Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதுக்கவில் இருந்து இங்கிரிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியின் இடதுபுறத்தில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் இருவர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
அவரின் சடலம் இங்கிரிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 மணித்தியாலங்களில் நால்வர் பலி
இதேவேளை, நாவுல பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 27 வயதுடைய நபரொருவரும், கோப்பாய் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் 49 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், அகுனகொலபெலஸ்ஸ பகுதியில் 69 வயதுடைய பரவகும்புக பிரதேசத்தை சேர்ந்த பாதசாரிய பெண், கார் மோதியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் ஒரு காரையும் அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி, ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அன்றைய தினம் இனந்தெரியாத குழுவினரால் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தின் சந்தேகநபர்கள் காரில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விசாரணைகளின் போது சந்தேகநபர்கள் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட காரில் வந்தது தெரியவந்துள்ளது.
எனவே, சந்தேகநபர்கள் மற்றும் குறித்த கார் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரியவந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நிலைய கட்டளைத் தளபதி/ பொலிஸ் நிலையம் தியத்தலாவ – 1 – 859 1531
பண்டாரவளை பிரதேச செயற்பாட்டு அறை – 057 222 2260 / 057 – 223 1612 (R)
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
இரவில் அப்பம் காலையில் தேர்தல்
இரவில் அப்பம் காலையில் தேர்தல்
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன்
ஒன்றிணையும் முயற்சிக்கு தயாசிறி தடையாக இருந்த காரணத்தால் தயாசிறி கட்சியில் நீக்கப்பட்டுள்ளார் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு நாள் இரவு மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்களுடன் ஒன்றிணைந்து அப்பம் சாப்பிட்டு விட்டு மறுநாள் காலை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பொதுவேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கூட மைத்திரிபால சிறிசேன உண்மையாக இருக்கவில்லை.
இரவில் அப்பம் காலையில் தேர்தல்
அரசியலமைப்புக்கு முரணாக மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கி நாட்டில் பாரிய அரசியல் நெருக்கடிகளை தோற்றுவித்தார்.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கடந்த ஜனவரி மாதம் ஹெலிகொப்டர் சின்னத்தில் புதிய அரசியல் கூட்டணியை அமைத்தோம்.
கூட்டணியில் ஒன்றிணைந்து செயற்படுவதாக குறிப்பிட்டு விட்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் அவருக்கு நட்டஈடு விதிக்கப்பட்டதன் பின்னர் கூட்டணியில் இருந்து விலகினார்.
சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் முயற்சியை அமைச்சு பதவி வகிக்கும் சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.
இதற்கு கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தடையாக இருந்ததால் தற்போது அவரை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
ஆகவே சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு செயற்பாடாமல் இருந்தால் தான் ஆச்சரியமடைய வேண்டும்.
பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினரை ஒன்றிணைத்து பலமான அரசியல் கூட்டணியை வெகுவிரைவில் ஸ்தாபிப்போம் என்றார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் பகுதியில் பேருந்தில் மோதி குடும்பஸ்தர் பலி
யாழ்ப்பாணம் கொழும்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை (10) இரவு கோப்பாய் இராச பாதை வீதியில் பயணித்த வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் சாரதி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை
தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை
தமது உத்தியோகபூர்வ இணையத்தளம் எந்தவொரு இணையப் பரிவர்த்தனைகளுக்கும் உதவவில்லை என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்று போலியான இணையத்தளத்தை உருவாக்கி பொதுமக்களின் கடனட்டை மற்றும் வரவட்டைகளின் தகவல்களைப் பெற்று மோசடிகள் இடம்பெற்றுவருவதாக அண்மையில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமது இணையதளம் இதுபோன்ற எந்த ஒன்லைன் பரிவர்த்தனைக்கும் வசதி செய்யவில்லை என்றும், மோசடி செய்பவர்கள் தங்களது இணையத்தள முகவரியை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் இலங்கை தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தபால் திணைக்களத்தின் எச்சரிக்கை
முன்பதிவு செய்யப்பட்ட பொதிகளுக்கு சிறிய தொகையை செலுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட இணையதளம் மூலம் ஒன்லையினில் குறுஞ்செய்தி அனுப்பி இந்த மோசடி இடம்பெறுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், இந்தச் செயலைச் செய்யும் மோசடியாளர்களுக்கு இரையாகிவிட வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் தபால் திணைக்களம், இது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடு, விசாரணை அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால் 1950 என்ற அவசர அழைப்பு பிரிவு அல்லது அஞ்சல் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video
லண்டன் லூசியம் சிவன் ஆலய தேர் திருவிழா video
லண்டன் லூசியம் பகுதியில் அமைய பெற்றுள்ள ,
சிவன் ஆலயத்தின் தேர் திருவிழா இடம்பெற்றது.
பல்லாயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
பால்குடம் ,கற்பூர சட்டி ,காவடி ,உள்ளிட்ட வேண்டுதல்க நிகழ்வுகளும் இடம்பெற்றன .
கடந்த இரண்டு வருடங்களாக திருவிழா இடம்பெறாத நிலை காணப்பட்டது .
கொரனோ மற்றும் பிரிட்டன் இளவரசி அவர்கள் மரணமடைந்த நிலையில் ,தேர் திருவிழா இடம் பெறவில்லை .
ஆனால் இந்த வருடம் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,மக்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர் .
விரைவில் காணொளி பதிவேற்றம் செய்யப்படும் அதுவரை காத்திருங்கள் .
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன்
அசானி கில்மிசாவுக்கு லண்டன் மக்கள் கண்ணீரால் வாழ்த்து
அசானி கில்மிசாவுக்கு லண்டன் மக்கள் கண்ணீரால் வாழ்த்து
அசானி கில்மிசாவுக்கு மக்கள் கண்ணீரால் வாழ்த்து ,
எங்கள் பிள்ளைகள் என உருக்கம்
அசானியை காணவில்லை தேடி அலையும் மக்கள் அழுகை ,கண்டி சின்ன குயில்அசானிக்கு நடந்தது என்ன ,ஊர் மக்கள் சோகத்தில் உறைவு ,
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலிby நிருபர் காவலன்
- 30,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளதுby நிருபர் காவலன்
- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- லங்கா மெட்ரோ டிரான்சிட்டை விரிவுபடுத்த ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதிக்கு ஒப்புதல்by நிருபர் காவலன்
- நொரோச்சோலை நிலக்கரி கொள்முதலுக்கு இரண்டு விநியோகஸ்தர்கள் தேர்வுby நிருபர் காவலன்
மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்
மர்ம சடலம் மீட்பு மிரட்டும் கொலைகள்
நானுஓயா, கிரிமெட்டிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா, கிளாரென்டர் தோட்டத்தை சேர்ந்த 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீதியொன்றில் உள்ள படிக்கட்டில் சடலம் ஒன்று காணப்படுவதாக நானுஓயா பொலிஸாருக்கு நேற்று (09) தகவல் கிடைத்திருந்தது.
உயிரிழந்தவர் கடந்த 8ஆம் திகதி உறவினர் வீட்டில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
காணி தகராறு ஒருவர் கொலை
காணி தகராறு ஒருவர் கொலை
நுவரெலியா மீபிலிமான பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (09) காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ராகல பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இந்த வீட்டின் உரிமையாளரின் தாயாரிடம் சாரதியாக பணிபுரிந்ததாகவும், தாய் உயிரிழப்பதற்கு முன்னர் அவரின் இறுதி ஆசையாக காணியின் உரிமையை குறித்த சந்தேகநபரின் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் கூறி வீட்டின் உரிமையாளரான பெண்ணுடன் சிறிது காலமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.
காணி தகராறு ஒருவர் கொலை
அதன்படி, சம்பவம் தினம் அன்று சந்தேக நபர் வீட்டுக்கு வந்து வீட்டில் இருந்த பெண்ணையும் உறவினர் ஒருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் உறவினர் உயிரிழந்த நிலையில், அவரின் சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த 41 வயதான வீட்டு உரிமையாளரான பெண்ணும் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு
இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு
இரத்மலானை – ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
பெண்மீது வாள்வெட்டு தாக்குதல்
பெண்மீது வாள்வெட்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் நீர்வேலியில் சனிக்கிழமை (11) யுவதி ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த யுவதியின் மீதும் அவரது தாய் மீதும் வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு
63 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அழிவு
வறட்சியான வானிலையால் சிறுபோகத்தில் 63 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் அழிவடைந்துள்ளன என விவசாய காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விவசாய அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது என சபையின் தலைவர் எம்.பி. வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வறட்சியான வானிலையினால் 64 ஆயிரத்து 342 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன் - கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன
by நிருபர் காவலன்
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என மத்திய வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 37 ஆயிரம் சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்படி, 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 82.2 வீதத்தினால் அதிகரித்துள்ளது
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்
மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
களுத்துறை, சேறுபிட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளதாக களுத்துறை – தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை சேறுபிட கொழும்பகே வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ள நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் நேற்று மாலை மரண வீடொன்றுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால், தேடி பார்த்த போது அயல் வீடொன்றுக்கு முன்பாக வெட்டுக்காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.
