இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை

Spread the love

இலங்கையில் ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை

ஒரு மாணவன் மாத்திரம் கல்வி கற்கும் பாடசாலை உண்டு.

.இரண்டு மாணவர்களைக்கொண்ட பாடசாலையும் உண்டு. 5 மாணர்களைக்கொண்ட பாடசாலையும் இந்த பாசாலைகள் அனைத்திற்கும் ஆசிரியர்கள் இருக்கின்றனர்.இவ்வாறான

அனைத்து பாடசாலைகளில் விசேட வசதிகளை மேற்கொள்வதற்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பாடசாலைகளுக்கு போதுமான நிதி

வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் செயவாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்து 165 பாடசாலைகளுக்கு 480 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மாறுபட்ட உலகில் மாறுபட்ட வகையில் இன்று செயல்படவேண்டியிருப்பதாக தெரிவித்த கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, பாடசாலைகளை

ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆரம் ஏற்பாடுகள் இங்கு குறிப்பிட்ட அவர் கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் ஒன்றிணைந்து பாடசாலைகளுக்கான 15 2020 என்ற சுற்றறிக்கை

அன்று தயாரிக்கப்பட்டது.இது தற்போது சட்டமாக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்றை தடுத்தல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை தயார்படுத்துவதற்கான

இந்த சுற்றறிக்கைக்கு அமைவாக இதன் உத்தியோகபூர்வ குழு 15 – 2020யின் படி மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கான சுகாதார

குழுவை நடைமுறையில் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ளடக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கை 2020.05.11ஆம்திகதி அதாவது முதலாவது கொவிட் 19 அலை ஆரம்பமானபோது விடுக்கப்ட்டதாகும்.

இதில் 19 பக்கத்தில் பாடசாலைகள் எவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்காக தயார் செய்யப்ட வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்போது கல்வி அமைச்சில் இருந்து

இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. நாம் கண்ட அனுபவங்களின் அடிப்படையில் பாடசாலைகளை கேந்திரமாகக்கொண்டு அதாவது மாணவர்களை – மாணவர்கள் என்பவர்களை நாம் நாட்டின் இரத்தினங்களாகவே கருதி தீர்மானத்தை மேற்கொண்டோம்.

அவர்களது உரிமை என்பது அவர்களுக்கான கல்வியாகும். இதேபோன்று இரத்தினமான மதிக்கப்படும் மாணவர்களை

பாதுகாப்பவர்கள் பெற்றோர். இதனால் தான் கல்வி அமைச்சர் இந்த பாடசாலைகள் தொடர்பில் சுதந்திரமான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான உரிமையை வழங்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு பொறுத்தமானவர்கள் பெற்றோர் பழைய மாணவர்சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், அதிபர் ,ஆசிரியர், கிராம

உத்தியோகத்தர் பாடசாலையை கேந்திரமாகக்கொண்ட சுகாதார அதிகாரி போக்குவரத்து பிரிவினர் ஆகியோரை உதவுமாறு கூறினோம்.

இதற்கமைவாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதில்லையென நேற்று தீர்மானங்களை மேற்கொண்டனர். இந்த நடைமுறையின் கீழ் இதற்கு கிடைத்த

பயன். இதேபோன்று தமது பிள்ளைகளின் கல்விக்காக காத்திருந்த பெற்றோர் தமது பிள்ளைகளை ஆர்வமாக நேற்றைய தினம்

காடசாலைகளுக்கு அனுப்ப முடிந்தமை அந்த பெற்றோருக்கு கிடைத்த பலன்களாகும்.

குறைகாடுகள் தொடர்பில் காத்திரமான விமர்சனங்களை வரவேற்கிறோம்.அவற்கு தீர்வை வழங்கவும் நாம் தயாராகவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதத்திலிருந்து சில பாடசாலைகளுக்கு தலா 110,000 வரை வழங்கியுள்ளோம். ஒரு சில பாடசாலைகள் சுகாதார அதிகாரி ஒப்புதல் அளிக்கும் வரை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது.

தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும்போது கடுமையான நெறிமுறைகள்

பின்பற்றப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *