Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு
நாங்கள் நாட்டை விட்டு ஓடமாட்டோம் நாமல் இறுமாப்பு
இலங்கையில் ராஜபக்ஸ்சா குடும்பம் நாட்டை விட்டு ஓடவேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தம நாட்டை விட்டு ஒருபோதும் ஓடமாட்டடோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்
மகிந்த ஆதரவு -விமல் ,கேகலியா உள்ளிட்ட 10 அமைச்சர்கள் வீடுகள் தாக்குதல் – வீடியோ
மகிந்த ஆதரவு -விமல் ,கேகலியா உள்ளிட்ட 10 அமைச்சர்கள் வீடுகள் தாக்குதல் – வீடியோ
மகிந்தவின் ஆதரவு அமைச்சர்கள் பத்துபேரது வீடுகல் அடித்து நொறுக்க பட்டுள்ளன
இதில் கேகலிய ரம்புகளை ,விமல்வீரவன்ச,பந்துல குணவர்தன ஆகியோர் வீடுகளும்
உள்ளடக்கம் இவர்களே மகிந்தாவுக்கு ஆதரவாக பேசி வந்தமை குறிப்பிட தக்கது
மகிந்த தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க வீதி முற்றுகை -video
இலங்கை இனவாத ஹிட்லர் மகிந்த நாட்டை விட்டு தப்பி ஓடுவதை தடுக்க கட்டுநாயக்க விமான நிலைய பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இவ்வேளை போலீசாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளதுஅந்த காட்சியை இங்கே பார்க்கவும் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்
மகிந்த குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட்டம்
இலங்கை அதிபர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தபபி ஓடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
திருமலை கடற்படை தளத்தில் தங்க வைக்க பட்டுள்ள இவர்கள் சிறப்பு விமானம் ஒன்றின் மூலம்.
இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- இஸ்ரேலிய தூதரை போலந்து அழைத்தது
- தெற்கு லெபனானில் தொடர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள்
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்
- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு
- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு
- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது
- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி
மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்
மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்
மக்கள் சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் நபர்களை , கண்ட இடத்தில துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த
இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.
இது லிபியா ,மியன்மார் போல பெரும் மனித உயிரழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.
100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்
100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக மக்கள் போராடட்ம நடத்தி வருகின்றனர்.
தனது குண்டர்களை ஏவி கலவரத்தில் மகிந்தா ஈடுபட்டார்
இவ்வேளை கொதித்து போன மக்கள் திரண்டு மகிந்தா மற்றும் அவரது ஆதரவு அமைச்சராக்கள்.
எம்பிக்கள் வீடுகளைஇலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர்.
இதில் 100 வீடுகள் மற்றும் 88 வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளது ,இதுவரை 230 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்தாவின் மகன் யோஷித நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
பிரதமர் மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகிய நாள் அன்று இவர் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளமை குறிப்பிட தக்கது
மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்
மகிந்த குடும்பம் பதுங்கி உள்ள திருமலை கடற்படை தளம் முன்பாக மக்கள் போராட்டம்
இலங்கை பிரதமர் மகிந்த அவர் தனது குடும்பத்துடன் திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியுள்ளார்.
இதனை அறிந்த போராட்டக்காரர்கள் அந்த கடற்படை தளம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவே மேலும் முற்றினால் அங்கு மோதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது.
கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே
கொழும்பில் இடம்பெற்ற வன்முறை காட்சிகள் – எரிக்க பட்ட வாகனங்கள் – படங்கள் உள்ளே
இலங்கை கொழும்பு பகுதி எங்கும் இடம்பெற்ற வன்முறையில் அரச மற்றும் தனியார் வாகனங்கள் எரியூட்ட பட்டுள்ளன.
மேலும் ஆற்றுக்குள்ளும் வாகனங்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன.
பதவி விலக மறுத்து வரும் சகோதர்ரகள் அரக்க குணத்தினால் இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தொடர்ந்து இராணுவம் குவிக்க பட்டுள்ளதால் , பதட்டம் தொடர்கிறது.
அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்
அனுராதபுரத்தில் புத்தர் சிலை அடித்து நொறுக்கு – வெடித்து பறக்கும் வன்முறைகள்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற
நிலையில் ,அதுவே தற்போது வன்முறையாக வெடித்து நாடெங்கும் பரவியுள்ளது
இந்த வன்முறை தாக்குதலில் சிக்கி புத்தர் சிலைகள் அடித்து நொறுக்க பட்டுள்ளன
அணுஅதபுரத்தில். புத்த மடம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணின்
வீடு அடித்து நொறுக்க பட்டத்துடன் ,அங்கு புத்தர் சிலைகளும் அடித்து நொறுக்க பட்டுள்ளன
இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை
இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படலாம் – சந்திரிக்கா ஏச்சரிக்கை
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில்
அதுவே தற்போது வன்முறையாக வெடித்துள்ளது
இந்த வன்முறை நீடித்தால் இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த படலாம் என
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்
மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்
மகிந்தா அலரிமாளிகையில் இருந்து தப்பி ஓட்டம்
இலங்கையில் மகிந்தா கோட்டா பதவி விலக கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
,இந்த போராட்டத்தில் தனது குண்டர்களை அனுப்பி கலவரத்தை மகிந்த
ஏற்படுத்தினார் ,இதனால் ஆத்திரம் கொண்ட மக்கள் மகிந்த உள்ளிட்டவர்கள் சொத்துக்களை தீ வைத்து எரித்தனர்
இவ்வாறான பதட்டமான நிலையில் அவர் பதவி விலகி அலரிமாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்
பலத்த இராணுவ பாதுகாப்பு மத்தியில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்
கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்
கலவரத்தில் சிக்கி போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி -218 பேர் காயம்
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் சிக்கி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு பலியானவர்களில் போலீஸ் அதிகாரியும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் 218 பேர் காயமடைந்த்துள்ளனர் .
இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்
சிறைக்கைதிகள் மீது தாக்குதல் – பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 10 பேர் காயம்
சிறை கைதிகளை ஏற்றியபடி பயணித்த பேரூந்து ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
இதில் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிறை கைதிகள் பத்து பேர் காயமடைந்த நிலையில்
மருத்துவ மனையயில்
அனுமதிக்க பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்
இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது
13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,
அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,
இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.
இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது
இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்
இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது
ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன
முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .
- வன்னி மைந்தன் –



அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு
அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு
அலரிமாளிகையில் முன்பாக போராடடத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் நுழைந்த மகிந்த ஆதரவு குழுவினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது
அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திய மக்களை தனது அடியாட்களை ஏவி குழப்பத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மக்கள் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது


இதில் அழுத்தி நேரலை காணொளி பார்க்க
மகிந்தா குழு மற்றும் மக்களுக்கு இடையில் மோதல் – போர்க்களமாகும் காலிமுக திடல்
மகிந்தா குழு மற்றும் மக்களுக்கு இடையில் மோதல் – போர்க்களமாகும் காலிமுக திடல்
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்த பதவி விலக கூடாது என கோரி மகிந்தாவுக்கு ஆதரவான குழு ஒன்று களம் இறக்க பட்டுள்ளது.
இவர்கள் காலிமுக திடலில் ல் போராட்டத்தில் குதித்துள்ள மக்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது ,
மேலும் இது வன்முறையாக மாறி மக்கள் கொலைகள் இடம்பெறலாம் என அஞ்ச படுகிறது.
மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்
மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார் – மகிந்தா குத்துக்கரணம்
இலங்கையில் ஆளும் பிரதமர் மகிந்தா மக்களுக்காக தான் எந்த தியாகத்தையும்
செய்திட தயராக உள்ளதாக மகிந்தா அறிவித்துள்ளார்
சகோதர்கள் இருவரையும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள நிலையில்
இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது
வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை
வாங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செலுத்த முடியா திணறும் இலங்கை
இலங்கைக்கு பங்களாதேஸ் இருநூறு மில்லியன் டொலர் கடனை வழங்கியது
இவ்வாறு பெற்று கொண்ட கடனை மீள செலுத்திட ஒருவருடம் கால அவகாசம் வழங்க பட்டுள்ளது.
இதுபோல இந்தியா உள்ளிட்ட நாடுகளும் அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.
முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்
முல்லைதீவில் -பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறியவர்-விழுந்து மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் வீட்டு காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில்
ஏறிய முதியவர் தவறி விழுந்து மரணமான சம்பவம் கணுக்கேணி கிழக்கு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை மரத்தில் பழுத்திருந்த பலாப்பழத்தினை வெட்டுவதற்காக ஏறிய
கணுக்கேணி கிழக்கு முள்ளியவளை பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய தம்பாப்பிள்ளை கனகராசா என்பவரே தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















