அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

Spread the love

அமெரிக்காவிடம் 25,500 கோடிக்கு ஆயுதங்கள் வாங்கி குவிக்கும் இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா இந்த ஆண்டில் ரூ.25 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இந்த ஆண்டில் இந்தியா ரூ.25,500 கோடி ஆயுதங்கள் கொள்முதல்

அமெரிக்காவில் டொனால்டு டிரம்பின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு அடுத்த மாதம் 20-ந்தேதி புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடப்பு 2020-ம் ஆண்டில், அதாவது டிரம்ப் ஆட்சியின் கடைசி ஆண்டில், அமெரிக்கா உலக நாடுகளுக்கு எவ்வளவு மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற

விவரத்தை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் (டிஎஸ்சிஏ) வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:

  • 2019-ம் ஆண்டு உலக நாடுகளுக்கு 55.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 17 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்த விற்பனை 50.8
  • பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் கோடி) சரிவை சந்தித்துள்ளது.
  • 2020-ம் ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 3.4
  • பில்லியன் டாலர் (சுமார் ரூ.25 ஆயிரத்து 500 கோடி) மதிப்பிலான ஆயுதங்களை வாங்கி உள்ளது. அதுவும் 2019-ம் ஆண்டில் இந்தியா
  • வெறும் 6.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.46.5 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்கி உள்ளது.
  • இந்தியாவை விட அதிகளவில் மொராக்கோ, 4.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33 ஆயிரத்து 750 கோடி) ஆயுதங்களை இந்த ஆண்டில் அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்திருக்கிறது. கடந்த
  • ஆண்டு 12.4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.93 கோடி) ஆயுதங்களை மட்டுமே இந்த நாடு அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருந்தது.
  • 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல நாடுகள் 2020-ம் ஆண்டு
  • அமெரிக்காவிடம் இருந்து குறைவான ஆயுதங்களையே வாங்கி உள்ளன. சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பெல்ஜியம், ஈராக், தென் கொரியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply