213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Spread the love

213 நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

மேல்மாகாணத்தில் உள்ள அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் பொலிஸாரால்

நேற்று (16) சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆயிரத்து 311

நிறுவனங்களில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில், ஆயிரத்து 98 நிறுவனங்கள் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி வருகிற நிலையில், 213 நிறுவனங்கள்

சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறி செயற்படுவதாகப்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த 213 நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *