Posted in Uncategorized

அறுந்து வீழ்ந்த கேபிள் கார் 12 பேர் மரணம் – இத்தாலியில் நடந்த பயங்கரம்

அறுந்து வீழ்ந்த கேபிள் கார் 12 பேர் மரணம் – இத்தாலியில் நடந்த பயங்கரம்

வடக்கு இத்தாலி பகுதியில் உள்ள மலை பகுதி மேலாக செல்லும் கேபிள் காரில் சவாரி செய்த

சுமார் 12 பேர் அந்த கேபிள் கார் அறுந்து வீழ்ந்ததில் மரணமாகியுள்ளனர்

மேலும் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் ,
இந்த சம்பவ

தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது ,ஆபத்தான கேபிள் கார்களில்

பயணிப்பதும் ,ராட்டணங்களில் ஏறி சவாரி செய்வதும் வழமையாக கொண்டுள்ள மக்களில் பலர் இவ்விதம் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இராணுவம் மீது தாலிபான்கள் திடீர் தாக்குதல் – 6 பேர் மரணம்

    இராணுவம் மீது தாலிபான்கள் திடீர் தாக்குதல் – 6 பேர் மரணம்

    ஆப்கானிஸ்தான் அரச இராணுவத்தினரின் சோதனை காவலரனை இலக்கு வைத்து தாலிபான்

    போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஆறு இராணுவத்தினர் பலியாகினர் ,மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் .

    கடந்த வாரம் தாலிபான்கள் மீது அரச இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தாக்குதலில் இருநூறு தாலிபான்கள் பலியாகினர்

    அதனை அடுத்து அரச இராணுவத்தினர் இலக்குகளை குறிவைத்து பரவலான தாக்குதல்களை போராளிகள் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

      காணமல் போன பெண் – பளையில் சடலமாக மீட்பு

      இலங்கை பளை தம்பகாமம், இன்நாசி குளப்பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் காணாமல் போயிருந்தார்
      இவர் தற்போது சடலமாக மீட்க பட்டுளளார்

      இவர் தற்கொலை புரிந்தாரா ,அல்லது கடத்தி படு கொலை செய்யபட்டாரா என்பது தொடர்பில் பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

      இறந்தவர் 47 வயதுடைய பொ – வனயா என அடையாளம் காண பட்டுள்ளார்

      கோட்டாவின் ஆட்சியில் நாள் தோறும் இவ்வாறான மர்ம மரணங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்

        மின்னல் தாக்கி 17 பேர் காயம் – அதிர்ச்சியில் மக்கள்

        இலங்கை கொட்டகால பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த 17

        தொழிலார்கள் மீது மின்னல் தாக்கியது இதில் 17 பேர் பலத்த மின்னல் தாக்குதலுக்கு உள்ளன

        நிலையில் மருத்துவம மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

        மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in Uncategorized

          சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை

          சஜித் பிரேமதாசா ,மனைவிக்கு கொரனோ – பதறும் இலங்கை

          இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவிக்கு கொரனோ

          நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

          இதனை அடுத்து இருவரும் தனிமை படுத்த பட்டுள்ளனர்


          இலங்கையில் மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு இந்த நோயானது பரவியுள்ள நிலையில்

          ,மகிந்த கோட்டாவுக்கும் தொற்றி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது

            Posted in Uncategorized

            டிரோன் மூலன் கண்காணிப்பு – 396 பேர் கைது

            டிரோன் மூலன் கண்காணிப்பு – 396 பேர் கைது

            இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய 396 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

            முகக்கவசம் அணியாது சென்றமை , மாகாண எல்லைகளை கடந்து சென்றமை ஆகிய

            குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

            இந்த கைது டிரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்க பட்டு நடத்த பட்டுள்ளதாக காவல்துறை

            பேச்சாளர் தெரிவித்துள்ளார்

              Posted in Uncategorized

              66 மில்லியனை லொத்தரியில் வென்ற நபர் –

              666 மில்லியனை லொத்தரியில் வென்ற நபர் –

              அமெரிக்காவில் நடந்து முடிந்த மெகா லொத்தர் குழுக்களில் The winning numbers were 6-9-17-18-48, with 8 as the Mega Ball.


