய காரணம் உடல் எடை அதிகமாவதால் பெண்களுக்கு இன்சுலின் சுரப்பில் மாறுபாடு ஏற்பட்டு கருமுட்டை

                                                                  வளர்ச்சி, கரு வெளியாக்கும் திறன், கருமுட்டை உருவாக்கும் திறன் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

                                                                  உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு சினைப்பையில் நீர்க்கட்டிகள்

                                                                  அதிகமாக ஏற்பட்டு, இதன் மூலமாக பெண்களுக்கு கருத்தரிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக அமைகிறது.

                                                                  உடல் பருமன் கர்ப்பமடைவதை
                                                                  உடல் பருமன் கர்ப்பமடைவதை
                                                                  Posted in மருத்துவம்

                                                                  முருங்கை இலை டீ குடித்தால் இந்த நோய்கள் பறக்கும்

                                                                  முருங்கை இலை டீ குடித்தால் இந்த நோய்கள் பறக்கும்

                                                                  மக்கள் முருங்கை இலையில் இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. தினமும் ஒரு கப் முருங்கை

                                                                  டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

                                                                  முருங்கை இலை டீ குடித்தால் கிடைக்கும் பயன்கள்
                                                                  இலை டீ


                                                                  முருங்கை கீரையில் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் ஏராளம் இருக்கின்றன.

                                                                  இருந்து டீயும் தயாரிக்கப்படுகிறது. இது ‘மோரிங்கா தேநீர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட

                                                                  மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. அதுபோல் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், பி6, சி மற்றும் மெக்னீசியம்

                                                                  , பீட்டா கரோட்டீன் ஆகியவையும் இருக்கிறது. தினமும் ஒரு கப் மோரிங்கா டீ குடித்தால் உடல் எடை, ரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

                                                                  கீரையில் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்

                                                                  தன்மைகொண்டவை. முருங்கைக்கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சத்தினை தருகிறது.

                                                                  ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஐசோதியோசயனேட்டுகள் இதில் அதிகமாக உள்ளன. இதனால் சர்க்கரை நோயாளிகள் இதனை பருகலாம்.

                                                                  மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினை களுக்கு ஆளாகுபவர்களுக்கு மோரிங்கா டீ நன்மை

                                                                  பயக்கும். அது மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.

                                                                  முருங்கை இலை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் தன்மையும் அதற்கு

                                                                  இருக்கிறது. பாக்டீரியா, பூஞ்சை போன்றவற்றை திறம்பட எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. இந்த டீயை பருகுவதன் மூலம்

                                                                  வாய்வழி நோய் தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். காலையிலோ அல்லது மாலையிலோ ஒருவேளையாவது மோரிங்கோ டீ பருகலாம்.

                                                                  இந்த விடயங்களை தொடராக நீங்கள் புரிந்து வந்தால் அதில் நீங்கள் அதிக பலனை அடைய முடியும் ,முயன்றால் முடியும் என்பது இந்த மருத்துவ குறிப்பில் தெரிந்து கொள்ள முடியும் .

                                                                    Posted in மருத்துவம்

                                                                    தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு வலிப்பதற்கான காரணங்கள்

                                                                    தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு வலிப்பதற்கான காரணங்கள்

                                                                    தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு.


                                                                    முதல் பிரசவத்தை சந்திக்கும் இளம்பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிலருக்கு தாய்ப்பால் கட்டு

                                                                    உண்டாகி மார்பில் அதிக வலி உண்டாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளை தெளிவாக

                                                                    தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமோ வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ கேட்டு அதன்படி செய்ய

                                                                    வேண்டும்.இல்லையெனில் தாய்ப்பால் கட்டு உண்டாகும். அப்படி தாய்ப்பால் கட்டிகொள்ளும் போது காய்ச்சல், மார்பில் வலி,

                                                                    மீண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத அளவு வலி, குழந்தைக்கு தாய்ப்பால் வராமல் அடைத்துகொள்வது, மார்புபகுதி

                                                                    சிவந்தும் தடித்தும் இருப்பதும் கூட உண்டாகும். தாய்ப்பால் கட்டிலிருந்து குணமாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

                                                                    மார்பு வலி அல்லது வீக்கம் இருந்தால் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியை குறைக்க முடியும். பொறுக்கும் சூட்டில் வெந்நீரை

                                                                    கொண்டு ஒத்தடம் செய்யலாம். அல்லது மெல்லிய காட்டன் துணியை வெந்நீரில் பிழிந்து மார்பு பகுதியில் ஒத்தடம்

                                                                    கொடுக்கலாம். வலி இருக்கும் பக்கம் மட்டும் இல்லாமல் இரண்டு பக்கமும் இந்த ஒத்தடம் கொடுக்கும் போது வலி வேகமாக

                                                                    குறையும். பால் கட்டு தளர்ந்து வெளியேறும். வெந்நீரை போன்று ஐஸ் கட்டிகள் கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம்.

                                                                    மார்பு பகுதி இறுக்கமாகும் போது பால் கட்டு தளர்ந்து விரைவாக வெளியேற உதவும்.

                                                                    தாய்ப்பால் கட்டு இருக்கும் போது மார்பில் கை வைக்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். சிறு வலி இருக்கும் போதே மசாஜ் செய்ய தொடங்குங்கள். வலி அதிகமானால் மசாஜ் செய்வது அதிக

                                                                    சிரமத்தை உண்டாக்கும். உள்ளங்கைகளால் வட்ட வடிவில் மார்பின் மீது கைவைத்து மசாஜ் செய்யுங்கள். அழுத்தமாக இல்லாமல்

                                                                    மிதமாக 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தாலே போதுமானது. இதனால் வலி குறைவதோடு பால் கட்டும் குறைய தொடங்கும்.

                                                                    எப்போதும் படுக்கும் போது ஒருக்களித்து படுங்கள்.மல்லாந்து படுக்கும் போது தாய்ப்பால் கட்டு தளராது. மேலும் அதிகரித்து

                                                                    மார்பகங்களை மேலும் கனமாக மாற்றும். இதனால் மறுநாள் காலை எழும் போது மேலும் வலியும் அதிகரிக்கும். குழந்தையால்

                                                                    பாலும் குடிக்க முடியாது. அதனால் எப்போது படுத்தாலும் ஒருக்களித்து படுங்கள்.

                                                                    தாய்ப்பால் கட்டு இல்லையென்றாலும் இதை பின்பற்றுங்கள். ஆனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஒருக்களித்து

                                                                    படுத்தபடி கொடுக்க கூடாது. இதனால் பால் வேகமாக வருவதோடு குழந்தைக்கு மூச்சுத்திணறலும் உண்டாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.​பற்று போடலாம்.

                                                                    தாய்ப்பால் கட்டுக்கு மல்லிப்பூவை அரைத்து பற்று போடுவார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இவை தாய்ப்பால் சுரப்பை கட்டுப்படுத்திவிடும் என்பதால் தாய்ப்பால் கட்டுக்கு பிறகு

                                                                    குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும். மல்லிகைப்பூக்கு பதிலாக பச்சைபயறு அல்லது கடலை பருப்பு

                                                                    அரைத்து சுத்தமான தண்ணீரில் குழைத்து மார்பின் மீது பற்று போடுங்கள். நன்றாக உலர்ந்ததும் மார்பை மிதமான நீரில்

                                                                    கழுவினால் பால் எளிதாக வெளியேற்ற முடியும். மீண்டும் தாய்ப்பால் சுரப்பதிலும் பிரச்சனை இருக்காது.

                                                                    தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல் குழந்தை பெற்ற உடல் பலம் பெறுவதற்கும் சத்துமிக்க உணவை

                                                                    எடுத்துகொள்வதுண்டு ஆனால் தாய்ப்பால் கட்டு இருக்கும் போது உணவையும் குறைத்து எடுக்கவேண்டும். இல்லையெனில் பால் சுரப்பு அதிகரித்து மார்பிலும் வலியை உண்டாக்கிவிடும்.

                                                                    இவையெல்லாம் 15 வருடங்களுக்கு முன்புவரை இளம் தாய்மார்கள் அதிகம் சந்தித்திருக்கிறார்கள். தற்போது பெரும்பாலான பெண்கள்

                                                                    குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். எனினும் குழந்தை பிறந்த முதல் மூன்று

                                                                    மாதங்களில் இந்த தாய்ப்பால் கட்டுக்கு உள்ளாவதுண்டு. ஆனால் தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை

                                                                    உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு. பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால்

                                                                    கொடுக்கும் போதும்மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் தாய் சேய் இருவரது ஆரோக்கியமும் மேம்படும்.

                                                                      Posted in மருத்துவம்

                                                                      பெண்களின் உள்ளாடையால் ஏற்படும் உடல் நலக் கேடு

                                                                      பெண்களின் உள்ளாடையால் ஏற்படும் உடல் நலக் கேடு

                                                                      நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை

                                                                      அணிகிறார்கள். அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல.


                                                                      உள்ளாடைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருக்கிறது. நிறைய பேர் உள்ளாடை விஷயத்தில்

                                                                      அலட்சியமாக இருந்துவிடுகிறார்கள். ஈரமான,
                                                                      இறுக்கமான உள்ளாடைகளை அணிவது நல்லதல்ல.

                                                                      அது சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்துவதோடு நோய் தொற்று ஏற்படகாரணமாகிவிடும்.

                                                                      துணிகளை துவைத்தபின்பு நறுமணம் வீசச்செய்யும் ‘டிடர்ஜெண்டுகளை’

                                                                      நிறைய பேர் பயன்படுத்துகிறார்கள். அவை சருமத்திற்கு தீங்குவிளைவிக்காததாக இருக்க வேண்டும்.

                                                                      பெண்கள் நிறைய பேர் இடுப்பு தசையை குறைக்கும் நோக்கத்துடனும், கட்டுடல் அழகை தக்கவைக்கவும் ‘ஷேப்வேர்’

                                                                      எனப்படும் உள்ளாடையை அணிகிறார்கள். அதனை நீண்ட நேரம் அணிந்தால் ரத்த ஓட்டம் தடைப்படும்.

                                                                      அதோடு வாயு, உடல் வீக்கம், அஜீரணம் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

                                                                      சிலருக்கு உடல் பகுதியில் தேவையற்ற முடி வளரும். முடியை சூழ்ந்து வீக்கம், தடிப்பு போன்ற பிரச்சினையும் உருவாகும்.

                                                                      இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கே இத்தகைய பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

                                                                      நீண்டகாலமாக இறுக்கமான உள்ளாடை அணிபவர்களுக்கு ஈஸ்ட் நோய்தொற்று பாதிப்பு அதிகரிக்கும்.

                                                                      உள்ளாடைகள் வழியே சருமத்திற்கு போதுமான அளவு காற்று ஊடுருவி செல்ல வேண்டும்.

                                                                      நிறைய பெண்கள் நைலான், பாலியெஸ்டர், லைக்ரா போன்ற காற்று உட்புக அனுமதிக்காத செயற்கை உள்ளாடைகளை அணிகிறார்கள்.

                                                                      அவை ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் நல்லதல்ல. பருத்தி போன்ற காற்று ஊடுருவக்கூடிய உள்ளாடைகளே சிறந்தது.

                                                                      பெண்களின் உள்ளாடையால் ஏற்படும் நாளாந்த உடல் நலக் கேட்டில் இருந்து விடுதலை பெற்றுக்கொள்ள என்ன செய்யலாம் ..?

                                                                      பெண்களின் அந்தரங்க பகுதிகளால் அதிக வேர்வை அதனால் ஏற்படும் நாற்றம் ,அருகில் சக மனிதர்களுடன் உலாவரும் போது அவர்களுக்கு அந்த நாற்றம் அடிக்கும் நிலையை கணப்பித்து முகம் சுளிக்க வைத்து விடுகிறது .

                                                                      இந்த நாற்றத்தை தடுக்க நாள் தோறும் புது உள்ளாடைகள் அணிவதன் ஊடாகவும் ,உடலை சுத்தமாக வைத்து கொளவதன் மூலமும் ,உரோமங்களை அகற்றி நாற்றத்தில் இருந்து உடலை தற்காத்து கொள்ள முடியும் .

                                                                      முடிகளை அகற்றி விட்டால் இந்த நாற்றத்தில் இருந்து பாதி விடுதலை பெற்று விடலாமா என்பது இங்கே கவனிக்க தக்கது .

                                                                        Posted in மருத்துவம்

                                                                        பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு முதுகுவலி வரக்காரணம்

                                                                        பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு முதுகுவலி வரக்காரணம்

                                                                        சிசேரியனின் போது பெண்களுக்கு முதுகில் போடப்படும் ஊசியால் கடுமையான

                                                                        முதுகு வலி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்


                                                                        சிசேரியனின் போது முதுகில் போடப்படும் மயக்க ஊசிக்கும் முதுகுவலிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. முதுகெலும்பைச்

                                                                        சுற்றியுள்ள ஜவ்வுப் பகுதிகளிலோ தசைகள் மற்றும் எலும்புகளிலோ ஏற்படும்

                                                                        பாதிப்புகள் காரணமாக முதுகுவலி வரலாம். ஆனால் பலர் இப்படித்தான் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

                                                                        பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைப்பது எப்படி

                                                                        சிசேரியன் அறுவை சிகிச்சையின்போது இரண்டுவிதமான மயக்க மருந்துகள் கொடுக்கப்படும்.

