Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
ஒரே நாளில் 71 பேர் கொரானாவுக்கு மரணம்
ஒரே நாளில் 71 பேர் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் கடந்த தினம் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி 71 பேர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இரண்டாம் அலையாக பெருகி வரும்இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்களது
எண்ணிகையில் இது இரண்டாம் நிலையிற் எட்டி பிடித்துள்ளது குறிப்பிட தக்கது
தெஹிவளை சூவில் உள்ள சிங்கத்திற்கு கொரனோ
தெஹிவளை சூவில் உள்ள சிங்கத்திற்கு கொரனோ
இலங்கை தெஹிவளை மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கம் ஒன்று கொரனோ தொற்றுக்கு
உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது ,தொற்றுக்கு உள்ளான சிங்கம் மீள செயல் நிலைக்கு திரும்பி விடும் என தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் தடுப்பூசிகள்
அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வரும் தடுப்பூசிகள்
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ,அந்த மக்களை
அதில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் அமெரிக்காவில் இருந்து தடுப்பூசிகள் எடுத்துவர படுகின்றன
மேற்படி மருந்துகள் கப்பலில்; ஏற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எரிந்த நிலையில் சடலம் மீட்பு – விசாரணை தீவிரம்
எரிந்த நிலையில் சடலம் மீட்பு – விசாரணை தீவிரம்
அவுஸ்ரேலியா விக்டோரியா பகுதியில் எரிந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று காருக்குள் இருந்த
நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது
மேற்படி நபரது மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
அவுஸ்ரேலியாவில் புயலில் சிக்கி ஈழ தமிழர் மரணம் – கண்ணீரில் குடும்பம்
அவுஸ்ரேலியா நாட்டில் வசித்து வந்த ஜானேஷ் பிரசாத் என்பவர் கடந்த சனிக்கிழமை பணிக்கு சென்ற பொழுது சீரற்ற கால நிலை காரணமாக மரணம் அடைந்துள்ளார்
டீசல் மெக்கானிக்கராக பணி பிரிந்து வந்த அவர் அன்று பணியில் ,இயந்திரங்களை திருத்தம் செய்து கொண்டிருந்த பொழுது மரணமடைந்துள்ளார்
தனது கணவர் இன்று சீரற்ற காலநிலையால் வேலைக்கு சென்றதன் விளைவால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளது என அவரது மனைவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்
15 வருடகால திருமண வாழ்வு இந்த திடீர் கணவர் மரணத்தால் பறிபோயுள்ளது ,கலகலப்பாக
பேசும் இவர் ,கடின உழைப்பாளி அவ்வாறான ஒருவரை இழந்து தாம் வேதனையில் தவிப்பதாக பாரியார் தெரிவித்துளளார்

அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
அமெரிக்கா இராணுவத்தை வழிமறித்த ரசியா இராணுவம்
சிரியாவின் M4 வீதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ தொடரணியை ரசியா இராணுவத்தினர் வழிமறித்தனர்
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது
சமரச விதிகளை மீறி அமெரிக்கா இராணுவத்தினர் அவ்வழியாக பயணித்த நிலையில் இந்த வழிமறிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்
கிழக்கு சிரியாவின் south of Al-Hasakah மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கா கூலி படைகள் மீது மோட்டார் தாக்குகள் நடத்த பட்டுள்ளது
திடீரென மேற் கொள்ள பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்திற்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் அமெரிக்கா தரப்பில் இருந்து சேத விபரங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை
ஒரே நாளில் 52 பேர் கொரனோவால் மரணம் – இறப்பை மறைக்கும் அரசு
ஒரே நாளில் 52 பேர் கொரனோவால் மரணம் – இறப்பை மறைக்கும் அரசு
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயில்சிக்கி பலநூறு மக்கள் இறந்த வண்ணம் உள்ளனர்
இவ்விதம் கடந்த தின ஒரே நாளில் ஐம்பத்தி இரண்டு பேர் மரணமாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இவர்கள் கூறும் இறப்பை விட இருமடங்கு அதிகம் என மக்கள் மத்தியில் பேச படுகிறது
தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்
தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்
குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்தியவர் பாடகி தபு மிஷ்ரா.
கொரோனா பாதிப்பு… தந்தை இறந்த ஒரே மாதத்தில் பிரபல பாடகி உயிரிழந்த பரிதாபம்
தபு மிஷ்ரா
ஒடிசாவில் புகழ் பெற்ற சினிமா பின்னணி பாடகியாக வலம் வந்தவர், தபு மிஷ்ரா (வயது 36). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், அதற்கு பிந்தைய
பாதிப்புகளால் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ந் தேதி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், 2 நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
‘குலாநந்தன்’ என்ற ஒடியா படத்தில் அறிமுகமாகி 150-க்கும் மேற்பட்ட படங்களில் பாடி தனது இனிமையான குரலில் அனைவரையும் பரவசப்படுத்திய பாடகி தபுவின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தபு மிஷ்ரா
பாடகி தபு மிஷ்ரா
தபு மிஷ்ரா
பாடகி தபு மிஷ்ராவின் தந்தை கடந்த மாதம் 10-ந் தேதி கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது தபு மிஷ்ராவும் கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் மரணமடைந்திருப்பது அவர்களுடைய குடும்பத்தினரை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நுவரெலியாவில் அதிக நோய் பரவல் -5 கிராமங்கள் தனிமை படுத்தல்
நுவரெலியாவில் அதிக நோய் பரவல் -5 கிராமங்கள் தனிமை படுத்தல்
நுவரெலியா பகுதியில் நோயின் தாக்குதல் அதிகரித்து வருகின்ற நிலையில் ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
விசேட இராணுவம் போலீசார் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளது
இன்று முதல் புதிய சட்டம் – மக்களே உஷார்
இன்று முதல் புதிய சட்டம் – மக்களே உஷார்
தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு;அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படும்.
இருப்பினும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு இந்த பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும். இந்த கட்டுப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 4.00 மணி வரை தொடரும்
பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்பட்ட பின்னர் பொது மக்கள் செயல்படவேண்டிய முறை தொடர்பான வழிகாட்டி ஆலோசனைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
இது நாளை முதல் ஜூலை 5ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வீட்டில் இருந்து இருவருக்கு மாத்திரமே வெளியே செல்ல முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தின் மீது விசேட கவனம் செலுத்தி இந்த வழிகாட்டல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 50 சதவீத அளவில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும். அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
கடமைக்காக அத்தியாவசிய பணியாளர்களை மாத்திரம் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் அழைக்க முடியும்.
பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக மாத்திரம் திறக்கப்பட வேண்டும. பேக்கரிகளை திறக்க முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விற்பனை நிலையங்களை மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய இடங்களில் திறக்க முடியும். திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது
எனினும், திருமண பதிவு நிகழ்வுக்கு மணமுடிக்கும் தம்பதி உட்பட 10 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
இறுதிக்கிரிகை நிகழ்வில் 15 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும்.
சடலம் வழங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதிக்கிரியைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். அதேபோல் ஹோட்டல்கள், விடுதிகள் இரவு களியாட்ட விடுதிகள், சாராயக் கடைகள் என்பன மூடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சு அதில் தெரிவித்துள்ளது.
இதேவேளை மேல் மாகாணத்தில் கடைகள் மூடப்பட வேண்டும். மோட்டார் வாகனங்களை நிறுத்தும் இடங்கள், டயர் சேவை நிலையங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடாத வகையில் திறக்க முடியும்.
சிகை அழங்கார நிலையங்கள் மற்றும் அழகுக் கலை நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். ஒரு தடவையில் ஒருவருக்கு மாத்திரமே சேவையை வழங்க முடியும். மேல் மாகாணத்தில் ஆடை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும். சிறுவர் மற்றும் வயோதிபர் இல்லங்கள், சிறைச்சாலைகள் என்பவற்றிற்கு அதிதிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி நிலையங்கள், உள்ளக விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட்டிருக்கும். மேல் மாகாணத்தில் நடைபாதை விற்பனையில் ஈடுபட முடியாது.
ஓடிய காரில் இருந்து வீழ்ந்த சிசு – வேக சாலையில் நடந்த பயங்கரம்
ஓடிய காரில் இருந்து வீழ்ந்த சிசு – வேக சாலையில் நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலியா மெல்போர்ன் தென்கிழக்கு சாலையில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றில் இருந்து சிசு ஒன்று வீழ்ந்துள்ளது
அதிக வேக சாலையில் இந்த சிசு வீழ்ந்த பொழுதும் தெய்வாதீனமாக தப்பியுள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உலங்குவானூர்தி அவசர பிரிவினர் சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
தற்போது சிசு நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
தொடர்ந்து மேற்படி சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அமெரிக்கா உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்
அமெரிக்கா உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் – தொடரும் மோதல்
ஏமன் இராணுவ படையினரால் அமெரிக்காவின் ஆள் இல்லா உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அந்த இராணுவம் அறிவித்துள்ளது
குறித்த நாட்டு இராணுவத்தினர் மீது சவுதியை படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்
இவ் வேளையே இந்த விமனம சுட்டு வீழ்த்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை
ஆயுததாரி வெறியாட்டம் – 15 பேர் சுட்டு கொலை
அமெரிக்கா மெஸ்க்சிக்கோ எல்லையில் ஆயுதாரி நடத்திய துப்பாக்கி சூட்டில் பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
மேற்படி சூட்டு சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
போதைவஸ்து குழுக்களுக்கு இடையில் இந்த மோதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய விமானம் – இருவர் மரணம்
ஈரான் தலைநகர் அருகில் இலகுரக பயிற்சி விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது
,இவ்வேளை அதில் பயணித்த இருவரும் பலியாகியுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்
28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடிக் கட்டடம்
வீட்டைக் கட்டிப்பார் என்பது பழமொழி… அதிலிருந்தே ஒரு வீட்டைக் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய வேலை என்று நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. ஆனால், சீனாவின் சாங்ஷா பகுதியில் 28 மணிநேரத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 10 மாடிக் கட்டடடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு நாளுக்கும் கூடுதலாக சில மணி நேரங்கள் எடுத்து 10 மாடிக் கட்டடத்தை கட்டி முடித்துள்ளது பிராட் குரூப் என்ற நிறுவனம். அதனை விடியோவாக படம் பிடித்து யூடியூப்பிலும் பதிவிட்டுள்ளது.
இதில் எந்த மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை. அதாவது, சுவர்கள், ஜன்னல்கள், கதவுகளை தனித்தனியாக உருவாக்கி, அலமாரிகள், சமையல் கூடங்களையும் அதற்கான
தொழிற்சாலைகளில் தயாரித்து தயாராக வைத்துக் கொண்டு, இந்தக் கட்டுமானம் தொடங்கியுள்ளது.
கட்டுமானப் பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள், அலமாரிகளை ஒன்றன் அருகே ஒன்று வைத்து, நட்டு, போல்டுகளைக் கொண்டு இறுக்கி, ஒவ்வொரு மாடியையும் முடித்து, பிறகு
ஒன்றன் மேல் ஒன்றாக கட்டுமானங்களை மிகச் சரியாக அடுக்கி அதனை இணைத்துவிட்டு, கட்டுமானம் முழுமையாக முடிந்ததும், அந்தக் கட்டடத்துக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் உதவியோடு, சீனாவின் சாங்ஷா நகரில் கட்டப்பட்டிருக்கும் இந்த 10 மாடிக் கட்டடத்தை பிராட் குரூப் நிறுவனம் 28 மணி நேரம் 45 நிமிடத்தில் கட்டி முடித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்தக் கட்டடத்தைக் கட்டும் 4 நிமிட விடியோவை அந்த நிறுவனமே யூடியூப்பிலும் பதிவேற்றம் செய்துள்ளது. அதில், மிக எளிதான கட்டுமானப் பணி. போல்டுகளை இணைத்து இறுக்கிவிட்டு,
குடிநீர் மற்றும் மின்சார இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது என்று விடியோவில் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பிக்கு அடித்துக் கொலை – விசாரணைகள் ஆரம்பம்
பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு அங்கு தங்கிருந்த 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (19) காலை இவ்வாறு சந்தேக நபரினால் தேரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 இலங்கையரை தேடும் இண்டர்போல்
24 இலங்கையரை தேடும் இண்டர்போல்
இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட நிலையில், வெளிநாடுகளுக்குத் தப்பிச்
சென்று தலைமறைவாகியுள்ள 24 பேரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 13 பேர் போதைப் பொருள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த 24 பேரில் இருவர் தற்சமயம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்
வீதியில் உலாவியவர்களை முழங்காலில் நிக்க வைத்த இராணுவம்
பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில்
முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் பகுதியிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டுக்கு கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
கொழும்புக்கு ஒரு சட்டம், கிழக்குக்கு ஒரு சட்டமா? என்றும் வினவியுள்ளனர்.
காவல்துறை குற்றங்களை முறையிட புதிய தொலைபேசி இலக்கம்
காவல்துறை குற்றங்களை முறையிட புதிய தொலைபேசி இலக்கம்
பொலிசாரினால் ஏதேனும் அநீதி செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அதுதொடர்பாக பிரதேச உய
ர் பொவிஸ் அதிகாரிக்கு முறையிட முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசேட நிலைமைகளின் கீழ் இவ்வாறானவை இடம்பெற்றால் பொலிஸ் கட்டளைப் பிரிவின் 0112 85 48 80 என்ற தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்போது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் ஊடக
பேச்சாளர், வனாத்தவில்லு பிரதேசத்தில் 18 ஏக்கர் காணி காத்தான்குடி ஒல்லிபுரம் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணி தெமட்டகொட பிரதேசத்தில் எட்டு பேர்ச் காணி என்பனவும் முடக்கப்பட்டுள்ளன. 28
மில்லியன் ரூபா பெறுமதியான நிதி, 8 இலட்சம் டொலர்களுக்கும் அதிகமான நிதி, 14 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மாணிக்கக் கற்கள் உட்பட வாகனங்களையும் போலிசார் கைப்பற்றி
உள்ளார்கள் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்