              என்ற வெற்றி இலக்கங்களை பெற்று 666 மில்லிய டொலர்களை நபர் ஒருவர் அள்ளி சென்றுள்ளார் ,

              இந்த வெற்றியை பெற்றவர் Pennsylvania பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்க பட்டுள்ளது

              அடித்தால் அதிஷ்டம் .இப்படி அடிக்கணும் .பிரிட்டனில் வெளி நாட்டவர்கள் அல்லது கறுப்பினத்தவர்களுக்கு மிக பெரும் தொகை வீழ்வது இல்லை .

              ஆனால் கனடா ,அமெரிக்கா டுபாயில் இவை இடம் பெறுகிறது ,அப்படி என்றால் பிரிட்டனில் நடப்பது என்ன ..? மக்களே சிந்தியுங்கள்

                Posted in Uncategorized

                கங்காருவை கொன்று உண்ணும் அவுஸ்ரேலியர்கள் -சீனாவின் தம்பிகளா ..? photo

                கங்காருவை கொன்று உண்ணும் அவுஸ்ரேலியர்கள் -சீனாவின் தம்பிகளா ..?

                உலகில் மிக சிறந்த உயிரினங்களில் கங்காருவும் , ஒன்று இவை அவுஸ்ரேலியாவில் அதிகம் காணப்படுகின்றன ,

                அங்கு ஏற்பட்ட காட்டு தீயில் பல்லாயிரம் கங்காருகள் இருந்துள்ளதை காட்சிகள் மூலம்

                காணமுடிந்தது ,தற்போது வெளியாகியுள்ள புதிய தகவல் ஒன்று பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

                அதில் அவுஸ்ரேலியாவில் கங்காரு இறைச்சி உண்பது தான் ,கங்காருவை மக்கள் சாதாரணமாக

                வேட்டையாடி செல்வதால் ,அதனை கொன்று அதில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையில் அவுஸ்ரேலியா காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது

                சீனர்கள் பூச்சி ,முதல் புழுவரை ஒன்றையும் விடுவதில்லை ,காண்கின்ற அனைத்தையும்

                சாப்பிட்டு விடுவார்கள் ,அவர்களின் பட்டியலில் இப்பொழுது அவுஸ்ரேலியர்களும் இனைந்து விட்டார்கள் போலும் ,

                கங்காரு
                  Posted in Uncategorized

                  அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் – 8 பேர் காயம்

                  அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் மரணம் – 8 பேர் காயம்

                  அமெரிக்கா Minneapolis பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் ,இதில் இருவர் மரணமாகினர்

                  மேலும் எட்டு பேர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை

                  பெற்று வருகின்றனர் .இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது

                  மேற்படி தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இதுவரை ஆயுத தாரி கைது செய்யப்படவில்லை

                    Posted in Uncategorized

                    170 ஊடக நபர்கள் காயம் – 33 ஊடகங்கள் தரைமட்டம் – இஸ்ரேல் கோரத் தாண்டவம்

                    170 ஊடக நபர்கள் காயம் – 33 ஊடகங்கள் தரைமட்டம் – இஸ்ரேல் கோரத் தாண்டவம்

                    இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது ஆண்டு தோறும் அகோர தாக்குதலை நடத்தி பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து வருகிறது

                    கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 170 ஊடக நபர்கள் படுகாயமடைந்து ,33 ஊடக நிலையங்கள் தாக்கி அழிக்க பட்டுள்ளன

                    இந்த ஊடக நபர்கள் பலஸ்தீனத்தில் இடம் பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளி கொண்டு வந்தனர்

                    இதனால் ஆத்திரமுற்ற ஆளும் நெதன்யாகு அரசு இந்த படுகொலை வெறியாட்டம் நடத்தியது

                    சர்வதேச சட்டங்களை மீறி ஊடக கட்டடங்கள் தரை மட்டம் ஆகியது ,தற்போது இவர்கள் புரிந்த போர்க்குற்ற நடவடிகை விசாரணைக்கு வரவுள்ளதுடன் இஸ்ரேல் இனப் படுகொலை வேகமக நகர்த்த படவுள்ளது

                    கடந்த 12 நாள் சமரில் மட்டும் 279 மக்கள் பலியாகியும் 1910 பேர் படுகாயடைந்துள்ளனர் என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது

                      Posted in Uncategorized

                      இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்

                      இலங்கையில் ஒரே நாளில் கொரனோவால் 38 பேர் மரணம்

                      இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 38 பேர் மரணமாகியுள்ளனர்

                      இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 1.089 பேர் மரணமாகியுள்ளனர் .பல்வேறு பட்ட

                      நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,குறித்த நோயினைன் கட்டு படுத்த

                      முடியாது இலங்கை திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                        Posted in Uncategorized

                        கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்

                        கொரனோ தொற்றியவர்களை தாக்கும் புதிய நோய் – பீதியில் மக்கள்

                        தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 9 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

                        கொரோனா நோயாளிகளை கருப்பு பூஞ்சை என்ற நோய் தாக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்திய மாநிலங்களான ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பாதித்த சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தகவல் வெளியானது.

                        அதீத நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், Steroid medicine எடுப்பவர்கள், பல நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்கள், சில தெரபிகள் எடுத்துக்கொள்வோருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
                        இந்த நிலையில் புதுவையிலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் தொடங்கியுள்ளது. புதுவை அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த 5 நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் கண் பார்வையை இழந்துள்ளனர்.

                        நாள்தோறும் புதுவை, தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.

                        இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர் வெங்கடேஷ் தெரிவிக்கையில்:-

                        கொரோனா வந்தவர்கள், நோயிலிருந்து மீண்டவர்கள் நாள்தோறும் ஒருவர் அல்லது 2 பேர் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புடன் சிகிச்சைக்காக வருகின்றனர்.

                        இதுவரை 14 நோயாளிகள் வந்துள்ளனர். நோயின் தாக்கம் அதிகரித்து சிகிச்சைக்கு வரும்போதே 5 பேருக்கு பார்வையில்லை.

                        கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியே, கண்ணில் பரவி ரத்தக்குழாய்களை சிதைக்கிறது. உடலில் எதிர்ப்பு சக்தி குறைவு, சர்க்கரை நோய் அதிகமாக இருப்பவர்களை இந்நோய் தாக்குகிறது.

                        ஸ்டீராய்டு அதிகமாக எடுப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைகிறது. அவர்களின் உடலில் பூஞ்சை வளர்ந்து கண் பார்வையை பாதிக்கிறது. சிகிச்சைக்காக புதுவையை சேர்ந்தவர்கள் 3 பேர் வந்துள்ளனர்.

                        தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் பலர் நோய் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருகின்றனர். தமிழகம்-புதுவையில் இந்த நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் அறிகுறிகளை தெரிந்து கொள்வது கஷ்டம். கண்ணை சுற்றி வீக்கம், வாய், மூக்கில் ரத்தம் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.

                        காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் சென்று எண்டாஸ் கோப் பார்த்தால் நோயின் தாக்கம் தெரியும். எல்லா கொரோனா நோயாளிகளுக்கும் கரும்பூஞ்சை தொற்று வராது.

                        சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்களை பெருமளவில் தாக்கும். அவர்கள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

                        என்று தெரிவித்தார்..

                        நீண்டகால நோய்களுடன் உள்ளவர்களுக்கு புதுவை சுகாதாரத்துறை சார்பில் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

                        தொடர் நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை, இருதய நோய், சிறுநீரக நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் தவறாமல் மருந்தை உட் கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

                        இருதய ரத்தக்குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், இருதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் வைத்துள்ளவர்கள் தவறாமல் ஆஸ்பிரின் மற்றும் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

                        சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் தாங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண் டும்.

                        இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை போன்ற உயிர் கொல்லி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் இதனை உணர்ந்து தடுப்பூசியை உடனே போட்டுக் கொண்டு தங்களையும் தங்கள் பாசத்துக்கு உரிவர்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

                        தேவை இல்லா பயணங்களை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

                          Posted in Uncategorized

                          27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்

                          27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில் , பஸ்கள் சேவைகள் இரத்து – போக்குவரத்து முடக்கம்

                          நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை பயணிகள் ரயில்கள்; எதுவும் சேவைகளில் ஈடுபடாது என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

                          சரக்கு மற்றும் எரிபொருட்களை எடுத்துச்செல்லும் ரயில்கள் மாத்திரம் இக்காலப்பகுதயில்

                          சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.டி.எஸ்.குணசிங்க தெரிவித்தார்.

                          நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

                          இதேவேளை ,பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் சேவைகள் இடம்பெறாது.கடந்த காலத்தில் இடம் பெற்றது போன்று அத்தியாசிய

                          சேவைகளுக்காக செல்லும் பொது மக்களுக்காக மாத்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான

                          பஸ்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என்று இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் யு.ர்.பண்டுக சுவர்ணஹங்ச தெரிவித்தார்

                            Posted in Uncategorized

                            கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்பு

                            கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்பு

                            பலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடாத்தி வந்த அகோர தாக்குதலில்

                            சிக்கி பல அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் சிதைக்க பட்டன

                            இதுவரை 250 பேர் பலியாகியும் மேலு 1600 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                            தற்போது சமாதான நடவடிக்கை இடம் பெற்று வரும் நிலையில் கட்டட இடிபாடுகள் அகற்ற பட்டு வருகின்றன ,மேற்படி சிதைவுக்குள் இருந்த மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன

                              Posted in Uncategorized

                              வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம் – விமானி மரணம்

                              வீழ்ந்து நொறுங்கிய இந்தியா விமானம் – விமானி மரணம்

                              இந்தியாவில் ,அரச இராணுவத்துக்கு சொந்தமான மிக் MiG-21 ரக விமானம் வீழ்ந்து

                              நொறுங்கியுள்ளது

                              இந்த விமானத்தை செலுத்தி சென்ற விமானி பலியாகியுள்ளார் இயந்திர கோளாறு காரணமாக

                              விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                Posted in Uncategorized

                                இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள் – அதிர்ச்சி தகவல்

                                இலங்கையில் கொரனோ பரப்பும் மக்கள்- அதிர்ச்சி தகவல்

                                இலங்கையில் கொரனோ தொற்றிய நபர் ஒருவரால் அந்த நோயினை 400 பேருக்கு பரப்பிட

                                முடியும் எனவும் ,அவ்விதம் இலங்கையில் இடம் பெற்றுள்ளதக தெரிவிக்க படுகிறது

                                எனவே தான் மக்களை முகக் கவசம் அணிந்து கொள்ளும் மாறும் ,சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                இந்த நோயின் தொற்றுக்கு உள்ளான சிலருக்கு எவ்வித அறிகுறியும் இன்றி 14 நாட்களுக்கு பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது

                                எனவே மக்களே விழிப்பாக இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள்

                                  Posted in Uncategorized

                                  இலங்கையில் நடமாட இன்று முதல் தடை – முக்கிய அறிவிப்பு

                                  இலங்கையில் நடமாட இன்று முதல் தடை – முக்கிய அறிவிப்பு

                                  இலங்கையில் இன்று இரவு 11 மணி முதல் அதிகாலை நான்கு மணிவரை எதிர்வரும் இரண்டு

                                  வாரங்களுக்கு மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது

                                  இது ஊரடங்கு சட்டம் போன்றது ,அத்துமீறி சென்றால் அவர்கள் கைது செய்ய பட்டு தனிமை

                                  படுத்த படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

                                  நோயின் பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது

                                    Posted in Uncategorized

                                    கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்

                                    கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரியும் சரக்கு கப்பல்

                                    இலங்கை கொழும்பு துறைமுக பகுதியில் தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றில் திடீரென தீ பரவியது .

                                    மேற்படி தீயினை கடல் படையினர் விரைந்து சென்று அணைத்தனர்

                                    இந்த தீ பரவலுக்கு உரிய கரணம் இதுவரை தெரியவில்லை விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                      Posted in Uncategorized

                                      இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு

                                      இலங்கையில் கொரனோ ஊசி திருடுபவர்களுக்கு சிறை – அதிரடி அறிவிப்பு

                                      இலங்கையில் உலக நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள படும் தடுப்பூசி மருத்துவ மனைகளில்

                                      பணி புரியும் நபர்கள் திருடி ,கள்ள சந்தையில் விற்று வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                      இவ்விதம் திருட்டுச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டு பிடிக்க பட்டால் அவர்களுக்கு சிறை

                                      தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                                        Posted in Uncategorized

                                        சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் – போர் பதட்டம் அதிகரிப்பு

                                        சீனா கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா போர் கப்பல் – போர் பதட்டம் அதிகரிப்பு

                                        சீனாவின் ஆளுகைக்குள் உள்ளான கடல் பகுதிக்குள் அமெரிக்காவின் அணுகுண்டுகள் தாங்கிய கப்பல் நுழைந்துள்ளது

                                        இதனால் சீனா அமெரிக்காவுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                                        எமது கடல் பரப்புக்குள் அமெரிக்கா கப்பல் நுழைந்தால் தாக்குவோம் என சீனா தெரிவித்து சில வாரங்களில் இந்த கப்பல் நுழைந்துள்ளது குறிப்பிட தக்கது

                                        மேற்படி சம்பவம் இரு நாடுளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது