சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாணங்களிலுள்ள சட்டத்தரணிகள் இணைந்து எதிர்ப்பு

ஆர்ப்பாட்ட பேரணியை முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக செவ்வாய்க்கிழமை(03) முன்னெடுத்தனர்.

நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள்

சட்டத்தரணிகளை படம்பிடித்து அச்சுறுத்திய பொலிஸார்

வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள் , வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்

வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்

நபரொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் நேற்று (02) காலை இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகல் மரலுவாவ பிரதேசத்தில் வசித்து வந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வௌிநாட்டில் இருந்து வந்து மனைவியை கொலை செய்த கணவன்

உயிரிழந்த பெண் தனது இரண்டு பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், அவரது கணவர் வெளிநாட்டில் இருந்து 02 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு முற்றிய நிலையில் கணவன் மனைவியை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்டதையடுத்து, நீதிமன்றத்தினால் சிறைச்சாலை அதிகார சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை மட்டக்களப்பில் 180 தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் பதிவாகியுள்ளது.

40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தாய்ப்பால் சுரக்கவில்லை தாய் தற்கொலை

குறித்த பெண்ணுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள போதும், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

மில்லனிய, கிம்மன்துடாவ பகுதியில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (02) இரவு கைது செய்யப்பட்டதாக மில்லனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மில்லனியா கிம்மன்துடாவ பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான திஷான் சங்கீத் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மில்லெனிய பகுதியை உலுக்கிய படுகொலை சந்தேகநபர்கள் கைது

உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவன் தனது மோட்டார் சைக்கிளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைத்து உயிரிழந்த நபருக்கு 120,000

ரூபாவை வழங்கியுள்ள நிலையில், அதனை உரிய வகையில் செலுத்ததாத காரணத்தால் ஏற்பட்ட தகராறு நீண்டதில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவரின் வீட்டிற்கு தனது சகோதரனுடன் வந்த மைத்துனரான குறித்த நபர், வாய்த்தர்க்கம் நீண்டதில் தான் மறைத்து

வைத்திருந்த கத்தியால் உயிரிழந்த நபரின் தலை, முதுகு மற்றும் மார்புப் பகுதிகளில் குத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

அதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மில்லனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்

மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளக்கமம் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனைக்கென மாதிரியுடன் வருகை தந்த வவுனியா

வைத்தியசாலையில் பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிரதான சந்தேக நபரான முருங்கன் வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி தப்பியோடி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்புலன்ஸ் வண்டியில் போதைபொருள் கடத்தல்

முருங்கன் ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் வங்காலையை சேர்ந்த சாரதி ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் நபர் ஒருவரும் ஐஸ் போதை பொருள் விற்பனைக்கு என 179 கிராம் எடை கொண்ட மாதிரி

ஐஸ் போதைப்பொருள் பொதி ஒன்றை சனிக்கிழமை இரவு முருங்கன் பாடசாலைக்கு பின்புற மைதானத்தில் அரச அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு வந்த நிலையில் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த இரு நபர்களும் பொலிஸ் அதிகாரிக்கு கடித்து, தாக்கி தப்பிக்க முயன்ற நிலையில் பிரதான சந்தேக நபரான முருங்கன் (வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டி சாரதி) தப்பி ஓடியுள்ளார்.

மற்றைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அரச அம்புலன்ஸ் வாகனத்தில் போதை பொருள் கடத்தப்பட்டமை பல்வேறு சர்ச்சையை

ஏற்படுத்தியுள்ளது. அம்புலன்ஸ் வண்டி மற்றும் கைப்பற்றப்பட்ட ஐஸ் மற்றும் இரண்டாம் சந்தேக நபர் மேலதிக விசாரணையின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

குறித்த வங்காலையை சேர்ந்த முருங்கன்முன்னதாக பல்வேறு கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், அம்புலன்ஸ் வண்டி பல தடவைகள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகம்

தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு சந்தேக நபர்களின் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

கனடா பிரதமரின் திருமணம் முறிந்தது
Posted in இலங்கை செய்திகள் கனடா செய்திகள்

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

கனடா நாட்டு ஆளும் பிரதமர் போதைவஸ்து ,கடத்தினார் என இந்தியா நாட்டின் சங்கிகள் ஊளை இட்டு வருகின்றனர் .

இந்தியா உளவுத்துறையால் கனடாவில் வைத்து காலிஸ்தான் தலைவர் சுட்டு கொலை செய்ய பட்டார் .

அந்த படுகொலையை புரிந்தது இந்தியா தான் என கனடா தெரிவித்தது ,இதனை அடுத்து எழுந்த சர்ச்சையால் ,தற்போது தமிழக youtube சங்கிகள், வாடை வாய்கள் ,கனடா பிரதமர் போதைவஸ்து கடத்தினார் என கூவி வருகிறது .

கனடா பிரதமர் கஞ்சா போதைவஸ்து கடத்தினார் தமிழ்நாடடு சங்கிகள் கூவல்

இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் செய்திடும் பிரதமர் ,தான் சென்ற விமானத்தில் போதைவஸ்து 150 கிலோ கடத்தி சென்றார் என கூவி வருகிறது .

அடிப்படையில் , ஆதாரமற்ற ,போலி கட்டு கதைகளை பரப்பி ,மோடிக்கு வக்காலத்து வாங்கும் இந்த வாடகை வாய்களை மானமுள்ள தமிழர்களே கண்காணித்து கொள்ளுங்கள் .

கனடாவின் ,சட்டம் ஒழுங்கு ,கட்டுப்பாடு ,பழக்க வழக்கம் என மேம்பட்டு காணும் கனடாவை அதன் பிரதமரை ,தெருவில் கிடந்த வாடகை வாய்கள் ,நாய்கள் போல இவ்விதம் ஓளியிடுவது வெட்க கேடுதான் .

வீடியோ

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

புத்தளம் – வென்னப்புவ கூட்டுறவுச் சங்கத்திற்குட்பட்ட வாய்க்கால, அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கிக்குள் புகுந்த

கொள்ளையர்கள் குழுவொன்று வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்து சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பில் கூட்டுறவு கிராமிய வங்கியின் முகாமையாளர் வென்னப்புவ தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் சனிக்கிழமை (30) முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த வங்கியின் ஜன்னல் கம்பியை வெட்டி அதன் வழியாக உள்ளே சென்ற கொள்ளையர்கள், தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை (சேப்) இயந்திரங்களின் உதவியுடன் உடைத்து அதிலிருந்த தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் வங்கியில் அடகு வைத்திருந்த தங்க நகைகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 7 கோடி ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் 7 கோடி தங்க ஆபரணங்கள் கொள்ளை

குறித்த வங்கியில் சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், இந்த கொள்ளையின் பின்னர் வங்கியில் பொருத்தப்பட்ட கெமராக்களின் சில

பகுதிகளையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, குறித்த வங்கியைச் சுற்றியுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்களை பரிசோதனை செய்து,

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

video

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது

விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது

புறப்படுவதற்கு தயாரா இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த வத்தளை-ஹெந்தல பிரதேசத்தைச் சே்ந்த எச்.பீ.சுதாகர் இந்திரஜித் என்பவர் கைது

செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை, எதிர்வரும் 6ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் துரிதமாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக சில்வா கட்டளையிட்டுள்ளார்.

விமானத்தில் அமர்ந்திருந்தவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குள் இரகசியமாக உள்நுழைந்த நபர், ஜப்பானை நோக்கி பயணிக்க விருந்த விமானத்துக்குள் ஏறியே இவ்வாறு பயணிக்க விருந்தார் என்பது விசாரணைகளின் ஊடாக அறியமுடிகின்றது.

சந்தேகநபர் ஜப்பானில் தொழில்புரிந்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்துகொள்வதற்காக இலங்கைக்குத் திரும்பியுள்ளார். ஜப்பானுக்கு மீண்டும் செல்வதாக தனது மனைவியிடம் தெரிவித்துவிட்டு, செப்டெம்பர் 30ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

எனினும், ஜப்பானுக்குச் செல்வதற்கான எந்தவோர் ஆவணமும் சந்தேகநபரிடம் இல்லையென நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு

மன்னார், பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி மீன் பிடி

உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சனிக்கிழமை (30) கற்பிட்டியில் வைத்து மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் மீன்பிடி வாடி பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.குறித்த மீனவரின் வாடியில் கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த நபர் தங்கி இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் குறித்த மீன் வாடியில் வைக்கப்பட்டிருந்த படகுகளின் 2 வெளி இணைப்பு இயந்திரம் (எஞ்சின்)

