Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்
கொலண்டில் இளம் தமிழ் பெண் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சியில் உறவுகள்
கொலண்ட் நாட்டில் ,பிறேடா பகுதியில் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த இளம் தமிழ் பெண் ஒருவர் வீட்டில் தூக்கு மாட்டி நேற்று தற்கொலை செய்துள்ளார்
32 வயது மதிக்க தக்க ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தற்கொலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
மேற்படி தற்கொலை தொடர்பாக விசேட குற்ற தடுப்பு போலீசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்
அழகிய ,மிகுந்த ஆற்றல் நிறைந்த இவர் ,தனி திறன் வாயிலாக உயர் தர பணியில் இடம்பெற்று சிறப்பான பொருளாதார
கட்டமைப்புடன் வசித்து வந்தவேளை இந்த எதிர்பாராத விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த இளம் பெண்ணின் தற்கொலை அந்த பகுதி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,
நல்ல நட்புக்கள் கிடைந்திருந்தால் இவ்வாறான பெண்கள் ,இவ்விதமான
முடிவுகளை எடுக்க தடுத்திருக்க கூடும் ,ஆறாத மன உளைச்சல் ,அதனால்
ஏற்பட்ட விரக்தி நிலையில் இவர் இந்த முடிவுக்கு சென்றுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது
இவரது இந்த தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது
தொடர்பாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வர கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வாறான தற்கொலை சமப்வங்கள் புலம் பெயர் நாடுகளில் சமீப காலமாக தமிழர்கள் மத்தியில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஏறி ஆடும் கொரனோ – முடக்க பட்ட முக்கிய பகுதிகள்
ஏறி ஆடும் கொரனோ – முடக்க பட்ட முக்கிய பகுதிகள்
இலங்கையில் கொன்றானோ நோயின் அதிகமாக பரவி வருகிறது ,இதனால்
மேலும் இந்த நோய் பரவலை தடுக்க அரசு புதிய முடக்க நிலைகளை
அறிவித்து வருகிறது அவ்விதம் இன்று தற்போது பாதிக்க பட பகுதிகள்
என அடையாளம் காணப்பட்ட கண்டி மற்றும் இரத்தினபுரி பகுதியில் சில பிரேதேசங்கள் முடக்க பட்டுள்ளன
இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ
இலங்கையில் முக கவசம் அணிய மறுத்து உலவியவர்களுக்கு கொரனோ
இலங்கையில் மேல மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயில் இருந்து
மக்களை காப்பாற்ற பல்வேறு பட்ட வழிமுறைகள் செய்ய பட்டுள்ள
பொழுதும் ,அரசு கூறும் விதிகளை மீறி மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றி வருகின்றன
இவ்விதம் வெளியில் நடமாடிய இரண்டு டசினுக்கு மேற்பட்டவர்கள் நோயின்
தாக்குதல் அறிகுறியுடன் இனம் காணப்பட்டு தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேலும் ,இவ்வாறு திரிபவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு வருகிறது
இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு
இலங்கையில் கரும்புலி – சடலமாக மீட்பு
இலங்கை மாத்தளை பகுதியில் நீர் தொட்டி அருகாமையில் கரும்புலி
ஒன்று நஞ்சு வைத்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளது
மேற்படி கொலையை புரிந்தவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
கரும்புலிகள் சிங்களத்தை வெடி வைத்து அழித்து வந்த நிலையில்
,இங்கே இந்த கரும்புலி நஞ்சு வைத்து கொலை செய்ய பட்டுள்ளது
புலி பீதியி கிளப்பிட மாபியா கும்பல்கள் இவ்வேளையில் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்க படுகிறது
பிக்கு கடத்தி கொலை – நடந்தது என்ன …?
பிக்கு கடத்தி கொலை – நடந்தது என்ன …?
கொட்டதெனியாவ நாவான மையானத்தில் நேற்று(04) கண்டெடுக்கப்பட்ட சடலம் இரண்டு நாட்களுக்கு முன்ன
ர் கடத்தப்பட்ட தேரர் ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
65 வயதுடைய உடுவில தம்மசிறி தேரர், தனிப்பட்ட விரோதம் காரணமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மரண
விசாரணைகளை இன்று முன்னெடுக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அவிசாவளை நீதிமன்றில் இன்று(05) முன்னிலைப்படுத்தி 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கும்
உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல மற்றும் கொட்டதெனியாவ பொலிஸாருடன் மிரிஹான தெற்கு குற்றவிசாரணை
அதிகாரிகளும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழின் ஒருபகுதி முடங்கும் அபாயம்
யாழின் ஒருபகுதி முடங்கும் அபாயம்
வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, வடமராட்சி கொத்தணிக்கான
அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
கொவிட் சூழ்நிலை காரணமாக முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போது முகக்கவசம்
அணியாமல் இருப்பது என்பது பொதுமக்களிடேயே மிகவும் சாதாரண நிலைமையாக மாறி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில், தற்போதைய கொவிட் நிலைமையை கட்டுப்படுத்த இது
ஒருபோதும் பொருத்தமானதல்ல என்றும் இன்று முதல் முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட
சட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதுவரையில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான ஆண்டிஜன் பரிசோதனைகள் இதற்குப் பின்னர் ஏனைய
மாகாணங்களிலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,000 க்கும்
அதிகமாகவுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 467 நபர்கள்; இவ்வாறு பதிவாகியுள்ளனர். இதன்படி இதுவரையிலும்
இலங்கையில் பதிவான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45,242 ஆகும்.
ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :
ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :
ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில்
தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வரும் ஞாயிறன்று இணையவழி
கருத்தாடல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட
காலநீடிப்பு, எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா ஐ.நா அமர்வுடன் நிறைவடைகின்றது.
இந்நிலையில் இத்தீர்மானத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச சமூகம் தனது
நலன்களின் அடிப்படையில் தம்மை தயார்படுத்தி வரும் நிலையில், தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் வரும் ஞாயிறு ஜனவரி 4ம் நாள், ஐரோப்பிய நேரம், 20h00 நியு யோர்க் நேரம் 2:00 pm இணையவழியூடாக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள இக்கருத்தாடலில் ZOOM செயலிமூலமாக பங்கெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தமிழார்களின் ஒற்றுமையின் அடையாளம் கிழிஞ்சு தொங்குது.
கனடிய தமிழார்களின் ஒற்றுமையின் அடையாளம் கிழிஞ்சு தொங்குது.
இதில் எந்த மந்திங்கள் சுவரொட்டி உத்தியோகபுர்வமானது (The Official poster of Tamil Heritage Month 2021).
கனடாவில் தமிழர் மரபுரிமை மாதம் இரண்டு குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலையின் நிலை.
ஒன்று விக்கிரமதாத்தனின் கதையில் வரும் வேதாளம் போல் தனது 15 ஆவது
தேர்தலுக்கும் மற்றையது தனது இருப்பை காட்டுவதுக்கும் தமிழர் மரபுரிமை மாதத்தை
பிச்சு பிடுங்குதுகள். படுகொலை செய்யப்பட தமிழ் மக்களின் பிணத்தில் தமது தனிப்பட்ட அரசியல் செய்யும் நாதாரிகள்.
இவர்களை காக்கைகள் மன்று கண்டறிந்து தகுந்த தணடனை வழங்க வேண்டும் என்பதே தேசிய நாளான சார்தவர்களின் ஏக்கமாகவும் .
என்று திருந்தும் இந்த வியாபார குழுக்கள் ..?


இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்- விடுவிக்க படுவார்களா மீனவர்கள் ..?
இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்- விடுவிக்க படுவார்களா மீனவர்கள் ..?
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். .
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இங்கு வருகை தருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்இ தனது
விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சரோடும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளிலும் நிலவும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு
மத்தியில் இந்த விஜயம்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இவ்வேளை சிங்கள இராணுவத்தால் பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேச படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
முரசுமோட்டையில் கருணாவை வெட்ட சென்ற நபர் – தப்பிய கருணா
முரசுமோட்டையில் கருணாவை வெட்ட சென்ற நபர் – தப்பிய கருணா
கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி
முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணா அம்மானை, நேற்றைய தினம் சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற
பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயலிற்கு பசைளை இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள்
ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில்
கருணடி அம்மானை சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக
நபர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்
கொழும்பு, கம்பஹா – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
கொழும்பு, கம்பஹா – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு
இன்று கொழும்பு, கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.00 மணிக்கு கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்களில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவு, வாழைத்தோட்டத்தில் புதுக்கடை மேற்கு கிராம உத்தியோத்தர் பிரிவு, புதுக்கடை கிழக்கு கிராம உத்தியோத்தர் பிரிவு, பொரளையில் வனாத்தமுல்ல கிராம உத்தியோத்தர் பிரிவு, மிரிஹானையில் தெமலவத்த ஆகியவை அடங்கும்.
கம்பஹா மாவட்டத்தின் பேலியகொட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேலியகொட கிராம உத்தியோத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோத்தர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம உத்தியோத்தர் பிரிவின் ரோஹன விஹார மாவத்தை, பேலியகொட கங்கபட கிராம உத்தியோத்தர் பிரிவில் நெல்லிய-கஹ-வத்த, பூரண கொட்டுவத்த, கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் விலேகொட-வடக்கு கிராம உத்தியோத்தர் பிரிவு ஆகிய இடங்களும் இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர் புலிகளை காட்டி கொடுத்த சுமந்திரன்
புலம்பெயர் புலிகளை காட்டி கொடுத்த சுமந்திரன்
ஜெனீவா விவகாரம் தொடர்பில் நான் முன்னர் கையளித்த வரைவு புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அது எனது வரைபு
இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று (03.01) இடம்பெற்ற பின்
ஊடகவியலாளருக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜெனீவா விவகாரங்களை கையாள்வது தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்றது. அதனையடுத்து இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியினருடன்
சேர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலுக்கு பின்னர் இங்குள்ள அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பாதிக்கப்பட்டவர்களின் தரப்புக்கள் எல்லோரும்
இணைந்து ஜெனீவா அமர்வு நடைபெறுகிற போது பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து உள்ளன.
அதை வருகிற சிலநாட்களில் அமர்ந்திருந்து ஒரு வரைபை தயாரித்து அதற்கு பின்னர் அனைத்து தரப்புகளிடத்திலுரும் பேசி ஒரு தீர்மானத்தை எடுக்கலாம் என நினைக்கின்றேன்.
முன்னர் வெளியான ஜெனீவா தொடர்பான வரைபு நான் வரைந்த வரைபு அல்ல. அது புலம்பெயர் அமைப்புக்கள் வரைந்த வரைபு. அவர்கள் எங்களுக்கு அனுப்பினார்கள். மற்றைய இரண்டு
கட்சிகளுக்கும் கொடுக்கும்படி சொன்னார்கள். அவர்கள் நான் வரைந்ததாக நினைத்து நிராகரித்து உள்ளார்கள். அதனை பின்னர் விக்கினேஸ்வரன் ஐயா ஏற்றுக் கொண்டுள்ளதாக மின்னஞ்சல்
ஒன்று பார்த்தேன். அது வேற கதை. நாங்கள் அடுத்த சில நாட்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர்
இணைந்து இங்கு பேசி இணைக்கப்பாட்டுக்கு வந்த விடயங்களை பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு அனைவரும் வரலாமா என ஆராயவுள்ளோம் என்றார்.
இதன்போது மாகாணசபை முறையை அரசாங்கம் நீக்குவது குறித்து பேசுவது தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
அரசாங்கத்திடம் கையளித்த அரசியலமைப்பு தொடர்பான எமது யோசனையில் மாகாணசபை முறை தொடர்பில் தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளோம். மாகாணசபையை முறையை ஒழிக்க
இடம்கொடுக்க முடியாது. அதில் பாரிய பின்விளைவுகள் இருக்கிறது. அரசாங்கம் வேறு வேறு ஜனாதிபதிகளின் கீழ் சர்வதேசம், இந்தியா மற்றும் பல தரப்புகளுக்கு தமது
வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். அதை எல்லாம் மீறி செயற்பட முடியாது. அதை மீறி செயற்படுமாக இருந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் முடிவுகள் எடுப்போம் என்றார்..
22 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு
22 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு
வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம் விமான
நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரதம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான
நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனவரி 22 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக
விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம்
. பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடித்து நாட்டை திறக்க வேண்டும்”. என்றார்
வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு
வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக
பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா, வேலூர்,
கூழாவடி, மாமாங்கம், குமாரபுரம், புன்னைச்சோலை, இருதயபுரம்,
கறுவப்பங்கேணி, பாரதி வீதி, எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பலர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது.
இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்துவரும் தெரிவிக்கின்றன.
போரதீவுப்பற்று, பட்டிப்பளை, வவுணதீவு, ஏறாவூர்ப்பற்று, கிரான் பிரதேச செயலகப்பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.
இலங்கையில் 188 பேருக்கு கொரோனா
இலங்கையில் 188 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு
உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ
தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரனோவில் இருந்து தப்பிட – கொத்து உண்ண தடை
கொரனோவில் இருந்து தப்பிட – கொத்து உண்ண தடை
கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறு வேண்டுமாயின்
கொத்து ரொட்டி உள்ளிட்ட துரித உணவுகளை உண்பதைத் தவிர்க்குமாறு; வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சிலரது உடலில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதென, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்
நுண்ணுயிரியல் பீடத்தின் பேராசிரியர் நீலிகா மலாவிகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் தேகாரோக்கியத்துடனும் சுகாதார ஆரோக்கியமான
உணவுகளையும் விற்றமின் நிறைந்த உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?
கோட்டாவிடம் மனோ அவசர கோரிக்கை – நடக்குமா …?
ஆயுள்தண்டனை கைதி சுமண தேரருக்கு இன்று வழங்கப்பட்ட ஜனாதிபதி
பொது மன்னிப்பு மற்றும் “ஒரே நாடு, ஒரே சட்டம்” கொள்கை ஆகிய பின்னணிகளில்,
தமிழ்கைதிகள் மீதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கரிசனை கொள்ள
வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான மனோ கணேசன் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார்.
பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு
பேரழிவு ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் சுற்றிவளைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட
விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக
மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து ஜெனி டெட்டனேட்டர்கள் 729 குச்சுகளும் அமோனியம் நைத்திரேட் 25 கிலோ நிறையுடைய 24 பைகள், வெடி
பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105 அலுமினியம் குச்சுகள், 31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டன.
இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைதுசெய்வதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவை எதற்காக இங்கு கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது
தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி
திருகோணமலை முடக்கம் – மக்கள் அவதி
திருகோணமலை மத்திய வீதியில் நேற்றைய தினம்(1)கொரோனா
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஒருவருக்கு தோற்று உறுதி
செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் மேலும் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய வீதி
ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.
பொலிசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.






