8 ஆவது நாளாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (25) 8 ஆவது நாளாக ஆஜராகியுள்ளார்.
அவர் இன்று முற்பகல் 10.00 மணியளவில் ஆணைக்குழுவில் ஆஜரானதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத்
தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினமும் (24) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்