உள்ளடங்களாக அட்டை பிடிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் உள்ளடங்களாக சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த வாடியின் உரிமையாளர் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

பாரிய திருட்டு முறியடிப்பு பொருட்கள் மீட்பு

இந்த நிலையில் மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராமநாயக்கவின் பணிப்புரைக்கு

அமைவாக மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணுக்க விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொருட்களை திருடிய நபர் கற்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவர் திருடி விற்பனை செய்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதோடு, மீட்கப்பட்ட பொருட்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நந்தி கடலில் ஒருவர் மரணம்

நந்தி கடலில் ஒருவர் மரணம்

முல்லைத்தீவு நந்தி கடல் பகுதித்தில் ஒருவர் மரணித்துள்ளார் .

இந்த கடலுக்குள் இவரை தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நீரில் மூழ்கிய இவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் பலியாகியுள்ளார் என தெரிவிக்க படுகிறது .

நந்தி கடல் பகுதியில் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட போராளிகள் வீரசாவடைந்தது பகுதி என்பது குறிப்பிடத்தக்கது .

வீடியோ

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடியோ

சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை

சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை ,

கனடா பயங்கரவாதிகளின் கூடாரம் என இலங்கை,
சீண்டிய நிலையில் ,இலங்கை புரிந்த போர்க்குற்ற விசாரணைகளை,
கனடா கிளற ஆரம்பித்துள்ளது .

இறுதி போர் இடம்பெற்ற கால பகுதியில் நடத்த பட்ட தமிழின படுகொலைக்கு ,
நீதி கோரும் முகமாக ,இலங்கை புரிந்த போர் குற்றம் ,
அல்ல எனவும் ,அது திட்டமிடப்பட்ட இன அழிப்பு தான் என்பதை கனடா ஏற்றுள்ளது.

சிக்கிய இலங்கை தூசி தட்டப்படும் போர்க்குற்ற விசாரணை

அதனை அடுத்து கனடா தலைமையில் இந்த விடயத்தை,
சர்வதேச நீதிமன்றுக்கு நகர்த்தும் நடவடிகையில் தமிழர் சமூகம் ஈடுபட்டுள்ளது .

பொல்லை கொடுத்து அடிவாங்கியது போல ,இலங்கை வெளியுறவு மந்திரி முசுலீம் நபர் புரிந்த செயல் ,இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இந்தியாவை குஷி படுத்த இலங்கை மேற்கொண்ட வார்த்தை பிரயோகம்,
தற்போது அதே இலங்கையை ,சிக்க வைத்துள்ளதகாவே கணிக்கப்பெறுகிறது .
வீடியோ

நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்

நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்

முல்லைத்தீவு மாவாட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்க பட்ட, உயிர் அச்சுறுத்தல் மிரட்டலுக்கு ,பசில் ராஜபக்ச கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

இலங்கையில் நீதி பாதுக்காக்க படவேண்டும் என்ற அவர் ,இவ்வாறான மிரட்டல்கள் கண்டிக்க பட வேண்டியது என முச்சந்தியில் நின்று கூவியுள்ளார்

இவர்களது கையாளாக விளங்கும் தற்கால பாதுகாப்பு அமைச்சரே ,நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார் .

நீதிபதிக்கு மிரட்டல் பசில் ராஜபக்ச கண்டனம்

ஆனால் அதனை மறைத்து தாம் நல்லவர்களாக காண்பிக்கும் நையாண்டி அரசியலை பசில் ராஜபக்ச சிறப்பாக நடாத்தியுள்ளது அமபலமாகியுள்ளது .

உலக சமூகத்தால் இலங்கை வேண்ட படாத நாடக பார்க்க படுகின்ற இவ்வேளையில் ,அதனை முறியடிக்கும் நகர்வில் இலங்கை ஆளும் அரசு ஈடுபட்டுள்ளது .

அதற்கான கண்துடைப்பு நாடகம் ஒன்று பசில் மூலம் இவ்வாறு அரங்கேற்ற படுவதாக காண முடிகிறது .

