Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
நேற்று (13) சொட்டுக்கருவி ஊடாக ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக காய்ச்சல் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளர் என தெரிவிக்கப்படுகிறது.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து கிருமித் தொற்று ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வைத்தியசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் காய்ச்சலினால் காலி பிரதேசத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பொருத்தப்பட்டிருந்த சொட்டுக்கருவியில் இருந்து இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது.
பின்னர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இருதய நோயாளர் என்பதால் வேறு வைத்தியசாலைக்கு மாற்ற வைத்தியர்கள் முயற்சித்தனர்.
எனினும், அங்கு அவர் உயிரிழந்துள்ள நிலையில், சொட்டுக்கருவியில் இருந்து ஏற்பட்ட கிருமித் தொற்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எக்ஸ். குலநாயகம் வீட்டில் நேற்று (12) மாலை திருட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு அருகில் உள்ள வீட்டிலேயே குறித்த திருட்டு சம்பவம் பதிவானது.
தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் நடந்தது என்ன
வீட்டில் இருந்தவர்கள் நித்திரையில் இருந்த சமயத்தில் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளும் சிறிய தொகைப் பணமும் இதன் போது திருடிச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு சம்பவம் தொடர்பான சிசிடிவி கண்காணிப்பு கமராவின் காணொளியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டார்.
10 வயதுடைய சிறுமி மகுலெல்ல வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறாள்.
சிறுமி வழமை போல் டர்பன்டைன் பாதுகாப்பு வனப்பகுதி வீதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அவ்வாறு சென்றுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கரவண்டிக்கு ஏற்றிச் சென்றதாக சிறுமி மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் ஒரு வித பானத்தை குடிக்க கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அது கசப்பாக இருந்ததால், அவற்றை வாயில் வைத்திருந்த வௌியில் துப்பிவிட்டு முச்சக்கரவண்டியில் இருந்த பாய்ந்து சிறுமி தப்பியுள்ளார்.
பின்னர், முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சிறுமி, பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, வகுப்பு ஆசிரியர் இது குறித்து வினவியுள்ளார்.
பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
பின்னர் அதிபர், ஆசிரியர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
by நிருபர் காவலன் - ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
by நிருபர் காவலன் - தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
by நிருபர் காவலன் - கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன்
1000 ரூபாவால் குறைவடையும் உரம்
1000 ரூபாவால் குறைவடையும் உரம்
நாளை (15) முதல் 50 கிலோ கிராம் ‘பண்டி’ உரம் எனப்படும் MOP உர மூட்டை ஒன்றின் விலை 1000 ரூபாவால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
சமோதி சந்தீபனி ஜயரத்ன என்ற 21 வயதுடைய யுவதி தனக்கு வழங்கப்பட்ட மருந்தினால் அல்ல, ஒவ்வாமையினால் உயிரிழந்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் முழுமையான அறிக்கையை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைத்தியர் அர்ஜுன திலகரத்ன,
அர்ஜுன திலகரத்ன – “மருந்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இது நடந்தது என்று சொல்வது கடினம். ஒவ்வாமையால் ஏற்படும் நிலை. மற்ற நோயாளிகளுக்கு 2700 டோஸ் Ceftriaxone கொடுக்கப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் – ஏதேனும் தவறு அல்லது அதிகப்படியான டோஸ் வழங்கப்பட்டுள்ளதா என நீங்கள் ஆராய்ந்தீர்களா?
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
அர்ஜுன திலகரத்ன – “Ceftriaxone என்பது ஒரு நாளைக்கு ஒரு முறை வழங்கப்படும் மருந்து. 2 மி.கி வழங்க வேண்டும.
ஒரு குப்பியில் ஒரு மில்லிகிராம் உள்ளது.
அதனால்தான் இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஏதேனும் ஒவ்வாமையை இருந்ததா என பார்த்தோம். இந்த நோயாளிக்கு இதற்கு முன் எவ்வித ஒவ்வாமையும் இல்லை.
பத்திரிக்கையாளர் – முதல் டோஸின் பின்னர் லேசான ஒவ்வாமை ஏற்படும் போது, அடுத்ததைக் கொடுக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு இல்லையா?
அர்ஜுன திலகரத்ன – “முதலில் கொடுத்தபோது ஒவ்வாமை ஏற்படவில்லை. இரண்டையும் கொடுத்த பின் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றின.”
சமோதியின் மரணத்திற்கான காரணம் வௌியானது
இது தொடர்பான மருந்துகள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பேராதனை போதனா வைத்தியசாலையின் உடலியல் துறைத் தலைவர் பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ.
பேராசிரியர் வைத்தியர் உதய ரலபனாவ – “ஒவ்வாமையில் அதிகரிக்கும் சிஆர்பி புரோட்டீன் மதிப்பு. சாதாரணமாக 6 அலகிற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த யுவதியின் மதிப்பு 270 அலகாக அதிகரித்திருந்தது.
மதிப்பு 270 அலகிற்கு மேல் இருக்கையில் பற்றீரியாவின் அறிகுறிகள் தென்படுகின்றன. நோய்த்தொற்று பிறகு நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, பொதுவாக Ceftriaxone மருந்து
பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மருந்து ஒவ்வாமை. அரிதாக, சிலர் இறக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இந்த யுவதியும் இறந்துவிட்டார்.”
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

நீரில் மூழ்கிய நபர் காப்பாற்றிய வாலிபர் குவியும் பாராட்டு
நீரில் மூழ்கிய நபர் காப்பாற்றிய வாலிபர் குவியும் பாராட்டு |The teenager who saved the drowning man
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
கொலையில் முடிந்த மது விருந்து
கொலையில் முடிந்த மது விருந்து
நண்பர்கள் குழுவொன்று நேற்றிரவு (12) நடத்திய மதுபான விருந்தின் பின்னர் கத்தியால் குத்தப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொரகஹஹேன தலகல ஏல காணியொன்றில் தொழிலாளர்கள் குழு ஒன்று கூடி இந்த மதுபான விருந்தை நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர், மினுவாங்கொடை மாபொதல இத்தவத்த பிரதேசத்தில் வசிக்கும் அகழ்வு இயந்திர சாரதியாக பணிபுரிந்த பி. நிரோஷன் சந்திமா 39 வயதான ஒரு பிள்ளையின் தந்தை என தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்துடன் முன்னாள் விமானப்படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சாரதுயாக பணியாற்றி வந்த உயிாிழந்த நபர் பணி முடிவடைந்ததால், மற்ற ஊழியர்கள் அவருக்கு மது விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.
இந்த விருந்தில் பங்கேற்பதற்காக நிரோஷன் சந்திம நேற்று வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கொலையில் முடிந்த மது விருந்து
கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மெல்சிறிபுர பகுதிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, கொலை செய்யப்பட்ட நபர் அவரது கழுத்தை நெரித்து தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் கோபமடைந்த அவர் பையில் இருந்த கத்தியை எடுத்து இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏல நிலத்தின் அலுவலகத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்ட நபரின் தலையில் தலையணை வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தலையணை வைத்தவர் யார் என்று கூற யாரும் முன்வர வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக வேறு இடத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஏல நிலத்தின் 07 ஊழியர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
முதியவரை கடத்திய பெண்
முதியவரை கடத்திய பெண்
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் , பெண்ணொருவருக்கு புன்னாலைக்கட்டுவன் பகுதியில் காணி ஒன்றினை விற்பனை செய்வதற்கான முற்பணமாக 13 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளார்.
காணியை பெண்ணுக்கு விற்காத நிலையில் , கொடுத்த பணத்தினை , பெண் திருப்பி கேட்டுள்ளார் முதியவர் பணத்தினை கொடுக்காது காலத்தை இழுத்தடித்துள்ளார்.
முதியவரை கடத்திய பெண்
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) , பணம் கொடுத்த பெண் வாகனம் ஒன்றில் நான்கு ஆண்களுடன் முதியவரின் வீட்டுக்கு அருகில் சென்று முதியவரை வாகனத்தில் கடத்தி சென்று , தாக்கி , அவரிடமிருந்து 13 இலட்ச
ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் முதியவரை விடுவித்துள்ளனர். அதனை தொடர்ந்து முதியவர் தன்னை கடத்தி பணம் பறித்தவர்கள் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவரை மானிப்பாய் பகுதியில் வைத்து நேற்றைய தினம் புதன்கிழமை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது
யாழில் மாணவிகள் துஸ்பிரயோகம் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் , புதன்கிழமை (12) , தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றினை நடாத்தி இருந்தனர்.
குறிப்பிட்ட கருத்தரங்கின் போது , 13 வயதான மாணவிகள் இருவர் இலவச வகுப்புக்களை நடாத்தி வந்த நபர் ஒருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்ததை அடுத்து குறித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்யதுள்ளனர்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்
பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்
ரோயல்பார்க் கொலையாளி ஜூட் ஜயமஹவிற்கு பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் தான் அரசியல் அமைப்பை மீறி செயற்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த நபரின் பொதுமன்னிப்பானது சகல நடைமுறைகளுக்கும் உட்பட்ட அரசியலமைப்பின் விதிகளுக்கு அமைவானது என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொதுமன்னிப்பு குறித்து மைத்திரி விளக்கம்
2005 இல் அத்துருகிரிய பிரதேசத்திலுள்ள ரோயல்பார்க் தொடர்மாடியில் பெண்ணொருவரை கொலை செய்தமைக்காக கொழும்பை சேர்ந்த செல்வந்தரின் மகனிற்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது.
2019 நவம்பர் 9 ம் திகதி ஜூட்ஜெயமகவிற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பொதுமன்னிப்பை வழங்கினார்.தனது பதவிக்காலத்தின் இறுதியில் சிறிசேன பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
அதன் பின்னர்ஜெயமஹ நாட்டிலிருந்து வெளியேறினார் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.
இந்நிலையிலேயே தான் பொதுமன்னிப்பை வழங்கியதன் மூலம் அரசியலமைப்பைமீறவில்லை என சிறிசேன நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது
வலம்புரி சங்கை விற்க முயன்ற அறுவர் கைது
பெறுமதி மிக்க அரிய வகை வலம்புரி சங்கை 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்ய முயன்ற இரண்டு பெண்கள் உட்பட ஆறு சந்தேகநபர்களை ஜால பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிரிந்திவல, நிட்டம்புவ, மருதானை மற்றும் அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்
பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
நவகமுவ மொமிரி ராஸ்ஸபான பிரதேசத்தில் விகாரையின் பெயரில் நடத்தப்பட்ட வீட்டுக்குள், பௌத்த தேரர், யுவதி மற்றும் பெண்ணொருவரை
நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலிில் வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எட்டுப்பேரும் கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (12) ஆஜர்படுத்தப்பட்டனர் அதன்போதே நீதவான் ஷாமினிமா விஜேபண்டார மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
பிக்குவுடன் இரண்டு பெண்கள்-8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு
அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் எட்டுப்பேரில் எழுவரை சாட்சியாளர்கள் இருவர் அடையாளம் கண்டுப்பிடித்தனர். ஒருசாட்சியாளர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.
இந்நிலையில் முறைப்பாட்டார்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, சம்பவம் தொடர்பில் இன்னும் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்படவேண்டி உள்ளனர். ஆகையால், அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்துமாறும், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கவேண்டாம் என்றும் நீதிமன்றிடம் கேட்டுக்கொண்டார்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால்மாவுக்கு 100 ரூபாய் வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு 20 வீதம் அல்லது 225 ரூபாய் சுங்க இறக்குமதி வரி விதிக்கப்பட்டு பின்னர், அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பால் மா இறக்குமதி வரியில் மாற்றம்
எவ்வாறாயினும், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நிதியமைச்சு 100 ரூபாய் வரி விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வரித் திருத்தம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வரி அதிகரிக்கப்பட்டாலும் பால் மாவின் விலையில் மாற்றம் செய்ய எதிர்பார்க்கவில்லை என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது
எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி – வன்னிமுந்தலம் கலப்பு பகுதியில் கடற்படையினர் இன்று (12) காலை விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது
அங்கு கற்பிட்டி கடற்பகுதியை நோக்கி சந்தேகத்திற்கிடமான வகையில் டிங்கி படகு ஒன்று பயணிப்பதை கடற்படையினர் அவதானித்து சோதனையிட்டனர்.
இதன்போது டிங்கி படகில் சூட்சுமமாக மறைத்து சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு பொதிகளில் பொதி செய்யப்பட்ட தங்கம் கடற்படையினரால் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி
by நிருபர் காவலன் - சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது
by நிருபர் காவலன் - அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை
by நிருபர் காவலன் - பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
by நிருபர் காவலன் - கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு
by நிருபர் காவலன்
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக 1கிலோ 135 கிராம் தூய்மையான ஹெரோயின் போதைப் பொருளை கொண்டு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின்
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 திகதி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஸ தலைமையில் பொலிசார், அன்றைய தினம் இரவு 8.30 மணியளவில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்துக்ளை சோதனையிட்டனர்.
இதன் போது பேரூந்து ஒன்றில் பயணித்த குடும்பஸ்தர் தன் வசம் உடமையில் வைத்திருந்த பை ஒன்றில் இருந்து ஹெரோயின் போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஹெரோயின் போதைப் பொருள் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்த்தரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
யாழில் இருந்து கொழும்பு சென்ற குடும்பஸ்தருக்கு 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கிய நீதிபதி மா.இளஞ்செழியன்
மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் ஒரு கிலோ 135 கிராம் நிறை உடையது என்பதுடன், கலப்படம் அற்ற தூய ஹெரோயின் என்பதும் பொலிஸ் விசாரணை மற்றும் சோதனைகளில் தெரியவந்தது.
இதனையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று விளக்கமறியில் இருந்து பிணையில் விடுவிக்கப்பட்டுருந்தார்.
ஒரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக கொண்டு சென்றமை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, அரச சட்டத்தரணிகளான தர்சிகா திருக்குமாரன் மற்றும் ஆறுமுகம் தனுஜன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.
குறித்த வழக்கு விசாரணைகளில் குறித்த நபர் ஓரு கிலோ 135 கிராம் தூய ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனைக்காக எடுத்து சென்றமை என்பன எந்தவித சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டமையால் குறித்த நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்தார்.
யாழ் நாவற்குழியை சேர்ந்தவரும், தற்போது வவுனியாவில் வசித்து வருபவருமான கந்தையா தியாகராஜா என்ற 55 வயது குடும்பஸ்தருக்கே 6 வருடங்களின் பின் இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்
லண்டனில் கருப்பு யூலை தீர்வு தேடி மிக பெரும் போராட்டம்
லண்டனில் இலங்கையில் அரச அபாயங்கரவாத ,
அரசுகளினால் நடத்த பட்ட ,தமிழ் இனப்படுகொலை மற்றும் ,
கறுப்பு யூலை இனக்கலவர நினைவுகளை சுமந்து, மிக பெரும்
அறவழி போராட்டம் இடம்பெறுகிறது .
இந்த போரட்டத்தில் தமிழ் தேசியம் ,சுயநிர்ணயம் ,உரிமைகளை
வழங்க கோரி இந்த போராட்டம் இடம்பெறுகிறது .
இவ்வேளை ,அனைவரையும் கலந்து ஆதரவை வழங்கும் படி ,
ஏற்பட்டு குழுவினர் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
யூலை 25 மதியம் ஐந்து மணி முதல்,
எட்டு மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறுகிறது .
மேலதிக விபரம் கீழே

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர் காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி ஐந்து மீனவர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
காலிக்கு அருகில் மீன்பிடி கப்பல் விபத்து
காலியிலிருந்து இலங்கையின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஆழ்கடலில் வெளிநாட்டு படகு ஒன்றும் குறித்த நெடுநாள் படகும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதன்போது அந்த வௌிநாட்டு படகில் இருந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் நெடுநாள் படகில் இருந்த மீனவர் ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகியதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, கடற்படையின் “ஸ்பார் மிரா” என்ற வணிகக் கப்பல் ஊடாக தீக்காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்ததாக கடற்படையினர் தெரிவித்தனர்.
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடு

குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்
குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி கண்டனம்
ஸ்வீடனில் குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது மத சுதந்திரத்தை மீறும் செயல் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தெற்கின் பூகோள விழுமியங்களை மதிக்குமாறும், கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் அமைதியின்மைக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் மேற்கத்திய நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்
விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்
ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம்
ரயில் எஞ்சின் மற்றும் இயந்திரத் தொகுதிகளுக்கான தட்டுப்பாடு காரணமாக வழமையான நேர அட்டவணைக்கு அமைய ரயில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாளாந்த ரயில் சேவைகளுக்காக 74 எஞ்சின்களும் 193 இயந்திரத் தொகுதிகளும் தேவைப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பயணிப்பதற்கு ஏற்ற வகையில் 58 எஞ்சின்களும் 162 இயந்திரத் தொகுதிகளுமே தற்போது உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

விபத்தில் இருவர் பலி
விபத்தில் இருவர் பலி
பாணந்துறை மற்றும் வரகாபொல பகுதிகளில் நேற்று(11) இடம்பெற்ற விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் என்பன மோதி விபத்துக்குள்ளானதில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
வாதுவ பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இருவர் பலி
இதேவேளை, வரகாபொல அங்குருவெல்ல வீதியின் மைனொலுவ பிரதேசத்தில், முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று பாதசாரி மீது மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த 62 வயதுடைய நபர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது



























