Tag: சுற்றுலா பயணிகள்
குவிந்த சுற்றுலா பயணிகள்
குவிந்த சுற்றுலா பயணிகள்
குவிந்த சுற்றுலா பயணிகள் ,இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரை காலப் பகுதியில் 11 இலட்சம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கையின் உல்லாச பயணத்துறை தெரிவித்துள்ளது .
இவர்களது இந்த வருகையினால் இலங்கையினுடைய பொருளாதார உச்சம் அடைந்துள்ளதாகவும் அதனால் தற்பொழுது இலங்கை வருகின்ற உல்லாச பயிர்கள் வரவு அதிகரித்து காணப்படுவதாக,
இலங்கை இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்லாச பயணிகள் வருகை
இலங்கை உல்லாச பயணிகள் வருகையை அடுத்து அதனுடைய பொருளாதாரத்தில் தலை நிமிர்ந்துள்ளது .
இவர்களது வரவு வீழ்ச்சி அடைந்தால் இலங்கை இந்தியா அரசியல் சந்திக்கு ஒரு நிலை காணப்படுகின்றது.
அதன் அடிப்படையில் கடந்த ஏழு மாதங்களில் 11 லட்சம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு வருகை தந்த உள்ள சபைகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் இலங்கை இந்திய உல்லாச துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரனோவிற்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார சீரழிவு அடுத்து தற்போது இலங்கை இவ்வளவு சீரழிவு இருந்து மெது மெதுவாக மேலிருந்து செல்வதாகவும் ,
அதனை அடுத்து மேலும் இந்த உள்ளாட்சி பதிவுகள் வருகை அதிகரித்தால் நாடு வழமையான நிலைக்கு திரும்பி விடும் என்பதாக அரசியல் தலைவர் சிலர் கருத்துரைத்துள்ளனர் .
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

- பல்லன்சேன சிறைச்சாலையில் கலவரம் தீவிரமடைந்ததால் கண்ணீர்ப் புகைக் குண்டு

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து அவசரகாலக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

- வனத்தீயை ஏற்படுத்திய குற்றவாளிக்கு அபராதம்

- பல்கலைக்கழக மாணவருக்கு ரூ410 000 அபராதம்

- திட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகரிப்பு

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு கடந்த தை மாதம் உல்லாச பயணிகள் வருகை
ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது .
இலங்கையின் வீழ்ந்து போன உல்லாச பயணத்துறை,
மீளவும் உயிர் பெற்று வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகையின் மூலமே ,
அதிக வருமானத்தை இலங்கை பெற்று கொள்கின்ற்றமை இங்கே குறிப்பிட தக்கது .
குவிந்த சுற்றுலா பயணிகள் பணத்தை அள்ளிய இலங்கை
குவிந்த சுற்றுலா பயணிகள் பணத்தை அள்ளிய இலங்கை
இலங்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் ,இலங்கை பெரும் பணத்தை அள்ளியுள்ளது .
இலங்கையின் பொருளாதரத்தின் முதுகெலும்பாக உல்லாச பயணிகள் உள்ளனர் .
அவ்வாறான உல்லாச சுற்றுலா பயணிகள் இலங்கைக்குள் அதிகமாக வருகை தந்தன் மூலம் 1.13 பில்லியன் பணத்தை அள்ளியதாக இலங்கை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளது .
சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு
சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு
சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் 2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கினார்.
2023ஆம் ஆண்டுக்குள் எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என
எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை விஸ்தரிப்பதன் மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சுற்றுலா பயணிகள் பிரச்சனையை தீர்க்க ரணில் பணிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்கான நிதிப் பரிமாற்றல், இலங்கை பற்றிய எதிர்மறையான கருத்துக்களை அகற்ற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு விமானங்களை தரையிறக்குவதற்கு அதிக கட்டணம் அறவிடப்படுவதால் சுற்றுலாத்துறையினருக்கு அதிக பாதிப்பு
ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இது குறித்து ஆராய்ந்து பிரச்சினையைத் தீர்க்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் முழுப் பயணத்தையும் உள்ளடக்கும் வகையில்
கையடக்கத் தொலைபேசி செயலி (Mobile App) ஒன்றை சுற்றுலா அமைச்சு அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இங்கு குறிப்பிட்டார்.
பல சுற்றுலா ஹோட்டல்கள் இரவு 10.00 மணிக்குள் மூடப்படுவது சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருப்பதனால் வர்த்தமானி
அறிவித்தல் மூலம் சுற்றுலா வலயங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையில் இந்தியத் திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் சுற்றுலாத்துறைக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
பிரபல சைக்கிள் ஓட்ட வீரர்களின் பங்கேற்புடன் பருத்தித்துறையிலிருந்து தேவேந்திர முனை வரையிலான சைக்கிள் சவாரியை ஏற்பாடு செய்தல், Visit Sri
Lanka வேலைத்திட்டம் உட்பட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சுற்றுலா அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன்
ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர்
சூலானந்த பெரேரா மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பான நிறுவனங்களின் தலைவர்கள்,சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரிய ஆகியோர் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
உலகில் சுற்றுலாப் பயணங்களைமேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
தற்போது சுற்றுலாப் பயணிகளின்வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர்பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும். தடுப்பூசி விடயத்தில் இலங்கை பெரும்பாலும்முன்னணியில் காணப்படுகின்றது.
பின்னடைவு கண்டுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில்அனைத்துக் கட்சிகளினதும்
ஒத்துழைப்பை அதிகரிப்பதன் தேவையையும் அமைச்சர் பிரசன்னரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
























