Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வெளிநாட்டு தமிழர்களுக்கு இலங்கை வைத்த ஆப்பு
வெளிநாட்டு தமிழர்களுக்கு இலங்கை வைத்த ஆப்பு
வெளிநாடுகளில் குற்றங்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கு அக்குற்றங்கள் தொடர்பில் இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க
முடியுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு தண்டனைச் சட்ட திருத்தத்துக்கமைய, வெளிநாடுகளில் இலங்கையர்கள் செய்யும் குற்றங்கள்,
இலங்கையின் சட்டத்துக்கமைய தவறெனின், குற்றமிழைத்த இலங்கையர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ஜப்பான் யுவதியொருவரை இலங்கையர் ஒருவர் கடத்தி வந்துள்ளமை தொடர்பில், இன்று காலை தனியார் தொலைக்காட்சி
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் -7 பேர் கைது
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் -7 பேர் கைது
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ஏழு மாணவர்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பல்கலைக்கழகப் பேரவையினால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை குழுவினால் முன்மொழியப்பட்டு, பல்கலைக்கழக
மாணவர் ஒழுக்காற்றுச் சபையினால் பரிந்துரைக்கப்பட்ட படி சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கான தண்டனைகளைப் பல்கலைக்கழகப் பேரவை முடிவு செய்துள்ளது.
நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்டு பல்கலைக் கழகத்தின் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மூன்றாம் வருட மாணவர்களுக்கு, அவர்கள் செய்த குற்றங்களின்
தன்மைக்கேற்ப பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்தின் அடிப்படையில் தண்டனைகள் சிபார்சு செய்யப்பட்டிருந்தன.
பேரவைக் கூட்டத் தீர்மானத்தின் படி, முன்றாம் வருட மாணவர்கள் 3 பேருக்கு ஒரு கல்வி ஆண்டு காலம் ( இரண்டு அரையாண்டுகள்) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் 4 பேருக்கு
நடப்பு அரையாண்டு காலத்துக்குள் (அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை) பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கான தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனைக்குரிய இந்த 7 பேருக்கும் கல்வி கற்கும் காலத்தினுள் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் பதவிகள் எவையும் வழங்கப்படகூடாது.
கற்கை நெறியின் நிறைவில் வகுப்புச் சித்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படக் கூடாது மற்றும் எதிர்காலத்தில் பல்கலைக் கழகத்தினுள் அவர்கள்
வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பிக்கும் போது, இழைத்துள்ள குற்றங்கள் கணக்கிலெடுக்கப்படும். தண்டனைகள் விசாரணை
அதிகாரியினால் முன்மொழியப்பட்டு, ஒழுக்காற்றுச் சபையினால் பேரவைக்கு சிபார்சு செய்யப்பட்டன.
மேலும், தண்டனைகள் அறிவிக்கப்பட்ட மாணவர்கள் எதிர்காலத்தில் மீண்டும் இதே வகையான குற்றச் செயல்களில்
ஈடுபட்டால், மாணவர் பதிவு இரத்துச் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்வு
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்வு
அதற்கமைய இன்றைய தினம் 8 பேர் உயிரிழந்துள்ளனரென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பெண்களும் 4 ஆண்களுமே இன்று உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு 13ஐச் சேர்ந்த 67 வயதுடைய பெண், தெமட்டகொடையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்,
மருதானையைச் சேர்ந்த 78 வயது பெண், மட்டக்குளியைச் சேர்ந்த 36 வயதுடைய ஆண், கொம்பனித்தெருவைச் சேர்ந்த 83 வயதுடைய
ஆண், மாளிகாவத்தையைச் சேர்ந்த 58 வயதுடைய பெண், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண், 70 வயதான
கொழும்பு மெகசின் சிறைக் கைதியொருவருமே கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது
மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது
மாவீரர் தினத்தில் பேஸ்புக்கில் மாவீரர்தினம் தொடர்பான
கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பூர் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான்
நீதிமன்றத்தில்இன்று (28) ஆஜர் படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
தீயில் எரிந்த 12 வீடுகள்
தீயில் எரிந்த 12 வீடுகள்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி, பெக்டரி டிவிசனில்
லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயிப்பரவல் காரணமாக லயன் குடியிருப்பிலுள்ள 12 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து சம்பவம் நேற்றிரவு (27) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு அயலவர்கள் முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீப்பரவல் காரணமாக குடியிருப்பாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து நாசமாகிய அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
மாங்குளத்தில் குண்டு வெடிப்பு – இராணுவம் குவிப்பு
மாங்குளத்தில் குண்டு வெடிப்பு – இராணுவம் குவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கற்குவாரி பகுதியில் நேற்று (26)காலை கைக்குண்டு ஒன்று வெடித்துள்ளது.
குறித்த கைக்குண்டு எவ்வாறு வெடித்தது என்பது தொடர்பாக நேற்றைய தினம் (26) தடயவியல் பொலிஸார் மற்றும் விசேட
அதிரடிப்படையினர் பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதோடு குறித்த பகுதியில் வேறு வெடி பொருட்கள் இருக்கின்றதா என்பது தொடர்பில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன்போது குறித்த பகுதியில் இருந்து மேலும் ஒரு கைகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த குண்டு உள்ளூர் பகுதியில் தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் இந்த குண்டு அண்மையில் பளை
பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் அந்த வீட்டில் இருந்த குண்டுகளை ஒத்ததாக காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.
இவ்வாறான நிலையில் குறித்த குண்டுகள் எவ்வாறு இங்கு வந்தது என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை இன்று (27) அதிகாலை 5.30 தொடக்கம் காலை 10 மணிவரை குறித்த பகுதியில் இருக்கின்ற வீடுகள் அனைத்திலும்
இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சிறுவன் உயிர்குடித்த மதில் – சோகத்தில் கிராமம்
சிறுவன் உயிர்குடித்த மதில் – சோகத்தில் கிராமம்
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து
விழுந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (27) 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வனர்த்தத்தில் திருகோணமலை-புளியங்குளம்-தேவ நகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன் அர்ஜுன் (10 வயது) சிறுவன்
படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் உயரமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதில் காற்றுடன் கூடிய கடும் மழை
காரணமாக இடிந்து விழுந்த நிலையில் சிறுவன் சிக்குண்டதாவும், அயலவர்களின் உதவியுடன் அரை மணி நேரத்துக்குள் சிறுவனை
மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை தனேந்திரன் தெரிவித்தார்.
ஆனாலும் சிறுவனின் இரண்டு கைகள் உடைந்த நிலையில் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.
செல்லப்பா தலைமையில் – தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் photo
செல்லப்பா தலைமையில் – தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் photo
தமிழகம் புதுவையில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது
பாசறைப் பானார் செல்லப்பா கலந்து கொண்டு சிறப்பித்த நினைவுகள்
இங்கே
புலிகள் அழிந்ததென்று எவன் சொன்னான் …?


மாவீரர் நாள் 

பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகை பூ!
பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கார்த்திகை பூ!
UK Houses of Parliament bear Karthigaipoo to mark Maaveerar Naal
உலக தமிழர்கள் இன்று மாவீரர் தெய்வங்களை நினைவு கூறி வருகின்றனர் ,
அவ்விதம் பிரிட்டன் பாராளுமன்ற கட்டிடம் ஒன்றில் கார்த்திகை பூ
ஒலிக்கின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அந்த காட்சிகள் இங்கே


மாவீரர் நாளில் தமிழர்தேசம் வகுத்துக் கொள்ள வேண்டியது என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் செய்தி !
மாவீரர் நாளில் தமிழர்தேசம் வகுத்துக் கொள்ள வேண்டியது என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் செய்தி !
இறைமை தமிழ்மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன், இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருக்கும் வல்லரசுகளின் ஆட்டத்தை தடுத்து
நிறுத்தும் வகையில், அனைத்துலக உறவுக் கொள்கை ஒன்றை தமிழர் தேசம் வகுத்துக் கொள்ளவேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இதேவளை மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் மறுக்கும் சிங்கள அரசுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி உரிமைகளை வென்றெடுக்க
முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு நீக்கத்தின் அவசியம், இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல், சர்வதேசத்தின் நலன்சார் அரசியலை கையாளுதல், தமிழர் தேசத்துக்கான வெளியுறவுக் கொள்கை என இம்மாவீரர் நாளில் தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய அரசியல் இராஜதந்திர செயல்வழிப்பாதை குறித்து தெளிவாக முன்வைத்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியின் முழுவடிவம் :
இன்று தேசிய மாவீரர் நாள்.
இது தமிழீழத் தேச அரசினது உருவாக்கத்துக்காகத் தமது இன்னுயிர்களை விதையாக ஈந்த தேசவித்துக்களின் திருநாள்.
தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் இனவழிப்புக்கு உட்படாமல் வாழ்வதற்குச் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைதல் ஒன்று மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்று உறுதியான நம்பிக்கையுடன் வரலாறு படைத்தவர்களின் பெருநாள்.
நமது தேசத்தின் பிள்ளைகளை நமது நெஞ்சக்கூட்டில் இருத்தி, அவர்களின் திருவுருவங்களை நினைந்துருகி நம் மக்களெல்லாம் அவர்களை வணங்கி நிற்கும் புனித நாள்.
ஈழத்தமிழ் மக்களின் விடுதலை மூச்சைத் தமது மூச்சாக நிறுத்திச் சுமந்து நின்றவர்கள் நமது மாவீரர்கள்.
இராணுவப் பெருங்களங்களில் பெரும்வீரம் காட்டி, அறநெறி போற்றி உலகமெங்கும் தமிழர் மாண்பை முரசறைந்தவர்கள் நம் மாவீரர்கள்.
ஈழத் தமிழர் தேசத்தின் தேசியப் பிரச்சனையைத் தமது ஈகத்தாலும் வீரத்தாலும் அனைத்துலக அரங்கில் நிலைநிறுத்தியவர்கள் மாவீரர்கள்.
உலக இராணுவ வரலாறு கண்ட மிகப் பெரும் சமர்களுக்கு ஒத்த பல சமர்களை மிகக் குறைந்த படைபலத்துடன் வெற்றி கொண்டு உலக இராணுவங்களையே மலைப்புடன் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் நமது மாவீரர்கள்.
ஒரு சிறிய தேசத்;தின் அரசியல் பலம் இராணுவபலத்தின் ஊடாக கட்டியெழுப்பப்பட முடியும் என்பதனை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டியவர்கள் நமது மாவீரர்கள்.
உலகில் தமிழ் மக்கள் வாழும் இடங்களிலெல்லாம் மாவீரர்களை வணங்கி நிற்கும் மக்கள் அனைவருடனும் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தனது சிரம் தாழ்த்தி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நிற்கிறது.
விடுதலைப் புலிகள் மீதான தடைநீக்கத்தின் அவசியம்
அன்பான மக்களே,
நமது மாவீரர்களை உலக அரசுகள் எதிர் கொண்ட விதம் அறத்தின்பாற்பட்டதல்ல. அநீதியின் பாற்பட்டது. அறத்தின் பாற்பட்டு இந்த உலக அரசியல் ஒழுங்கு இயங்கியிருக்குமானால் நமது மாவீரர்களை இன்று அனைத்துலகமும் கையில் தாங்கிக் கொண்டாடியிருக்கும்.
இலங்கைத் தீவில் தமிழீழத் தனியரசு அமைவது தமது நலன்களுக்கு ஒத்திசைவானதா இல்லையா என்பதே உலக அரசுகள் போட்ட கணக்கு.
தமது நலன்களுடன் ஒரு போராட்டம் ஒத்திசைந்தால் உலக அரசுகளின் பார்வையில் அப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராளிகள். தமது நலன்களுக்கு ஏற்றதாக இல்லாது விட்டால் அவர்கள் பயங்கரவாதிகள். இதுதான் அரசுகளின் கணக்கு.
இந்தக் கணக்கைத்தான் உலக அரசுகள் நமது போராட்டத்திலும் போட்டன. நமது போராளிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டனர். பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் நமது விடுதலை இயக்கமும் இணைக்கப்பட்டது.
பயங்கரவாதம் எனும் சொல்லுக்கு உண்மையான வரைவிலக்கணமாக இருந்து அரச பயங்கரவாதத்தை மிகக் கொடுமையானவகையில் செய்து வந்த பல அரசுகளும் எமது போராளிகளைப் பயங்கரவாதிகளாக்கி மகிழ்ந்தன.
இக் குற்றச்சாட்டின் நோக்கம் போராட்டத்தின் அரசியல் இலக்கை நீர்த்துப் போகச் செய்வதே. போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் குற்றம் சாட்டுவதன் மூலம் போராட்டத்தின் நியாயங்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியே.
அரசுகளின் காட்டாட்சி நடக்கும் உலக அரசியலில் ஒரு சின்னஞ் சிறிய தேசம் தனது சக்தியனைத்தையும் திரட்டி நீதிக்காகப் போரிட்ட போதும் அத் தேசத்தின் குரல் இந்த அரசுகளின் காதுகளில் விழவில்லை.
சிங்களப் பேரினவாதம் தனக்கென ஒரு அரசை வைத்திருந்த ஒரேயொரு காரணத்தால், அந்தப் பேரினவாத அரசுடன் இசைந்தவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதில் அனைத்துலக அரசுகள் கொண்டிருந்த பெருவிருப்பால் சிங்களத்தின் தமிழினவழிப்புக்கும் இவ் அரசுகள் உறுதுணையாக இருந்தன.
இது மாவீரர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் உலக அரசுகள் இழைத்த ஓர் அநீதி. அரசுகள் ஆடையணிவதில்லை எனவும் அவை நலன்களைத்தான் ஆடைகளாக அணிந்து கொள்பவை எனவும் கூற்றொண்டுண்டு. இந் நலன்மைய உலக ஒழுங்கில் சிங்கள பேரினவாதத்தை எதிர்த்து மட்டுமல்ல, இந்த அரசுகளிடமும் நாம் நீதி வேண்டிப் போராட வேண்டியவர்களாக உள்ளோம்.
இதன் அர்த்தம் நாம் இந்த அரசுகளை எதிரிகளாகக் கருதுகின்றோம் என்பதல்ல. இந்தியா மற்றும் மேற்குலக அரசுகளை நட்புச் சக்திகளாக அணுகும் நிலைப்பாட்டைத்தான் நாம் கொண்டிருக்கிறோம். இருந்தும் நமது விடுதலை இயக்கத்தின் மீதும் மாவீரர்கள் மீதும் இந்த அரசுகள் சுமத்தியுள்ள பயங்கரவாதிகள் என்ற குற்றச்சாட்டை எதிர்த்து நமது சக்திக்கு உட்பட்ட வகையில் நாம் போராடித்தான் ஆக வேண்டும்.
இது மாவீரர்களுக்கு நாம் செய்யும் மரியாதை என்பது மட்டுமல்ல, போராடும் தமிழீழ தேசத்துக்கும் அத்தியாவசியமானது. இந்த அரசுகளின் பயங்கரவாதப் பட்டியல் அரசியல் சார்ந்தது தான். கிடைக்கும் அரசியல் மற்றும் நீதிப் பொறிமுறைகளுக்குள் அதனை எதிர்த்;து நிற்பதுவும் ஓர் அரசியல் போராட்டம் தான். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் இப் போராட்டமும் இணைக்கப்பட வேண்டியது எனவே நாம் கருதுகிறோம்.
இந்தப் போராட்டத்தைத் தான் நாம் அண்மையில் பிரித்தானியாவில் மேற்கொண்டிருந்தோம். இந்தியாவிலும் மேற்கொள்கிறோம். பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது பயங்கரவாதப் பட்டம் சூட்டித் தடை விதிக்கப்பட்ட முறை பிழையானது எனத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இது ஒரு சிறிய வெற்றிதான். ஆனால் அரசொன்றின் முடிவு தவறு என வெளிப்படுத்தப்பட்டது முக்கியமானதொரு வெற்றி. இதன் இறுதி முடிவு அரசு சார்பாகப் போகவும் கூடும். இருப்பினும் அரசுகளின் தமிழர் விரோத முடிவுகளை தொடர்ச்சியாக் கேள்விக்குள்ளாக்கி அரசியல் முடிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் உத்தி சார்ந்த செயற்திட்டத்தை நாம் வகுத்துச் செயற்பட்டு வருகிறோம்.
இறுகிவரும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளல்
அன்பானவர்களே,
நாம் இன்று நெருக்கடியானதொரு அரசியற் காலகட்டத்தை எட்டியிருக்கிறோம். இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதம் தன்னை மேலும் வலுப்படுத்தியிருக்கும் நிலையை கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் நாம் அவதானி;க்க முடிகிறது.
சிங்கள அரசியல் சேனநாயக்கா, பண்டாரநாயக்கா குடும்பங்களைக் கடந்து இப்போது இராஜபக்ச குடும்பத்தை மையம் கொண்டுள்ளது.
தமிழர் ‘ஆக்கிரமிப்பை’ வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுக்களாக இராஜபக்ச சகோதரர்கள் தம்மைச் சிங்கள மக்கள் மத்தியில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். தமது யுத்தகள வெற்றியினை அரசியல் முதலீடாக மாற்றியிருக்கிறார்கள்.
இந் நிலையில் சிங்களப் பேரினவாதத்தை மேலும் சிறிலங்கா அரசில் இறுக்கமாக நிலைநிறுத்தும் வேலைகளை அவர்கள் முன்னெடுப்பார்கள்.
இலங்கைத்தீவில் என்றும் சிங்கள பௌத்த மேலாதிக்கம் வளர்ந்தோங்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அவர்கள் செய்வார்கள்.
இதனை இன்னொரு வகையில் சொன்னால் சிங்களத்தின் தமிழின அழிப்பு இனிவரும் வருடங்களில் இன்னும் தீவிரமடையும்.
இங்கு தமிழின அழிப்பு என்பது தமிழ் மக்கள் ஒவ்வொருவரையும் பௌதீகரீதியாகக் கொன்றொழிப்பதைக் குறிக்கவில்லை. மாறாக இலங்கைத்தீவில் தமிழர் தேசம் என்றதொரு அரசியல் அலகை இல்லாது ஒழிப்பதைத்தான் குறிக்கிறது. தமிழ்மக்களின் தேசத் தகைமைகளை அழித்தொழிப்பதைத்தான் குறிக்கிறது.
இது சிங்கள பௌத்த இனவாத அரசின் நீண்டகால இலக்கு. சிங்கள அரசைத் தலைமை தாங்கும் எந்தத் தவைர்களும் இதனைச் செய்வார்கள். தமிழர்களுடனான யுத்தத்தை வென்;றதாக வெற்றி முரசம் கொட்டும் இராஜபக்சக்களுக்கு இதனை ஒரு படி கூடுதலாகச் செய்யும் விருப்புண்டு. இதன் மூலம் சிங்கள மக்களின் வரலாற்றில் நீங்கா இடம் பிடிக்கும் ஐதீகக் கனவுகளும் அவர்களுக்கு உண்டு.
இதனால் சி;ங்களத்தின் ஆக்கிரமிப்பு தமிழ் மண்ணில் மேலும் தீவிரமடையும். கொரோனா உலகப்பெருந்தொற்று அரசுகளுக்குத் தந்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழர் தேசத்தின் அரசியற் குரலை மேலும் நசுக்கவும் தமிழர் தேசத்தின் வளர்ச்சியை மேலும் நறுக்கவும் இவர்கள் முயல்வார்கள்.
தமிழ் மக்கள் தமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினையும் இவர்கள் மறுப்பார்கள்.
இவர்களுடன் உரையாடி, பேச்சுவார்த்தைகளை நடாத்தி நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் எனத் தமிழர் தலைவர்கள் எவரும் காத்திருப்பார்களேயானால் இவர்களின் நிலை இலவு காத்த கிளிகளின் கதை போல்தான் இருக்கும்.
தமிழ் மக்களுக்கு சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து அரசியல் வழியில் போராடுவது மட்டும்தான் இப்போதுள்ள தவிர்க்க முடியாதவொரு தெரிவாக இருக்கும். இந்தப் போராட்டம் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து சட்ட எல்லைகளைத் தாண்டிக் கிளர்ந்தௌ வேண்டும். சிறிலங்காவின் அடக்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அடையாள எதிர்ப்பை மட்டும் காட்டுவது உரிய பயனை வழங்கப்போதில்லை.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் விடயத்தில் மக்கள் சட்ட எல்லைகளையெல்லாம் தாண்டி தமது சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துவார்கள் என்பது எமது நம்பிக்கை.
சிங்கள அரசு, தமிழர் தேசத்தை அழித்தொழிக்கும் கைங்கரியத்தை அனைத்துலக அரசுகளைத் தமக்குச் சாதகமாகக் கையாள்வதன் மூலம் நடைமுறைப்படுத்தலாம் என எண்ணுகிறது.
இந்து மகா சமுத்திரம் உலக வர்த்தகத்தில் வகிக்கக்கூடிய பங்கு காரணமாக இதன் முக்கியத்துவம் 21 ஆம் நூற்றாண்டில் மேலும் வளர்ச்சியடையக் கூடியதொரு சூழலும், இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடவமைவும், இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கைத் தீவில் காட்டும் அக்கறையும் உலக அரசுகளைக் கையாளும் வாய்ப்பைத் தமக்குத் தரும் என இராஜபக்சக்கள் கருதும் நிலை உண்டு.
மேலும் அமெரிக்கா தலைமையிலான அரசுகள் மேற்கொண்ட ஆட்சிமாற்ற ஆட்டத்தை சிங்கள பௌத்த தேசியவாதத்தின் துணையுடன் இராஜபச்சக்கள் முறியடித்து பெருவெற்றி கொண்டிருக்கிறார்கள். இந் நிலையில் தம்முடன் பேரம் பேசி நலன்களை உறுதி செய்து கொள்வதை விட வேறுவழியேதும் உடனடியாக இல்லை என்பதனை அனைத்துலக அரசுகளும் புரிந்து கொண்டிருப்பார்கள் எனவும் இராஜபக்சக்கள் எண்ணுவதற்கு இடமுண்டு.
தமிழர் தேசம் வகுத்துக் கொள்ள வேண்டிய மூலோபாயம்
இலங்கைத்தீவில் வல்லரசுகளின் ஆட்டம் சிறிலங்கா அரசை மட்டும் மையம் கொண்டிருப்பதனைத் தடுத்து நிறுத்துவது என்பதைத் தமிழர் தேசம் தனது உத்தியாக வகுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழர் தேசத்துக்கான அனைத்துலக உறவுக் கொள்கை வகுக்கப்படுவதோடு தமிழர் தேசத்தின் இறைமை தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என்ற நோக்குநிலையுடன் தாயகத் தமிழ் அரசியற் தலைவர்கள் செயற்பட வேண்டும்.
தமிழர் தாயகத்தின் நில கடல் வளங்கள் தமிழர் தேசத்துக்குரியவை என்ற அரசியல் நிலைப்பாட்டைத் தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். தமிழர் தாயகத்தின் எந்தப் பகுதிகளையும் அனைத்துலக அரசுகள் பயன்;படுத்துவதானால் தமிழ்த் தலைவர்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அதனை மீறி மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் அனைத்தையும் எதிர்த்துத் தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப் போராட்;டங்கள் நாடாளுமன்ற பகிஸ்கரிப்பு போன்ற வடிவங்களை எடுக்கும்போது அவற்றின் மீது அனைத்துலகக் கவனம் குவியும்.
இவற்றையெல்லாம் தாயகத்தில் செய்வதற்குரிய அரசியல் விருப்பு தாயகத் தலைவர்கள் பலரிடம் இருக்கிறதா என்பது இங்கே முக்கியமானதொரு கேள்வியாக எழுகிறது.
மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதில்; அரசியல் தலைவர்கள் காட்டும் அக்கறை உண்மையானதாக இருக்கும் பட்சத்தில் தமிழர் தேசத்தை அனைத்துலக அரசுகள் மத்தியில் தனித்துவமான தரப்பாக நிலைநிறுத்துவதில் தமிழ்த் தலைவர்கள் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
இலங்கைத்தீவில் தமது நலன்களை அடைந்து கொள்வதில் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற அரசுகளுக்கிiடேய ஏற்படக்கூடிய போட்டி, புவிசார் அரசியல் சார்ந்து தமிழ் மக்களுக்குத் தரக்கூடிய வாய்ப்புக்களை இனங்கண்டு உரிய வியூகங்களை வகுக்க வேண்டிய கடமை தமிழர் தேசத்துக்கு உண்டு.
இவ் விடயத்தில் ஈழத் தமிழ்த் தாயகத்தையும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும், தமிழ்நாட்டு மக்களையும், உலகத் தமிழ் மக்களையும் இணைத்து ஒரே தரப்;பாக நாம் நிலைநிறுத்த வேண்டும்.
இதற்கான முன்னெடுப்பினைத் தாயக மக்களிடையே தேசிய நிலைப்பாட்டுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக நின்று மேற்கொண்;டால் அது கூடுதல் மட்ட அனைத்துலக அக்கறையினைப் பெறும். தாயகத்தில் எடுக்கப்படும் இம் முயற்சிகளுக்கு உரிய ஆதரவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வழங்கும்.
இந்திய பெருங்கடல் அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பாகுதல்
அன்பான மக்களே,
நாம் ஒரு தேசமாக நம்மை அடையாளப்படுத்திக் கொண்டாலும் அரசில்லாத ஒரு தேசமாகவே இன்று இருக்கிறோம். ஏறத்தாழ 90 மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டத்துக்கென உலகில் ஒரு நாடு இன்றில்லை. ஓர் அரசு இல்லை.
உலகில் தமிழ் மக்களுக்கெனவொரு அரசு வலுவாக இருந்திருக்குமானால் முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பு நடப்பதற்கான நிலைமைகள் உருவாகியிருக்காது.
நாம் அரசற்ற தேசமாக இருப்பதனால் சிறிலங்கா அரசுக்குள் கட்டுண்டு போயிருக்கிறோம். இதனால் எம்மிடையே ஈழத் தமிழர் தேசம் குறித்த சுதந்திரமான சிந்தனைகளைக் கட்டுப்படுத்தும் நிலைமைகளே உள்ளன. இந் நிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
மேலும்; உலகநோக்கில் இருந்து பார்க்கும் போது அரசுகள் என்ற முறைமைக்குள்ளும் நாம் சிக்குண்டு போயிருக்கிறோம். இதனாற் தான் வல்லரசுகள் இலங்கைத்தீவில் அடைந்து கொள்ள முயலும் நன்மைகள் உள்நாடு சார்ந்தவையாக மட்டும் அமைவதில்லை.
அரசுகளின் இந்து-பசுபிக் சமுத்திரப் பிராந்திய வர்த்தக, பொருளாதாரப் போட்டியில் இலங்கைத்தீவும் முக்கியமான கேந்திர முக்கியத்துவத்தைப் பிடித்துக் கொள்கிறது. வர்த்தக, பொருளாதார நன்மைகளை நிலைநிறுத்த இராணுவ நடவடிக்கைகளையும் இவ் அரசுகள் மேற் கொள்வதுண்டு.
இருப்பினும் அவ்வாறு நடக்கும்போது தமது இராணுவ நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு சார்ந்;தும்;, ஜனநாயகம் சார்ந்தும், அறம் சார்ந்தும் காரணங்களை அரசுகள் கூறிக் கொள்வதுண்டு;. அரசுகள் இவ் விடயத்தில் நேர்மையற்றதொரு இரட்டைநிலையில் தான் இருந்து வருகின்றன.
இருந்தபோதும் நாம் அனைத்துலக அரசுகளின் ஆதரவுகளை எமக்குச் சார்பாக வென்றெடுக்க வேண்டிய அவசியம் உண்டு.
பல தலைவர்களும் அதிகாரிகளும் தம் அரச பொறுப்பில் இருக்கும் போது பின்பற்றாத, பேசாத உண்மைகளைப் பின்னர் பேசுவார்கள். காலம் தாழ்ந்தென்றாலும் உண்மைகள் வெளிவர இவை உதவுவதுண்டு.
உதாரணமாக, முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடைபெற்ற போது அமெரிக்க அதிபாராக இருந்த ஒபாமா அவர்கள் அண்மையில் வெளியிட்ட தனது நூலில் அங்கு நடைபெற்றது இனவேட்டை (ethnic slaughter) எனக் குறிப்பிட்டுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழினவழிப்புத் தொடர்பான அனைத்துலக விசாரணைக் கோரிக்கைகள் நலிவடைந்து போகவில்லை.
சிங்களத்தின் தமிழினவழிப்பு என்றோவொரு நாள் உலகின் மனச்சாட்சியைத் தட்டி தமிழர் தேசத்துக்கான வாய்ப்;புகளைத் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் நாம் செயலாற்றுவோம்.
மாவீரர்களின் நினைவு நாளில் அறம் வெல்லும் என்ற தார்மீக நிலைப்பாட்டை, நீதியை மதிக்கும் மானுட சமூகத்தின் மீது கொண்ட நம்பிக்கையாக நாம் வரித்துக் கொள்வோம்.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும். நம் மாவீரர் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் அணி திரள்வோம்.
நம்மால் இயலக்கூடிய அனைத்து வழிகளிலும் மாவீரர் கனவை நனவாக்க உழைப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் நினைவு கூறும் மாவீரர் நாள் இன்று
உலகமெங்கும் நினைவு கூறும் மாவீரர் நாள் இன்று
தமிழீழ விடுதலை போரில் தம் உயிர்களை ஆகுதியாக்கி
வீரகாவியமான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
நாம் வாழ்வதற்கு தம்மை அர்ப்பணித்து விழி மூடிய வீர புதல்வர்கள் ,அவ்வாறான
நாளை இன்று உலகம் எங்கும் பரவி வாழும் தமிழர்கள் கண்ணீரால் மலர் தூவி தரிசிக்கும் நாளாகும்
பிரிட்டன் லண்டனில் விசேடமாக ஒழுங்கு செய்ய பட்ட மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரங்கேற்ற பட்டுள்ளது
இந்த நிகழ்வில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்று தமது புதல்வர்களுக்கு வீர வணக்கத்தை செலுத்தினர்
தாயகநேரம் மாலை 6:05க்கு தொடங்குகின்றது உலகத்தமிழர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தாயகநேரம் மாலை 6:05க்கு தொடங்குகின்றது உலகத்தமிழர்களின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரச தடைகளை விதித்துள்ள நிலையில், தாயக
மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழ் மாவீரர்நினைவேந்த் நிகழ்வினை இணையவழியே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுகின்றது.
ஆக்கிரமிப்புக்கும் இனஅழிப்புக்கும் எதிராக போராடினார்களேயன்றி, எவரையும் ஆக்கிரமிப்பதற்காகவோ அடிமை கொள்வதற்காகவோ மாவீரர்கள் போராடவில்லை. ஆனால்
இன்று தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரசு கட்மைப்பு தமிழர்களின் நினைவேந்தும் உரிமைக்கு தடைவிதித்து வருகின்றது.
இந்நிலையில் தேசப்புதல்வர்களை நினைவேந்தி உலகத்தமிழர் நாம் மாவீரர்கள் என்ற ஒற்றைப்புள்ளியில் உணர்வெழுச்சியோடு
ஒன்றுகூடுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தாயக நேரம் மாலை 6:05க்கு (ஐரோப்பா மதியம் 1:35, நியு யோர்க் காலை 7:35) தொடங்குகின்ற நிகழ்வுகளை www.tgte.tv
TGTE TV
The Transnational Government of Tamil Eelam. TV Channel
www.tgte.tv
– Facebook : tgteofficial காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பல்வேறு புலம்பெயர் நாடுகளில் மக்கள் பெருமளவில் பங்கெடுத்து
மாவீரர்களை நினைவேந்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்தவாறு மாவீரர்களை நினைவேந்தும் வகையில் இது அமையவிருக்கின்றது.
யார் இந்த பிரபாகரன் – வீடியோ
தலைவன் பிறந்த கதை
தலைவர் பிரபாகரனின் 66 ஆவது பிறந்த நாள் இன்றாகும்
தலைவர் பிரபாகரனின் 66 ஆவது பிறந்த நாள் இன்றாகும்
தமிழீழ விடுதலை புலிகளின் மேதகு தேசிய தலைவர் பிரபாகரன் வல்வெட்டி
துறையில் 26 நவம்பர் 1954 ஆம் ஆண்டு பிறந்தார்
அவரது
பிறந்த தினம் இன்றாகும்
அறுபத்தி ஆறாவது பிறந்த நாளை அவர் இன்று எட்டியுள்ளார்
தமிழர் தேசம் தலை நிமிர்ந்த மகத்தான நாள் இன்றாகும் ,
அவருக்கு எமது பிறந்த நாள் வாழ்த்தக்கள்
இருந்தால் அவன் தலைவன் ,இறந்தால் அவன் தலைவன் ,அவனே எங்கள் பிராபாகரன்
சிறலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !
சிறலங்கா நீதிமன்றங்களை களமாக்கிய மாவீரர்கள் !
சிறிலங்காவின் உள்நாட்டு நீதிப்பொறிமுறையில் தமிழர்களுக்கான நீதி கிடையாது என்பதோடு, தமிழர்களுக்கான அரசியல்வெளி
இல்லை என்பதனை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும் ஓர் களமாக, மாவீரர் நாளுக்கான சிறிலங்காவின் அரச
கட்டமைப்புக்களின் தடைகள் அமைந்துள்ளன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு சிறிலங்காவின் அரச கட்டமைப்புக்கள் ஏற்படுத்தி வரும் தடைகள் தொடர்பிலும், தாயக தமிழ் அரசியல்
தலைவர்கள் அடுத்து எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகார அமைச்சு
அறிக்கையொன்றினை விடுத்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இனநாயக மயப்படுத்தப்பட்ட சிறலங்காவின் அரச கட்டமைப்புக்களின்
ஒன்றான நீதித்துறை, போர்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை தண்டிக்காது அவர்களை விடுத்து,நீதிவேண்டி போராடும்
பாதிப்புக்கு உள்ளான மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கும் செயல்களையே முன்னெடுத்து வருகின்றது.
இனநாயகத்தின் பிரதிபலிப்பாகவுள்ள சிறிலங்காவின் நீதித்துறை என்பது,சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கு நீதியினை நிலைநாட்டலாம். ஆனால் தமிழர்களுக்கும்
சிங்களவர்களுக்கு இடையிலான பிரச்சனைகள் எனும் போது, அது இனநாயகத்தின் ஓர் கருவியாகவே சுதந்திர காலம் தொட்டு இயங்கி வருகின்றது.
தமிழர்கள் ஈடுசெய் நீதியினை வேண்டிவந்த நிலையில், சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட நிலைமாறுகால நீதியின் முறையே, தமிழர்களுக்கான நீதிக்கு சிறிலங்காவில் இடம் இல்லை
என்பதனையே இவைகள் வெளிக்காட்டி வருகின்றன. ஐ.நா மனித உரிமைச்சபையின் தீர்மானங்களில் இருந்து சிறிலங்கா விலகிய நிலையானது நிலைமாறுகால நீதியினை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழின அழிப்பின் முதன்மைக் குற்றவாளியாக சிறிலங்கா அரசே இருக்கும் நிலையில் தமிழர்களுக்கான நீதிப்பொறிமுறையோ, அரசியல் விருப்போ அல்லது ஐக்கியநாடுகள் செயலாளர்
நாயகத்தின் நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிட்டவாறு நீதியை நிலை நிறுத்தக் கூடியவகையிலான விசாரணைகளுக்கான சூழலோ சிறிலங்காவில் கிடையாது என்கின்றது.
இந்நிலையில் தமிழர்களுக்கான நீதிக்கான பொறிமுறை உள்ளநாட்டில் இல்லை என்பதும் மீண்டும் மீண்டும் நிருபணமாவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே
தமிழர்களக்கான நீதிக்கான பொறிமுறையாக இருக்கின்றது என்பதனை மாவீரர் நாளுக்கான வெளிக்காட்டுகின்றன.
இவ்வேளையில் தமிழர் தாயக அரசியல் தலைவர்களை நோக்கி வேண்டுகோள் ஒன்றினை விடுக்கின்றோம்.
சிறிலங்காவின் நீதிமன்றங்களை, பாராளுமன்றத்தை யாவற்றையும் ஒரு களமாக கொண்டு, தமிழர்களுக்கான நீதியோ, அரசியல் வெளியோ இல்லை என்பதனை இன்னும் வீச்சாக
சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுவதோடு, சர்வதேச நீதிப்பொறிமுறையே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுதரும் என்பதனை இடித்துரையுங்கள். மக்கள்மயப்பட்ட அரசியற்
போராட்ட களமே அனைத்து தடைகளையும் உடைக்கின்ற ஆயுதமாக மாறும். தமிழர்களுக்கான நீதியையும் , அரசியல்
உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான புதிய புதிய களங்களாக இவைகள் உருவாகட்டும் என்பதனையும் உரிமையோடு
வேண்டுகிறோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு
ஐ.நாவின் கவனத்தில் மாவீரர் நாளுக்கான தடை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுப்பு
மாவீரர்நாளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்துள்ள தடைகளை தொடர்பில் ஐ.நாவின் இரண்டு சிறப்பு
அறிக்கையாளர்களின் கவனத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டு சென்றுள்ளது.
ஒன்றுகூடும் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர், கருத்துச் சுதந்திரத்துக்கான சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு
சர்வதேச மனித உரிமைகள்,சட்டங்களுக்கான வல்லுனர்கள் Global Diligence LLP filed மையத்தின் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது.
முன்னராக தியாகி லெப்.கேணல் திலீபனினின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சிறிலங்கா அரச கட்டமைப்புக்கள் விதித்த தடை தொடர்பிலும், இவ்வாறான முறைப்பாட்டை ஐ.நாவின் இவ்விரு
சிறப்பு அறிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் சிறிலங்கா அரசு தனது
கடுமையான எதிர்வினையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அதன் தொடர்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மாவீரர் நாளுக்கு விதிக்கப்பட்டு வரும் தடைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்களுக்கு மேற்கொண்ட
முறையீட்டில்,
இலங்கைத்தீவில் சிங்கள பௌத்த பேரினவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே தமிழர்கள் ஆயுத வழியிலும்,
அமைதி வழியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ‘மாவீர்ர் நாள்’ என்பது இத்தகைய அரச பயங்கரவாத அடக்குமுறையை
எதிர்த்துப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவேந்துவதற்காக நடத்தப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல்
களப்பலியான மாவீரன் லெப்டினண்ட் சங்கர் உயிர்நீத்த நாளே மாவீரர் நாளாக ஆண்டுதோறும் தமிழ்மக்களால் நினைவேந்தப்படுகின்றது.
தமிழ்மக்களின் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகளை விதிப்பதும், அச்சுறுத்துவதும் ஐ.நாவினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு
ஒப்பந்தத்தின் முறையே உறுப்பு 21 மற்றும் 19ல் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமையையும் பேச்சுரிமையையும் மீறுவதாகும் என்று முறையீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இட்டிருப்பதானது, நினைவேந்தும் செயல்கள் உறுப்பு
21இன் கீழ் சொல்லப்படும் கட்டுத்தளைகளுக்கு இடம்தரா விட்டால் , இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த விடாமல் மக்களைத் தடை
செய்வதை நியாயப்படுத்த முடியாது எனவும் முறையீட்டில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.
போரில் இறந்தவர்களுக்கும் அவர்களின் கல்லறைகளுக்கும் மரியாதை செய்வது என்பது சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களின்
படி, குறிப்பாக மானிட கண்ணியத்துக்கான உரிமையின் படி பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான சுகாதார கட்டுப்பாடுகளை காரணங்காட்டி, தமிழ்மக்களதது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அதனை தவறாகப்
சிறிலங்காவின் அரச கட்டமைப்பு பயன்படுத்தி வருவதாக மீளவும் ஐ.நாவுக்கு சுட்டிக்காட்டியுள்ள இந்த முறையீட்டில்,
நினைவேந்தலைத் தடை செய்யும் நீதிபதிகளின் முடிவுகள் என்பது தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையிலும், இனப்
பாகுபாட்டிலும் வேர்கொண்டிருக்கக் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்களின் தடைக்கு அடிப்படையாக இருப்பது ‘பங்கேற்பாளர்களின் இன அடையாளமும் அதிகாரிகளோடு அவர்களுக்குள்ள உறவுமே’ ஆகும். காவல்துறையும் நீதிபதிகளும்
அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது ‘பாகுபாடான உரிமைமீறலும் தாக்குதலும்’ ஆகும். ‘சட்டங்களும் அவற்றுக்கான பொருள்விளக்கமும் பயன்பாடும் அமைதியான முறையில்
ஒன்றுகூடும் உரிமையைத் துய்ப்பதில் ‘இனம்’ போன்ற அடிப்படையில் பாகுபாட்டைத் தோற்றுவிக்காத படி’ சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும்.’ மாவீர்ர் நாள் நினைவேந்தலைப்
பொறுத்த வரை அமைதியாக நினைவேந்தும் கூட்டங்கூடும் உரிமையையும் கருத்துரிமையையும் ‘மதிக்கவும் உறுதி செய்யவும்’ வேண்டிய கடமையை சிறிலங்கா மீறுவது தெளிவாகத் தெரிகிறது
எனவும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்களுக்கான முறையீட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச போர் நியமங்களுக்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் கல்லறைத் தோட்டங்கள் சிறிலங்கா ஆக்கிரமிப்பு படைகளினால் இடித்து
தரைமட்டமாக்கப்பட்டுள்ளதோடு, சர்வதேச கடப்பாடுகளுக்கு கட்டுப்படாத நிலையே காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
நினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு. – மனோ கணேசன்
நினைவுகூரலை மறுக்கும் கோத்தாவின் கோமாளி அரசு. – மனோ கணேசன்
1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர். ஆனால், உயிரிழந்த
தமிழ் போராளிகளையும், தமிழ் பொதுமக்களையும் நினைவுகூர முடியாது என கோத்தா அரசு தடை போடுகிறது. இப்படி ஒவ்வோர்
மாகாணங்களுக்கும், வெவ்வேறு சட்டங்களை போடும், இதே அரசுதான் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்றும் கோமாளித்தனமாக
சொல்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு மனோ கணேச எம்பி வழங்கியுள்ள நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;
தொகுப்பாளர்:
நீங்கள் அண்மையில் தமிழ் ஊடகமொன்றுக்கு, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது கேலிக்குரிய விடயமாக இருக்கின்றது என
கூறியிருந்தீர்கள். அதாவது ஆயுதம் ஏந்தியவர்களை நினைவுகூருவதை நியாயப்படுத்த முயல்வது போலவே அது தோன்றியது. என்ன கதை இது?
மனோ கணேசன்:
நான் எனது Twitter மற்றும் Facebook ஊடாக இந்த கருத்தினை பதிவேற்றியிருந்தேன். அது தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களிலும் பிரசுரிக்கப்படுகின்றது.
நான் சொல்ல முயல்வது இதுதான். அதாவது இந்த நாட்டில் யுத்தத்தினால் உயிரிழந்தவர்களை நினைவுக்கூறும் பிரச்சினை, வடகிற்கும், தெற்கிற்கும் இடையில் இருந்து வருகின்றது. இது ஒரு புதிய பிரச்சினையல்ல.
பாருங்கள், பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதங்கள் ஏந்தி போராட்டங்களை மேற்கொள்பவர்கள்தான் பயங்கரவாதிகள் என கூறப்படுகிறார்கள். இதுபற்றிய எளிமையான விளக்கம் அவ்வளவுதான்.
நாம் இப்படி பார்க்கின்ற போது, 1971, 1989 ம் ஆண்டுகளில் ஆயுதம் ஏந்திய JVPயினர் பயங்கரவாதிகள். LTTEயினரும் பயங்கரவாதிகள். மற்றும் இன்று அமைச்சு பதவி வகிக்கும் டக்லஸ் தேவானந்தவின் EPDP, PLOT, TELO ஆகிய அமைப்புகளும் பயங்கரவாத அமைப்புகளாகத்தான் செயற்பட்டுள்ளன.
ஆனால் இப்போதுள்ள கேள்வி, JVP இன்று தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதன் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் LTTE யிற்கு இன்னும் தடையுள்ளது. அதனால், வடக்கில் யுத்தத்தின் போது உயிரிழந்த போராளிகளாக இருக்கட்டும், பொதுமக்களாக இருக்கட்டும் அவர்களை, LTTEயின் பெயரை பயன்படுத்தி நினைவு கூறுவது சட்ட விரோதமானது என அரசாங்கமாக இருக்கட்டும், அல்லது தெற்கில் யாராவது கூறினால் அதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால் இதனை ஒரு காரணமாக கொண்டு உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதை நிறுத்துவது என்பது அநீதியானது, பிழையானது, மனிதாபிமானமற்றது என நான் நினைக்கிறேன்.
தொகுப்பாளர்:
ஆனால் பிரபல நாடுகளில், அதாவது யுத்தம் நடைபெறுகின்ற நாடுகளில், உதாரணமாக தலிபான் இயக்கங்களை நினைவு கூருவதற்கு இடமளிப்பதில்லையே?
மனோ கணேசன்: (உடனடியாக இடைமறித்து..)
அப்போது எவ்வாறு தெற்கில் JVP நினைவு கூருகின்றது?
தொகுப்பாளர்:
JVPக்கு நினைவு கூர இடமளிக்கப்படுகின்றதா?
மனோ கணேசன்:
நினைவு கூருகின்றனர். ஏன் இல்லை, உங்களுக்கு தெரியாதா?
1971-ல் உயிரிழந்தவர்களை ஏப்ரல் மாதத்தில் “விரூ தின” என்றும், அதே போல 1989-ல் உயிரிழந்தவர்களை நவம்பர் மாதத்தில் “இல் தின” எனவும், JVPயினர் நினைவு கூருகின்றனர்.
தொகுப்பாளர்:
ஆம். ஆம். JVPயினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர்தாம்.
மனோ கணேசன்:
இவர்கள் பிரசித்தமாக நாட்டில், கொழும்பு தலைநகரில், மேடை அமைத்து, போஸ்டர்களை ஓட்டி, பாதயாத்திரைகளை நடத்தி, ரோஹன விஜயவீர மற்றும் உபதிஸ்ச கமநாயக்க ஆகியோரை நினைவுக்கூறுகின்றனர்
தொகுப்பாளர்:
அப்போது நீங்கள் அந்த அந்தஸ்துக்கு LTTE தலைவர் பிரபாகரனையும் வைக்கின்றீர்களா?
மனோ கனேசன்:
நான் JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுகொள்பவனல்ல. நான் இந்நாட்டின் பிரச்சினைகளை ஒருபோதும் ஆயுதம் ஏந்தி தீர்க்க முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவன் அல்ல.
பேச்சுவார்தை. பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை, கலந்துரையாடல், கலந்துரையாடல், கலந்துரையாடல். வேறு வழிமுறைகள் இல்லை.
அப்போது நான் எப்படி JVPயின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? நான் எப்படி வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுத கொள்கையினை ஏற்றுக்கொள்வது? முடியாதுதானே! ஆயுத போராட்டம் வேண்டாம்! சண்டையிட வேண்டாம்! அடித்து கொள்ள வேண்டாம்! சாகடிக்க வேண்டாம்!
அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றாலும், உயிரிழந்தவர்களை நினைவு கூர வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
அது எங்களுக்கு இல்லை. ஆனால், அது JVPக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றே ஒன்று, JVPயின் தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிலர், ஜேவிபியினர் பயங்கரவாதிகள் அல்ல, அவர்கள் கலகக்காரர்கள், ஆனால், LTTE பயங்ரவாதிகள் என்று கூற முயல்கின்றனர்.
அதை நான் ஏற்க மாட்டேன். இதை தாங்கள் தேவைகளுக்காக சொல்லுகின்றனர். அதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன். அதில் பாரபட்சம் உள்ளது.
தொகுப்பாளர்:
அப்படியென்றால் இரு சாராரினதும் நோக்குகள் ஒன்றா?
மனோ கணேசன்:
ஒன்றாகும்! ஒன்றாகும்!
ஆயுத போராட்டம் என்பது, ஆட்சியதிகாரத்தை பெற்றுக்கொள்வேண்டி ஆகும். புலிகளின் நோக்கம் வடகிழக்கில் வேறொறு நாட்டை உருவாக்குவது என்று சொல்கிறார்கள்.
1971, 1989களில் தெற்கில் சில பிரதேசங்களை JVP பிடித்து தம்வசம் வைத்திருந்தனர். உங்களுக்கு தெரியுமாயிருக்க வேண்டும். அப்பிரதேசங்களை அவர்கள் ஆட்சி செய்தார்கள். அந்த கிராமங்களில் அவர்களது நீதிமன்றங்களை நடத்தினர். தெரியும்தானே!
LTTE மற்றும் தமிழ் அமைப்புகள், வடக்கையும் கிழக்கை மட்டும் ஆக்கிரமிக்க முயன்றனர். ஜேவிபினர் முழு நாட்டையும் பிடிக்க முற்பட்டனர்.
LTTE மற்றும் ஆயுதம் ஏந்திய ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் இடையிலும், JVPக்கு இடையிலும் கொள்கை வித்தியாசங்கள் உள்ளன. அதை நான் இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால், அதை காரணமாக கொண்டு, தமிழ் அமைப்புகள் பயங்கரவாதிகள். JVPயினர் கெளதம புத்தர்கள் என்று சொல்ல முயல்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்.
எல்லோருமே ஆயுதங்களை ஏந்திதான் போராட்டங்களை செய்தனர். அதிலிருந்துதான் என் கொள்கை நிலைப்பாட்டை நான் ஆரம்பிக்கிறேன்.
ஆயுத அமைப்புகளின் போக்கினை நான் ஏற்றுகொள்வதும் இல்லை, அதை சரியென நான் சொல்வதும் இல்லை. அங்கீகரிப்பதும் இல்லை.
ஆனால் அவர்கள் உயிரிழந்தனர்.
அதனால் அவர்களின் தாய், தந்தை, மனைவிமார்களுக்கு. பிள்ளைகளுக்கு தமது பிள்ளைகளை, கணவர்மார்களை, பெரியோரை, உறவினர்களை, நினைவுகூர இடமளிக்கப்பட வேண்டும். இது இவ்வுலகில் யாருக்கும் இருக்க வேண்டிய உரிமை.
அதனால் LTTE ஒரு தடை செய்யப்பட இயக்கம் என்பதால்…, அந்த தடை என்றாவது ஒருநாள் நீக்கப்பட முடியும், அதுவரை அந்த அமைப்பின் பெயர் குறிப்பிடாமல், அவர்களது கொள்கைகளை பற்றி பேசாமல், இறந்தோரை நினைவுக்கூர அவர்களுக்கு இடமளிக்கபட வேண்டும்.
தொகுப்பாளர்:
ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லையே. அவர்கள் படங்களை பிரசுரிக்கின்றனர்?
மனோ கணேசன்:
அதை நீங்கள் தெரிவிக்க வேண்டும். தற்போது அரசாங்கம் மற்றும் தெற்கில் இருக்கும் அடிப்படைவாதிகள் சம்பூரணமாக நினைவுகூரவே கூடாது என்று கூறுகிறார்கள்.
இங்கே LTTE போராளிகள் மட்டுமல்ல, சதாரண மக்களும் யுத்தத்தின் இறுதி காலகட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அப்படியானால், அவர்களை எவ்வாறு நினைவு கூறுவது? அதற்கு இடமளிக்க வேண்டும் அல்லவா?
ஜேவிபியினருக்கு நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளதே. இங்கே கொழும்பில், எம் தலைநகரத்தில் பாருங்கள். இம்மாதம் பாருங்கள். அவர்கள் நினைவு கூருவார்கள்.
இதற்கு ஒரு கலந்துரையாடல் அவசியம். என்னுடைய டுவீட்டர் செய்தி மூலம் இதுபற்றிய ஒரு தேசிய கலந்துரையாடலையே நான் எதிர்பார்க்கின்றேன். ஒரு தேசிய விவாதத்தையே எதிர்பார்க்கின்றேன்.
சிலர் என்னிடம் வந்து, LTTE வேறு, JVP வேறு என்று சொல்லுகின்றனர் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதை பற்றி நான் கதைக்க போவதில்லை. அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா? “லெஜிடிமேட் கவர்ன்மன்ட் ஒப் ஸ்ரீலங்கா”, சட்டபூர்வமான இலங்கை அரசாங்கம், என்பதற்கு எதிராக அவர்கள் ஆயுத போராட்டம் செய்தார்களா? இல்லையா?
இப்போது இந்நாட்டில் ஆயுதம் வைத்திருக்க யாருக்கு உரிமை உள்ளது? காவல்துறைக்கும், இராணுவத்திற்கும்தான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது.
எனக்கும் மந்திரி என்பதால் அனுமதி பெற்ற பிஸ்டல் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் எனக்கு அந்த அவசியம் இல்லை. ஆகவே என்னிடம் துப்பாக்கி இப்போது இல்லை. மற்றவர்களுக்கும் அதை வைத்திருக்க முடியும் ஆனால் அதற்கு அரசாங்கத்தின் அனுமதி தேவை.
தவிர, அமைப்புரீதியாக யாருக்கும் ஆயுத போராட்டம் நடத்த முடியுமா? ஆயுதங்கள் சேகரிக்க முடியுமா? அதைதான், அதை மட்டும்தான் நான் பார்க்கின்றேன் இவர்களின் கொள்கைகளை நான் பார்க்கவில்லை. யுத்தத்தினை இருசாராரும்தானே செய்தார்கள்? நாம் இவர்களுக்கு இடமளிக்கின்றோம். அவர்களுக்கு இடமில்லை. அப்படியானால், தமிழ் மக்களின் மனம் புண்படுமல்லவா?
இப்போது பாருங்கள். தெற்கிலுள்ள தாய், தந்தையர்களுக்கு மற்றும் மக்களுக்கு தங்களுடைய உயிரிழந்த புத்திரர்களை நினைவுகூர உரிமை உண்டு. இந்த புத்திரர்களில் பெரும்பாலோர் JVP போராளிகள். தேசபிரேமி போராளிகள். அவர்கள் இந்நாட்டில் என்ன செய்தார்கள்?
ஸ்ரீலங்கா இராணுவத்தினரை கொன்றார்கள். ஸ்ரீலங்கா பொலிஸ்காரர்களை கொன்றார்கள். அரசியல்வாதிகளை கொன்றார்கள். ஊடகவியலாளர்களை கொன்றார்கள்.
நடந்ததுதானே? இல்லை என சொல்ல முடியுமா? 1971,1989ம் ஆண்டுகளில் நடந்ததா? இல்லையா? சொல்லுங்கள். இல்லையென கூற முடியுமா? இப்போது அந்த வழியை கைவிட்டு, மனம் மாறி, பாராளுமன்றத்திற்கு வந்திருக்கின்றார்கள். நல்லது மற்றும் அழகானது.
தொகுப்பாளர்:
கருணா அம்மானும் வந்திருக்கின்றார்.
மனோ கணேசன்:
EPDPயினர் வந்திருக்கின்றனர். PLOT தலைவர் சித்தார்த்தன் வந்திருக்கின்றார். TELO அமைப்பின், தலைவர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை பாராளுமன்றத்தில், குழுக்களின் பிரதி தலைவராக இருந்திருக்கின்றார். இன்னமும் புதிதாக பலர் பாராளுமன்றம் வந்திருக்கின்றார்கள். இவர்கள் PLOT, EPDP, TELO, EPRLF அமைப்புகளில் இருந்தவர்கள். அவர்களும் ஆயுத போராட்டம் மேற்கொண்டவர்கள். அதேபோல LTTEகாரர்களும் வரலாம். ஏன், கருணா வந்து போனார். இப்போது பிள்ளையான் வந்திருக்கின்றார்.
தொகுப்பாளர்:
உங்கள் வாதம் தர்க்கரீதியாக சரி. ஆனால், நாங்கள் இரண்டையும் நிறுத்து பார்தோமானால், LTTEயின் ஆயுத போராட்டத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அதிகம். அதனால் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்கும், நாட்டிற்கும் ஏற்பட்ட சேதம் அதிகம் அல்லவா? அதை நீங்கள் ஏற்றுகொள்ளுகின்றீரகளா?
மனோ கணேசன்:
இல்லையில்லை. யுத்தம் நடக்கும் போது… JVPயின் காலத்தில் தொழிநுட்பங்கள் அதிகம் இருக்கவில்லை. அவர்கள் சாதாரண காட்டுத்துப்பாக்கிகளை பாவித்தனர். பின்னர் 1989ல் அவர்களும் முன்னேறி இயந்திர துப்பாக்கிகளையும் பாவித்தனர். இப்போது அல்லது எதிர்காலத்தில் இன்னொரு யுத்தம் வந்தால் அவர்கள் இன்னமும் முன்னேறுவார்கள்.
ஆயுத போராட்டம் நடந்தால், யுத்தம் நடந்தால் சேதம் ஏற்படத்தானே செய்யும். நான் அதை ஏற்றுக்கொள்பவன் அல்லவே. எனக்கு அது வேண்டாமே! நான் கதைப்பது அதையல்லவே.
அங்கு சேதம் அதிகம். ஆகவே அவர்களுக்கு இடமளிக்க முடியாது. இங்கு சேதம் குறைவு. அதனால் இங்கே இடமளிப்போம். இந்த தர்க்கம் பிழையானது. இது ஒரு பாரபட்சமான தர்க்கம். அப்படி செய்ய முடியாது. ஏன் தெற்கிற்கு மட்டும் ஒரு நீதி?
இப்போ பாருங்கள். இந்த அரசாங்க காலத்தில்தான் அதிகம் சொல்லப்படுகின்றது. “ஒரே நாடு: ஒரே சட்டம்” எனப்படுகிறது.
ஒரே நாடு, என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். எனக்கு யாரும் அதுபற்றி வகுப்பு எடுக்க தேவையில்லை. நான் சொல்கிறேன். இது ஒரே நாடுதான். அதற்குள் வேறொறு நாட்டை உருவாக்க முடியாது.
இது ஒரு நாடாகவும் இருக்க வேண்டும். அரசியல் இலக்குகளை அடைய ஆயுத வழியற்ற பயணத்தையும் மேற்கொள்ள வேண்டும். இவை என் பிரதான இரண்டு நோக்கங்கள். ஒன்று, இது ஒரே நாடு. இரண்டாவது, அரசியல் நோக்குகளை அடைய ஜனநாயகமற்ற பாதையில் செல்லாமல் இருப்பது. இது இரண்டும் எனது அடிப்படை. அதற்குள்ளேதான், நான் எல்லாவற்றையும் அளந்து, நிறுத்து பார்க்கின்றேன்.
அதற்குள் எல்லாமே வருகிறதுதானே? “ஒரே நாடு, ஒரே சட்டம்“ என்று இந்த அரசாங்கம்தானே சொல்கின்றது? ஒரே சட்டத்தை கொண்டுவர முடியுமோ என எனக்கு தெரியவில்லை. அதற்கு வெவ்வேறு பிரச்சனைகள் உள்ளன.
கண்டியில் “மலைநாட்டு சிங்கள சட்டம்” உள்ளது. வடக்கில் “தேசவழமை சட்டம்” இருக்கின்றது. “முஸ்லிம் சட்டம்” இருக்கின்றது. இவற்றையெல்லாம் கலந்துரையாடி ஓரிடத்திற்கு கொண்டு வரவேண்டும். அப்படியென்றால் நல்லது. அப்படி ஒரே சட்டம் கொண்டு வரும் போது, அது எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்க வேண்டும்.
நான் சொல்வது அதனையல்ல. இப்படி சொல்லும் அரசாங்கம், இப்போது பாருங்கள், வடக்கிற்கும், கிழக்கிற்கும் வேறு சட்டத்தை அமுல் செய்வது போல் தெரிகிறதே. அங்கே நினைவுக்கூர முடியாது. தெற்கில் நினைவுக்கூர முடியும்.
அப்போது அது வேறொரு நாடா? வேறு நாடு இல்லை என நாங்கள் சொல்லுகின்றோம். ஆனால் இதன் முலமாக வெவ்வேறு நாடுகள் என அரசாங்கம் சொல்லுகின்றது.
நாங்கள் இதை மனிதாபிமான கோணத்தில், மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க வேண்டும். அவர்களுக்கு நினைவுகூர இடமளிப்பது, அவர்களுடைய கொள்கைகளை அப்படியே ஏற்கின்றோம் என்பதல்ல.
சரி…, எனக்கு சொல்லுங்களேன். LTTE இப்போது எங்கு இருக்கின்றது?
2009 மே மாதம் 19 தினம் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என உத்தியோகபூர்வமாக அக்காலத்தில் ஜனாதிபதி இப்போது பிரதமராக இருக்கின்றவர் பாராளுமன்றம் வந்து அறிவித்தார். அந்நேரத்தில் LTTE முற்றாக அழிக்கப்பட்டது எனவும், யுத்தத்தில் வெற்றி பெற்றோம் எனவும் தெரிவித்தார்கள்.
இப்போது சில இடங்களில், சில நேரங்களில், LTTE கொடிகளை ஏந்தி, சிலர் வெளிநாடுகளில் போராட்டங்களை மேற்கொள்ளுகின்றனர். அவற்றை வைத்துக்கொண்டு, அதை ஒரு பயங்கர பூதமாக காட்டி, காலம்பூராவும் சாதாரண தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைக்க முடியாது. இப்போது LTTE இல்லை.
மற்றபடி, வட-கிழக்கு மக்களின் இன்றைய மனப்பான்மையை நான் நன்கறிவேன். அவர்கள் இன்னுமொரு பயங்கர யுத்தத்திற்கு தயார் இல்லை. இப்பொழுது யாராவது ஆயுத போராட்டத்தை பற்றி பேசினால், பொலிஸ், ராணுவத்துக்கு முன், வட-கிழக்கு தமிழ் மக்கள் அதை எதிர்ப்பார்கள்.
ஆகவே இந்த பின்னணியில்தான் இவற்றை நாம் பார்க்க வேண்டு
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவிப்பு.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கான அறிவிப்பு.
சிகிச்சைப் புத்தகத்தைப் பொலிஸ் சாவடியில் வழங்கி வீடுகளுக்கே மருந்து வகைகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மாவட்டங்களில் தற்போது
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மாநகர எல்லை பகுதிக்குள் வட கொழும்பு மற்றும் மத்திய கொழும்பு பிரதேசங்களில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட சில
பிரதேசங்கள் உண்டு. இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில், அதி உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட ஏனைய நோய்களுக்காக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளும் நோயாளிகள் இருப்பார்களாயின் அவர்கள் கொழும்பு மாநகர
எல்லைக்குள் அருகாமையில் உள்ள சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக தம்மை பதிவு செய்ய வேண்டும். இல்லையாயின் தமது கிளினிக் புத்தகத்தை அருகாமையில் உள்ள பொலிஸ்
சாவடியில் வழங்கினால் உங்களுக்கு தேவையான மருந்துகளை உங்கள் வீடுகளுக்கே கிடைக்கக் கூடிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் பல வைத்திய குழுக்களை ஈடுபடுத்தி நடமாடும் சிகிச்சை நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நடமாடும் சிகிச்சை குழுக்களிடம் சிகிச்சை
ஆவணத்தை வழங்கினால் சம்பந்தப்பட்ட வைத்தியசாலையிலிருந்து தேவையான மருந்து வகைகளை வீடுகளுக்கே கொண்டு வந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம். யாராவது அல்லது நோயாளிகளுக்கு
சிகிச்சைக்கு சமூகமளிக்க முடியவில்லையாயின் இந்த நடவடிக்கையை பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
நேற்றைய தினம் 335 கோவிட் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுள் 167 பேர் கொழும்பு பிரதேச எல்லைக்கு உட்பட்டவர்கள். ஆகக்கூடுதலான நோயாளர்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள அடுளுகம கிராம உத்தியோகத்தர் பிரிவிலேயே பதிவாகியுள்ளனர். அங்குள்ள ஏனைய
நோயாளர்களை இனங்காண்பதற்காக இன்றைய தினம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்
8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (25) 8 ஆவது நாளாக ஆஜராகியுள்ளார்.
அவர் இன்று முற்பகல் 10.00 மணியளவில் ஆணைக்குழுவில் ஆஜரானதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்
தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினமும் (24) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்
இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை
இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை
ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை உண்டு.
.இரண்டு மாணவர்களைக்கொண்ட பாடசாலையும் உண்டு. 5 மாணர்களைக்கொண்ட பாடசாலையும் இந்த பாசாலைகள் அனைத்திற்கும் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.இவ்வாறான
அனைத்து பாடசாலைகளில் விசேட வசதிகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளுக்கு போதுமான நிதி
வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் செயவாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளுக்கு 480 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மாறுபட்ட உலகில் மாறுபட்ட வகையில் இன்று செயல்படவேண்டியிருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலைகளை
ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம் ஏற்பாடுகள் இங்கு குறிப்பிட்ட அவர் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் ஒன்றிணைந்து பாடசாலைகளுக்கான 15 2020 என்ற சுற்றறிக்கை
அன்று தயாரிக்கப்பட்டது.இது தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றை தடுத்தல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை தயார்படுத்துவதற்கான
இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக இதன் உத்தியோகபூர்வ குழு 15 – 2020யின் படி மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கான சுகாதார
குழுவை நடைமுறையில் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ளடக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கை 2020.05.11ஆம்திகதி அதாவது முதலாவது கொவிட் 19 அலை ஆரம்பமானபோது விடுக்கப்ட்டதாகும்.
இதில் 19 பக்கத்தில் பாடசாலைகள் எவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக தயார் செய்யப்ட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்போது கல்வி அமைச்சில் இருந்து
இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நாம் கண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடசாலைகளை கேந்திரமாகக்கொண்டு அதாவது மாணவர்களை – மாணவர்கள் என்பவர்களை நாம் நாட்டின் இரத்தினங்களாகவே கருதி தீர்மானத்தை மேற்கொண்டோம்.
அவர்களது உரிமை என்பது அவர்களுக்கான கல்வியாகும். இதேபோன்று இரத்தினமான மதிக்கப்படும் மாணவர்களை
பாதுகாப்பவர்கள் பெற்றோர். இதனால் தான் கல்வி அமைச்சர் இந்த பாடசாலைகள் தொடர்பில் சுதந்திரமான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்.
இதற்கு பொறுத்தமானவர்கள் பெற்றோர் பழைய மாணவர்சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், அதிபர் ,ஆசிரியர், கிராம
உத்தியோகத்தர் பாடசாலையை கேந்திரமாகக்கொண்ட சுகாதார அதிகாரி போக்குவரத்து பிரிவினர் ஆகியோரை உதவுமாறு கூறினோம்.
இதற்கமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதில்லையென நேற்று தீர்மானங்களை மேற்கொண்டனர். இந்த நடைமுறையின் கீழ் இதற்கு கிடைத்த
பயன். இதேபோன்று தமது பிள்ளைகளின் கல்விக்காக காத்திருந்த பெற்றோர் தமது பிள்ளைகளை ஆர்வமாக நேற்றைய தினம்
காடசாலைகளுக்கு அனுப்ப முடிந்தமை அந்த பெற்றோருக்கு கிடைத்த பலன்களாகும்.
குறைகாடுகள் தொடர்பில் காத்திரமான விமர்சனங்களை வரவேற்கிறோம்.அவற்கு தீர்வை வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
ஓகஸ்ட் மாதத்திலிருந்து சில பாடசாலைகளுக்கு தலா 110,000 வரை வழங்கியுள்ளோம். ஒரு சில பாடசாலைகள் சுகாதார அதிகாரி ஒப்புதல் அளிக்கும் வரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது.
தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது கடுமையான நெறிமுறைகள்
பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்






