Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை
வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள
நிறுவனங்களுக்கு மின்சார மற்றும் நீர்க் கட்டணப் பட்டியலை செலுத்துவதற்கு சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைவாகவே அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
இது தொடர்பாக 2021.01.18 அன்று மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் பின்வருமாறு:
- கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கான சலுகை வழங்கல்
கொவிட் 19 தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய மின்சாரப் பாவனையாளர்களுக்கு சலுகை வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனை மற்றும் தொற்றுப்
பரவலால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணப் பட்டியல் மற்றும் நீர்க் கட்டணப் பட்டியல் செலுத்துவதற்கு சலுகை வழங்குவதற்கு
ஏற்புடையதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணுமாறு
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்களுக்கு குறித்த
காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணப் பட்டியலைச் செலுத்துவதற்காக பட்டியல் திகதியிலிருந்து 06 மாதங்களுக்கு
இலகு தவணைக் காலத்தை வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்.
• தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட சினிமா திரையரங்குகளில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் திசம்பர் மாதம் வரையான மின் கட்டணப் பட்டியல், அதன் பட்டியல்
திகதியிலிருந்து 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பு மேற்கொள்ளாதிருத்தல்
• இலங்கை சுற்றுலாத்துறை அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ள தங்குமிடங்களுக்காக 2020 மார்ச் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை
சேர்ந்துள்ள மின் கட்டணப் பட்டியல் 12 சமமான மாதாந்த தவணைகளில் செலுத்துவதற்கு வாய்ப்பு வழங்கலும் அதுவரை மின் துண்டிப்பை மேற்கொள்ளாதிருத்தல்
இலங்கையில் சம்பளம் 25% அதிகரிக்கும் என அறிவிப்பு
இலங்கையில் சம்பளம் 25% அதிகரிக்கும் என அறிவிப்பு
ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில்
திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு 03 ஆம் இலக்க சம்பளக் கொடுப்பனவு
சட்டத்திலேயே இவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கமைய, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக்
கொடுப்பனவை 25 சதவீதத்தால் அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் 53 ஆயிரத்தை கடந்த கொரனோ நோயாளிகள்
இன்றைய தினத்தில் நாட்டில் 749 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா
தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
ஆதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 53,062 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 45,171 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், 264 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
7,627 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மகிந்த,கோட்டாவை தூக்கில் போடுக ஐநாவிடம் சம்பந்தர்,கூட்டணி வேண்டுதல்
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, நான்கு அம்சங்களை உள்ளடக்கி, தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நேற்று (17) திகதியிடப்பட்ட அந்தக்
கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ சி.வி. விக்னேஸ்வரன்
ஆகியோரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அடங்கலாக 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில், தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல்’ எனத் தலைப்பிட்டுள்ள அக்கடிதத்தின் பிரதிகள் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைப் பேரவையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு
ஆயத்தமாகும் இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், தமிழ்த் தேசிய கட்சிகளின்
தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள், தமிழ் சிவில் அமைப்புகள் ஆகிய நாம் இக்கடிதத்தை எழுதுகின்றோம்.
ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களில் இலங்கை அரசாங்கம் உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காகக் கூடுகையில், இவ்வாறான முடிவெடுத்து இறுதித்
தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும். இத்தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் போது,
இழைக்கப்பட்ட இனப் படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும்.
பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டதென்றும், இதை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ, கலப்புப் பொறிமுறை
மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்.
ஆகையால்,
1) இலங்கையை இனப்படுகொலை,மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு
பொருத்தமானதும் செயற்படுத்தக் கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை ஐ.நா பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டுமென்று, இப்புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.
2) ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தலைவர், இவ்விடயத்தை மேலே கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
3) ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அலுவலகம், இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிற மீறுதல்களைக்
கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகம் ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.
4) மேலே ‘1’ இல் கூறியதற்குப் பங்கமில்லாமல் ஐ.நா பொதுச் சபையின் உப பிரிவாக, சிரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கிற பொறிமுறை போன்றதொன்றை
(ஐஐஐஆ) கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு ஏற்படுத்துதல் வேண்டும்.
‘பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டு
செல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.
