Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்
கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்
கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம் தான் காரணம் என்றும், கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை
கண்டுகொள்ளாமல் தரையிறக்க முயன்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்
விபத்து பகுதியில் நடைபெற்ற மீட்பு பணி
கராச்சி:
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து நேற்று முன்தினம் கராச்சி நோக்கி சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்டபோது அருகில் உள்ள குடியிருப்பில் விழுந்து
நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 97 பேர் மரணம் அடைந்தனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை பைலட் மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி
மதியம் 1.05 மணிக்கு லாகூரில் புறப்பட்ட அந்த விமானம் 2.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கவேண்டும். 2.30 மணிக்கு கராச்சியில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் விமானம்
பறந்தபோது, தரையில் இருந்து 7000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 10000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இதனைக் கவனித்த
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், உயரத்தை குறைக்கும்படி பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், விமானம் பறக்கும் உயரத்தை குறைப்பதற்கு பதிலாக, சரியாக இருப்பதாக கூறி உள்ளார். கராச்சி விமான நிலையத்தை அடைய 10 நாட்டிக்கல் மைல் இருந்தபோது, விமானம் பறக்கும்
உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்துள்ளது. எனவே, இரண்டாவது முறை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் எச்சரிக்கை
விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போதும் தனக்கு திருப்தி அளிப்பதாக கூறிய பைலட், விமானத்தை தரையிறக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
எலும்புகூடு
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்த நாட்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு
சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘கொலம்பியாவின் மிகப்பெரிய விலங்கினங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராட்சத யானை, காட்டெருமை,
ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றின் எலும்புக்கூடுகளுடன் மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன’’ என கூறினர்.பனியுக காலத்தின் விலங்குகளின் எலும்புக்கூடுகளை
கண்டுபிடிப்பதில் இந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த டிசம்பரில் இதே தொல்லியல் குழுவினர் சிறு சிறு விலங்குகளின் எலும்புகளைக் கண்டெடுத்தது
நினைவுகூரத்தக்கது.ஸ்பானிய
காலனியாதிக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் விமானநிலைய கட்டுமானத்தை தடுத்து
நிறுத்துவதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கருத்தும் பொதுமக்களிடையே நிலவுகிறது. ஆனால் தொல்லியல் குழு இதனை மறுத்துள்ளது.

அவுஸ்ரேலியாவில் காரில் மோதி ஒரு சிறுவர்கள் பரிதப பலி
அவுஸ்ரேலியாவில் காரில் மோதி ஒரு சிறுவர்கள் பரிதப பலி
அவுஸ்ரேலியா southwest Queensland பகுதியில் காரில் மோதி இரு சிறுவர்கள் பரிதாபகமாக பலியாகியுள்ளனர்
பத்து வயது மற்றும் பதினாறு வயது இளம் சிறுவர்களே இந்த கோரவிப்பதில் சிக்கி தமது உயிரை இழந்துள்ளனர்
ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
அமெரிக்காவில் சாராய கடைக்குள் புகுந்த கார்
அமெரிக்காவில் சாராய கடைக்குள் புகுந்த கார்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று
சாரதியின் கட்டு பாட்டை இழந்து மதுபான கடைக்குள் புகுந்துள்ளது
அப்பபோழுது அங்கு மதுபான கொள்வனவில் ஈடுபட்டு கொண்டிருந்த
பெண் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்
கடையின் கண்ணாடிகள் மற்றும் ,சாராய போத்தல்கள் என்பன உடைந்து சிதறிய வண்ணம் காணப்படுகின்றன
மினி வானுக்குள் சிக்கியவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம்
தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

எங்கள் மீது அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது – வெடித்த பறக்கும் சீனா ,அமெரிக்கா மோதல்
எங்கள் மீது அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது – வெடித்த பறக்கும் சீனா ,அமெரிக்கா மோதல்
சீனா அமெரிக்காவின் தொடர் பொய்யான பரப்புரைகளை
கண்டித்துள்ளது ,கொரனோ நோயானது பரவிய நிலையில் தாமே
உற்பத்தி செய்து பரப்பியதான பொய்யான தகவல்களை பரப்பி எமது
நாட்டின் நற்பெயருக்கு அமெரிக்கா களங்கம் ஏற்படுத்தி வருகிறது என அமெரிக்கா இடித்துரைத்துள்ளது
இது சீனா ,அமெரிக்காவுக்கு இடையிலான நேரடி பனிப்போரை உருவாக்காகியுள்ளது
இவ்விதம் அமெரிக்கா தொடர்ந்து செல்லும் என்றால் அது பெரும் விளைவுகளை
சந்திக்க நேரிடும் என்ற வகையில் சீனாவின் அடர்த்தியான பதில் வெளிவந்துள்ளது
பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்
பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகர் தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.
பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்
பழ வியாபாரம் செய்யும் சோலங்கி திவாகர்
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த
மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால்
பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.
மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

கொரனோவால் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி
கொரனோவால் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது.
3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்
கோப்பு படம்
ஜெனீவா:
உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது.
தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 23 ஆயிரத்து 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்
பரவியவர்களில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
. சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 589 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம்
முழுவதும் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 97,655
பிரேசில் – 21,116
ஸ்பெயின் – 28,628
இங்கிலாந்து – 36,393
இத்தாலி – 32,616
பிரான்ஸ் – 28,289
ஜெர்மனி – 8,352
ஈரான் – 7,300
கனடா – 6,250
மெக்சிகோ – 6,989
பெல்ஜியம் – 9,237
நெதர்லாந்து – 5,788
வரும் மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் – ஐ.நா. எச்சரிக்கை
வரும் மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் – ஐ.நா. எச்சரிக்கை
அடுத்த மாதம் இந்தியாவுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் – ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை
வெட்டுக்கிளி
உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி
கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும்.
பாலைவன வெட்டுக்கிளி – கோப்புப்படம்
தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா,
சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன.
அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி
கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 10 நாடுகளில் வெட்டுக்கிளி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட
நாடுகளுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அதற்கான நிபுணர்களையும், மருந்துகளையும்
விமானம் மூலம் அனுப்பி, வானில் இருந்து மருந்து தெளித்தல் ஆகியவை எங்கள் பணிகள் ஆகும். இதற்காக உலக நாடுகள் 15
கோடியே 30 லட்சம் டாலர் நிதி ஒதுக்க வேண்டும்.அடுத்த மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்த வெட்டுக்கிளிகள் இந்திய
பெருங்கடலை கடந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் படையெடுக்கும். அத்துடன், வடக்கு சோமாலியாவில் இருந்து வேறு சில பூச்சி இனங்களும் வரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் – வைரலாகும் வீடியோ
மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் – வைரலாகும் வீடியோ
சமூக வலைத்தளத்தில் நடிகர் அஜித் தன் மனைவியுடன் மருத்துவமனைக்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
மருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் – வைரலாகும் வீடியோ
அஜித்
அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் படத்தின் பணிகள் ரத்து
செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் தனது மனைவியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் வீடியோ
வெளியாகியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் இந்த வீடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கின்போது அஜித் எதற்காக மருத்துவமனை சென்றார் என்று விசாரித்தபோது, அவரது அப்பா கடந்த சில
வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாலேயே அஜித் மருத்துவமனை சென்றதாக கூறப்படுகிறது

நடிகர் அஜித் தனது மனைவியுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து செல்லும் வீடியோ….#Ajith #ThalaAjith pic.twitter.com/W4jugD5IUw
— Sathishwaran PRO (@SathishwaranPRO) May 22, 2020
பிரிட்டனில் முஸ்லீம் பெண்ணை சுட்டு கொன்ற இருவர் கைது
பிரிட்டனில் முஸ்லீம் பெண்ணை சுட்டு கொன்ற இருவர் கைது
பிரிட்டனில் இளம் முஸ்லீம் பெண் ஒருவரை சுட்டு படுகொலை
புரிந்த இரு முஸ்லீம் நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
மக்கள் வழங்கிய தகவலை அடுத்து இந்த் இருவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை
சிரியாவில் இரு (ISIS) தளபதிகள் சுட்டு கொலை
சிரியாவில் இரு (ISIS) தளபதிகள் சுட்டு கொலை
சிரியாவில் ரசியா இராணுவத்தினர் நாடத்திய திடீர் சுற்றிவளைப்பு
தேடுதல் நடவடிக்கையின் பொழுது பிராந்திய கட்டளை
தளபதிகளாக செயல் பட்டு வந்த இரண்டு ஐ எஸ் தீவிரவாதிகள்
படுகொலை செய்ய பட்டுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
மேலும் இரு நாட்டு படைகள் கூற்று தேடுதல் .,மற்றும், பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு
அடம்பன் புயலினால் 80 பேர் பலி – 14 மில்லியன் மக்கள் பாதிப்பு
சிலோன் அடம்பன் புயலின் கோர தண்டவத்தில் சிக்கி எண்பது பேர்
இதுவரை பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த புயலானது மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில்
வீசியது ,இதனால் வெள்ள பெருக்கு
ஏற்பட்டது பல்லாயிரம் வீடுகள் அழிக்க பட்டுள்ளது
மேலும் இந்த புயலினால் சுமார் பதின் நான்கு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்
வீடுகளை இழந்த மக்களுக்கு அரசு உதவுவதாக அறிவித்துள்ளது
இந்தியா பெங்கால் பகுதியில் 73 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளை இழந்த
மக்கள் வீதிகள் மற்றும் பொது இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு
பிரிட்டனில் – காணாமல் போன இளம் பெண் காட்டுக்குள் சடலமாக மீட்பு
பிரிட்டனில் காணாமல் போன பதினாறு வயது இளம் பெண் ஒருவர்
woodland in Havant, Hampshire காட்டு பகுதி ஒன்றுக்குள் இருந்து
சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரை கடத்தி சென்ற தம்பதிகள் கைது செய்ய பட்டு பிணையில் விடுவிக்க பட்டுள்ளனர் ,
இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பாகிஸ்தானில் 159 ஊடக நபர்களுக்கு கொரனோ – மூவர் பலி
பாகிஸ்தானில் 159 ஊடக நபர்களுக்கு கொரனோ – மூவர் பலி
பாகிஸ்தானில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி 159 ஊடக நபர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதில் மூவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்
மேலும் இந்த நோயினை கட்டு படுத்த சுகாதாரா அமைப்பு பல்வேறு நடவடிக்கையை
முன்னெடுத்து வருவதாக அந்த நாடு அறிவித்துள்ளது
கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
கனடா Markham பகுதி வீட்டில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு
கண்டா மார்க்கம் Bur Oak Avenue and Kenned Road பகுதியில் வீடொன்றில் காணாமல் போன பன்னிரெண்டு வயது சிறுவன்
எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளான்
போலீசார் நடத்திய தொடர் தேடுதலின் பின்னர் இந்த சிறுவன் மீட்க பட்டுள்ளான்
குறித்த மாரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு
கனடாவில் ஒரே இரவில் மூன்று இடங்களில் துப்பாக்கி சூடு
கனடாவின் கடந்த தினம் மதியம் தொடர் இரவு வரையான கால
பகுதியில் மூவேறு இடங்களில் நடத்த பட்ட சட்டவிரோத துப்பாக்கி
சூட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்
இவ்வாறு காயமடைந்தவர்கள் பதின் ஐந்து வயதுடைய சிறுவனும் என தெரிவிக்க பட்டுள்ளது
கனடா Grandravine Drive. பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலத்த
காயமடைந்த நிலையில் நபர் ஒருவர் ஆபாத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அவுஸ்ரேலியாவில் மின்னல் தாக்கி வீடு சேதம்
அவுஸ்ரேலியாவில் மின்னல் தாக்கி வீடு சேதம்
அவுஸ்ரேலியா South Australia’s Barossa Valley.பகுதியில் கடந்த பிற்பகல்
வேளையில் திடீரென மின்னல் தாக்கியதில் அந்த வீடு
சேதமடைந்துள்ளது வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து அழிந்துள்ளது
தனிமையில் ஒதுக்கு புரத்த்தில் இருந்த வீட்டின் மீதே இந்த மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
மேற்குலக நாடுகளில் மின்னல் இவ்விதம் தாக்கிடா வண்ணம் கருவிகள் பொருத்த பட்டுள்ளன
அவ்விதம் இருந்தும் இங்கே இந்த மின்னல் தாக்கியுள்ளமை குறிப்பிட தக்கது

ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை
ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா
இராணுவம் எச்சரிக்கைஈரானிய நீரூந்து விசை படகுகள் தமது
கப்பல் அருகில் வந்தால் ,அந்த
படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது
தமது கப்பலில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் இந்த படகுகள் வந்ததாகவும்
இவ்வாறு மீள் ஒருதடவை வந்தால் அவற்றை சுட்டு தாக்கி அழிக்கு மாறு டிரம்ப் அறிவித்தல் விடுத்துள்ளார்
இதனை அடுத்து ஈரான் மீளவும் அதேபோல சுற்றி வளைத்ததினால் பதட்டம் நிலவி வருகிறது

ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு
ஆயுதம் கடத்தல் குழு மீது இராணுவம் துப்பாக்கி சூடு
ஜோர்டான் நாட்டின் எல்லை வழியாக ஆயுதங்கள் கடத்தி வந்த இருவர்
மீது தமது இராணுவம் துப்பாக்கி தாக்குதல் நடாத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி இருவர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் தற்போது
பாதுகாப்பு சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
கூகிள் அமேசேனுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக் – Shops, service திறப்பு
கூகிள் அமேசேனுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக் – Shops, service திறப்பு
உலக மக்களை கட்டி போட்டு ஆண்டு வரும் பேஸ்புக் தற்போது புதிதாக
Shops, a service என்ற ஒன்றை அறிமுக படுத்தியுள்ளது ,இதன் ஊடாக வியாபாரிகள்
,தமது நிறுவனனங்களின் விளமப்ரங்களை புரியலாம் .இந்த விபரங்கள்
பேஸ்புக் ,வாட்சாப் ,மற்றும் இன்ஸடர்கிராம் போன்றவற்றின் ஊடக இணைக்க பட்டுள்ளது
பேஸ்புக்கில் பதிவிட படும் விளம்பரங்கள் அனைத்தும் ,ஏனைய இரு தளங்களிலும் சமவேளை பகிர படும் .
நாள் ஒன்று 800 மில்லியன் பேர் பேஸ்புக்கில் காணொளிகளை பார்வையிட்டு
வருவதாகவும் ,இந்த காணொளியில் குறித்த விபரங்கள் வெளியிட படும் ,அவை youtube தளம் போன்ற ஒன்றாக மாற்றம் பெறுகிறது
இது கூகிள் மற்றும் அமோசென்,epay போன்ற நிறுவனங்களின் பொருளாதாரத்திற்கு ஆப்படிக்கும் முகமாக பேஸ்புக் இந்த செயலை புரிகிறது
அதே வேளை தற்பொழுது நிறுவனங்கள் வைத்துள்ளவர்களுக்கு ஆப்படித்து வருகிறது பேஸ்புக்
நீங்கள் நிறுவனம் வைத்திருந்தால் பேஸ்புக்கில் பணத்தை
செலுத்தியே பதிவுகளை பகிரும் நிலை தோற்றபாடு உருவாக்கி வருகிறது ,
இதனால் நம்ம தமிழர்கள் பலர் பேஸ்புக்கை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர் .
இவர்கள் இவ்விதம் இருக்க அதற்கு புதிய வழியொன்றை கடை பிடித்து
அதன் ஊடாக பல தமிழர் நிறுவனங்கள் தாவி பாய்கின்றன ,ஆனால்
இந்த விடயம் பல தமிழர் நிருவனங்களை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மையாக நிலவுகிறது
ஒரு வாசல் அடைத்தால் மறு வாசல் திறக்கும் என்பது இது தான் போலும் ,
உலகின் முக்கிய நிறுவனங்களை மிரட்டி ஓரம்கட்டி வரும் இந்த பேஸ்புக்கை வீழ்த்திட மேலே கூறப்பட்ட நிறுவனங்கள் என்ன செய்ய போகின்றன ..?








