Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள்

அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள்

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அமெரிக்காவில் ‘பேஸ்புக்’ மீது வழக்குகள் குவிகின்றன
:

பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ‘பேஸ்புக்’ நிறுவனம் மீது அமெரிக்காவில் 45 மாகாணங்களில் அரசு வக்கீல்கள் வழக்குகளை

தொடுத்து உள்ளனர். ‘பேஸ்புக்’ நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு எடுத்துள்ள மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

தனது போட்டி நிறுவனங்களை வாங்குவதற்கும், போட்டிகளை தடுப்பதற்கும் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ‘பேஸ்புக்’ நிறுவனம் ஈடுபடுகிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றை சொந்தமாக கொண்டுள்ள இந்த நிறுவனத்தை உடைப்பது குறித்து

பரிசீலிக்குமாறு அதிகாரிகள் கோர்ட்டுகளை கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி ‘பேஸ்புக்’ நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் புகார்களை ஆய்வு செய்கிறோம். இதுபற்றி விரைவில் விரிவாக சொல்வோம். பெடரல் வர்த்தக ஆணையம் (எப்.டி.சி.) எங்கள்

கையகப்படுத்துதல்களை அனுமதித்துள்ளது” என கூறியது. பேஸ்புக், பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானவை, அவற்றை

மாதம்தோறும் 100 கோடி பேருக்கு மேல் உபயோகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய ராக்கெட்

வெடித்து சிதறிய ராக்கெட்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்காக தயாரித்துள்ள பிரமாண்ட ராக்கெட்டான

ஸ்டார்ஷிப் வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.

எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு – வெடித்து சிதறிய ராக்கெட்

அமெரிக்காவில் பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம், சோதனை விண்கலத்துடன் கூடிய ஸ்டார்ஷிப்

ராக்கெட்டை டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.

ஆனால் தனது சில நிமிட பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்புகையில், இந்த ராக்கெட் தொழில்நுட்ப கோளாறில் வெடித்து தீப்பிழம்புகளுடன் கீழே விழுந்து எரிந்தது.

இது செவ்வாய் கிரகத்துக்கு மக்களை அழைத்துச்செல்ல வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கனவு திட்டத்துக்கு பின்னடைவு ஆகும்

Posted in உலக செய்திகள்

ஜோ பைடன் மகன் வரி மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

ஜோ பைடன் மகன் வரி மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்காவின் புதிய அதிபராக தெரிவு செய்ய பட்டுள்ள ஜோ பைடன்

மகன் ,தந்தையின் தேர்தல் பரப்புரையில் பொழுது நிதி கையாடல்

புரிந்தார் என்ற குற்ற சாட்டில் அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

தனது பதவி முடிந்து வெள்ளை மாளிகையை விட்டு செல்ல முன் புதிய ஜனாதிபதியை பழிவாங்கும் நகர்வில் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்

என்ற கருத்து இதன் மூலம் உருவாக்கம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி
சித்ரா


தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர்

சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு

ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

இந்நிலையில், சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்

சித்ரா
சித்ரா
Posted in உலக செய்திகள்

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி சாதனை

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி சாதனை

இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை – இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு சாதனை

அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை

கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய கொரோனா பரிசோதனை, ஆர்.என்.ஏ. அடிப்படையில்

மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, காகித அடிப்படையிலானது.

கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை பயன்படுத்தி, கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும்

பரிசோதித்தனர். அதில், கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது.

இது, கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆண்டில் இந்தியா ரூ.25,500 கோடி ஆயுதங்கள் கொள்முதல்

அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு அடுத்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடப்பு 2020-ம் ஆண்டில், அதாவது டிரம்ப் ஆட்சியின் கடைசி ஆண்டில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற

விவரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (டிஎஸ்சிஏ) வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

  • 2019-ம் ஆண்டு உலக நாடுகளுக்கு 55.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்த விற்பனை 50.8
  • பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் கோடி) சரிவை சந்தித்துள்ளது.
  • 2020-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 3.4
  • பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது. அதுவும் 2019-ம் ஆண்டில் இந்தியா
  • வெறும் 6.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.46.5 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்கி உள்ளது.
  • இந்தியாவை விட அதிகளவில் மொராக்கோ, 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை இந்த ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்திருக்கிறது. கடந்த
  • ஆண்டு 12.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.93 கோடி) ஆயுதங்களை மட்டுமே இந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருந்தது.
  • 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல நாடுகள் 2020-ம் ஆண்டு
  • அமெரிக்காவிடம் இருந்து குறைவான ஆயுதங்களையே வாங்கி உள்ளன. சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், ஈராக், தென் கொரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்

பிரிட்டனில் கொரனோ தடுப்பூசி -குறைந்தன மரணங்கள்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வந்த கொரனோ நோயானது தற்போது குறைந்து வருகிறது

இதற்கும் கரணம் இந்த நோயின் தாக்குதலை தடுத்து மக்களை காப்பாற்றும்

பணியில் புதிதாக தடுப்பூசி கண்டுபிடிக்க பட்டு அது மக்கள் பாவனைக்கு விட பட்டது

இறப்பு விகிதம் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

முன் கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

வடக்கு சிரியாவில் குவிக்க படும் துருக்கிய இராணுவ வாகனம்

வடக்கு சிரியாவில் குவிக்க படும் துருக்கிய இராணுவ வாகனம்

வடக்கு சிரியா பகுதியில் துருக்கிய இராணுவம் மேலதிகமாக இராணுவ

வாகனங்களை ,மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது
,விரைவில்

சிரியா பகுதியில் இருந்து நாம் விலகுவோம் என அறிவித்த

நிலையில் மேற்படி ஆயுத குவிப்புக்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

இந்த செயல் பாடுகள் நாடுகளுக்கு இடையில் மேலும் போர் வெறியை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

துருக்கிய இராணுவ
துருக்கிய இராணுவ
Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – போலீசார் குவிப்பு

அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு – போலீசார் குவிப்பு

அவுஸ்ரேலியா தெற்கு மெல்போர்ன் பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாககி

சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் ,சப்பவ இடத்திற்கு விரைந்து

வந்த பொலிஸ் காயாமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் இணைத்தனர்

குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது

அவுஸ்ரேலியாவில்
அவுஸ்ரேலியாவில்
Posted in உலக செய்திகள்

ஒரே தடைவையில் லொத்தரியில் வென்ற 50 பேர்

ஒரே தடைவையில் லொத்தரியில் வென்ற 50 பேர்

அமெரிக்காவில் இடம்பெற்ற தொலைக்காட்சி லொத்தரியில் ஓரே

தடைவியில் ஐம்பது பேர் வென்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது

குறித்த தொகையானது அந்த ஐம்பது பேருக்கும் பிரித்து கொடுக்க பட்டுள்ளது ,
இவ்விதம் இதுவே முதன் முதலாக இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in உலக செய்திகள்

நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா

தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் நடராஜன் தான் என அவர் கையில் கோப்பையை வழங்கி அழகு பார்த்தார் ஹர்திக் பாண்ட்யா.

தொடர் நாயகன் விருது கோப்பையை நடராஜன் கையில் வழங்கி அழகு பார்த்த ஹர்திக் பாண்ட்யா
நடராஜன் கையில் தொடர் நாயகன் கோப்பையை வழங்கிய

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, தற்போது 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது. கான்பெர்ராவில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 11

ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நடந்த 2-வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.

இதற்கிடையே, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில்

நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள்

எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் வேட் 80 ரன்னும், மேக்ஸ்வெல் 54 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. தொடக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

கேப்டன் விராட் கோலி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

அதிரடியாக ஆடிய விராட் கோலி 85 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

ஆனாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை

அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், 20 ஓவர் தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

Posted in உலக செய்திகள்

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

போலியாக கொரனோ சோதனை நடத்தி முடிவுகள் வழங்கிய இரு நபர்கள் கைது

அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயின் தொற்று தொடர்பாக

போலியாக இரத்த பரிசோதனை நடத்தி ,அதன் முடிவுகளை அறிவித்து

பணம் சம்பாதித்து வாட்ச் இரு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

பாதிக்க பட்டவர்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே

மேற்படி நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்

காதலியை கத்தியால் குதி கொன்ற காதலன்

அமெரிக்கா ஹாரோலினா பகுதியில் காதலியை காதலன் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்

பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் போட்ட சத்தத்தில் அயலவர்கள்

விரைந்து பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விரைந்த வந்த

போலீசார் பலத்த காயத்தில் இருந்த அவரை மீட்ட பொழுதும் சம்பவ இடத்தில அவர் பலியானர்

காதலன் கொலை குற்ற சாட்டில் கைது செய்ய ப்பட்டுள்ளார் ,இவருக்கு

குழந்தை உள்ளது ,இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராரே இந்த கொலையில் முடிவடைந்துள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

Posted in உலக செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் நடிகை ஒருவர் மரணமடைந்திருப்பது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகை பலி…. சோகத்தில் திரையுலகினர்
திவ்யா பட்நாகர்
இந்தி சீரியல் நடிகை திவ்யா பட்நாகர்(வயது 34), யா ரிஷ்தா கியா

கேக்லதா ஹய், தேரா யார் ஹூன் மெயின் போன்ற டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவருக்கு கடந்த

வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து கடந்த சில

தினங்களுக்கு முன்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று மரணமடைந்தார். இளம் வயதில் நடிகை ஒருவர் கொரோனாவுக்கு

பலியாகி இருப்பது இந்தி திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Posted in உலக செய்திகள்

கரடி தாக்கி 4 பேர் பலி

கரடி தாக்கி 4 பேர் பலி

சத்தீஷ்கார் மாநிலம் தேவ்கார் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்

சத்தீஷ்காரில் கரடி தாக்கி 4 பேர் பலி
கரடி தாக்குதல்

சத்தீஷ்கார் மாநிலம் கோரியா மாவட்டம் தேவ்கார் வனப்பகுதியை ஒட்டிய அன்க்வானி கிராமத்தில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம்

காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 2 பெண்கள் உள்பட 4 பேரை தாக்கி கொன்றது. மேலும் ஒருவர் கரடிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி தப்பினார்.

இறந்த 4 பேரின் உடல் அருகே அந்த கரடி விடியவிடிய உட்கார்ந்து இருந்தது. இதனால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கரடி அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. உடனே பொக்லைன்

எந்திரம் மூலமாக மரத்தில் ஏறி தப்பியவரை காப்பாற்றினர். கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர

சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

Posted in உலக செய்திகள்

போதையில் போலீசாருடன் ரகளை பண்ணிய தமிழ் பெண்

போதையில் போலீசாருடன் ரகளை பண்ணிய தமிழ் பெண்

தமிழகத்தில் தமிழ் இளம் பெண் ஒருவர் அதிக போதையில் காரினை

செலுத்தி சென்றுள்ளார் அப்பொழுது நபர் ஒருவரை காரால் மோதினர் ,

தான் குற்றத்தை ஒப்பு கொள்ளாது போலீசாருடன் தகாத வார்த்தைகளை பேசி ரகளையில் ஈடுபட்டார் ,

எனினும் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்றதுடன் ,குறித்த குற்றம் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்த முடிவாகியுளளது

தமிழ் பெண்
தமிழ் பெண்
Posted in உலக செய்திகள்

துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி

துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி

துருக்கிய அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய

தாக்குதலில் சிக்கி நாற்பது இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,

தொடர்ந்து தமது தாக்குதலை தீவிர படுத்தி வருகின்றனர் ,இந்த

படுகொலைகளுக்கு மனித உரிமை அமைப்பு
கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி

பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்

மட்டும் 231 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

மேலும் இதுவரை ,மொத்தம் 61,245 பேர் பலியாகியுள்ளனர் ,தற்போது தடுப்பூசி மக்கள் பாவனைக்கு விடுவிக்க பட்டுள்ள

நிலையில் குறித்த நோயானது எதிர்வரும் ஆறுமாதங்களுக்குள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி

ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும், அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி – வரும் வாரங்களில் போட நடவடிக்கை
இரண்டாம் எலிசபெத் ராணி

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக்

நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது.

கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை இங்கிலாந்து வழங்கியது நினைவு கூரத்தக்கது.

இந்த தடுப்பூசியின் 8 லட்சம் ‘டோஸ்’, அடுத்த வாரம் இங்கிலாந்து வந்து சேரும் என அதன் மந்திரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசிகள் வந்ததும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்

அதிக முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு 50 ஆஸ்பத்திரி மையங்களில் தடுப்பூசி போடப்படும் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன

Posted in உலக செய்திகள்

மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி

மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி

மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது.

மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி
பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்யும் ஜோடி

ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தது. அதற்கு முன்னதாக,

மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று

இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்துகொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.

இதையடுத்து, மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். அதன்பின்

இருவரும் சடங்குகளை முறையாகப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டனர்.

அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மணமகன்

பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோல் மணமகளும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த ஜோடி

திருமணம் செய்து கொண்டது. இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.