Tag: சித்ரா
சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்ட மறைந்த நடிகை சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் ஊட்டி அவரது தந்தை கண்கலங்கி இருக்கிறார்.
சித்ரா புகைப்படத்திற்கு கேக் ஊட்டி கண்கலங்கிய தந்தை
சித்ரா
பிரபல தொகுப்பாளினி, சின்னத்திரை நடிகை என பல முகங்களை கொண்டவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி நள்ளிரவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கு காதல் கணவர் ஹேமந்த்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சித்ரா
இந்நிலையில் விஜே சித்ராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெற்றோர் தங்களின் போலீஸ் குடியிருப்பில்
அவரது பிறந்த நாளை கொண்டாடினர். சித்ரா போட்டோவுக்கு முன்னால் அவருக்கு பிடித்த பொருட்களை வைத்தும் கேக் வெட்டியும் பிறந்த நாளை கொண்டாடினர்.
சித்ரா
அப்போது சித்ராவின் தந்தை சித்ராவின் போட்டோவுக்கு கேக் ஊட்டிவிட்டு கலங்கினார். காண்போரை கலங்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை
சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கால்ஸ் பட டீசர் சாதனை படைத்துள்ளது.
மறைந்த சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை
சித்ரா
சின்னத்திரையில் நாயகியாக ஜொலித்தவர் சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார்
விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார்
விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன்
டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர்
நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.
சித்ரா
டிசம்பர் 13-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு டிசம்பர் 31-ம் தேதி டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டீசர்
வீடியோ தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சபரிஷ் கூறுகையில்
“நம்மிடையே விஜே சித்து தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள்
தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க பொலிஸ் திட்டம்
நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க பொலிஸ் திட்டம்
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்டிஓ முடிவு
சித்ரா
ஸ்ரீபெரும்புதூர்:
டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சித்ராவுக்கு திருமணம் நடத்து சில மாதங்களே ஆனதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் தனித்தனியாக 2 கட்டமாக விசாரணை நடத்தினார்.
ஹேம்நாத்தை விசாரணைகாக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று முன்தினம் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள், சித்ரா தற்கொலை செய்துகொண்ட விடுதியின் ஊழியர்கள், கடைசியாக
சித்ராவுடன் பணியாற்றியவர்களிடம் இன்று (சனிக்கிழமை) விசாரணை செய்ய ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ முடிவு செய்து அவர்கள் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் படமே கடைசி படமான சோகம்…. சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்
முதல் படமே கடைசி படமான சோகம்…. சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்
சின்னத்திரையில் சிறந்து விளங்கிய சித்ரா வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமான படம் விரைவில் ரிலீசாக உள்ளதாம்.
முதல் படமே கடைசி படமான சோகம்…. சித்ரா ஹீரோயினாக நடித்த படம் விரைவில் ரிலீஸ்
சித்ரா
இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த “கால்ஸ்” என்ற திரைப்படம் கடந்த 2019 ஜூலை மாதம் நடிகர் டெல்லி கணேஷ்
அவர்களால் பூஜையுடன் துவங்கி தஞ்சாவூர், திருச்சி , சென்னை, வாரணாசி என பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த படத்தில் விஜே சித்ரா கதாநாயகியாகவும், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும்
நடித்துள்ளனர். இயக்குனர் ஜெ.சபரிஸ் இயக்கி, தமீம் அன்சாரி இசையமைத்த இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு (2020) ஜனவரி மாத இறுதியில் நிறைவடைந்தது.
இதையடுத்து படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடந்த நிலையில், ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியிட
திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் நிறுத்தி வைக்கப்பட்ட இறுதிக்கட்ட பணிகள், செப்டம்பர் மாதம் முதல்
மீண்டும் வேகமாக தொடங்கி டிசம்பர் 13, பர்ஸ்ட் லுக் ரிலீஸ், ஜனவரி 1 (2021) டிரெய்லர் ரிலீஸ் மற்றும் ஜனவரி இறுதியில் திரைப்படத்தையும் வெளியிட திட்டமிடப்பட்டது.
கால்ஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக படத்தின் கதாநாயகி விஜே சித்ரா காலமானார். அவரின் கனவு வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது, அதற்குள் அவர் எதிர்பாராதவிதமாக
மறைந்தது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, இருப்பினும் அவருடைய விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கனவே திட்டமிட்டபடி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி
மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி
தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளது – சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி
சித்ரா
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றவர்
சித்ரா. இவர் சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு
ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.
இந்நிலையில், சித்ராவின் இறப்பு குறித்து பேசியுள்ள அவரது தாய், தனது மகள் வலிமையான மனநிலை கொண்டவர் என்றும் அவளது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்







