Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி
மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி
பிரதமர் தினேஷ் குணவர்தனவும் எந்த நேரத்திலும் பிரதமர் பதவியை மஹிந்தவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை வகிப்பாரா இல்லையா என்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பதற்கு பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உடன்படவில்லை என்றும், இன்னொரு தரப்பினர்,
மீண்டும் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
முடங்கியது யாழ்ப்பாணம்
முடங்கியது யாழ்ப்பாணம்
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும், யாழ்.நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றது.
இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுகின்றது.
காவல்துறை கடமைகளில் மாற்றம்
காவல்துறை கடமைகளில் மாற்றம்
அவசரக் கடமை தேவையின் நிமித்தம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கடமைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர்கள் குழுவொன்றிற்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன்
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு புகலிடம் தேடி வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் கடந்த மார்ச் முதல் இலங்கையில் இருந்து 218 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.
இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன்; (43), அவரது மனைவி மாலினி தேவி (43) மற்றும் அவரது 12 வயது மகள், 7 வயது மகன் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இலங்கையில் இருந்து நேற்று (3)
மாலை படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரைக்கு நள்ளிரவு வந்திறங்கி கடற்கரை அருகே உள்ள மீனவர் குடிசையில் தஞ்சமடைந்தனர்.
தகவலறிந்து தனுஷ்கோடி ஒத்தப்படடிக்கு சென்ற தனுஷ்கோடி காவல் நிலைய பொலிஸார் மற்றும் க்யூ பிரிவு பொலிஸார் இலங்கை தமிழர்களிடம் விசாரணை நடத்தினர்.
அகதிகளாக தனுஸ்கோடியில் தஞ்சம்
விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லை என்ற நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை
அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் சந்தோஷமாக வாழ்வதையும் அவர்களது குழந்தைகள் நன்கு படிக்கும் வீடியோ பார்த்து குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு குடும்பத்துடன் புகலிடம் தேடி வந்ததாக தெரிவித்தார்.
மேலும் ஜெய பரமேஸ்வரனின் மனைவி மாலினி தேவிக்கு இருதய நோய் உள்ளதால் இலங்கையில் மருத்துவ செலவு செய்ய இயலாததால் வாழ்ந்தால் தமிழகத்தில்
அகதியாக வாழ்வோம் அல்லது தமிழகம் செல்லும் போது கடலில் விழுந்து இறந்து விடுவோம் என உயிரை பணயம் வைத்து குடும்பத்துடன் தமிழகம் வந்ததாக தெரிவித்தார்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 4 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
கஞ்சாத்தோட்டம் அழிப்பு
கஞ்சாத்தோட்டம் அழிப்பு
அம்பாறை – பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா வெள்ளிக்கிழமை மாலை கட்டுபிடிக்கப்பட்டுள்ளது..
அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன்,
மேலதிக விசாரணைகளை தமன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை
முட்டை இறக்குமதி தொடர்பான அறிக்கை
முட்டை இறக்குமதி தொடர்பான இந்திய வழங்குனர்களால் வழங்கப்படவுள்ள அறிக்கைகள் இன்று (04) கிடைக்கப்படும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
உரிய அறிக்கைகள் கிடைத்தவுடன் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
டெண்டர் நடைமுறையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரண்டு இந்திய விநியோகஸ்தர்களுக்கும் இன்றைய தினத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
அதன்படி, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்தவுடன்,
முட்டை இறக்குமதி செய்யும் பணியை உடனடியாக தொடங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
588 கைதிகள் விடுதலை
588 கைதிகள் விடுதலை
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த சிறை கைதிகளில் ,
588 பேர் லங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப் பட்டுள்ளனர் .
இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் நல் நடத்தை அடிப்படையிழும் ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்
கொழும்பில் பாதுகாப்பு இறுக்கம்
இலங்கை சுதந்திர தின நிகழ்வை அமைத்து கொழும்பு பகுதி எங்கும் பலத்த பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
பல வீதிகளை அடித்து மூட பட்டுள்ளன .
உலக நாடுகளில் இருந்து பல நாட்டு பிரதி நிதிகள் இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் ,அவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ,பாதுகாப்பு நாவடிக்கை இறுக்க பட்டுள்ளது .
ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
ஜனாதிபதி ஆலோசாகராக நாய் சர்ச்சை அமைச்சர் நியமனம்
இலங்கை ஜனாதிபதி ஆலோசகராக மீளவும் Ashu Marasinghe நியமிக்க பட்டுள்ளார் .
இவர் நாய் ஒன்றை துஸ் பிரயோகம் செய்ததாக தெரிவித்து பணி நீக்கம் செய்ய பட்டார் .
இதனை அடுத்து தற்போது மீளவும் ,அவர் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்க பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்
சுதந்திர தினத்தை புறக்கணித்த சஜித்
இலங்கையின் 75 தாவது சுதந்திர தினத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா புறக்கணித்துள்ளார் .
நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறை விலைவாசி அதிகரிப்பு ,மற்றும் மக்களின் துயர் நிலைகளை அடுத்து இந்த புறக்கணிப்பை சஜித் செய்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
கற்பழிக்க வந்த நபர் கைவிரலை கடித்த பெண்
கற்பழிக்க வந்த நபர் கைவிரலை கடித்த பெண்
இலங்கை பதுளை பகுதியில் தனியாக இருந்த பெண் ஒருவரை கற்பழிக்க வந்த ஆண் ஒருவர் அந்த பெண்ணை பல வந்தமாக கற்பழிக்க முனைந்துள்ளார்.
அவரிடம் இருந்து தப்பிக்க பெண் அவரது கை விரலை கடித்துள்ளார் .
பெண்ணின் கடி காயத்தில் ஏற்பட்ட வலியினால் அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார் .
நபர் தப்பி ஓடிய நிலையில் பெண் பொலிஸாருக்கு தெரிவித்ததை அடுத்து தற்போது ,குறித்த நபரை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
26 பொலிசாருக்கு பதவி உயர்வு
26 பொலிசாருக்கு பதவி உயர்வு
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு 26 பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது .
இந்த பதவி உயவ்வு வழங்க பட்டத்தை போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
பலாலியில் 108 ஏக்கர் காணிகள் விடுவிப்பு
இலங்கை வடக்கு மாகாணத்தின் மயிலிட்டி பலாலி பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த மக்கள் காணிகள் 108 ஏக்கர் தற்போது விடுவிக்க படுகிறது .
அந்த காணிகள் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்க படுகிறது .
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த காணிகள் இராணுவத்தின் வசம் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின்ஏற்பாட்டில், இஸ்லாமிய நிகழ்வும், மரம் நடுகையும் இடபெற்றது.
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், திருகோணமலை – அனுராதபுர சந்தியில் அமைந்துள்ள ஹுலூர் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாசலில் விஷேட உரையும், துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா தலைமையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண
ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சுதந்திரதினம் பற்றிய உரையினை நிகழ்த்தினார்.
75வது தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு மரம் நடுகை
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஆ.மன்சூரினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜெயவிக்ரம, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண
திணைக்களத் தலைவர்கள், அனைத்து பள்ளிவாயல் சம்மேளன தலைவர், செயலாளர், உலமாக்கள், மத்ரசா மாணவர்கள், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது பயன்தரும் மரக்கன்றுகளை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்கா மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்
வி.எச்.என்.ஜெயவிக்ரம ஆகியோரினால் பள்ளிவாசலின் முன்றலில் நட்டி வைத்தனர்.
அபு அலா –
பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு
பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு
இலங்கையில் திடீரென பெட்ரோல் விலை 300 ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ளது .
இதனால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
திடிரென பொருட்கள் விலைகள் அதிகரிப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
மூன்று இராணுவ பேரூந்து மோதல் 9 பேர் காயம்
காலி கொழும்பு பிரதான வீதியில் பயணித்த இராணுவ
பேரூந்துகள் ,மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதில் ,
அதில் பயணித்த ஒன்பது இராணுவத்தினர் காயமடைந்தனர் .
சுதந்திர தின நிகழ்விற்கு கலந்து செல்ல சென்ற ,
இராணுவத்தினரின் பேருந்தே இந்த விபத்தில் சிக்கியது .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
லண்டன் Benefit Mankind நிறுவனத்தினால் 5 கோடி ரூபா நிதியின் கீழ் கிண்ணியா பூவரசடித்தீவில் நிர்மானிக்கப்பட்ட மருத்துவ நிலையம் நேற்று மாலை (01) திறந்து வைக்கப்பட்டது.
அல்-மினா மகா வித்தியாலய அதிபர் எம்.வை.ஹதியத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்பு விழாவுக்கு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு மருத்துவ நிலையத்தை திறந்து வைத்தனர்.
நெடுந்தீவு, சமாவச்சந்தித்தீவு, ஈச்சந்தீவு, பூவரசடித்தீவு, ஆளங்கேணி போன்ற கிராமங்களில் வசிக்கின்ற மக்கள் இக்கிராமம் உருவாக்கப்பட்ட காலம்தொட்டு மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்வதில் பல கஷ்டங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்.
இவர்கள் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதாக இருந்தால் சுமார் 30 கிலோ மீற்றர் தூரம் சென்று வரவேண்டும். அவ்வாறு செல்கின்ற வீதிகள் யாவும் குண்றும் குழியுமாக காணப்படுகின்றதும் பெரும் கவலைக்குரிய விடயமாகவும், வாகன போக்குவரத்து அற்ற நிலைமையிலும் வாழ்ந்து வந்துள்ளனர்.
5 கோடி ரூபா நிதியில் மருத்துவ நிலையம் திறந்து வைப்பு
குறிப்பாக, இங்கு வசிக்கின்ற மக்கள் அவசர சிகிச்சையை பெற்றுக்கொள்ள பாரிய சவால்களையும் எதிர்கொண்டே வந்துள்ளனர். இந்நிலைமையை கருத்திற்கொண்ட அல் ஹிக்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி அப்பாஸ் இபாதுல்லாஹ், இக்கிராம மக்களின் நிலைமைகளைப் பற்றி லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ்வின் கவனத்திற்கு
கொண்டு வந்ததையடுத்து இந்த தனியார் மருத்துவ நிலையம் நிர்மானிக்கப்பட்டு நேற்றயதினம் பொதுமக்கள் பாவனைக்கு கையளித்து வைக்கப்பட்டது.
இவ்விழாவுக்கு, லண்டன் Benefit Mankind நிறுவனத்தின் நிறைவேற்றுப்
பணிப்பாளர் வைத்தியர் ஹாபீஸ் அப்துஸ்சமட் முல்லாஹ் மற்றும் றிஸ்வான் ஹர்தா,கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் மாகாண சமூகநல மருத்துவ ஆலோகர் வைத்தியர் எஸ்.
அருள்குமரன், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.கணி, மூதூர் தள வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்
வைத்தியர் ஆர்.ரோஹான் குமார், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.எம்.அஜித் உள்ளிட்ட பல அதிதிகளும்,
பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அபு அலா
கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
நீதிமன்றுக்கு அழைத்து செல்ல படவிருந்த இரண்டு கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .
இவ்வாரு தப்பி சென்ற கைதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மொரவக்க நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்படவிருந்த இரண்டு கைதிகள் இவ்விதம் தப்பி சென்றுள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு கடந்த தை மாதம் உல்லாச பயணிகள் வருகை
ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது .
இலங்கையின் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறை,
மீளவும் உயிர் பெற்று வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகையின் மூலமே ,
அதிக வருமானத்தை இலங்கை பெற்று கொள்கின்ற்றமை இங்கே குறிப்பிட தக்கது .
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க ஐக்கிய நாடுகள் சபை ஐநாவில் வலியுறுத்து
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க ஐக்கிய நாடுகள் சபை ஐநாவில் வலியுறுத்து
ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள்,
இலங்கையை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யுமாறும்,
தண்டனைச் சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுகளை நீக்குவதன் மூலம் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குமாறும் வலியுறுத்தியுள்ளன.
போர் முடிவடைந்து 13 ஆண்டுகள் கழிக்கின்ற பொழுதும் மக்கள் வாழ்விட பகுதிகளில் இருந்து இலங்கை இரன்டுவம் விளக்க மறுத்து வருகிரது .
மேலும் பயங்கரவாத தடை சட்டம் தொடர்ந்து நீடித்து செல்கிறது .
மனித உரிமை மீறல்கள் கொலைகள் ,காணாமல் போதல் ,
கடத்தல் ,அச்சறுத்தல் என்பன தொடர்கின்றன .
இவை யாவற்றையும் நீக்கி பாதுகாப்பாக அனைத்து மக்களும்,
இணைந்து வாழ்வும் நடவடிக்கையை மேற்கொள்ளும் படி
வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .




































