Posted in உலக செய்திகள்

ஆழ குழியில் வீழ்ந்த சிறுவன் உயிருடன் மீட்பு

ஆழ குழியில் வீழ்ந்த சிறுவன் உயிருடன் மீட்பு

அவுஸ்ரேலியாவில் ஆழ குழியில் விழுந்த சிறுவன் ஒருவன் மீட்பு

படையினரால் உயிருடன் காப்பாற்ற பட்டுள்ளான் .

மலையடி உயரத்தில் உள்ள அருவியின் அருகில் உள்ள குழிக்குள் இவன்

வீழ்ந்து சிக்கி கொண்டான் ,மீட்பு படையினர் நடத்திய நான்கு மணிநேர

மீட்பு பனியின் பின்னர் அவன் உயிருடன் மீட்க பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது

மீட்க பட்ட சிறுவன் தொடர் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்க பட்டுள்ளான்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாடளாளவிய ரீதியில் 2 வாரத்தில் புதிய அடித்துபூட்டும் சட்டம்

பிரிட்டனில் நாடளாளவிய ரீதியில் 2 வாரத்தில் புதிய அடித்துபூட்டும் சட்டம்

பிரிட்டனில் எதிர்பார்த்த படி மிக வேகமாகபரவி வரும் கொரனோ நோயின்

பரவலை அடுத்து எதிர்வரும் இருவரத்தில் இருந்து புதிய அடித்து பூட்டும் நிகழ்வுகள் ஆரம்பிக்க படவுள்ளது

இவ்வேளை புதிய சட்டங்கள் அறிமுக படுத்த படவுள்ளன ,இதில் பார்கள்

,உணவகங்கள் அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் ,வீட்டுக்கு

ஒருவர் மட்டுமே வெளியில் செல்லும் நடைமுறை கொண்டுவர படுகிறது

,அயல்வர் வீடுகளுக்கு செல்லவோ அவர்கள் நமது வீடுகளுக்கு வரவோ

முடியாது ,தற்போது உள்ள சட்டத்தை விட மேலும் சில சட்டங்கள் இறுக்கமாக வருகிறது .

அடித்து பூட்டும் நிகழ்வில் ,ஒன்று ,இரண்டு ,மூன்று என அறிமுக படுத்த

படுகிறது அதில் ,ஒன்று இரண்டு ,எதிர் வரும் வாரத்தில் அமூல் படுத்த படுகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்

12 பேர் கழுத்துவெட்டி படுகொலை- உலகை உலுப்பிய பயங்கரம்

மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்சிகோவில் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்தை அறுத்து படுகொலை

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகம்.

இந்த கும்பல்களுக்கு இடையே நடைபெறும் சண்டையில், நூற்றுக்கணக்கானோர் கொல்லப்படுவது அங்கு வெகுசாதாரணம்

. இந்தநிலையில் மெக்சிகோவின் வடக்கு பகுதியில் உள்ள சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்கிற

நகரில் உள்ள சாலையில் 2 வேன்கள் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தன.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேன்களை சோதனையிட்டபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

2 வேன்களிலும் தலா 6 பிணங்கள் கிடந்தன. 2 பெண்கள் உள்பட 12 பேரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர்.

அவர்கள் அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்க முப்படை தலைமை தளபதிக்கு கொரனோ

அமெரிக்க முப்படை தலைமை தளபதிக்கு கொரனோ

அமெரிக்க கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா உறுதியானதையடுத்து அந்நாட்டின் முப்படைகளின் தலைமை

தளபதி உள்பட பாதுகாப்புபடையின் முக்கிய தலைவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டனர்.

கடலோர காவல்ப்படை துணைதளபதிக்கு கொரோனா – தனிமைப்படுத்திக்கொண்டார் அமெரிக்க முப்படை தலைமை தளபதி


முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி
வாஷிங்டன்:

அமெரிக்காவில் வெள்ளைமாளிகையை தொடர்ந்து தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையிடமான பென்டகனிலும் கொரோனா வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.

வெள்ளைமாளிகையில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவே

அதிபர், உள்பட முக்கிய அதிகாரிகளுக்கு கொரோனா பரவுவது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கடந்த 27-ம் தேதி வெள்ளைமாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க கடலோர காவல்ப்படை

துணைதளபதியான சார்லஸ் ரே பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடமான பென்டகனில் நடந்த நிகழ்ச்சிகளிலும் சார்லஸ் பங்கேற்றார்.

பென்டகன் நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி


ஜெனரல் மார்க் மில்லி, முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அந்நாட்டின்

பாதுகாப்புத்துறையின் அனைத்து தலைமை தளபதிகளும், மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்நிலையில், அதிபர் டிரம்பிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், வெள்ளைமாளிகை நிகழ்ச்சியில்

பங்கேற்ற கடலோர காவல்ப்படை துணைதளபதி சாரலசுக்கு கடந்த 2-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த

பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, பென்டகனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க முப்படை தலைமை தளபதிஹ் ஜெனரல் மார்க் மில்லி,

முப்படை துணைதளபதி, ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதி என அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முப்படை தலைமை தளபதி உள்பட அமெரிக்க

பாதுகாப்புத்துறையின் தளபதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பென்டகன் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடத்திலும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அதிகாரிகள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 76பேர் பலி – 14,542 பேர் பாதிப்பு

பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ

நோயின் தாக்குதலில் சிக்கி எழுபத்தி ஆறு பேர் பலியாகியுள்ளனர், மேலும் 14,542 பேர் பாதிக்க பட்டுள்ளனர்


இன்று மட்டும் சுமார் வழமைக்கு மாறாக ஐரண்டாயிரம் பேர் அதிகமாக பாதிக்க பட்டுள்ளனர்

எதிர்வரும் வாரம் முதல் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க

படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

,இவ்வாறு நோயின் தாக்குதல் அதிகரித்தால் முற்று முழுதாக பிரிட்டன்

முடங்கும் நிலைக்கு செல்லும் என அபாயம் வெளியிட பட்டுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்

சர்ச்சையை ஏற்படுத்திய பிரிட்டனில் 250 பேருடன் இடம்பெற்ற இந்தியர் திருமணம்

பிரிட்டனில் கொரனோ நோயின் காரணாமாக நிகழ்வுகளில் பதின் ஐந்துபேருக்கு

மேல் கலந்து கொள்ள கூடாது என தடை சட்டம் விதிக்க பட்டுள்ளது

அவ்வாறு மீறுபவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகிறது

ஆனால் இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை 250 பேரை

கூட்டி மிக பிரமாண்டமாக செய்துள்ளதுடன் ,அங்கு அவர்களது

நிகழ்வை பெரும் திரையில் காண்பித்துள்ளார்

மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் ,.சட்ட விதிகளை

மீறினார்கள் என்ற குற்ற சாட்டில் தண்டமும் அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இத்துடன் இவர்கள் திருமணம் உலக புகழ் பெற்ற ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரான்சில் கொரனோ – நிகழ்வுகள் நடத்த தடை – பார்கள் பூட்ட உத்தரவு

பிரான்சில் கொரனோ – நிகழ்வுகள் நடத்த தடை – பார்கள் பூட்ட உத்தரவு

பிரானில் மீள வேகமாக பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து

தற்போது நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க பட்டுள்ளது ,மக்கள் ஒன்று

கூடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,மேலும் பார்களில் விசேட நிகழ்வுகள் நடத்தவும்


இன்று முதல் தடைகள் விதிக்க படுகிறது என அரசு அறிவித்துள்ளதும் .