பின்னர் குடும்பத்தார் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலி் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண வீட்டுக்கு சென்றவர் வெட்டிக் கொலை
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் அப்போது மது அருந்திக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொலைசெய்யப்பட்ட நபரிடம் சந்தேகநபர் கடன் பெற்றுள்ளதாகவும், அதனை மறுநாள் மீண்டும் கேட்டபோது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவரின் மகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொலைச் சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
கடந்த ஓகஸ்ட் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 3,862.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இது கடந்த 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 74.4
சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா
லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா
இலங்கையின் ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை பற்றி சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4, , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பேரில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை நிகழ்த்தப்பட்டது எனும் தொடர்பாக புதிய குற்றச்சாட்டுகளுடன் வெளிவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகள் குறித்து சனல் 4 டிஸ்பாட்ச் நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை பற்றி சாட்சியாளர் அசாத் மௌலானா பேசியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மௌலானா, தற்பாதுகாப்புப் காரணமாக நாட்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வெளியேறிய பின்னர் இச்சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைக் கொல்ல உத்தரவிட்டதாக குறித்த ஆவணப்படத்தின் ஒரு கட்டத்தில் மௌலானா விவரிக்கிறார்.
மௌலானாவின் கூற்றுப்படி, கோட்டாபய ராஜபக்ச ஒருமுறை பிள்ளையானுடனான சந்திப்பின் போது ‘டிரிபோலி படை’ என்ற துணை இராணுவ கொலைக் குழுவை உருவாக்க உதவுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.
”அவர் (கோட்டாபய) பிள்ளையானிடம் சிறந்த குழுவைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒன்றாக வேலை செய்ய வைக்குமாறு கூறினார். எனவே பிள்ளையான் தனது தேர்வுப்படி சிறந்தவர்களைத் தெரிவு செய்து ஒரு குழுவை உருவாக்கினார். அந்தக் குழுவானது பின்னர் அரசாங்கத்திற்கு எதிரானவர்களை அறிந்து அவர்களைக் கொலை செய்தது” என மௌலானா தெரிவித்துள்ளார்.
லசந்தவை கொலை செய்யுமாறு கோட்டா பணித்தாரா
ராஜபக்ச ஆட்சி குறித்த லசந்தவின் தொடர்ச்சியான விமர்சனங்கள் மற்றும் முக்கியமாக பெரிதளவில் அறியப்படாத அவர்களின் MiG இராணுவ ஜெட் பற்றி தனது கட்டுரையில் வெளிப்படுத்தியது போன்ற சம்பவங்களால் கோட்டாபய ஆத்திரமடைந்தார். எனவே ஒரு சந்திப்பில் தன்னையும் பிள்ளையானையும் அழைத்து, லசந்தவைக் கொலை செய்யுமாறு தெரித்ததாக மெளாலானா தெரிவித்தார்.
”இந்த நாய் என்னுடன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறது என அவர் சொன்னார். லசந்தவைக் கொல்ல வேண்டும். உன்னால் இயலுமானவரை சீக்கிரம் அதை செய் என அவர் சொன்னார்” என மௌலானா தனது நேர்காணலில் கூறுகிறார்.
அத்துடன், லசந்தவின் படுகொலை பற்றி ஆவணப்படத்தில் ஆதாரமளிக்கின்றார் நாடுகடத்தப்பட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள குற்றப்புலனாய்வு அதிகாரி நிஷாந்த சில்வா. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் லசந்தவின் வழக்கின் புதிய விசாரணைக்கு நியமிக்கப்பட்ட நிஷாந்த சில்வா, விசாரணையில் கிடைத்த கண்டுபிடிப்புகள் தன்னை திரிப்போலி படைப்பிரிவுக்கு கொண்டு சென்றதாக ஆவணப்படத்தில் கூறுகிறார்.
லசந்தவின் கொலையுடன் தொடர்புடைய ஐந்து திரிபோலி படைப்பிரிவு உறுப்பினர்களின் தொலைபேசிகள் மற்றும் அழைப்புத் தள பகுப்பாய்வுடன் கூடிய தொலைபேசி பதிவுகள் லசந்த கொல்லப்பட்ட இடத்துடன் பொருந்தியதாக நிஷாந்த சில்வா கூறுகிறார்.
”எனது ஆய்வின் பிரகாரம் கோட்டாபயவுக்கு திரிபோலி பிரிவுடன் நேரடியான தொடர்பு இருந்தது. மேலும் லசந்தவின் படுகொலை தொடர்பில் சந்தேக நபராக அவரை (கோட்டா) குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்த போது, அது தொடர்பில் பேசுவதில் அவர் ஆர்வமாக இருக்கவில்லை” என நிஷாந்த சில்வா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன்
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தலைவர் அஜித் குணசேகர,
கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
“வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடினோம். அதன்படி உற்பத்தி செலவை கணக்கிட்டு கொடுத்துள்ளோம். கலந்துரையாடலுக்கு பின் சில உடன்பாடுகளுக்கு வந்துள்ளோம். தற்போது நாட்டில் இறைச்சி தட்டுப்பாடு இல்லை. சிறு மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்கள் அதிகபட்ச திறனில்
உற்பத்தி செய்கின்றனர். அதன்படி எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடு ஏற்படாது. டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்தி திறன் அதிகரித்து உபரியாக இருக்கும் என நம்புகிறோம். அதன்படி விலை மேலும் குறையும். எங்களுக்கு உற்பத்தியை தொடர அரசு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது.
விலை 1,100 ரூபாவை எட்டும் என நம்புகிறோம். சோளம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளது. இலங்கைக்கு கொண்டுவந்தால் சோளத்தை முழுமையாக உணவுக்கு பயன்படுத்தலாம்.
அப்போது உற்பத்தி செலவை குறைக்கலாம். பண்டிகை காலத்தில் இந்த விலையை விட குறைவாக எங்களுக்கு கொடுக்க முடியும்
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேபோல், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை, மொரலிய ஒய பிரதேசத்தில் 114.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மழையுடன் புளத்சிங்கள சிறிய ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் பரகொட, நாலியத்த, தம்பல போன்ற பிரதேசங்களில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக புளத்சிங்கள மோல்காவ பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக புளத்சிங்கள ஹல்வதுர தமிழ் வித்தியாலயம் , பரகொட கிதுலேகொட கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் இஹலவெல்கம கனிஷ்ட வித்தியாலயம் இன்றும் மூடப்பட்டுள்ளன
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்by நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
வெற்றிலை குதப்பி துப்பத்தடை
வெற்றிலை குதப்பி துப்பத்தடை
ஊவா மாகாணத்தின் கடைசி நகரமான பதுளை, வெற்றிலையை மென்று துப்புதல், சுண்ணாம்புச் சுவரில் வெற்றிலையை தேய்த்தல், மீதமிருக்கும் சுண்ணாம்பை தடவுதல் போன்றவற்றால் மிகவும் அசுத்தமடைந்துள்ளதுடன், அது பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதைத் தவிர, பொதுச் சந்தை இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகின்றது. சில பாடசாலை மாணவர்கள் பாக்கு மற்றும் புகையிலையை மட்டும் மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களும் பதுளை பஸ் நிலையத்தில் இவ்வாறு எச்சில் துப்புவதும் தெரியவந்துள்ளது.
வெற்றிலை குதப்பி துப்பத்தடை
பதுளை பஸ் நிலையத்தில் வெற்றிலை துப்புவது, சுண்ணாம்பு தடவுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மற்றும் மாநகரசபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பதுளை மாநகர சபையின் சுகாதார திணைக்களம் பதுளை பொலிஸாருடன் இணைந்து வெற்றிலையை துப்புபவர்களையும் சுண்ணாம்பு தடவி வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வாரம், இதுபோன்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, தலா ஒரு டூபாய் அவர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டது.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது
by நிருபர் காவலன் - ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன் - 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது
by நிருபர் காவலன் - பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்
by நிருபர் காவலன் - 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
by நிருபர் காவலன்
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே ராஜபக்ஷர்க்களின் பாதுகாவலன் அத்துடன் ராஜபக்ஷர்களின் வீட்டில் மலசலகூடம் சுத்தப்படுத்துபவர் என்றும் சனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது
என்றும் தெரிவித்த முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அது குறித்து விசேட கவனம் செலுத்தி சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அவர் மேலும் தெரிவிக்கையில்,
புலனாய்வுப் பிரிவின் பிரதானியான சுரேஷ் சலே தொடர்பில் சனல் 4 காணொளியில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது புலனாய்வு பிரிவில் இருந்து கொண்ட, பொனிபஸ் பெரேரா என்பவருடன் ஒன்றிணைந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுரேஷ் சலே புலனாய்வு பிரிவில் அதிகாரம் படைத்தவராக்கப்பட்டார்.
சனல் 4 காணொளியை ஒதுக்க முடியாது பொன்சேகா
சனல் 4 வெளியிட்டுள்ள ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் காணொளி தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது .
தெரிவுக்குழுக்கள் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிவோம். ஆகவே சனல் 4 வெளியிட்ட விடயங்களை பாராளுமன்ற தெரிவுகுழு ஊடாக விசாரணை செய்வது பயனற்றது.எனவே சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்” என்றார்.
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியதுby நிருபர் காவலன்
- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்by நிருபர் காவலன்
- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுby நிருபர் காவலன்
- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்னby நிருபர் காவலன்






