ஆகையால்,இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளுக்கு
வலியுறுத்துகிறோம்’ என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்தியா கட்டி கொடுத்த மருத்துவமனை
இந்தியாவின் இலங்கைக்கான கண்டி புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கைகான இந்திய உதவி தூதுவர் ராக்கேஸ் நடராஜ் இந்திய நிதி உதவியில் அமைக்கப்பட்ட டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் குறைநிறைகளை ஆராய்வதற்காக நேற்று (17) திகதி டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
சுமார் 152 வரலாற்றினை கொண்ட குறித்த வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 2011 ஆண்டு 150 கட்டில்களைக்கொண்ட மூன்று மாடி புதியக்கட்டடம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்டு 2013 ஆண்டு நிறைவு செய்தது.
குறித்த வைத்தியசாலையில் ஆறு சத்திரசிகச்சைகள் ஒரு அவசரசிகிச்சைப்பிரிவு அதிநவீன சமையலறை கழிவறை உட்பட வைத்தியர் விடுதிகள் ஆகியன கொண்டு அமைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2017 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு இந்திய அரசாங்கத்தினால் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய வைத்தியசாலையில் கடந்த காலங்களில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டன.
நவீன முறையில் அமைக்கப்பட்ட கழிவறை சுத்திகரிப்பு பிரிவு பழுதடைந்தமையினால் அதில் வெளியேறும் கழிவு நீர் பிரதேசம் முழவதும் துர்நாற்ம் வீசியது.,
இதனால் சிகச்சைக்கு வருபவர்களும் வைத்தியர்கள் ஊழியர்கள் பிரதேச வாசிகள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இதனை புனரமைப்பதற்கு சுகாதர பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அது கைக்கூடவில்லை இது போன்று இன்னம் சில குறைபாடுகளும் காணப்பட்டன.
இது குறித்து இந்திய உதவி தூதரகத்திற்கும் அறிவிக்கப்;பட்டிருந்தமையினாலும் அவர் இது குறித்த ஆராய்ந்து பார்ப்பதற்காகவே நேற்று (17) வருகை தந்திருந்தார்.
இதன் போது குறைபாடுகள் குறித்தும் வைத்தியசாலையில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகள் குறித்தும் உடனடியாக விளக்கமான அறிக்கை ஒன்றினை தனக்கு சமர்ப்பிக்குமாறும் அது குறித்து இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கத்திடமும் பேசி இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
வைத்தியசாலையின் கடமை வைத்திய பணிப்பாளர் அருள்குமார் உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள் இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டதுடன் பதவியேற்று எட்டு தினங்களிலேயே இந்த வைத்தியசாலையின் குறை நிறைகளை ஆராய இவர் விஜயம் செய்திருப்பதனால் மிக விரைவில் பிரிச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என நம்புவதாக இதன் போது வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்தன.
4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா
4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலைய அதிகாரிகள்
நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் குறித்த நிலையத்தில் கடமையாற்றும் 200 பேர் அளவில்
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமைகளுக்ககாக வேறு பொலிஸ் அதிகாரிகள்
180 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
நாடு முழுவதும் சுமார் 116,000 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
சுய தனிமையில் இருப்போருக்கு எச்சரிக்கை
நாட்டில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகளை முறையாக
பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, சிவில் உடையில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த
தீர்மானித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 116,000 பேர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர்,
பெரும்பாலானோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
சுய தனிமையில் இருப்போர் இரவு நேரங்களில் வீட்டை விட்டு
வெளியேறுவதாக, தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சட்டத்தை மீறுவோரை கைதுசெய்வதற்காக, தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டுள்ள வீடுகளுக்கு அருகில் பொலிஸாரை சிவில்
உடையில் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா
பாராளுமன்ற பணியாளர் நான்கு பேருக்கு கொரோனா
பாராளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த இரு
தினங்கள் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலம்,
நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை உறுதிசெய்துள்ளார்
தூர இடங்களுக்கான ரயில் சேவை நாளை ஆரம்பம்
தூர இடங்களுக்கான ரயில் சேவை நாளை ஆரம்பம்
தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.55 ற்கு பதுளை நோக்கி பொடிமெனிகே
கடுகதி ரயில், காலை 5.55ற்கு கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசந்துறை நோக்கி
யாழ்தேவி ரயில் மற்றும் பிற்பகல் 3.35 ற்கு கொழும்பு கோட்டையிலிருந்து
கண்டி நோக்கி கடுகதி ரயிலும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளன.
இதே வேளை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு,
மாத்தறை, பெலியத்த ஆகிய இடங்களுக்கும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
ஆசன முன்பதிவுகளை இன்று முதல் மேற்கொள்ளலாம் என யாழ்
பிரதான ரயில் நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்
மேலும் சில பிரதேசங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்
தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு

கடற்கரையில் இருந்து பெண் சடலமாக மீட்பு
மாத்தறை பரை தீவிற்கு அருகில் கடலோர அரிப்புக்கு பயன்படுத்தப்படும்
பாறைகளுக்கு இடையில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலத்திற்கு அருகில் இருந்து வங்கியொன்றின் குடை, பயன்படுத்தப்பட்ட
பால் பெக்கெட்டுக்கள் நான்கும் மற்றும் பற்றுச்சீட்டு ஒன்றும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
கோட்டா ஆட்சியில் ஆறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
கோட்டா ஆட்சியில் ஆறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்
காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவிலிருந்து
ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் ஆற்றுப்பகுதியிலேயே
பிரதேசவாசிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக இன்று
காலை சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பழுதடைந்துள்ளமையினால் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை
எனத் தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரனோ மரண எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு
கொரனோ மரண எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் நால்வர் நேற்றைய தினம்
உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று
மரணங்களின் மொத்த எண்ணிக்கை 255 ஆக ஆதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தடுப்பூசி அடுத்த மாத நடுப்பகுதியில் ஆரம்பம்
கொவிட் 19 வைரசை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை
வழங்குவதற்காக அடுத்த மாத நடுப்பகுதி தொடக்கம் தேவையான நடவடிக்கைகளை
எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைகழத்தின் தடுப்பூசி பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பைஸர் மற்றும் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக
தடுப்பூசிகளை ஏற்றுவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
மேல்மாகாணத்தில் உள்ள அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் பொலிஸாரால்
நேற்று (16) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆயிரத்து 311
நிறுவனங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில், ஆயிரத்து 98 நிறுவனங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி வருகிற நிலையில், 213 நிறுவனங்கள்
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறி செயற்படுவதாகப்
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த 213 நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாயின் வாயில் சிசுவின் சடலம் – அதிர்ச்சியில் பொலிஸ்
நாயின் வாயில் சிசுவின் சடலம் – அதிர்ச்சியில் பொலிஸ்
நிவித்தகல பாரவத்த பிரதேசத்தில், சிசுவொன்றின் சடலத்தை நாய்
கௌவ்விச் சென்றுள்ள நிலையில், அதனைப் பெண்ணொருர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
மேற்படி பெண் இறப்பர் தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருந்தபோது, சிசுவொன்றின் சடலத்தை,
நாய் கௌவ்விச் செல்வதை அவதானித்துள்ளார். இதனையடுத்து அவர் நாயைத் துறத்திச் சென்றுள்ள நிலையில், சிசுவின் சடலத்தை
போட்டுவிட்டு நாய் ஓடியுள்ளது. இதனையடுத்து, பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த
பொலிஸார், சிசுவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.
மேற்படி சிசு, பிறந்து இரண்டு நாள்களாக இருக்கலாம் என்றும் பிறந்தவுடனேயே பற்றைக்காட்டுக்குள் வீசப்பட்டிருக்கலாம்
என்றும் சந்தேகிக்கும் பொலிஸார் சிசுவின் தாயைக் கைது
செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உருக்குலைந்த நிலையிலேயே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று- நாவலப்பிட்டி பூட்டு
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, நாவலப்பிட்டி
நகர வர்த்தக நிலையங்களை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியலயத்துக்கு உட்பட்ட பகுதியில், 16 பேருக்கு கொரோனா தொற்று
உறுதிதானதையடுத்தே, நாவலப்பிட்டி வர்த்தக சங்கத்தினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
நாவலப்பிட்டி நகர் முழுவதும் தொற்று நீக்கப்பட்டதன் பின்னர், வர்த்தக
நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிறி கருணாதாஸ தெரிவித்தார்.
இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அத்மிரல் சுமித் வீரசிங்க நியமனம்
இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அத்மிரல் சுமித் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை கோட்டாவால் திறப்பு
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை கோட்டாவால் திறப்பு
தெற்காசியாவின் மிகப்பெரிய டயர் மற்றும் ரேடியேட்டர் டயர் உற்பத்தி ஆலையான “ஃபெரெண்டினோ டயர் கோர்ப்பரேஷன்“
நிறுவனம் நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
ஹொரன வகவத்த முதலீட்டுச் சபை கைத்தொழில் வலயத்திற்கு சொந்தமான 155 ஏக்கர் நிலத்தில் இந்த கைத்தொழில்த வளாகம் அமைந்துள்ளது. முதல் கட்டத்திற்கான முதலீடு 100 மில்லியன்
அமெரிக்க டொலர்கள் ஆகும். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உலகின் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
SUV வாகனங்கள், மோட்டார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல உலகத் தரம் வாய்ந்த டயர்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறன. 80% உற்பத்தி ஏற்றுமதி செய்யப்படுவதுடன்
, மீதமுள்ள 20% உள்ளூர் சந்தைக்கு வழங்கப்படுகிறது. நிறுவனத்தின் முதல் தொகுதி உற்பத்தி இந்த மாதம்
அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்சாலையின் நன்மைகளில், நாட்டின் ஏற்றுமதி சந்தை அபிவிருத்தி, ஏராளமான நேரடி மற்றும் மறைமுக
வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் இறப்பர் செய்கையாளர்களுக்கு கிடைக்கும் அதிக விலைகள் ஆகியவை அடங்கும்.
உற்பத்தித் துறையின் நிலையான எல்லைகளை கடந்து, தொழில்நுட்பத் துறை பதவிகளுக்கு தகுதியான பெண்களை நியமிக்க நிறுவனத்தின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழிற்சாலை வளாகம் சூழல் நட்புடையதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை
ஃபெரெண்டினோ டயர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் நந்தன லொகுவிதான வரவேற்றார்.
நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி அவர்கள் டயர் உற்பத்தி நிறுவனத்தின் முழு செயல்முறையையும் பார்வையிட்டார். கடந்த புலமைப் பரிசில் பரீட்சையில் 200
புள்ளிகள் பெற்ற இங்கிரிய சுமனஜோதி வித்தியாலயத்தின் மாணவி யசஸ்மி தெவ்மிக்கு ஜனாதிபதி அவர்கள் அன்பளிப்பொன்றை வழங்கினார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகா சங்க சபையின் சங்கைக்குரிய இத்தேபானே ஸ்ரீ தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர்களான விமல் வீரவங்ச,
ரோஹித அபேகுணவர்தன, மஹிந்த அமரவீர, ரமேஷ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, கனக ஹேரத், டீ.வீ. சானக, பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன மற்றும்
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

வெள்ளத்தில் மிதக்கும் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவந்த அடைமழை காரணமாக 10,561 குடும்பங்களைச் சேர்ந்த 34, 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க
அதிபர் கே. கருணாகரன் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவுக்கு தகவல்கள் தெரிவித்தார்.
கடந்த 2 நாட்களாக பெய்த அடைமழை காரணமாக மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 3,576
குடும்பங்களைச் சேர்ந்த 12304 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1965 குடும்பங்களைச் சேர்ந்த 5841 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் 1698 குடும்பங்களைச் சேர்ந்த 5283 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 73 குடும்பங்களைச் சேர்ந்த 217
நபர்களும், ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 878 குடும்பங்களைச் சேர்ந்த 2670 நபர்களும், போரதீவுப்பற்று வெள்ளாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 162 குடும்பங்களைச்
சேர்ந்த 482 நபர்களும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 933 குடும்பங்களைச் சேர்ந்த 2975 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் 1260 குடும்பங்களைச் சேர்ந்த 4584
நபர்களும், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் 16 குடும்பங்களைச்சேர்ந்த 59 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கிரான், செங்கலடி, மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, பட்டிப்பளை, போரதீவுப்பற்று பிரதேசங்களில் தலா
ஒரு வீடுமாக மொத்தம் 7 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சுகாதார விதிகளுக்கமைவாக
உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







