Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
அமேசோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் 20ஆயிரம் பேருக்கு கொரனோ
அமேசோனில் வேலைசெய்த தொழிலாளர்கள் 20ஆயிரம் பேருக்கு கொரனோ
உலகில் புகழ்பெற்று விளங்கும் அமோசன் நிறுவனத்தில் பணிபுரிந்த
இருபதாயிரம் பேருக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனால் இந்த நிறுவனம் உலக அளவில் பாரிய நெருக்கடியை
சந்தித்துள்ளதுடன் , மக்கள் பொருட்களை கொள்வனவு செய்திட தயக்கம் காட்டி வருகின்றனர்
இதே நிலை மேலும் நீடித்தால் பலத்த இழப்பை குறித்த நிறுவனம் சந்திக்கும் என எதிர்பார்க்க படுகிறது
பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ
பிரிட்டனில் ஒரே பல்கலைக்கழகத்தில் 770 பேருக்கு கொரனோ
பிரிட்டன் 770 students at Northumbria university பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று
வந்த மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 770 பேர் கொரனோ
நோயின் தாக்குதலினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவ்வாறு நோயின் தொற்றுக்கு உள்ளானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்
,தொடர்ந்து பிரிட்டனில் குறித்த நோயானது அதிவேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ
அமெரிக்கா அதிபர் டிரம்ப் -மற்றும் மனைவிக்கு கொரனோ
ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தனது நிகழ்ச்சிகளை
ஒத்திவைத்த ட்ரம்ப், தானும் தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தன.
அதில், இருவருக்கும் பொசிட்டிவ் என வந்துள்ளது. இத்தகவலை டுவிட்டரில்
பதிவிட்டுள்ளார் ட்ரம்ப். அத்துடன், உடனடியாக தனிமைப்படுத்தும்
நடைமுறை மற்றும் சிகிச்சையை தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.
சிறுவரை கடத்திய நபர் – லண்டன் தொண்டங்கீற்றில் மடக்கி பிடித்த பொலீஸ்
சிறுவரை கடத்திய நபர் – லண்டன் தொண்டங்கீற்றில் மடக்கி பிடித்த பொலீஸ்
லண்டன் தொடங்கீற்று பிரதான வீதியில் சிறுவர் ஒருவரை கடத்தி
சென்ற முஸ்லீம் நபர் ஒருவர் காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார்
கைதானவர் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இந்த
கடத்தல் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்
தெரிவிக்கவில்லை விசாரணைகளின் முடிவில் மேலதிக தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
எட்டுபேரை கூட்டி பாட்டி வைத்த பிரிட்டன் தொழில் கட்சி தலைவருக்கு தண்டம்
எட்டுபேரை கூட்டி பாட்டி வைத்த பிரிட்டன் தொழில் கட்சி தலைவருக்கு தண்டம்
பிரிட்டன் தொழில் கட்சி தலைவர் Jeremy Corbyn எட்டு பேரை கூடி பாட்டி
ஒன்றை நடாத்தியுள்ளார் ,இதில் அரசு விதித்த நிபந்தனைகளை மீறிய
குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு முதலாவது குற்றமாக இருநூறு பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
ஒரே வேளையில் ஆறுபேருக்கு மேல் கூட கூடாது என்பது புதிய விதி என்பது
இங்கே குறிப்பிட தக்கது ,இது தாங்க சட்டம் .எதிர்க்கட்சி தலைவருக்கே இந்த நிலையா ..?
முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்
முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்
கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட
உள்ளதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் மந்திரி சுதாகர் கூறினார்.
கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.1,000 அபராதம்
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மைசூரு, ஹாசன், தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, கொப்பல் ஆகிய மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர்,
பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது உங்களது மாவட்டங்களில்
கொரோனா பரவலை தடுக்க முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர்களுக்கு, மந்திரி சுதாகர் உத்தரவிட்டார். இந்த
ஆலோசனை கூட்டம் முடிந்ததும் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றுவது இல்லை. குறிப்பாக மக்கள் முகக்கவசம் அணிவது
இல்லை. முகக்கவசம் அணிபவர்களும் அதை சரியாக அணிவது இல்லை. இதனால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.
