Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கடவுளே பதில் சொல் …!

கடவுளே பதில் சொல் …!

வாழ வழியில்ல
வயிற்று பசி தீரவில்ல ….
ஒரு சான் வயிற்றுக்கு
ஒருவேளை உணவு இல்ல …

என் வலியை நான் போக்க
ஏது செய்வேன் எனை தேக்க …?
தூங்கவே முடியவில்ல
துட்டுக்கு வழி ஏதுமில்ல …

என் உடலை நான் விற்க
எனக்கு வேறு வழியில்ல ..
என் குடும்பம் வாழ்ந்திடவே
எனக்கு வேறு தெரியவில்ல …

கண்டவனும் வந்தின்று
காசு வீசிறான் ….
கண்ணீர் காணா
கன்னி தின்று போகிறான் …

கவலையில நான் அழுது
கண் மூடி தினம் மடிய ,,,,,
எச்சத்தை அவன் முடித்து
ஏறிகின்ற பணம் பிடித்து …

ஒரு குடும்பம் வாழ்கிறது
ஒருத்தி உயிர் அழிகிறது …
பொல்லாத நோய் வாங்கி
பெருத்து உடல் கிழிகிறது ….

இல்லாத நிலை ஒன்றால்
இறப்பை நான் வாங்கி விட்டேன் …..
பொல்லாத ஆட்சிகளால்
பொன் வாழ்வை தொலைத்து விட்டேன் …

என் இறைவா என் இறைவா
எனக்கு மட்டும் ஏன் இறைவா …
இத்துயரை நீ திணித்தாய் ..?
இன்னுயிரை ஏன் பிழிந்தாய் …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -20/03/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என் காதலை ஏற்றுவிடு …!

என் காதலை ஏற்றுவிடு …!

உடையாத நிலவே
உள்ளம் தரவா …?
உயிரையே தாரேன்
உள்ளே வரவா ..?

ஒத்தவரி சொல்லம்மா
ஒத்துகிறேன் எண்ணம்மா ….
கரை தேடும் அலைபோல
காத்திருக்கேன் நானம்மா …

ஏக்கம் தந்து போறவளே
என்ன பதில் சொல்லாயோ ..?
தாக்கம் தந்து நின்னவளே
தகுமென்னு கூறாயோ …?

பாதி நாளு தூங்கவில்லை
பகலிரவு தெரியவில்லை …
என்னாச்சோ தெரியவில்லை
என்னையே காணவில்லை ….

உன்னாலே தவிக்கிறேனே
உள்ளமே புரிந்திடுவாய் …..
இந்நாளு உந்தனுக்கே
இதயம் தந்திடுவாய் ……..!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -01/03/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை நான் மறப்பேனா …?

உன்னை நான் மறப்பேனா …?

உடைத்து பாயும் அருவி போல
உன் நினைவு ஓடுதடி…..
உருளும் அலை வேகம் போல
உள்ளம் ஆடுதடி …

வெடித்து பறக்கும் கணை போல
வேகம் கூடுதடி – என்னை
வேக வைத்து பார்த்தவளே
வேண்டும் வரம் தந்திடடி ….

பூவை சூடி நீயும் நடக்க
பூமி குளிருதடி – அந்த
வானம் கூட சிரிக்க
வாழ்த்து கொட்டுதடி ….

கலைந்த கூந்தல்
கண்ணில் விழவே காதல் பிறக்குதடி .
கண்ணே உன்னை தீண்டத்தானே
காமம் அழைக்குதடி …

நெஞ்சுக்குள்ளே உந்தன் நினைவு
நெருப்பாய் கொதிக்குதடி ….
நெஞ்சே உன்னை சுமந்தேன்
நெருங்கி வந்திடடி …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -26/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

சிரிக்கும் ….வாழ்வு ….!

சிரிக்கும் ….வாழ்வு ….!

சந்தன மேனி வெந்தணல் வேக
சாலையில் போகுதடி ….
சாளரம் வைத்த சட்டை மாட்டி-
சர வெடி போடுதடி-

ஆளை அள்ளும் புயலும் கிள்ள
அந்தோ நெளியுதடி ….
ஆடவர் கண்கள் மேனியில் துள்ள
அடி வாங்கியே மாயுதடி …

கூடு உடைத்து கறைவைகள் ஓட
கூடுது வீதிகளே ….
கூட்டியே அள்ளிட – பார்த்தே
கூடுது சதிகளே ….

