Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது
பொலிஸ் வேட்டை 1,057 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய சுமார் 1,057 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
முகக் கவசம் அணிய மறுத்தமை மற்றும் ,மாகாண எல்லையை கடந்தமை தொடர்பிலான குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது
பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி
பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி
பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை
அடையாளப்படுத்தி ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த அழைப்பினூடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அழைப்பவர்களிடமிருந்து
பணமோசடியொன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனம்
வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனம்
இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக’மாக செயல்பட்ட வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை கல்வி அமைச்சு நேற்று (08) திகதி வெளியிட்டுள்ளது.
‘இலங்கை, யாழ்ப்பாணப் பலகலைக் கழகத்தின் வவுனியா வளாகம் எந்தக் கட்டளையின ; மூலம் ஸ்தாபிக்கப்பட்டதோ மேற்கூறப்பட்ட சட்டத் தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 26 ஆந் திகதிய 968 / 6 ஆம் இலக்க அதிவிசேட வர்த் தமானியில்
வெளியிடப்பட்ட அந்தக் கட்டளையை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆந் திகதியிலிருந்து இத்தால்; இல்லாதொழிக்கின்றேன் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பல்கலைக்கழம் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழில்நுட்பவியல் கற்கை பீடங்களை இந்த பல்கலைக்கழம் கொண்டிருக்கும்.
வியாபார கற்கைகள் பீடத்தில் நிதி மற்றும் கணக்கியல் துறை, ஆங்கில மொழி கற்பித்தல்துறை, கருத்திட்ட முகாமைத்துவ துறை, மனிதவள முகாமைத்துவ துறை, சந்தைப்படுத்தல்
முகாமைத்துவ துறை, வியாபார பொரளியல்துறை, முகாமைத்துவம் மற்றும் தொழில் உரிமையான்மை துறை என்பன செயற்படும்.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் பௌதீக விஞ்ஞானத்துறை மற்றும் உயிரியியல் விஞ்ஞானத்துறை என்பன இயங்கும்;.
தொழில்நுட்பவியல் கற்கை பீடத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்துறை செயற்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி
இலங்கைக்கு சுவிஸ் அரசு 800 மில்லியன் மருத்துவ உதவி
இலங்கையில் பரவிவரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்ற சுவிஸ் நாட்டில்
இருந்து இலங்கைக்கு 800 மில்லியன் பெறுமதியான மருத்துவ பொருட்களை காவியபடி விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது
இதில் million antigen tests, 50 ventilators, 150 oxygen என்பன எடுத்துவர பட்டுள்ளன ,
சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு
சமூக வலைத்தளங்கள் ஊடக பொய் பரப்புரை செய்வோர் கைது செய்யப்படுவர் – மிரட்டும் அரசு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிரான செயல் பாடுகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாக
மேற்கொள்வோர் கைது செய்யப்படுவர் என ஆளும் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது
இவ்வாறான நபர்கள் கைது செய்ய பட்டு தண்டிக்க படுவார்கள் என கெகலியா மிரட்டல் விடுத்துள்ளார்
இலங்கையில் 1.034 பேர் கைது
இலங்கையில் 1.034 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறி செயல் பட்ட சுமார் 1,034 பேர் கைது செய்ய
பட்டுள்ளனர் ,முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றங்களில் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளார்
வேகமாக நோயானது பரவி அதிக மரணங்கள் இடம்பெற்று வரும் நிலையில் ,மக்கள் அதனை அலட்சியம் செய்த்து வீதிகளில் உலாவிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு
ஒரேநாளில் 2,646 பேருக்கு கொரனோ – இதுவரை 207,979 பாதிப்பு
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,646 பேர் கொரனோ தொற்றால் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் இதுவரை சுமார் 207,979 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தனிமை படுத்தல் சட்டங்கள் மற்றும் பயண தடைகள் விதிக்க பட்ட பொழுதும் நோயின் தாக்குதல் வேகமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி
65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசி
நாட்டின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் நாளை ஆரம்பிக்கப்படவிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை 12 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மாகாணம் உட்பட 9 மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்றம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 23 இலட்சம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து ஐம்பத்து மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும்
செலுத்தியுள்ளனர். சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட உள்ள 10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகளில் இருந்து 8 மாவட்டங்களுக்கு 25இ000 தடுப்பூசிகள் வீதம் பகிர்ந்தளிக்கப்படும்.
நுவரெலியா ஹம்பாந்தோட்டை அனுராதபுரம் பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கு தலா 50இ000 தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
10 லட்சம் சைனோ பார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் புதன்கிழமை நாட்டுக்கு வந்து சேர உள்ளன.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டதை எதிர்வரும் புதன்கிழமை பிலியந்தல பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பாயும் பறக்கும் படை – 1,028 பேர் கைது
பாயும் பறக்கும் படை – 1,028 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,028 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
வெளிநாட்டு பயணிகளை காவியபடி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது
வெளிநாட்டு பயணிகளை காவியபடி பயணித்த பேரூந்து விபத்தில் சிக்கியது
வவுனியா ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்து ஒன்று இன்று (08) அதிகாலை விபத்திற்கு உள்ளாகியது.
குறித்த பேரூந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதன்போது ஓமந்தை பனிக்கன் நீராவிப் பகுதியில் வீதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியதில் விபத்திற்கு உள்ளாகியது.
விபத்தின் போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்..
வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் – மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு
வழமையான வைத்திய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் – மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவிப்பு
பைஷல் இஸ்மாயில் –
திருகோணமலை – கப்பல்துறை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் ஒரு பகுதி மாத்திரமே கொவிட் 19 இற்கு ஒருங்கிணைந்த ஆயுர்வேத, அலோபதி சிகிச்சை முறைகளுக்கான சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்கப்பட்டு அது வேறு பிரிவாக இயங்கி வருகின்றது.
வைத்தியசாலையில் வழமையாக இடம்பெற்று வந்த வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் கிசிச்சைகளில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை என்று கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்று நோயாளிகளுக்கான சிகிச்சைகள் வேறு பிரிவாக பிரிக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் யாவும் வேறாக இயங்கி வருகின்றது. கடந்த
காலங்களில் வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வழமையான வைத்திய சேவைகளுக்கும், கொவிட் 19 தொற்று நோயாளிகளின் சிகிச்சைக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லாதவாறே இயங்கி வருகின்றன.
குறிப்பாக, வழமையான வைத்திய சேவைகள் வேறாகவும், கொரோனா தொற்றாளர்களுக்கான சிகிச்சைகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு அவைகள் வெவ்வேறு தனித்தனி பிரிவுகளாக இயங்கி
வருகின்றது. அதனால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சை பெற்றுவந்தவர்கள், சிகிச்சை பெற இருப்பவர்கள் தங்களின் சிகிச்சைகளை அச்சம் கொள்ளாமல் வழமை போன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலைமையை கருத்திற் கொண்டு கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துப் பொதிகளை வழங்கி வைப்பதற்கான ஏற்பாடுகளும்
செய்யப்பட்டுள்ளது. அதற்காக 0773205168 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்களின் கிளினிக் பற்றிய விபரங்களை தெரியப்படுத்தி மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி
இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி
கர்ப்பிணி (Risk )தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி மருந்தேற்றல் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை
முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரசவ விசேட வைத்தியர்கள் நிலையத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
நாடு முழுவதிலும் தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம்
எதிர்வரும் 9ஆம் திகதி காலை பிலியந்தல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்திலும், கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையிலும் இடம்பெறும்
இலங்கையில்; கொரனோ தாக்குதல் – 1,742 பேர் மரணம்
இலங்கையில்; கொரனோ தாக்குதல் – 1,742 பேர் மரணம்
இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை சுமார் 1,742 பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நோயானது வேகமாக பரவி வருவதால் ஆளும் அரசு அதனை கட்டு படுத்த திணறி
வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது
இலங்கையில் காவல்த்துறை முற்றுகை -913 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் கடந்த 24
மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 913 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் முகக்கவசம் அணிய மறுத்தமை ,மற்றும் மாகாண எல்லைகளை மீறிய குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 40 பேர் மரணம்
கொரனோ தாக்குதலில் ஒரே நாளில் 40 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் நற்பது பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை 1,696 ஆக
உயர்வடைந்துள்ளது
ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
ஓட ஓட துப்பாக்கி சூடு – இரவில் நடந்த பயங்கரம்
இலங்கை ரத்கம, கந்தேகொட பகுதியில் கடந்த தினம் இரவு துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இவ்வாரு காயமடையந்தவர் ,மூன்று கொலைகளை புரிந்தார் என்ற குற்ற சட்டு பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது
பறக்கும் படை வேட்டை -995 பேர் கைது
பறக்கும் படை வேட்டை -995 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் சட்டத்தை மீறிய குற்ற சாட்டில் இதுவரை சுமார் 995 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் அனைவரும் முகக் கவசம் இன்றி உலாவியதும் ,மாகாண எல்லைகளை மீறிய
குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
வடக்கில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு- பொம்மை ஆளுநர் கூச்சல்
வடக்கில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு- பொம்மை ஆளுநர் கூச்சல்
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி
கடந்த புதன் கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு
மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை பாராட்டுதலுக்குரியது என வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உதவிய வடமாகாண சுகாதார செயலாளர், வடமாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய
சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உட்பட அனைத்து சுகாதார துறையினருக்கும் வட மாகாண காவல்துறையின் சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் , உதவி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மாவட்ட
அரசாங்க அதிபர்கள், பிரதேசசபை செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் , வடமாகாண இராணுவத் தளபதி , இராணுவ மருத்துவத்துறை மற்றும் இராணுவத்தினர் மற்றும்
வடமாகாண பிரதமசெயலாளர் உட்பட அனைத்து வட மாகாண உத்தியோகத்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டிருப்பினும் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் சுகாதார துறையினரின் வழிகாட்டலுக்கு
அமைவாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி செயற்படவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமம் – மீட்கும் இராணுவம்
வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமம் – மீட்கும் இராணுவம்
இலங்கை வெள்ளத்தில் மிதந்து வருகிறது ,இவ்வேளை பாதிக்க பட்ட மக்களை மீட்கும் பணியில்
சிங்கள இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்
இவ்வேளை வீடுகளுக்குள், வெள்ள நீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணி தொடர்கிறது

கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது
கொரனோ சட்டத்தை மீறிய 975 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக கடந்த அக்டோபர் மாதம் முதல் இதுவரை 22 ஆயிரத்து 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
பயணக்கட்டுப்பாட்டை மீறி மேல் மாகாணத்திற்குள் நுழைய முயன்ற 198 பேருக்கு எதிராகவும்
சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்தார்