பெங்களூரு நகரில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு மாநகராட்சி மார்ஷல்கள் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். இதேபோல் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும்
சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராத தொகையை ரூ.1,000 ஆக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் அறிக்கை தாக்கல்
செய்து உள்ளோம். நாளை(இன்று) இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முகக்கவசம் என்பது வாய், மூக்கை மறைப்பதற்காக அணியப்படுவது தான். ஆனால் சிலர் மூக்கு, வாய், கன்னத்தின் கீழ்
முகக்கவசம் அணிந்து செல்கின்றனர். இது முகக்கவசம் அணியாததற்கு சமம் தான். அவர்களுக்கும் இருந்தும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 71 பேர் பலி – 7,000 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் எழுபத்தி
ஒரு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் ஏழாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
கடந்த தினத்தை அளவான மக்கள் பலி இன்று இடம்பெற்றுள்ளது என அரசு
அறிவித்துள்ளது ,எனினும் அரசு கூறுவது போன்ரு உயிர் பலிகள் அதிகம்
என மக்கள் கருத்துக்கள் உள்ளது ,இவ்வாறு அதிக தொகையில் மக்கள்
பலியாகி வரும் நிலையில் பாடசாலைகளை அரசு மூட மறுத்து வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
வரும் பாடசாலை விடுமுறையுடன் மீள பாடசாலைகள் அடித்து பூட்ட
படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,சில பாடசாலைகளில் நோயாளர்கள்
உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையிலும் அவை அடித்து மூட மறுக்க பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்
எதிர் வரும் வெள்ளி முதல் திங்கள் வரையான நாட்களில் அதிக குளிர்
மற்றும் புயல் இடம்பெறும் எனவும் இவ்வேளை மேலும் அதிக மக்கள் நோயினால் பாதிக்க படுவது அதிகம் இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது
பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு
பிரிட்டனில் சாராயம் விற்க தடை – 10 மணிக்கு பின் அனைத்து கடைகளும் அடித்து பூட்ட உத்தரவு
பிரிட்டனில் அதிக பிரிட்டன் பூர்வீக குடிகள் வாழும் பகுதியான லீவர் பூல் ப
குதியில் சில வாரங்களில் கடுமையான கொரனோ நோய் தோற்று இடம்பெற்றுள்ளது
இதனை அடுத்து இரவு ஒன்பது மணிக்கு பின்னர் சாராயம் விற்க தடை
செய்ய பட்டுள்ளது ,அத்துடன் பத்து மணிக்கு பின்னர் அணைத்து கடைகளும் அடித்து பூட்டும் படி உத்தரவிட பட்டுள்ளது
இதே நிலை மூன்று மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது ,இதே போன்ற நிலை லண்டன் பகுதிக்கும் விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது
மக்களுக்கு அரசு விடுவிக்க பட்ட உத்தரவுகளை பின்பற்றும் படி வேண்ட படுகிறது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497
பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,179 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 86428
பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்தொற்று
எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,40,441 பேர் சிகிச்சை
பெற்றுவருவதாகவும், உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர்
விகிதம் 83.33 சதவீதமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்
மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிரிட்டன் பிரதமர் ஜோன்சன்
பிரிட்டனில் ஆளும் பிரதமர் பெரீஸ் ஜோன்சன் தனது குழப்பத்தில்
கொரனோ பரவல்
விதிகளைம் மாறி கூறிவிட்டதாக தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளார்
வடகிழக்கு பகுதிகளில் இவ்விதமான விதிகள் விதிக்க பட்டுள்ளதை
அவர் சுட்டி காட்டி தெளிவு பட மக்களுக்கு விளக்கியுள்ளார்
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்விதம் பதில் வழங்கியுள்ளார் ,அதனை காண்க
19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை
19 வயது இளம் பெண் ரவுடி கும்பலினால் கற்பழித்து கொலை
இந்தியா மத்திய பிரதேச பகுதியில் பத்தொன்பது வயது இளம் பெண்
ஒருவர் மர்ம ரவுடி கும்பலினால் கோரமாக கற்பழித்து படு கொலை
செய்ய பட்டுள்ளார்
பலமான பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு சுயநினைவின்றி மருத்துவ
மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,தொடராக வழங்க பட்ட
சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்
குறித்த பெண்ணை கற்பழித்தவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவில் 46 லட்சம் குழந்தைகள் உணவின்றி தவிப்பு
கோப்புப்படம்
சிரியாவில் உள்நாட்டுப் போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சினைகளால் கடந்த 10 ஆண்டுகளில் 4
லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் அந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல
குழந்தைகள் உணவு கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே போரினால் நிலைகுலைந்துள்ள சிரியாவில்
கொரோனா தொற்றும் பரவுவதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
இந்த நிலையில் சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது
46 லட்சமாக உயர்ந்துள்ளதாக சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில்
தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு
சிரியாவில், கிட்டத்தட்ட 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.
அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக் குறைவை எதிர்கொள்கின்றனர்.
குழந்தைகளை காப்பாற்ற சர்வதேச சமூகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு
இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு
வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதை தொடர்ந்து இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
வங்கிக்கணக்குளை முடக்கிய மத்திய அரசு – இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்துவதாக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அறிவிப்பு
அம்னெஸ்டி இன்டர்நேஷனல்
புதுடெல்லி:
’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ என்ற பிரபல மனித உரிமை அமைப்பு உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட இந்த அமைப்பு இந்தியாவில் பெங்களூரில் தனது கிளையை நிறுவியுள்ளது.
இந்தியாவில் மனித உரிமைகளை நிலைநாட்டுவது மற்றும் அது தொடர்பான தகவல்களை வெளியிடுவதே ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒரு என்ஜிஓ எனப்படும் அரசு சாரா தொண்டு நிறுவனம் ஆகும்.
ஆனால், தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் இந்தியா அரசியல் மற்றும் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக ’அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ மீது பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தது.
மேலும், அந்த அமைப்பு வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதியை பெற்றுக்கொண்டு இந்தியாவின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அமைப்பால் பெங்களூரில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் காஷ்மீரிகளின் சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி பிரிவினைவாதத்தை தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
காஷ்மீருக்கான சிறப்பு சட்டம் நீக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள், இந்தியாவின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை கண்டித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், டெல்லி வன்முறை தொடர்பாக போலீஸ் மீதான குற்றச்சாட்டுகள் என இந்திய அரசு மீது ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதற்கிடையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதிபெறும் தொண்டு நிறுவனங்கள் இந்திய அரசிடம் முறைப்படி அனுமதிபெற வேண்டும். ஆனால், ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்போ தான் பெறும் வெளிநாட்டு நிதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறைப்படி அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நிதி பெற்று வந்தது.
வெளிநாட்டில் இருந்து நிதிபெற ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி மத்திய அரசிடம் அனுமதி கேட்டது.
அதன் பின் 20 ஆண்டுகளில் ஒருமுறைகூட வெளிநாட்டில் இருந்து நிதிபெற மத்திய அரசிடம் அந்த அமைப்பு உரிய அனுமதி பெறவில்லை. மேலும், இத்தனை ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அந்த அமைப்பு நிதிபெற்று இந்தியாவில் தனது பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.
தற்போது வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதையடுத்து, இந்திய சட்டவிதிகளை மீறியதற்காக ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ அமைப்பின் வங்கிக்கணக்குகளை மத்திய அரசு சமீபத்தில் முடக்கியது.
இந்நிலையில், தனது வங்கிக்கணக்குகளை மத்திய அரசு முடக்கியதற்கு ‘அம்னெஸ்டி இன்டர்நேஷனல்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி
அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது மிகவும் பிரபலமாக
இருக்கும் ஷிவானி, அது நானில்லை… யாரும் நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார்.
அது நானில்லை… யாரும் நம்பாதீங்க… ஷிவானி
ஷிவானி
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில்
கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும்
பிரபலமானார். தினமும் இவரது புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள்.
ஷிவானி
தற்போது கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்
போட்டியாளராக கலந்துக் கொள்ள இருக்கிறார். இதற்காக இவர் ஹோட்டலில்
தனிமைப்படுத்த பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர்
பக்கத்தில் நான் இல்லை… என் பெயரில் போலி கணக்கை யாரோ வைத்திருக்கிறார்கள். அதை நம்பாதீர்கள் என்று கூறியிருக்கிறார்
கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.
கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களிடம் தோன்றும் பயங்கர கனவுகள்
கொரோனா வைரஸ்
கொரோனா நோய் ஏற்பட்டவர்களுக்கு உடலில் பல உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்ல, அவர்களுடைய மனநிலையில் கூட ஏராளமான மாற்றங்கள் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் கனவு காண்பதில் கூட அசாதாரண நிலை நிலவுகிறது.
இது சம்பந்தமாக அமெரிக்காவைச் சேர்ந்த மனநல நிபுணர்கள் சங்கம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
கொரோனா பாதித்த 2,888 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு நோய் பாதிப்பு
ஏற்படுவதற்கு முன்பு இருந்ததைவிட இப்போது மோசமான கனவுகள் அதிகமாக வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொந்தங்களால் கை விடப்படுதல், வேலையிழப்பு, பண இழப்பு மற்றும்
பயங்கர பாதிப்பு போன்றவை சம்பந்தமாக மோசமான கனவுகள் அதிகமாக வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு இதுபோன்ற கனவுகள் மிக அதிகமாக வருவதும் தெரிய வந்தது.
பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்
பிரிட்டனில் திருமண விழாவில் அதிக மக்கள் – பத்தாயிரம் தண்டம்
பிரிட்டனில் புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள சட்ட விதிகளை மீறி திருமண
விழா ஒன்றில் முப்பத்தி
ஐந்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் விவசாய
பண்ணை நடத்தி வரும் தொழில் அதிபர் ஒருவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட பட்டுள்ளது
அது தவிர அந்த நிகழ்வில் சமூக இடைவெளியை பின்பற்றாது
கூடியவர்களுக்கு தண்டம், அறவிட பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மக்களை நோயில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அரசு கொண்டு
வந்துள்ள நடைமுறையை பின் பற்றாது மக்கள் இவ்விதம் உலவி வருவது
மேலும் இறுக்கமான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வைக்கும் என அடித்து கூறலாம்
65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்
65 தாலிபான்கள் சுட்டு கொலை – இராணுவம் வெறியாட்டம்
ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் மத்தளம் அமைத்து போராடி வரும்
தலிபான் போராளிகளுக்கும் ஆப்கானிஸ்தான் போராளிகளுக்கும்
இடையில் தீவிர சண்டை இடம்பெற்றது
இதில் அறுபத்தி ஐந்து போராளிகளை தாம் படுகொலை செய்துள்ளதாக
அரச இராணுவம் அறிவித்துள்ளது
குறித்த
பகுதியை தாம் பாதுகாத்து வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது

மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி
மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி
மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு
சம்பவத்தில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி
துப்பாக்கிச்சூடு நடந்த இடம்
மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் உள்ள குவானாஜுவாடோ மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் ஆதிக்கம்
மிகுந்து காணப்படுகிறது. தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள்
கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்தநிலையில் அந்த மாகாணத்தில் ஜரல் டெல் புரோகிரெசோ நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் நேற்று காலை பெண்கள்
உள்பட ஏராளமான இளைஞர்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது கார்களில் வந்து இறங்கிய மர்ம கும்பல் மதுபான
விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.
மதுபான விடுதிக்குள் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். ஆனாலும் அந்த மர்ம கும்பல்
சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பெண்கள் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தனர்
. மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது
பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்
பிரிட்டனில் செயல் இழந்த Barclays ஒன்லைன் சேவிஸ்
பிரிட்டனில் முதல்தர வங்கிகள் ஒன்றாக உள்ள Barclays வங்கியின்
ஆன்லைன் அப்பிளிக்கேஷன் செயல் இழந்து காணப்பட்டது
இதனால் பல்லாயிரம் மக்கள் தமது ஆன்லைன் செயல் பாடுகளை செய்திட
முடியாது திணறினர் .தொடர்ந்து தமது சேவைகள் மீள் வழமைக்கு திரும்பும்
எனவும் குறிப்பிட பட்ட சில மக்களே இந்த தடையினை சந்தித்து இருப்பர்கள் என சுட்டி காட்ட பட்டுள்ளது ,
இந்த தடை எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரிவிக்க படவில்லை
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர்
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர்
பலகட்ட சோதனைகளில் வெற்றி பெற்று தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்
என்று ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார்.
கொரோனா தடுப்பூசி எல்லா நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும் – ஐ.நா. சபையில் இங்கிலாந்து பிரதமர் பேச்சு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசினார். அவர் பேசியதாவது:-
நான் இப்போது பேசிக்கொண்டிருக்கும்போது, உலக அளவில் சுமார் 100 கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கும் தடுப்பூசி, 3-ம் கட்ட பரிசோதனையில் இருக்கிறது.
அது வெற்றிகரமாக அமைந்தால், அஸ்ட்ராசெனிகா நிறுவனம் கோடிக்கணக்கான ‘டோஸ்’ தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்க தயாராக உள்ளது.
மேலும், 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு வினியோகிக்க இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்ட தடுப்பூசி, எல்லா நாடுகளுக்கும் சமமாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால், மற்ற
நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைத்து அவை ஆரோக்கியமாக இருந்தால்தான், ஒவ்வொரு நாடும் ஆரோக்கியமாக இருக்கும்.
கடந்த 9 மாதங்களாக கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறோம். இந்த பொது எதிரியை வீழ்த்த அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
கொரோனா வைரஸ் எப்படி உருவானது? எப்படி பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டும். எந்த நாட்டையோ, எந்த அரசையோ
குறை கூறுவது எனது நோக்கம் அல்ல. ஒரு முன்னாள் கொரோனா நோயாளி என்ற முறையில், இதை அறிந்து கொள்வது எனது
உரிமை. அதன்மூலம், இது மறுபடியும் தாக்காதவாறு நம்மால் இயன்ற அளவுக்கு நாம் கூட்டாக போராட முடியும்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு இங்கிலாந்து 34 கோடி பவுண்டு நிதி உதவி அளித்துள்ளது.
இவ்வாறு போரிஸ் ஜான்சன் பேசினார்.







