Category: வினோத வீடுப்பு
வினோத வீடுப்பு உலக நாடுகளில் அதிகம் மக்கள் விரும்பி பார்க்கும் வியக்க விக்கும் மர்ம விசித்திர நிகழ்வுகளாக வினோத வீடுப்பு உள்ளது .
நம்ப முடியாத பல நிகழ்வுகளை நம்ப வைக்கும் ஒரு பகுதி வீடு ஆண் பெண்களுக்கு இதுவாகும்
உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!
உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!
இயக்குநர்-நடிகர் சேரன் 1997-ஆம் ஆண்டில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டபோது நெகிச்சியுடன், சூப்பர் ஸ்டாரை பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான அருணாசலத்தின் வெற்றி விழா சந்திப்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
அப்போது, இயக்குநர் சேரன் மேடைக்கு அழைக்கப்பட்டு, ‘பொற்காலம்’ போன்ற ஒரு படத்தை இயக்கியதற்காக பாராட்டப்பட்டார்.
ரசிகர் ஒருவரின் இந்த ட்விட்டர் இடுகையைப் பார்த்த இயக்குனர் சேரன், “மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர்
சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே..C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற
பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்..” என நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார்.
மேலும் “அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர.. நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும்
அப்படியேதான் இருக்கிறது.. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்தபோது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என
என்னையறியாமல் என்னுள்ளம் வேண்டியது.. காரணம் அந்த மனிதத்தன்மை..” என்று சேரன் பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து போன்ற
வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். தமிழ் சினிமாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பல குடும்பச் சித்திரங்களை
கொடுத்ததில் அவருக்கு பெரிய பங்கு உண்டு. மேலும், சொல்ல மறந்த கதை, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் என
கதாநாயகனாக கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக ‘ராஜாவுக்கு செக்’ என்ற திரைப்படம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதற்கிடையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்-3′ நிகழ்ச்சியிலும் பங்குபெற்றது குறிப்பிடத்தக்க

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்
கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள்
ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள்
மும்பை :
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில்
குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள்
வெளியாகி உள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்
படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்
விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
சஞ்ஜய் – விஜய்
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன் சஞ்சய்
அறிமுகமாகும் படத்தையும் பிரிட்டோ தான் தயாரிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து
ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரிட்டோ விளக்கம் அளித்து உள்ளார்.
விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா
என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை
தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும்.
விஜயுடன் தயாரிப்பாளர் பிரிட்டோ
சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ என்று கூறினார்.

என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
நடிகை வனிதா, உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
வனிதா
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர்
பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும்
உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. முதல் மனைவி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாதவரை வனிதா எப்படி திருமணம் செய்தார் என்று நடிகை லட்சுமி
ராமகிருஷ்ணன் விமர்சித்தார். நடிகை குட்டி பத்மினியும் குறை கூறினார். விமர்சனங்களுக்கு பதில் அளித்து வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வனிதா – பீட்டர் பால்
“உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள். முதலில் உண்மையை
தெரிந்து கொள்ளுங்கள். ஒருவரை துன்புறுத்துவதும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் சட்டத்துக்கு எதிரானது.
இணைய தளத்தில் துன்புறுத்துவது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் செய்வதை நான் கடுமையாக எடுத்து இருந்தால்
மன அழுத்தத்தில் விரக்தியாகி என்னையே துன்புறுத்தி இருக்கலாம். அது உங்களை கொலைகாரர்கள் ஆக்கி விடும். இதை
யோசியுங்கள். நான் உண்மையில் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நான்
கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும். நான் தவறு செய்யவில்லை.”
இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

நான் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி video
நான் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி video
தான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் சார் தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
நான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
ரஜினிகாந்த், கே.பாலசந்தர்
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர்
கூறியுள்ளதாவது: இன்று என் குருவான கே.பி சார் அவர்களுடைய 90வது பிறந்தநாள். கே.பாலசந்தர் சார் என்னை
அறிமுகப்படுத்தலேனா கூட நான் நடிகனாயிருப்பேன். கன்னட மொழியில் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலோ, சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலோ நடித்து சிறிய நடிகராக இருந்திருப்பேன்.
ஆண்டவன் புண்ணியத்தில் மிகப்பெரிய பேரும் புகழோட, நல்ல வசதியோடு வாழ்வதற்கு காரணமே, கே. பாலசந்தர் சார் அவர்கள். என்னை அவர் தேர்ந்தெடுத்து எனக்குப் பெயர் வைத்து, என்னுடைய
மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி, என்னிடமுள்ள பிளஸ்ஸான விஷயங்களை எனக்கே காட்டிக்கொடுத்து. என்னை ஒரு முழு
நடிகனாக்கி, நாலு படங்களிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து, ஒரு நட்சத்திரமா தான் என்னைத் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
என் வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் எனக்கு தெய்வங்கள். அவர் எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர்,
நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து
சின்னத்திரையிலும் ஈடுபட்டு லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார்.
எத்தனையோ இயக்குனர்களிடம் வேலை செய்துள்ளேன், ஆனால் கே.பி சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக்
கலைஞர்களை விடுங்கள், செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அந்த மாதிரி ஒரு கம்பீரம்
கே.பி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக,
எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தார். இன்னும் நிறைய நாள்கள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு கமல் உதவி செய்து வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்
பொன்னம்பலம்
ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.
பொன்னம்பலம்
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன்
ஏற்றுக்கொண்டுள்ளார். பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்.

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
நடிகை ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்
தமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரோஜா. சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, ஆயுத பூஜை, உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் குதித்தார்.
தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆந்திராவில் அனைத்து மருத்துவ
வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்- மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார். நகரி தொகுதிக்கு
உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா பங்கேற்றார்.
அப்போது திடீரென்று ஆம்புலன்சில் ஏறி இருக்கையில் உட்கார்ந்து ஆம்புலன்சை ஓட்ட தொடங்கினார். நகரி வரை 20 கிலோ மீட்டர்
தூரம் ஆம்புலன்சை ஓட்டி சென்றார். ரோஜாவின் இந்த செயலை விமர்சித்த தெலுங்கு தேசம் கட்சி “ரோஜா சாகசம் செய்வதற்காக
ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளது.

காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை
அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை சமிக்ஷா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்ஷா
கணவருடன் நடிகை சமிக்ஷா
2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்ஷா. இப்படத்தை தொடர்ந்து
மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.
இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சமிக்ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.
கணவருடன் நடிகை சமிக்ஷா
2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.

அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
அஜித் படம் வெற்றி அடைந்ததை அடுத்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
அஜித், வெங்கட் பிரபு, விஜய்
கொரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில்
கலந்துரையாடினார். அப்போது விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியதாவது: ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் சிறிய
கதாபாத்திரத்தில் நடித்தேன். ‘மங்காத்தா’ படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.
அப்போது நிறைய பேசினோம். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார்.
சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் பண்ணனும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்
கம்போடியாவில் ஆடையின்றி குளத்தில் குளித்த முதியவர் உடல் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி… குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்…
அட்டை பூச்சி
கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு
அந்த முதியவர் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது
உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. வலியில் அவதியுற்ற அந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனையில் அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்துள்ளனர். முதியவரின்
சிறுநீர்ப்பையில் சிறிய கேமரா கொண்டு நுழைத்து பார்க்கையில் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது
தெரியவந்தது. குளத்தில் ஆடையின்றி குளித்த போது அவரின் உறுப்பு வழியே அந்த அட்டைப் பூச்சி சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த
அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த அட்டை பூச்சியானது முதியவரின் உடலில் இருந்து சுமார் 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி விட்டதால், அந்த
அட்டைப்பூச்சியை வெளியேற்றுவதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு
அட்டைப்பூச்சியை வெளியேற்றி உள்ளனர். மேலும் அந்த முதியவரை தங்களது மருத்துவமனை கண்காணிப்பில்
வைத்துள்ளனர். இதையடுத்து முதியவர் குணமடைந்து அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
கம்போடியாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஆச்சர்யமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது.

தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார்.
தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தமன்னா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது கைவசம் 2 படங்கள் வைத்திருக்கும்
தமன்னா விரைவில் ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளராக பணியாற்ற போகிறார் என செய்தி பரவி வருகிறது.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் துவங்கியுள்ள ஆஹா என்ற ஒரு ஓடிடி தளத்திற்காக தான் இந்த ஷோவினை நடத்த உள்ளனர். இந்த
நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் மற்றும் தமன்னா ஆகியோர் தான் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர்.
தமன்னா
இந்த நிகழ்ச்சியினை நடத்துவதற்காக தமன்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் ஒரு எபிசோடுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்?
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஒரு சில விஷயங்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் எல்லாம் ஒரு முக்கிய காரணம்
இருக்க தான் செய்கிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் பயணம் செய்யலாமா என்று கேள்வி பலருக்கும் இருக்கும் ஒன்று தான்.
வீட்டிற்குள்ளேயே கர்ப்ப காலத்தில் அடைந்து கிடைப்பதும் இயலாத ஒன்று தான். உங்களது மருத்துவரும் கர்ப்ப காலத்தில் வெளியில்
அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது தான். அதற்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும்
என்று அர்த்தமில்லை. நீங்கள் அருகில் உள்ள உங்களது அலுவலகம், மார்க்கெட், பார்க் போன்ற இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்வதினால் எந்த பிரச்சனையும் இல்லை.
நீங்கள் தொலைத்தூரப் பயணங்களை கண்டிப்பாக தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைதூரப் பயணங்களை கர்ப்பத்தின் முதல்
மூன்று மாதங்களில் தவிர்ப்பது சிறப்பு. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால், இதனால் கருக்கலைப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் உண்டாகலாம்.
நீங்கள் சாலைப்பயணம் செய்யும் போது கழிப்பிட வசதிகள் அவ்வளவு சுகாதாரமனதாக இருக்காது. இந்த கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் சிறுநீர் பாதையில் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
நீண்ட தூரப்பயணத்தில் காற்று மாசுபாடு போன்றவை இருக்கும். இந்த நச்சுக்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே
நீண்ட தூரப்பயணத்தை கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கலாம்.
பொதுவாகவே நீண்ட தூரப்பயணமானது களைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது பெண்களுக்கு அதீத களைப்பை உண்டாக்க கூடியதாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக தான் இருக்கும். இந்த நேரத்தில் வெளியிடங்களுக்கு பயணம் செய்வதால் சில தேவையற்ற நோய்களை தேடி சென்று
பெருவது போல ஆகிவிடும். எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
மூன்றாவது திருமணம் முடித்த வனிதா
குமர் பிள்ளைகளுடன் மூன்றாவது திருமணம் முடித்த வனிதா
நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது.
பீட்டர் பாலை திருமணம் செய்தார் வனிதா
வனிதா திருமணம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன்
சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ஆம் தேதி திருமணம்
செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன்படி வனிதா திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
வனிதா திருமணம்
இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
மூன்றுமாதத்தில் விவகாரத்து நடக்கும் என்பதை இங்கே கூறி விடுகிறோம்

இறந்தவர்களை உயிர்பித்த சித்தர் – திகில் வீடியோ
இறந்தவர்களை உயிர்பித்த சித்தர் – திகில் வீடியோ
இந்தியா கோயில் பட்டி
சஞ்சிவி மலை பகுதியில்
இடம்பெறும் திடுக்கிடும் விடயங்கள்
மக்களி மிரள வைக்கறது ,வாங்க பார்க்கலாம்
வனிதாவிற்கு திருமணம் – 3 மாப்பிள்ளை யார் தெரியுமா?
வனிதாவிற்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
வனிதாவிற்கு திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
பீட்டர் பால்
பீட்டர் பற்றி வனிதா கூறும்பொழுது “அவர் ஒரு சினிமா தொழில் நுட்ப கலைஞர்.
வெளிவர இருக்கும் படங்கள் மூலம் அவரை, நீங்கள் சீக்கிரமே அறிந்து கொள்வீர்கள்” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்ற அதிசயங்கள்
இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்ற அதிசயங்கள்
உலகில் இறந்தவர்கள் மீளவும் எழுந்து நடந்த அதிசயம் .மருத்துவர்களை மிரள வைத்துள்ள இந்த சம்பவம் ,
சில நாட்களுக்கு முன்னதாக குழியில் புதைக்க பட்ட மூதாட்டி கட்டி மூன்று நாட்கள் பின் எழுந்துள்ள அதிசயம்
ஓடும் ரயிலில் பேய் – அலற வைக்கும் திகில்
ஓடும் ரயிலில் பேய் – அலற வைக்கும் திகில்
உலகில் மக்களுக்கு முன்னாள் எழும் கேள்வியோ பேய் உள்ளதா ..?
இந்த பேய்கள் யார் ..? எவ்வாறு பேய் உள்ளது
வாங்க பார்க்கலாம் ..பயப்பிடாதீங்க
பல வருடங்களுக்கு முன் காணாமல் போன கடல் திரும்பி கிடைத்த அதிசயம்!
பல வருடங்களுக்கு முன் காணாமல் போன கடல் திரும்பி கிடைத்த அதிசயம்!
33 வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போன கடல் ஒன்று தற்பொழுது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இது எப்படி சாத்தியம் ..?
வரலாறுகளில் மறைந்து கிடைக்கும் பொக்கிஷங்கள் ஒன்றாக இவை பார்க்க படுகிறது
வாங்க காணொளிக்குள் போகலாம்
இணையத்தில் வைரலாகும் பாடல் – video
காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
காரில் இருந்து வீதியில் விழும் பெண் – திகில் – வீடியோ
சீனா பெண் ஒருவர் தனது காரில் இருந்து கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன ,
இவர் காரை துரத்துகிறார் ,அதுவோ இவரை விட்டு தாறுமாறாக ஓடி மோதிக்கொள்கிறது
இந்த காட்சியினை ஒருவர் படம் பிடித்து அப்படியே போட்டுள்ளார் ,
அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்
இவ்வாறான வேளை உடனே கதவை வேகமாக திறந்து துள்ளி குதித்து ஏறிவிட வேண்டும் .
அல்லது விபத்து ஏற்படும் போகிறது என தெரிந்தால் கியாரால் காரைமறிக்க
தெரிய வேண்டும் ஒருதடவை பலமாக குலுக்கும் ,அவ்வளவு தான் கார் சொன்ன இடத்தில நிற்கும் .
இதனை இந்த பெண் இங்கே கையாளவில்லை








