Tag: கரடி
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் 04 பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
- சுகீஸ்வர பண்டார ஜூலை 22 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரா இலஞ்ச ஆணைக்குழுவால் கைது
- 283 மில்லியன் ஒதுக்கிய அனுரா
- சமூக ஊடக அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இலங்கை புதிய சட்டம்
- முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது
கரடி தாக்கி 4 பேர் பலி
கரடி தாக்கி 4 பேர் பலி
சத்தீஷ்கார் மாநிலம் தேவ்கார் வனப்பகுதியில் கரடி தாக்கியதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்
சத்தீஷ்காரில் கரடி தாக்கி 4 பேர் பலி
கரடி தாக்குதல்
சத்தீஷ்கார் மாநிலம் கோரியா மாவட்டம் தேவ்கார் வனப்பகுதியை ஒட்டிய அன்க்வானி கிராமத்தில் கரடிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம்
காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த கரடி ஒன்று 2 பெண்கள் உள்பட 4 பேரை தாக்கி கொன்றது. மேலும் ஒருவர் கரடிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறி தப்பினார்.
இறந்த 4 பேரின் உடல் அருகே அந்த கரடி விடியவிடிய உட்கார்ந்து இருந்தது. இதனால் மீட்புப்பணி பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கரடி அங்கிருந்து காட்டுக்குள் சென்று விட்டது. உடனே பொக்லைன்
எந்திரம் மூலமாக மரத்தில் ஏறி தப்பியவரை காப்பாற்றினர். கரடி தாக்கியதில் 3 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்