ஏங்கி சாகும் வேருக்கின்று
ஏக்கம் புரியாது .
ஏறி பறக்கும் சீட்டுக்கின்று – இந்த
ஏக்கம் தெரியாது ….

அடி வாங்கி நொந்து
அழுகையில் தானே அவலம் புரிகிறது- இப்போ
அழுது புலம்பி என் கண்டாய்
அட வாழ்வு சிரிக்கிறது ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கண்ணீரில்…. விலை மாது …!

கண்ணீரில்…. விலை மாது …!

தன்னம் தனி வந்தவரே
தயங்கி தயங்கி நிற்பவரே
கவலை விட்டு வாரும் – என்
கடமை செய்ய கூடும் ….

நேற்று பூத்த மல்லிகையே
நெய்தல் ஓரம் பூத்தவளே ..
நெஞ்சம் வைத்து சந்தம் பாட
நெருங்கி நெருங்கி வாரும் ..

அஞ்சுதல வீட்டெறிந்து
ஆகாயம் பாரும் …
கொஞ்சுதலில் தீர்ந்து
கொழுத்து பருத்து ஓடும் …

வயிற்று பசி போக்கிட தான்
வாழ்வை நானும் விக்கிறேன் …
வேலை யாரும் கொடுத்தா -ஏனோ
வேசியாகி சாகிறேன் ….?

எனக்குள் இருக்கும் ஆசை நூறு
என்ன பண்ண வாழ்க்கை பாரு …?
ஆண்டவனே நோக வைத்தான் – என்
ஆசைகளை ஈடு வைத்தேன் …

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -23/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன் …!

உன்னால் தவிக்கிறேன் …!

பச்சை வன தோப்புக்குள்ள
பாவி புள்ள நீ நடக்க …
சேலை நுனி தேயுதடி
சேர்ந்து மனம் கரையுதடி …

வீடுடைத்த காற்று போல
வீதியில சுத்துறியே …
காயம் பட்ட என் மனதை
காணமலே நிக்கிறியே …

சேதி சொல்லும் வானொலியே – என்
சேதங்களை காணலையோ ..?
ஆடி புயல் ஆனவளே -என்
ஆள் மனது புரியலையோ .. ..?

விதி செய்த விளையாட்டில்
விளையாடுது வாலிபமே …
முடிவெடுக்க முடியாது
முன் நிலா தடுமாறுது ….

கதிரவன் பார்வையிலே
காயுது புடைவைகளே …
கண்ணே உன் காலடியில்
காத்திருக்கேன் நான் மயிலே ….

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஆசை ஊற்று …!

ஆசை ஊற்று …!

பட்டு மேனி கசங்க
பாட்டு பாடும் ஆசை …
தொட்டு நீயும் கசங்க
தொழுதே உள்ள ஓசை ….

கட்டி வைத்து தழுவி
காற்று உன்னை மெழுகி …
விட்டு விட்டு நழுவி
விளையாடல் உருகி ….

தட்டி கதவை சாத்தி
தாளங்களை ஊத்தி ….
மெட்டு போட்டு பாடி
மெல்ல போகுதே ஓடி

குத்து பாட்டு போல
குழுங்கி உடலும் ஆட…
காளை மெல்ல நீள
களைப்பு மெல்ல கூட

தேறி உடல் ஏற
தேகம் மெல்ல நோக…
ஆசை தீர்ந்து மாற
அழைத்து காதல் மலரும் ..

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -13/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அழகிய வெள்ளச்சி ….!

அழகிய வெள்ளச்சி ….!

பருவத்தில் உடைந்தவளே
பால் நிலவாய் பொழிய …
கூடுகள் வாடுதடி
குளிராலே நோகுதடி ….

மெல்ல மெல்ல நீ உருக
மேனி மெல்ல விறைக்க ..
உன்னை திட்டி உதடு பேச
உருகும் பனியே அழுதிடுவாய் …

முன் பகலின் வெண்பனியே
முழு நிலவாய் நிலம் வீழ்ந்து ….
மேகமாய் விரிந்தேன்
மேனி வதைக்கிறாய் …?

உடல் மேலே எடை ஏற்றி
உருவங்களை மாற்றி ..
ஆட வைத்து மகிழ்வாய்
அடியே வேணாம் சீண்டலே ….

அழையாமலே உடல் வீழ்ந்து
ஆடி பாடும் வெண்பனியே …
சொல்லாமலே மறைந்த தென்ன..?-என்
சொந்தமே பிரிந்ததென்ன …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை ஏன் மறந்தாய் …?

என்னை ஏன் மறந்தாய் …?

ஆள் மனதில் நீ உறங்க
அழுது விழி உடல் நோக ….
தேம்புதடி உன் நினைவு
தேவதையே என் செய்வேன் ..? ..

கை பிடிக்கும் தூரத்திலே
காணமல் போனவளே ….
பெருக்கெடுத்த நிலவொளியில்
பேரழகை தேடுகிறேன் …

கூடு கட்டி தனிமையிலே
கூடி வாழ ஆசைப்பட்ட ….
நினைவுகளின் வேர் அறுத்து
நினைவே ஏனெறிந்தாய் ….?

கண்ணீர் சாலையிலே
காயங்களால் வாடுகிறேன் ….
பேறு கொண்டு முன்னெழுந்த
பெரும் கனவு சிதறிடிச்சு …..

வில்லெடுத்து அம்பெய்து
வீழ்த்தி நெஞ்சை போனவளே ….
காரணத்தை சொல்லி விடு
காதல் செய்த பாவம் என்ன …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -10/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அசிங்கதில் பிறந்தவளே …அடங்கு ….!

அசிங்கதில் பிறந்தவளே …அடங்கு ….!

ஆடை வெட்டி உடல் காட்டி
ஆடி போவது யாரோ ..?
ஆடவன் தொடர பூவும் கிழிய
அழுவது இன்று ஏனோ …?

ஆசை ஊற உறவு கூட
அலைவது இந்த பெண்ணே
அந்தோ வந்தான் கற்பை தின்றான்
அழுவது இன்று வீணே …

நடிப்பில் நன்றாய் மிஞ்சி நிற்பீர்
நாயிடை கீழாய் ஆனீர் …
கொஞ்சி குலவி ஆசை தீர்த்து
கொடியான் ஆனாய் எறிவீர் …

பத்தினி என்றே பாரில் அலையும்
பாவையே கொஞ்சம் நிற்பாய் ..
கன்னி தண்மை சோதனை நடத்தி
கற்பை கூறு முன்னாய் ….

வழியில் கிழிசல் பெருகி கிடக்கும்
வந்தான் மறைத்து நடப்பான் …
இந்த விடயம் ஏதும் புரியா
இன்றும் பத்தினி நடிப்பாம் ….

விதிகள் மீறி வீதியில் செல்லும்
விதிகளை முன்னே மாற்று ….
உன்னை மாற்றிட மறந்தேன்
ஊனமாய் ஆணை இழிந்தாய் …?

கற்பை தின்றான் என்றே பாடி
கட்டி வைத்து கொன்றாய் ..
கற்பை இழந்தாள் வாழ்வு நாளை
கரம் பிடிப்பது ஆணே மறந்தாய் ….

உன்னை காப்பதாய் எண்ணி இங்கே
உன்னில் ஏனோ உமிழ்ந்தாய் ..?
உலகின் முன்னே நீயே இன்று
உலவும் வேசி ஆனாய் …

சிந்தனை விரித்தே கொஞ்சம் எழுவாய்
சிறகு பறவை ஆவாய் …
திசைகள் அறிந்து வழிகள் அறியும்
திறவு கோல் ஆகி மலர்வாய் ….

ஆசை தீரும் உடலுறவு
அசிங்கத்தில் மலர்வது கர்ப்பம் …
அதனை அறியா அரங்கில் ஏறி
அசிங்கமே என்ன உரைத்தாய் ..?

