Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு, கம்பஹா – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

கொழும்பு, கம்பஹா – சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இன்று கொழும்பு, கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை 5.00 மணிக்கு கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படும் பிரதேசங்களில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவு, வாழைத்தோட்டத்தில் புதுக்கடை மேற்கு கிராம உத்தியோத்தர் பிரிவு, புதுக்கடை கிழக்கு கிராம உத்தியோத்தர் பிரிவு, பொரளையில் வனாத்தமுல்ல கிராம உத்தியோத்தர் பிரிவு, மிரிஹானையில் தெமலவத்த ஆகியவை அடங்கும்.

கம்பஹா மாவட்டத்தின் பேலியகொட பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பேலியகொட கிராம உத்தியோத்தர் பிரிவு, மீகஹவத்த கிராம உத்தியோத்தர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம உத்தியோத்தர் பிரிவின் ரோஹன விஹார மாவத்தை, பேலியகொட கங்கபட கிராம உத்தியோத்தர் பிரிவில் நெல்லிய-கஹ-வத்த, பூரண கொட்டுவத்த, கிரிபத்கொட பொலிஸ் பிரிவில் விலேகொட-வடக்கு கிராம உத்தியோத்தர் பிரிவு ஆகிய இடங்களும் இன்று அதிகாலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.