நோயின் தாக்கம் அதிகரித்தால் மேலும் தடை உத்தரவுகள் இறுக்கம் பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது ,


பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் ,தண்ட பணம் அறவீடு அதிகரிக்க உள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்

பிரிட்டனில் பாடசாலையில் உணவு உட்கொண்ட 13 சிறார்கள் வைத்தியசாலையில்

பிரிட்டன் La Sainte Union Catholic பாடசாலையில் காலை உணவை உட்கொண்ட 13 சிறுவர்கள்


வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளன
இவர்கள்

உட்கொண்ட சுவீட் நச்சு தன்மையடைந்ததினால் இவ்வாறு சுகவீனம் அடைந்துள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் சினிமா

நடிகை தமன்னாவுக்கு கொரோனா

நடிகை தமன்னாவுக்கு கொரோனா

ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்து

கொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை தமன்னாவுக்கு கொரோனா – ஆஸ்பத்திரியில் அனுமதி
தமன்னா


கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய்

ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன்,

சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

அந்த வகையில், ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா

அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமன்னா

தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் தமன்னா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக

வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட்

மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரனோ தாக்கம் -22,961 பேர் பாதிப்பு

பிரிட்டனில் அதிகரித்துள்ள கொரனோ தாக்கம் -22,961 பேர் பாதிப்பு

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸின்

தாக்குதலினால் சிக்கி 22,961 ஒரே நாளில் கடந்த தினம் பாதிக்க பட்டுள்ளனர் ,

இம்மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்

என எச்சரிக்கை பட்டு இருந்த நிலையில் இந்த தோற்று அதிகரித்துள்ளது ,

எதிர்வரும் மூன்று வாரத்திற்குள் நாடு முழு லொக்கடவுன் நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது .

காலநிலை சீற்றத்தின் காரணமா இந்த நோயின் பரவல் அதிகரிப்பு தீவிரம்

பெற்று வருவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது ,மக்களே எச்சரிக்கை ம், பொருட்களை

கொள்வனவு செய்து வைத்து கொள்ளுங்கள் ,விரைவில் அடித்து பூட்டும் நிலை ஆரம்ப மாகலாம்

Posted in உலக செய்திகள்

பிரான்ஸ்,இத்தாலி ,எல்லையில் மிதக்கும் மனித சடலங்கள்

இத்தாலியில் இடிந்து வீழ்ந்த 100வீடுகள் – பிரான்ஸ்,இத்தாலி

,எல்லையில் மிதக்கும் மனித சடலங்கள்

இத்தாலி பிரான்ஸ் எல்லையில் ஏற்பட்ட பாரிய வெள்ள பெருக்கு

மண்சரிவில் சிக்கி நூறு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன

இதில் ஏழுக்கு மேற்பட்ட சடலங்கள் குறித்த இரு நாட்டு எல்லையில் காண படுகின்றன

மேலும் பத்துக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க

படுகிறது ,உயிர் சேதங்கள் அதிகரிக்கலாம் என நம்ப படுகிறது

,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இத்தாலியில் இடிந்து வீழ்ந்த
இத்தாலியில் இடிந்து வீழ்ந்த
Posted in உலக செய்திகள்

சீனாவில் விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பலி

சீனாவில் விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பலி

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிலின் மாகாணம் புயூ நகரிலுள்ள

நெடுஞ்சாலையில் நேற்று காலை சரக்கு லாரி ஒன்று வேகமாக சென்று

கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது.

இதையடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்றின் மீது லாரி

பயங்கரமாக மோதியது. அதன் பின்னரும் நிற்காமல் ஓடிய லாரி சாலையின்

நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்திசையில் பாய்ந்தது.

அப்போது எதிர் திசையில் வந்த ஒரு மினி வேனுடன் லாரி நேருக்கு நேர் மோதியது.

இந்த சங்கிலி தொடர் விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி

பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Posted in உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி வீடு திரும்பினார்

அமெரிக்க ஜனாதிபதி வீடு திரும்பினார்

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி

டொனால்ட் டிரம்ப் இன்று (05) வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலைக்கு

அருகாமையில் இருந்த ஆதரவாளர்களுக்கு வாகனத்தில் இருந்துகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் இரண்டாவது முறையாகவும்

ரம்மினால் காணொளி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. தாம் நலமுடன் இருப்பதாக இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in உலக செய்திகள்

$206 மில்லியன் போதைவஸ்து மடக்கி பிடித்த மூன்று நாட்டு கடற்படை

$206 மில்லியன் போதைவஸ்து மடக்கி பிடித்த மூன்று நாட்டு கடற்படை –

கரபியன் பகுதியில் இருந்து அமெரிக்கா வழியாக நெதர்லாந்து

குரோனிங்கம் மற்றும் லண்டனுக்குள் கடத்தி வரப்பட்ட

இருநூற்றி அறுபது மில்லியன் பெறுமதியான போதைவஸ்தினை மூன்று

நாட்டு உளவுத்துறையினர் வழங்கிய தகவலை அடுத்து கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்

தொடர்ந்து இந்த குழுவின் பின்னால் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்

சர்வதேச போலீசார் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றனர்

மில்லியன் போதைவஸ்து
மில்லியன் போதைவஸ்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் Lancashire பகுதியில் காலை எட்டு நாற்பத்தி ஐந்து மணியளவில்

வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,இதன் பொழுது அந்த வீட்டுக்குள்

வசித்து வந்த 49 வயதுடைய மருத்துவ பெண்மணி மற்றும் அவரது

மகள் 14 வயது ஆகியோர் உடல் கருகி பலியாகினர்

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

, விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்

மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்

அர்மேனியா இராணுவத்தினர் தொடர்ந்து தமது எதிரி படைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்,

அவ்விதம் நடத்த பட்ட வான் வழி ஏவுகணை தாக்குதல் மூலம் தாம் எதிரிகளின்

மூன்று விமானங்களை சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதன்

பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதுடன் அதன் காட்சிகளையும் வெளியிட்டுள்ளன

இதுவரை 15 வானூர்திகளை கடந்த ஒரு வாரத்திற்குள் சுட்டு வீழ்த்தியுள்ளது

,இது பெரும் அதிர்ச்சியை எதிரி படைகளிற்கு ஏற்படுத்தியுள்ளது .குறித்த

இராணுவத்திற்கு இஸ்ரேல் ,அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in உலக செய்திகள்

7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்

7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்

லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர். அவர்களை விடுவிக்க

வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

லிபியா நாட்டில் 7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்
பயங்கரவாதி

வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடான லிபியாவில் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அடிக்கடி வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர்.

அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் முன்னா சவுகான். இவர் உத்தரபிரதேச மாநிலம், குஷி நகர் மாவட்டம், கர்ஹியா பசந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.

அவர் கடத்தப்பட்டது குறித்து உறவினர் லாலன் பிரசாத் கூறும்போது, “ முன்னா சவுகான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்

டெல்லியில இருந்து ஒரு நிறுவனம் மூலம் லிபியாவுக்கு வேலைக்கு சென்றார். அவரது விசா காலம் கடந்த மாதம் 13-ந் தேதியுடன்

முடிவடைந்துள்ளது. அன்று அவர் குடும்பத்தினருடன் போனில் பேசும்போது லிபியாவில் இருந்து விமானம் மூலம் 17-ந் தேதி டெல்லிக்கு வருவேன் என்று தெரிவித்தார்.

அதன்பின் அவர் பேசவில்லை. கடந்த 27-ந் தேதி நான் டெல்லி சென்று அவரை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்திடம் விசாரித்த

போது முன்னா சவுகானை தீவிரவாதிகள் கடத்தி விட்டனர் என்று தெரிவித்தனர். தீவிரவாதிகள் கேட்ட தொகையை நிறுவனமே செலுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

இதுகுறித்து லாலன் பிரசாத் டெல்லி போலீசில் புகார் செய்து உள்ளார். லிபியாவில் கடத்தப்பட்டுள்ள 7 இந்தியர்களை மீட்க

இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி
ரிப்பன் வெட்டி சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி

இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி

பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதை கருத்தில்கொண்டு, மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில்

சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி, அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது.

அதையடுத்து, கட்ட தொடங்கப்பட்ட ரோதங் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என்று பெயர் சூட்ட

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அரசு முடிவு செய்தது. எல்லை சாலை அமைப்பு, தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது.

சுரங்கப்பாதை

இதனையடுத்து அடல் சுரங்கப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பளித்தார்.

திறப்பு விழாவை தொடர்ந்து, லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிஸ்சு என்ற இடத்திலும், மற்றும் சோலங்கி பள்ளத்தாக்கிலும் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இது, உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும். 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை

மூலம் எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லலாம்.

இப்பாதை காரணமாக, சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும்

. பயண நேரம் 5 மணி நேரம் குறையும். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இது, இருவழி சுரங்கப்பாதை ஆகும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும்வகையில்

சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலைக்கு மாற்றம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வைத்தியசாலைக்கு மாற்றம்

அவரை ஹெலிக்கொப்டர் மூலம் வோல்டர்-றீட் இராணுவ மருத்துவ மனைக்கு கொண்டு செல்வதாக வெள்ளை மாளிகை

அறிவித்துள்ளது. இதுவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையென வெள்ளை மாளிகை விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கும், அவரது பாரியாருக்கும் புதன்கிழமை கொவிட்-19

தொற்று உறுதி செய்யப்பட்டது. திரு.ட்ரம்பிற்கு ஆரம்பகால நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அவர்

களைப்படைந்திருந்தாலும்இ பலத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது..

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுகுறித்து தனது சுட்டுரை பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மெலானியா டிரம்ப்புக்கும், எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. நாங்கள் இருவரும் உடனடியாக வெள்ளை மாளிகையில் எங்களை

தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். நோய்த்தொற்றிலிருந்து குணமடைவதற்கான வழிமுறைகளை உடனடியாகத்

தொடங்கியுள்ளோம். இருவரும் இணைந்து, விரைவில் இந்த நோய்த் தொற்றிலிருந்து மீள்வோம் என்று அந்த சுட்டுரைப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.

துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ டிரம்ப்பும் அவரது மனைவியும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து

குணமடைய, லட்சக்கணக்கான அமெரிக்கா்களுடன் இணைந்து எங்களது குடும்பத்தினரும் பிராத்தனை செய்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கொரோனா நோய்த்தொற்றிலிருந்து டிரம்ப் பூரண குணமடைய விழைவதாக, இந்திய பிரதமா் நரேந்திர மோடிஇ பிரிட்டன் பிரதமா்

போரிஸ் ஜான்ஸன்இ ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில்இ டிரம்ப்புக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தோ்தல் பிரசாரத்தை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

கொரானாவுக்கு உரிய விலையினை டிரம்ப் கொடுத்துள்ளார் – சீனா சீண்டல்

கொரானாவுக்கு உரிய விலையினை டிரம்ப் கொடுத்துள்ளார் – சீனா சீண்டல்

அமெரிக்கா அதிபர் மற்றும் அவரது மனைவிக்கு கொரனோ நோயானது

உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,தற்போது அமெரிக்காவும் ,அதன்

தலைவர் டிரம்பும் அதற்குரிய விலையினை கொடுத்துள்ளதாக சீன பகீரங்கமாக அறிவித்துள்ளது

சீனா மீது கடும் இனவாத .பொருளாதார முற்றுகையை நடத்திய டிரம்ப்

தற்போது அங்கு வேகமாக பரவிய கொரனோ நோயினால் பீடிக்க

பட்டுள்ளது எதிரி நாடுகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது