Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.


பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .

இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,

இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

பொதுநலவாய நாடுகள் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களில் முதன்மையாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து கவனம் செலுத்த

வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

பொதுநலவாய நாடுகளின் 24வது உச்சி மாநாடு ஆபிரிக்காவின் றுவண்டாவில் யூன் 24ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. பிரித்தானிய இளவரசர் தலைமையில்

தொடங்கியுள்ள இந்த உச்சி மாநாட்டில் 54 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ள நிலையில், சிறிலங்காவின் அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்ற நிலையில், அதற்கு

முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நா.

தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

6 சிவிலியன்களுக்கு 1 இராணுவம் என தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு, தமிழர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் நா. தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

2022 ஆண்டுக்கான நிதியொதிக்கீட்டில் 12.3 வீதத்தினை தனது இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கியுள்ள சிறிலங்கா, மக்கள் எரிபொருளுக்காகவும், உணவுக்காகவும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலையிலும்,

இராணுவத்துக்கான செலவினங்கள் எந்தவகையிலும் குறைக்கப்படாது என்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாய இராஜபக்சவின் சமீபத்திய கூற்றினையும் நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுநலவாய நாடுகளில் அதிக இராணுவச் செலவினங்கள் கொண்டுள்ள
நாடாக சிறிலங்கா இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

    யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

    யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .

    மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.

    குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .


    கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

      Posted in இலங்கை செய்திகள்

      ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

      ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

      கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

      ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

      குறித்த வர்த்தக நிலையத்தில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

      இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

      ” நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

      இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்

        மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்

        நுவரெலியா ; கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

        நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

        இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவன் உணவு எடுத்துவருமாறு மனைவியிடம் கூறியுள்ள்ளார்

        எனினும் நீண்ட நேரம் உணவு எடுத்து வராது மனைவி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை கண்ட கணவன் முரண்பட்டதையடுத்து மனைவி கணவனை தாக்கியதையடுத்து கணவன் அருகிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.

        இந்நிலையில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளர்.

        தாக்குதலில் 07,09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.

        சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

          சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

          இலங்கையில் சாப்பாட்டு விலைகள் அதிகரிக்க படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .


          தொடர்ந்து இலங்கையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து

          செல்வதால் மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

          மக்கள் வருமானம் இன்றி வாடும் நிலையில் உணவு பொருட்கள் விலை

          மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை


          அதிகரிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            செல்வந்தர் சுட்டு கொலை

            செல்வந்தர் சுட்டு கொலை

            இலங்கை – எம்பிலிப்பிட்டிய மீத்தேனிய பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தனது கடையினை திறக்க சென்ற பொழுது மறைந்திருந்த மர்ம ஆயுத தாரி நபரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

            ஐம்பத்தி இரண்டு வயதான நபரே இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

            இலங்கையில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் இவ்வாறான கொலைகள் தொடர்கிறது .

            இந்த துப்பாக்கி சுட்டு கொலைகளை நிறுத்த அரசு இவ்வாறு எவ்வித நகர்வுகள்
            மேகொள்ளாது இருப்பது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

              எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு


              இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்க பட்டுள்ளது.


              இதன் அடிப்படையில் பெட்ரோல் 50 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 470 ரூபாவாகவும்


              டீசல் ஓரி லீட்டர் 60 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 460 ஆகவும்


              ஓக்கேடான ஒரு லீற்றர் 100 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 550 ரூபாவான் விலை அதிகரிக்க பட்டுள்ளது.

              கோட்டாபய ராஜபக்சவின் இந்த விலை அதிகரிப்பு செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

                இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

                இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து,

                பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.

                மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

                இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க,
                உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் படையினரும் கலந்துகொண்டனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                  அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                  இலங்கை ;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

                  மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு
                  அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

                  இவ்வாறு இலங்கை வந்தடைந்த அமெரிக்கா அக்குழுவினர் பதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ஜனாதிபதி கோட்டபாயவுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் .

                  இதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கு உதவும் திட்டங்களும் முன் வைக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

                    Posted in இலங்கை செய்திகள்

                    கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                    கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                    கொமுகொமுவ : இலங்கை கொமுகொமுவ பகுதியில் கிணறு ஒன்றுக்குள் இருந் சிறுவன் சடலம் மீட்க பட்டுள்ளது .

                    வீட்டில் காணாமல் போன சிறுவனை தேடிய பொழுது கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான் .

                    பதினொரு வயதாகும் இந்த சிறுவன் எவ்வாறு இறந்தான் என்பது தொடர்பில் தெரியவில்லை .

                    கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீதவான்முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலம் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன .

                    இந்த சிறுவன் தவறி வீழ்ந்தானா அல்லது கொலை செய்யப்பட்டானா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர்.

                    சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் தொடராக மீட்க பட்டு வருகின்றமை சுட்டி காட்ட தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                      தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                      திருச்சி ;தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 30 தமிழர்கள் மாத்திரை உட்க்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                      இந்த முகாமில் தடுத்து வைக்க பட்டுள்ள 21 அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

                      இவ்வாறான நிலையில் திருச்சி மத்திய சிறையில் முப்பது பேரும் மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட செயல் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      பாதிக்க பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதுடன் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

                      ஈழ தமிழ் அகதிகள் இந்த கூட்டு தற்கொலை முயற்சி என்பது ஆளும் தமிழக முதல்வருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

                      இந்த உண்ணாவிரதிகள் கோரிக்கை ஏற்க பட்டு இருந்தால் இந்த அபயா முடிவுக்கு அவர்கள் சென்று இருக்க மாட்டார்கள் என்பது மக்கள் கருத்தாக உள்ளது

                      தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                      தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைந்துசெயல் பட்டு இந்த மக்களை விடுதலை செய்வதன் ஊடாகவே அவர் மீது விழுந்துள்ள கலங்கத்தை போக்கிட முடியும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது .

                      ஈழத்தில் இருந்து அகதிகளாக சென்ற ஈழ தமிழ் மக்கள் இந்தியாவில் இவ்வாறு கூட்டு தற்கொலை செய்துகொள்ள ஒருபோதும் முனைந்ததில்லை

                      தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                      தமிழக முகாமில் ஈழ தமிழர் தற்கொலை முயற்சி

                      உளவியல் ரீதியில் ஏற்பட்ட தாக்கம் அதன் எழுந்த மனவிரக்தி நிலையில் இந்த உயிர் மாய்க்கும் நிலைக்கு அவர்கள் சென்றுள்ளனர் .

                      ஒருவன் தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு செல்கிறான் எனின் அவர் மன நிலை எவ்வாறு பாதிக்க பட்டு இருக்கும் என்பதை மக்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் .

                      திருச்சி மத்திய சிறையில் நடந்துள்ள இந்த தற்கொலை முயற்சி தமிழக வரலாற்றில் எழுத பட்ட கறைபடிந்த வரலாறாக மாற்றம் பெற்றுள்ளது .

                      இந்த தற்கொலை முயற்சி பின்னர் எனினும் இவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

                        இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

                        கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 200 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .


                        தற்போது கையிருப்பில் உள்ள மருந்து பாவனை அதிகரிதத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .

                        மேலும் இரண்டு அல்லது மூன்று மதங்களில் 160 ,மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது .

                        இவ்வாறு தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் இலங்கையில் மக்க அதிகம் பலியாகும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது.

                        மக்கள் பலிகளை தடுத்து நிறுத்திட ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்து செயல் பட வேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .

                        இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

                        இலங்கையில் மக்களின் உயிர்களை காப்பற்றி வரும் மருந்து இறக்குமதி தடை பட்டால் இலங்கையில் மக்கள் போராட்டங்கள் அதிகம் வெடித்து பறக்கும்நிலை ஏற்பட போகிறது .

                        இது இலங்கை நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு பெரும் போராக வெடிப்பதுடன் இந்த போராட்டங்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகும் நிலையம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                        இலங்கை நாட்டில் ல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஒருபுறம் ,மறுபுறம் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு என தொடரும் அவலம் .

                        இறந்த பிணங்களை எரித்திட எரிபொருள் இன்றி மக்கள் தவிக்கும் பரிதாபம் என தொடரும் துயர்களை துடைத்திட ஆளும் ஜனாதிபதி கோட்டாபய

                        ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகினால் மட்டுமே இந்த நிலைக்கு முடிவு காணலாம் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது .

                        எரிபொருளுக்கு காத்திருந்து இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் மக்கள் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளன .

                        அவ்விதமான தொடர்ச்சியாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவமனைகள் அடித்து பூட்டும் நிலை ஏற்படுவதுடன் தனியார் மருத்துவமனைகள் அதிக இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்று விடும் .

                        இந்த பேராபத்தில் இருந்து மக்களையும் இலங்கை நாட்டையும் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதே மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

                          அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

                          கொழும்பு ; அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் பொது வாக்கெடுப்புக்கு செல்லாமல் நிறைவேற்றப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

                          “நடைமுறையில் சாத்தியமானதை நாங்கள் செய்கிறோம். ஒரு மசோதாவை உருவாக்குவதன் மூலம் நாம் மாயங்களின் பின்னால் ஓட வேண்டியதில்லை எனவும் நாட்டின் சூழ்நிலையில் இத்தகைய அனுபவம் நடைமுறைக்கு வராது என்பதால், அது

                          மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்றும் ராஜபக்க்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.

                          நாடு தற்போது எதிர்நோக்கும் பல சவால்களை முறியடிக்கும் நீண்ட முன்னெடுப்பின் முதல் படியாக 21வது திருத்தம் அமையும் எனவும் கூறியுள்ளார்.

                          அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

                          “நாடாளுமன்றத்தையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகமும் ஆர்வமாக உள்ளதாகவும், இது ஒரு அர‌சிய‌ல் வரலாற்றில் முக்கிய படியாகும்,” என்றும் அவர் கூறினார்.

                          அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்

                          SJB பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட தனியார் உறுப்பினா்கள் சட்டமூலத்தின் மீதான தீர்மானத்தில் உச்ச நீதிமன்றம் அதன்

                          பல சரத்துக்களுக்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு இரண்டும் தேவைப்படும் என தெளிவாக கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                          மேலும் அவர் கூறுகையில் “எங்களால் முடிந்ததை செய்துள்ளோம்,” என்றும் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகாரம்
                          பெற்று விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

                          இலங்கை அரசியலமைப்பின் 21A திருத்த சட்டத்தின் முதலாவது நகர்வு நடவடிக்கை ஆரம்பம் என அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இந்த சட்டம் முற்றுமுதாக திருத்தும் செய்ய படுமா என்ற கேள்வி எழுகிறது .

                          இலங்கை வருகை தந்த இந்தியா உயர் குழு 13 வாது சட்டதின் மாற்றத்தை மேற்கொண்டு மாகாணங்களுக்கு உரிய அதிகார தீர்வை வழங்கவேண்டும் என்கிறது .

                          அவ்விதமான தீர்வு திட்டதை வழங்க இந்த சட்டத்தின் திருத்த முறைமை அவசியம் என்கிறது .

                          இங்கை நாட்டை முன்னோக்கி நகர்த்த ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு அரசியல் அமைப்பில் சட்டத்தில் திருத்தம் செய்து கொள்ளுமா என்பது தான இங்குள்ள கேள்வியாகும் .

                          நாட்டின் எதிர்கால நிலை கருதி சில முடிவுகளை விரைந்து எடுத்து செயல்படுவதன் ஊடாகத்தான் நாட்டை முன்னோக்கி நகரத்தில் செல்ல முடியும் என்பது உலக இராயத்தந்திரிகள் பேச்சாக உள்ளது .

                            Posted in இலங்கை செய்திகள்

                            பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்

                            பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்

                            பிரித்தானியாவில் இருந்து இரண்டு கொள்கலன்களில் நாட்டிற்கு கடத்தப்பட்ட ஐந்து சொகுசு கார்கள், ஒருதொகை வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஒருதொகை மசகு எண்ணெய் ஆகியவற்றை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

                            இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட பொருட்களின் பெறுமதி 150 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார்.

                            சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, ​​மற்றொரு கொள்கலனில் இரண்டு பென்ஸ் கார்கள், ஒரு BMW கார் மற்றும் ஃபியட் வகையிவாய கார் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

                            மேலதிக விசாரணைகளின் பின்னர் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொருட்களை இறக்குமதி செய்பவர்களுக்கு அபராதம்
                            விதிக்கப்படும் என்றும் சுங்கப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம்

                              தம்மிக்க பெரேரா அமைச்சராக பதவிப் பிரமாணம்


                              இலங்கை ஜனாதிபதியின் செல்ல பிள்ளையாக வல்லவர் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

                              இன்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.

                              ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார்.

                                Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                                முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்

                                முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்

                                முல்லைத்தீவு ; இலங்கை முல்லைத்தீவு பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர் சிக்கியுள்ளார் .

                                மாணவிகளின் நிழல்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பித்து வெளியிட்டு விடுவோம் எம்முடன் உடலுறவு கொள்ள வாருங்கள் என மாணவிகளை மிரட்டி கற்பழித்த சம்பவம் அம்பலமாகிய நிலையில் ஆசிரியர் கைது செய்ய பட்டுள்ளார்.

                                முல்லைத்தீவு பகுதியில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த இந்த விடயம் கசிந்த நிலையில் தலைமறைவான ஆசிரியர் தனது சட்டத்தரணி ஊடக மன்றில் ஆயராகியுள்ளார் .

                                இந்த ஆசிரியாரின் காம உல்லாச லீலைக்கு உடந்தையாக செயல்பட்ட பழைய மாணவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர்.

                                முல்லைத்தீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த செயல் பாட்டில் ஈடுபட்ட ஆசிரியருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என குறித்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறி வருகின்றனர்.

                                முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த ஆசிரியர்

                                கற்பழிப்புக்கு உள்ளான ஐந்து மாணவிகள் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்.இதில் நான்கு மாணவிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

                                பாடசாலைக்கு மாணவர்களுக்கு ஆசிரியர் போதிக்க வருகிறார் என்றால் இங்கே மாணவிகளுடன் காம உல்லாசத்தில் ஈடுபட்டு கற்பழித்த வாத்தியார் செயல் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                தொடர்ந்து முல்லைதீவில் மாணவிகளை மிரட்டி கற்பழித்த குற்ற செயல் தொடர்பாக நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

                                தமிழீழ விடுதலை புலிகள் ஆளுகையில் நீதி நிலை நிறுத்த பட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர்.

                                ஆனால் இன்று அவை மறைந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன .

                                முல்லைதீவில் இது போன்ற செயல்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதும் மாணவிகள் சிலர் தூக்கு போட்டு மரணமான பின்புலம் இவர்கள் செயல்பாடாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                குறித்த பாடசாலையில் கல்வி கற்று தற்கொலை புரிந்த மாணவிகள் தற்கொலை தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் .

                                இவ்வாறு முல்லைதீவிவு பகுதியில் தற்கொலை புரிந்த மாணவிகள் இவர்களினாலே மிரட்ட பட்டு மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் தற்கொலை செய்திருந்தால் இவர்களுக்கு தூக்கு தணடனை வழங்க வேண்டும் என்பது மக்கள் ஆவலாக உள்ளது .

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்

                                இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள்

                                இலங்கை ;இலங்கையில் எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது .

                                இவ்வாறு எரிபொருளுக்கு காத்திருந்து அவை தீர்ந்ததும் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பி செல்கின்ற துயர நிலையும் ஏற்படுகிறது .

                                பண்டுலுகம பகுதியில் எரிபொருள் வாங்கிட மோட்டார் சைக்கிளில் காத்திருந்த பத்தொன்பது வயது வாலிபன் ஒருவரை டிப்பர் மோதியதில் அவர் பலியாகியுள்ளார் .

                                நாட்டை கொள்ளையடித்து மக்கள் வாழ்வியலை எண்ணி கவலை கொள்ளாது இவ்வாறு இழிநிலைக்கு இட்டுள்ள கோட்டாபாயவை இந்த பழிபாவம் சும்மா விடாது என ஏரி பொருள் கொள்வனவு செய்திட காத்திருந்த பெண்மணி ஒருவர் திட்டி தீர்த்துள்ளார் .

                                திருடர்கள் நாட்டில் சுகபோக ஆட்சியை நடத்திய வண்ணம் உள்ளனர் .ஆனால் அப்பாவி மக்கள் நாள் தோறும் எரிபொருளுக்கு காத்திருந்து இறந்த வண்ணம் உள்ளனர்..

                                எரிபொருள் இன்றி தொழில் துறைகள் முடக்க பட்டுள்ளன .நாடு மிக மோசமான நிலையை சந்தித்த வண்ணம் உள்ளது.

                                இந்த நெருக்கடியில் இருந்து இலங்கை எப்பொழுது மீள போகிறது என்பதே எரிபொருளுக்கு காத்திருக்கும் மக்கள் ஏக்கமாக உள்ளது .

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா

                                  இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா

                                  இலங்கை ;சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணியாக இருக்கின்ற தனது இராணுவச் செலவினங்கள் குறித்து பேச சிறிலங்கா மறுத்து வருகிறது .

                                  இலங்கை மறுத்தாலும் நாங்கள் பேசாமல் இருக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ்.

                                  தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கின்ற சிங்கள இராணுவம் வெளியேற்றினாலே, அதன் பொருளாதார நெருக்கடியில் இருந்து கணிசமான அளவு மீள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

                                  பிரான்சில் இடம்பெற்ற எழுக தமிழா நிகழ்வில் உரையாற்றும் போதே
                                  இக்கருத்தினை முன்வைத்த அமைச்சர் சுதன்ராஜ் பேசினார் .


                                  சிறிலங்காவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம்,
                                  சர்வதேச நாணய நிதியம் உட்பட பல நாடுகள் முன்வந்துள்ளன.


                                  சர்வதேச நாணய நிதியம் பேச்சு வார்த்தைகளை நடாத்திக் கொண்டுள்ளது.
                                  இந்த உதவிகள் என்பன நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வதேச அமைப்புக்கள்,
                                  நாடுகள் வழங்க வேண்டும்.

                                  இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா
                                  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ்.

                                  பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணிகளில் ஒன்றாக இருக்கின்ற
                                  இராணுவச் செலவினங்களை குறைக்கு வகையில் தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள இராணுவத்தினை வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையினை விதிக்க வேண்டும்.


                                  இந்தக் கோரிக்கையினை தமிழர்கள் வலுவாக சர்வதேசம் நோக்கி முன்வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

                                  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் இவ்வாரு தெரிவித்துள்ள பொழுதும் இவர்கள் கூற்றை இலங்கை ஆளும் ஜனாதிபத்தி கோட்டாபாய ராஜபக்சே மற்றும் பிதமர் ரணில் விக்கிரமசிங்கே ஏற்று கொள்வார்களா என்பது கேள்வியாகிறது .

                                  இலங்கை நாட்டின் பாதுகாப்பிற்கு ஒதுக்க படும் இராணுவச் செலவினங்கள் குறித்து பேச மறுக்கும் சிறிலங்கா அரசு நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து எவ்வாறு மீளும் என்கின்ற இவரது கேள்வி நிலையான கணிப்பாக உள்ளது .

                                  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான விடயங்கள் எதுவாக உள்ளது என்கின்ற விடய தரவுகளை சமீப காலங்களில் அமைச்சர் சுத்தராஜ் வெளியிட்டு இலங்கை அரசை திகைக்க வைத்துள்ள செயல்கள் இடம்பெற்றுள்ளன என்கிறது நாடு கடந்த ஆதரவு சக்திகள் .

                                  இலங்கை பேச மறுக்கும் விடயங்கள் பேசு பொருளாக்கி நகர்ந்து செல்லும் நாடு கடந்த அரசின் செயல் தோற்றம் நேரிய பார்வையின் நேர்கோட்டு அரசியல் தந்திரமாக பார்க்க படுகிறது .

                                  இதில் அழுத்தி அமைச்சர் சுதன்ராஜ் பேச்சை பாருங்கள்

                                  https://youtu.be/SeAtAvtgtFw
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்

                                    கொழும்பு ; பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள் நாங்கள் மனோ கணேசன்

                                    நீங்கள் பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்!
                                    மத-அரசியல்-சிவில் பிரதிநிதிகள் கூட்டத்தில் மனோ கணேசன்
                                    காலிமுக திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம்.

                                    ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்.

                                    நாம் மதவாதத்தால், இனவாதத்தால், அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு இனம்.

                                    பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்

                                    இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம்.

                                    நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான். அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும்.

                                    இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறினார்.

                                    கொழும்பு பத்தரமுல்லை இம்பீரியல் மொனார்ச் விடுதியில் இன்று நடைபெற்ற “சீர்திருத்தத்திற்கான கூட்டு” என்ற சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஓமல்பே சோபித தேரர் உட்பட மதத்தலைவர்கள்,

                                    நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பீக்கள் கலந்துக்கொண்ட கலந்துரையாடலில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது.

                                    225 பேர் கொண்ட நாடாளுமன்றம் என்ற சொற்பதம் இங்கே ஏற்பாட்டாளர்களினால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.

                                    அந்த கும்பலில் எங்களை போடாதீர்கள். இந்த கோதாபய அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. நாம் எப்போதும் இந்த ராஜபக்சர்களை எதிர்த்தே வந்துள்ளோம்.

                                    நாங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள். நீங்கள் சொல்லும் அந்த 225 பேர் வேறெங்கோ இருக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை.

                                    நான் அந்த கும்பலில் இல்லை என்பது எனக்கு தெரியும். நான் மக்களுடனேயே இருக்கிறேன். நான் கட்சி மாறி சோரம்போன அரசியல்வாதி இல்லை.

                                    பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்

                                    காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம். “கோதா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் ஆதரிக்கிறோம்.

                                    ஆனால், அதற்காக இங்குள்ள பலரை போல நாங்களும், “கோதா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை, காலிமுக திடலில் இருந்தே கற்றோம் என எண்ண வேண்டாம்.

                                    ஜனாதிபதி கோதாபய, இதைவிட பலமாக பாதுகாப்பு செயலாளர் கோதாபயவாக இருந்த போதே, “கோதா-கோ-ஹோம்” என கோஷம் எழுப்பி போராடியவர்கள், நாங்கள்.

                                    எங்கள் கொழும்பில் எங்கள் மக்களை வெள்ளை வானில் வந்து, பலவந்தமாக தூக்கி சென்ற வேளையில், 2005ம் ஆண்டிலேயே ராஜபக்சர்களை எதிர்த்து போராடியவன்,

                                    நான். எனது சக போராளி நண்பன் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். என்னை கொலை செய்ய முயற்சிகள் நிகழ்ந்தன.

                                    இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம். மதவாத, இனவாத, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடியவர்கள், நாம். நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்.

                                    ஆகவே காலிமுக திடல் போராட்டத்தில் இருந்து போராட நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

                                    நாங்கள் கற்க அங்கு எதுவும் இல்லை. நாம் புது போராளிகள் அல்ல.


                                    நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான். காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம்.


                                    அந்த போராட்டம் மூலம் வரும் மாற்றத்தை நாம் வரவேற்கிறோம்.
                                    அந்த மாற்றத்தின் மூலம் இலங்கை அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும்.


                                    இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும்.