நாளுமே ஆசை தீர தானே
நாயே செய்வாய் என்ன ..?
முன்னுக்கு பின்னே முரண்கள் கூவி
முட்டாளாவது பெண்ணே …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/02/2019
( கற்பழித்தான் என ஊரே கூடி ஒருவனை அடித்து கொன்ற துயர் அறிந்த பொழுது )

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

தப்பி ஓடு ….!

தப்பி ஓடு ….!

வண்டமிழ் வீரத்தை
வந்தவன் கொய்வதோ ..?
வாலாட்டும் நாய்களாய்
வண்டமிழ் மலர்வதோ ..?

கூணாது பேசும்
கூனிகள் வாய்களிற்கு …..
நகல்களாய் மாறும்
நகைச்சுவை ஆணீரோ ..?

வீர திருமறைகள்
விளையாது என்றெண்ணி …..
முதிர் கன்னி விழி நீராய்
முன்னே வீழ்ந்தீரோ ..?

உறங்கி போனதால்
ஊர்வலம் போகின்றீர் …
நாளை எழுவார்
நரகத்தில் மறைவீர் ….

கருணாக்கள் உயிலில்
கரிகாலன் உறைந்தான் …
கண்ணிலா பொழுதிலும்
கருணாக்கள் பயந்தான் ….

பேருக்கே அஞ்சும்
பெருச்சாளிகள் எல்லாம் …
முரசு அறைந்தீரோ ..?
முன் எச்சரிக்கை மறைவீர் ..!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -05/02/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

கதறி அழும் காதல் ….!

கதறி அழும் காதல் ….!

மடி வைத்து தலை தூங்க
மணி விரல்கள் தலை கோத …
முன்பகல் இரவாகி
முழுமையாய் நனைந்த நாட்கள் …

எண்ணி இன்று பார்க்கையிலே
ஏங்குதடி என் மனது ….
காற்று வந்து உடல் புகா
கட்டி அணைத்து நின்றவளே ….

நீ இட்ட முத்தங்களை
நினைவுகள் தேடுதடி …
உன் புருஷன் நான் என்று
உறவாடிய காலங்கள் …..

வீணாகி போகும் என்று
விரும்பியது யார் இன்று ..?
ஏகாந்த பெரு வெளிக்குள்
எறிந்தது யார் இன்று …?

ஊர் வந்த வேளையில -கால்
ஊன்றிய சாலையிலே …
தேம்பியது உன் நினைவுகளே
தேவைதையே என் செய்வேன் …?

அழுதபடி நான் நடக்க
அகம் எல்லாம் நீர் துடிக்க
பாத்திருந்த கதிரவனோ
பாய்ந்து வந்து காய வைக்க …

நான் நடந்து போனேண்டி
நடை பிணம் ஆனேண்டி …
ஏதறிவாய் என் மனதை
எவர் சொல்வார் என் நிலையை …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2018

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

முன்னேறி தாக்கு ………!

முன்னேறி தாக்கு ………!

செழிமைக்கும் எளிமைக்கும்
செந்தமிழ் முழுமைக்கும் ……..
அடிமையாய் மூழ்கவோ –
அட தமிழா எழுவாய் …..

வெந்தணல் மனத்திற்குள் –
வேகும் கனதிக்குள் …………..
பொசுங்கவோ நீயின்று ..?
பொடியாக்கி பகை முழக்கு ….

வந்தனர் ஆரியர் –
வலிகளை தந்திங்கு ……….
குந்திட விடுவதோ ..?
குல தமிழ் அழுவதோ …?

செய் நெறி விற்றுமே
செந்தமிழ் குடித்தவர் ………..
வந்தாளா விடுவதோ ..? – தமிழ்
வழி மாறி மடிவதோ ..?

முன்னைய பரம்பரை
முன் விட்ட தவறதை …..
பின்னைய பரம்பரை
பின் தொடர் முறையோ …?

கரிகாலன் வழி சொன்ன
கனதியாம் தமிழீழம் ……
ழுமையாய் பெற்றிட
முன்னேறி தாக்கு ………!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

காத்திரு

காத்திரு …..!

தேடி வந்த வேளையிலே
தேவையில்லை என்றெரிந்தாய் ..
பாதி மனம் நான் உடைந்து –
பாதியில சாகவில்லை …

தேடுதலை நான் விரித்து
தேவைகளை கூட்டி வைத்தேன் —
ஏறி வந்த எண்ணங்களோ –
ஏற்றி வைத்த ஏணி இன்று …

கூட வந்தார் ஏறி நின்று
கூடி கூடி நகைத்து நின்றார் …
வேதனைகள் தந்து விடும்
வேலிகளை போட்டு நின்றார் ….

வாங்கி வந்த அவமானம் –
வழிகளை செய்து விட —
ஏறி விட்டேன் நேற்று நானும் –
ஏறி வரும் செய்தி கேளு ….

பணம் வைத்து நீ அளக்கும் –
பாசமது எனக்கேனோ …?
நாளை ஒரு வேளையது -உன்
நக்கலது நாவறுக்கும் ……!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -12/01/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

மண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..!

மண்ணை பிரிந்தவர் மன குமுறல் ..!

புழுதி உழவடித்து
புழுவாய் அதில் உழைத்து …
சேர்த்த பணம் போல
சொர்க்கம் ஏது வரும் …?

தலை சாய்த்த கதிர் கோதி
தலையறுத்து நிலம் வீழ்த்தி …
மண்டையில் மிதி மிதித்து
மணிகளை அள்ளியது போல் …..

சுனை பிடிச்சு உடல் கடிக்க
சுழன்று குளம் மிதக்க …
ஆடி பாடிய நாள்
அது போல ஏது சுகம் ..?

கோயில் மணியடிக்க
கொழுவி நிரை பிடிக்க …
கரம் வீழ்ந்த பிரசாதம்
கனி போல ஏது சுகம் …?

உடன் ஆய்ந்த காய் கறிகள்
உடனடி உலையேற ….
அடி பட்டு வாய் சுவைத்த
அது போல நாள் வருமா …?

எல்லாம் இருக்கிறது
எங்களவன் தேசத்தில் …
அதை எல்லாம் மறந்தேன்
அன்னியன் தேசத்தில் …?

சிங்கள தனி சட்டம்
சிறை நிரப்ப தமிழினத்தை …
வாழவா முடியும்
வந்தேறிகள் சுடுகாட்டில் ..?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/12/2018

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வெல்வேன் ஒரு நாள் ….!

வெல்வேன் ஒரு நாள் ….!

தேடி வந்து தோல்விகளோ
தோளின் மேலே ஏறுது …
நாடி வரும் உயர்வுகளோ
நடு வழியில் சாகுது …..

ஏறிவிட ஓடுகிறேன்
ஏனோ தூரம் கூடுது …?
எவர் வைத்த சாபமோ
என் வாழ்வு நோகுது …?

ஆடி வரும் தென்றலும்
அடி தந்தே போகுது …..
ஊன்றி வரும் கால்களும்
உரமேற கூடாதோ ….?

கழியும் தின பொழுதுகளில்
கற்றவைகள் ஏராளம் ….
கல்லறையில் சாயும் முன்னர்
கட்டி ஆள மாட்டேனோ ..?

பட்ட வலி தொட்டு தானே
பாதை தேடுறேன் – நாளை
நக்கல் இட்ட வாய்களும்
நம்மை கண்டு வாடுமே ….

குடை பிடிக்கும் வானத்திற்கு
கூலி தந்தார் யாரிங்கு ..?
நிழல் வாழும் மாந்தரின்
நிலையான தென்னவோ .?

ஆறாம் அறிவை தட்டி
ஆழம் பார்க்கிறேன் ….
அந்தோ வரும் நாளில்
ஆகாயத்தை முட்டுவேன் …..

அன்று எந்தன் ஆட்டம் பாரு
அருகில் வந்து முட்டி பாரு ….
வணிகத்தின் தந்திரத்தை -என்னில்
வந்து வாங்கி நீயும் ஓடு ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -16/12/2018

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன் முகவரி சொல்லாயோ

உன் முகவரி சொல்லாயோ …?

தீ வீசும் பார்வையாலே
தீண்டி என்னை போனவளே …
நான் உண்ணும் நா பொசுங்கி
நயாகாராவை தேடுதடி ….

புயல் வீசி நடை பயில
புழுதிக்குள் விழி தவிக்க …
காணமல் போனவளே – என்
காப்பரண் எங்கயடி …?

வழி வந்து இடை மறித்து
வாலிபத்தை நோகடித்து …
தேட வைத்து போனவளே -என்
தேகம் வேர்வை கொட்டுதடி ….

மல்லிகையே உனை கண்டு
மஞ்சள் வெயில் வெக்குதடி …
கஞ்ச தனம் கொண்டவளே
காட்டி மேனி போவதுவோ …?

தாகத்தை தூண்டி விட்டு
தாமரையே போனதெங்கே …?
ஆகமத்தை நான் முடிக்க – உன்
அடைக்கலத்தை சொல்லி விடு ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -02/12/2018

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஒருத்தியின் கதறல் ….!

ஒருத்தியின் கதறல் ….!

மஞ்சள் தாலி தந்தவரே
மாயமான தென்ன …?
மஞ்சம் ஏறி கொஞ்சி தழுவி
மங்கை மறந்த தென்ன …?

உருகி விழியில் நீரும் வடிய
உருகி அணைத்தாய் என்னை – இன்று
உருகி கதற வைத்தேன் என்னை
உயிரே மறந்து சென்றாய் …?

பருகி முடித்து பாதியில் விட்டு
பாவை கதற சென்றாயே – இன்னல்
பார்த்தும் என்னை ஈர்த்து செல்ல
பாசமே உன்னை ஊந்தலையோ …?

ஒரு நாள் உன்னை மரணம் தீண்டும்
ஒரு நொடி என்னை உணர்வாய் – நீ
ஊற்றிய ஊழ்வினை உன்னை வதைக்க
உள்ள வலிகள் புரிவாய் …..

அதுவரை ஆடு ஆட்டம் போடு
ஆண்டவன் தண்டனை இடுவான் …
வேசி என்றே ஊரும் நகைக்க
வெந்து வெந்தே சாகிறேன் ….!

  • வன்னிமைந்தன் -(ஜெகன் )
    ஆக்கம் -01/12/2018
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் இவள் இப்படியானாள் …?

ஏன் இவள் இப்படியானாள் …?

கொட்டுகிற அருவியில
கொடி கூந்தல் விரிப்பவளே ….
கொடுக்கை அவிழ்க்க பாக்ககுதடி
கோர அலை தாக்குதடி ….

முடிச்சவிழ்ந்து போகுமென்று
மூசி அலை வீசுதடி …
அடி ஆற்று பக்கம் யாரும் வந்தா
அம்மணமே என் செய்வாய் …?

ஒத்தையில உன்னை வைச்சு
ஓடி விளையாடுதடி …
கட்டெறும்பா குத்தி தானே – தேகம்
காயம் வைத்து போகுதடி ….

வைச்ச கண்ணு வாங்காம
உச்சி வானம் பாக்குதடி ..
மஞ்சள் வெயில் வீசுறவன்
மடி தடவி போறாண்டி ….

ஒத்திருந்தது பேசிடவே
ஒர கண்ணனால் பார்ப்பவளே ..
கன்னி ராசி கொண்டவனோ
கள்ள சூரியன் திண்ணுறானே ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/10/2018

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

செத்து போன காதல்

செத்து போன காதல்

ஆள் மனசு தேடுதடி – விழி
ஆறாக ஓடுதடி
காணாமல் போனவளே – உன்
கால் தடத்தை தேடுகிறேன் …

வேராகி முளைத்தவளே – நெஞ்சை
வேலெடுத்து அறுத்ததென்ன ..?
கூடு ஒன்று மாறிட தான்
குயிலே கூவ மறந்தாயோ …?

பாவமடி பெண் மயிலே – இந்த
பாவி என்ன செய்திடுவேன் …?
தேம்புதடி உன் நினைவு – எனை
தேற்றிடத்தான் வாராயோ …?

நாள் கணக்காய் காத்திருந்து
நாட்களிலே வாடி விட்டேன் …
பேச்சிழந்து போனவளே – என்
பேரன்பை ஏன் தொலைத்தாய் ..?

மூச்சிழந்து போகு முன்னே
முகம் வந்து காட்டாயா ..?
ஆள் மனதில் உனை வைத்தேன்
அடியே மறந்து போயிடவோ ..?

-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/10/2018