                                                                        இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு வால்வு பிரச்சனை உள்ளவர்களுக்கு ‘எபிடியூரல்’ என்கிற மயக்க மருந்து கொடுப்போம்.

                                                                        இது முதுகுத் தண்டு வடத்துக்கு வெளியே போடப்படுவது. இந்த மருந்தை `கதீட்டர்’ என்னும் டியூபின் உதவியோடு அறுவை

                                                                        சிகிச்சை முடியும் வரை சிறுகச்சிறுக செலுத்துவோம். இந்த மருந்தால் இரத்த அழுத்தம் அதிரடியாக இறங்காது. பக்க விளைவுகளும் ரிஸ்க்கும் குறைவு.

                                                                        ‘ஸ்பைனல் அனஸ்தீசியா’ என்பது ஒரே ஊசியாக முதுகுத் தண்டுவடத்தின் உள் பகுதியில் போடப்படுவது.

                                                                        இதில் ரிஸ்க் அதிகம். ஆரோக்கியமானவர்களுக்கு மட்டும்தான் தேவையின் அடிப்படையில் இது கொடுக்கப்படும்.

                                                                        காதலனுக்கு பெண்களை கூட்டி கொடுத்த காதலி

                                                                        ‘யாருக்கு எந்த வகை மயக்க மருந்து கொடுப்பது’ என்பதை மருத்துவர்களே முடிவுசெய்வார்கள்.

                                                                        இந்த இரண்டு மருந்துகளுமே முதுகுவலிக்குக் காரணமாவதில்லை.

                                                                        தாய்ப்பால் கொடுக்கும் பருவத்தில் பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். அதனால்கூட முதுகுவலி வரலாம்.

                                                                        பற்றாக்குறையை ஈடுகட்ட கால்சியம் சத்தும் வைட்டமின் டி சத்தும் சேர்ந்த சப்ளிமென்ட்டுகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உரிய மருக்களை பெற்று கொள்வதன் மூலமும் ,அவரது ஆலோசனையை பின்பற்றினால் தீர்வு கிடைக்க பெறும் .

                                                                        முதுகுவலிக்கான முக்கியக் காரணங்களில் எடை அதிகரிப்பும் ஒன்று. பிரசவத்துக்குப் பிறகு பெரும்பாலான

                                                                        பெண்களுக்கு எடை அதிகரிக்கும். உடற்பயிற்சிகளையும் உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.

                                                                        குறிப்பிட்ட வயதுக்குப்பின் பெண்களுக்கு இயல்பிலேயே தசை மற்றும் எலும்புகள் நலிவடையும். ஈஸ்ட்ரோஜென் குறைந்து

                                                                        முதுகெலும்பு பலவீனமடையும். முதுகுவலிக்கு இவையெல்லாம்கூட காரணமாகலாம்.

                                                                          Posted in மருத்துவம்

                                                                          தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு வலிப்பதற்கான காரணங்கள்

                                                                          தாய்ப்பால் கொடுக்கும் போது மார்பு வலிப்பதற்கான காரணங்கள்

                                                                          தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு.


                                                                          முதல் பிரசவத்தை சந்திக்கும் இளம்பெண்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிலருக்கு தாய்ப்பால் கட்டு

                                                                          உண்டாகி மார்பில் அதிக வலி உண்டாகும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்கும் முறைகளை தெளிவாக

                                                                          தெரிந்து வைத்திருக்க வேண்டும். மருத்துவரிடமோ வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ கேட்டு அதன்படி செய்ய

                                                                          வேண்டும்.இல்லையெனில் தாய்ப்பால் கட்டு உண்டாகும். அப்படி தாய்ப்பால் கட்டிகொள்ளும் போது காய்ச்சல், மார்பில் வலி,

                                                                          மீண்டும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத அளவு வலி, குழந்தைக்கு தாய்ப்பால் வராமல் அடைத்துகொள்வது, மார்புபகுதி

                                                                          சிவந்தும் தடித்தும் இருப்பதும் கூட உண்டாகும். தாய்ப்பால் கட்டிலிருந்து குணமாக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

                                                                          மார்பு வலி அல்லது வீக்கம் இருந்தால் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியை குறைக்க முடியும். பொறுக்கும் சூட்டில் வெந்நீரை

                                                                          கொண்டு ஒத்தடம் செய்யலாம். அல்லது மெல்லிய காட்டன் துணியை வெந்நீரில் பிழிந்து மார்பு பகுதியில் ஒத்தடம்

                                                                          கொடுக்கலாம். வலி இருக்கும் பக்கம் மட்டும் இல்லாமல் இரண்டு பக்கமும் இந்த ஒத்தடம் கொடுக்கும் போது வலி வேகமாக

                                                                          குறையும். பால் கட்டு தளர்ந்து வெளியேறும். வெந்நீரை போன்று ஐஸ் கட்டிகள் கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம்.

                                                                          மார்பு பகுதி இறுக்கமாகும் போது பால் கட்டு தளர்ந்து விரைவாக வெளியேற உதவும்.

                                                                          தாய்ப்பால் கட்டு இருக்கும் போது மார்பில் கை வைக்க முடியாத அளவுக்கு வலி இருக்கும். சிறு வலி இருக்கும் போதே மசாஜ் செய்ய

                                                                          தொடங்குங்கள். வலி அதிகமானால் மசாஜ் செய்வது அதிக சிரமத்தை உண்டாக்கும். உள்ளங்கைகளால் வட்ட வடிவில் மார்பின்

                                                                          மீது கைவைத்து மசாஜ் செய்யுங்கள். அழுத்தமாக இல்லாமல் மிதமாக 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்தாலே

                                                                          போதுமானது. இதனால் வலி குறைவதோடு பால் கட்டும் குறைய தொடங்கும்.

                                                                          எப்போதும் படுக்கும் போது ஒருக்களித்து படுங்கள்.மல்லாந்து படுக்கும் போது தாய்ப்பால் கட்டு தளராது. மேலும் அதிகரித்து

                                                                          மார்பகங்களை மேலும் கனமாக மாற்றும். இதனால் மறுநாள் காலை எழும் போது மேலும் வலியும் அதிகரிக்கும். குழந்தையால்

                                                                          பாலும் குடிக்க முடியாது. அதனால் எப்போது படுத்தாலும் ஒருக்களித்து படுங்கள்.

                                                                          தாய்ப்பால் கட்டு இல்லையென்றாலும் இதை பின்பற்றுங்கள். ஆனால் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது ஒருக்களித்து

                                                                          படுத்தபடி கொடுக்க கூடாது. இதனால் பால் வேகமாக வருவதோடு குழந்தைக்கு மூச்சுத்திணறலும் உண்டாகும் என்பதையும்

                                                                          நினைவில் கொள்ளுங்கள்.
                                                                          ​பற்று போடலாம்.

                                                                          தாய்ப்பால் கட்டுக்கு மல்லிப்பூவை அரைத்து பற்று போடுவார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இவை தாய்ப்பால் சுரப்பை

                                                                          கட்டுப்படுத்திவிடும் என்பதால் தாய்ப்பால் கட்டுக்கு பிறகு குழந்தைக்கு தாய்ப்பால் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்.

                                                                          மல்லிகைப்பூக்கு பதிலாக பச்சைபயறு அல்லது கடலை பருப்பு அரைத்து சுத்தமான தண்ணீரில் குழைத்து மார்பின் மீது பற்று

                                                                          போடுங்கள். நன்றாக உலர்ந்ததும் மார்பை மிதமான நீரில் கழுவினால் பால் எளிதாக வெளியேற்ற முடியும்.

                                                                          மீண்டும் தாய்ப்பால் சுரப்பதிலும் பிரச்சனை இருக்காது.

                                                                          தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அல்லாமல் குழந்தை பெற்ற உடல் பலம் பெறுவதற்கும் சத்துமிக்க உணவை

                                                                          எடுத்துகொள்வதுண்டு ஆனால் தாய்ப்பால் கட்டு இருக்கும் போது உணவையும் குறைத்து எடுக்கவேண்டும்.

                                                                          இல்லையெனில் பால் சுரப்பு அதிகரித்து மார்பிலும் வலியை உண்டாக்கிவிடும்.

                                                                          இவையெல்லாம் 15 வருடங்களுக்கு முன்புவரை இளம் தாய்மார்கள் அதிகம் சந்தித்திருக்கிறார்கள். தற்போது பெரும்பாலான பெண்கள்

                                                                          குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை என்று தான் தெரிவிக்கிறார்கள். எனினும் குழந்தை பிறந்த முதல் மூன்று

                                                                          மாதங்களில் இந்த தாய்ப்பால் கட்டுக்கு உள்ளாவதுண்டு. ஆனால் தாய்ப்பால் கட்டு இருப்பதால் தான் மார்பில் வலி என்பதை

                                                                          உணராமல் தாய்ப்பால் கொடுப்பதால் தான் வலி என்று தவறாக புரிந்துகொள்பவர்களும் உண்டு. பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால்

                                                                          கொடுக்கும் போதும்மருத்துவரின் ஆலோசனையை பெறுவதன் மூலம் தாய் சேய் இருவரது ஆரோக்கியமும் மேம்படும்.