வீடியோ

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

பேரூந்து மீது காட்டு யானை ஒன்று கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது ,இதனால் அந்த பயணிகள் பேரூந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .

யாத்திரைகளை ஏற்றி சென்று கொண்டிருந்த பேரூந்து மீது ,கடந்த தினம் காட்டு யானை வழி மறித்து தாக்குதலை நடத்தியுள்ளது .

பேரூந்து மீது காட்டு யானை தாக்குதல்

அனுராதபுரம் ஓயாமடுவ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதற்கு முன்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக மக்கள் வனவள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர் .

ஆனால் அவர்கள் அதனை செவி சாய்க்கவில்லை என தெரிவிக்க படுகிறது .

காட்டு யானையின் தாக்குதல் சம்பவம் அந்த மக்கள் மத்தியில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொதிக்கலனுக்குள் வீழ்ந்து இந்தியர் மரணம்

இலங்கையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் கொதிக்கலனுக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார் .

இவர் அந்த சூடு தண்ணீர் கொதிக்கலனுக்குள் ,தவறி வீழ்ந்து பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகின்ற பொழுதும் ,குடும்ப உறவுகள் அதனை ஏற்க மறுத்து வருகின்றனர் .

இலங்கையில் நாள் தோறும் மர்ம படுகொலைகள் இடம்பெற்று வரும் இவ்வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,சந்தேகத்தை கிளப்பியுள்ளது .

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வெலிபென்ன காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்

தீயில் எரிந்த மருத்துவமனை நோயாளர்கள் ஓட்டம்

தீயில் எரிந்த மருத்துவமனையில் நோயாளர்கள் சிதறி ஓடிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை திருகோணமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் திடீரென தீபரவல் ஏற்பட்டுள்ளது .

இந்த தீயானது வேகமாக பரவி பற்றி எரிய ஆரம்பித்துள்ளது .

தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுதும் ,இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்ப்பில் தெரிவிக்க படவில்லை .

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

எனினும் மக்கள் உயிர்களுக்கு சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது .

வீடியோ

மனைவியை காணவில்லை தேடும் கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை காணவில்லை தேடும் கணவன்

மனைவியை காணவில்லை தேடும் கணவன்

இலங்கையில் தனது இளம் மனைவியை காணவில்லை என கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .

பத்தொன்பது வயதுடைய மனைவி 19 ஆம் திகதி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .

வேலைக்கு சென்று வீடு திரும்பிய பொழுது ,வீட்டில் மனைவி காணாமல் போயிருந்ததாக ,கணவன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் .

மனைவியை காணவில்லை தேடும் கணவன்

அயல் வீடுகளில் விசாரித்த பொழுதும் ,மனைவி அங்கு கண்டு பிடிக்க முயாத நிலையில் ,இந்த முறைப்பாடு செய்ய பட்டுள்ளது .

இவர் காணமல் போன சமபவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது.

,இவ்விதம் காணாமல் போகும் பெண்கள் சடலங்களாக, மீட்க பட்டு வரும் நிலையில் ,இந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது . .

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை
Posted in இலங்கை செய்திகள்

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை

உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை சாதனை படைத்துள்ளது .

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியில் ஏற்பட்ட லஞ்ச ஊழல் மோசடி ,கொள்ளையால் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்தது .

இதனை அடுத்து தற்பொழுது அப்பாவி மக்கள் பொருளாதாரத்தில் பாதிக்க பட்டுள்ளனர் .அவ்வாறான நிலையில் தற்போது மின்சார கட்டணம் அதிகரிக்க பட்டுள்ளது .

உலகில் அதிக மின்சார கட்டணம் இலங்கை சாதனை

திடீர் மின்சார கட்டண உயர்வினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

உலகில் அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடாக ,தற்போது ரணில் அரசாங்கம் சாதனை படைத்துள்ளதாக, மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

மக்கள் வலிகளை குறைக்க மறுக்கும் அரசு தமது கொள்ளையில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறது .

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இலங்கையில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நாள் தோறும் இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான மர்ம கொலைகள் ,எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் சந்தேகங்கள் வெளியிட பட்டுள்ளது .

பண்டாரவத்தை, பொக்குனுவிட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த 23 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

நாள் தோறும் இலங்கையில் மிதக்கும் மனித சடலங்களினால் , மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .