Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
இராணுவ வளாகத்தில் துப்பாக்கி சூடு – 10 பேர் சுட்டு கொலை
உக்கிரேனின் இராணுவ வளாகத்தில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி பத்து பேர் படுகொலை செய்ய பட்டனர்
மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்
இந்த சூட்டு படுகொலை சம்பவத்திற்குரிய காரணம் தெரியவில்லை
சந்தேக நபர் கைது செய்ய பட்டு விசாரணிகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம்
விளாடிமிர் புடினின் ஒவ்வொரு நடவடிக்கையும் உக்ரைன் மீது ரஷ்ய படையெடுக்கும் என்பதை உறுதி செய்வதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு
வெண்டி ஷெர்மன், விளாடிமிர் புடின்
அண்டை நாடான உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் நிறுத்தி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய அச்சுறுத்தலை தடுக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில் அடுத்த மாதம் மத்தியில் உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்த அதன் அதிபர் புடின் திட்டமிடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. அவரது நடவடிக்கையை தடுக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட போதிலும், பிப்ரவரி நடுப்பகுதியில் உக்ரைனுக்கு எதிராக பலத்தைப் பயன்படுத்த புடின் தயாராக இருக்கிறார் என்பதை அமெரிக்கா நம்புவதாக அந்நாட்டு தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் இறுதி முடிவை எடுத்தாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இராணுவப் பலத்தைப் பயன்படுத்தப் போகிறார் என்பதற்கான எல்லா அறிகுறிகளையும் நாங்கள் நிச்சயமாக பார்க்கிறோம். ஒருவேளை அது இப்போது இருக்கலாம் அல்லது பிப்ரவரி நடுப்பகுதியில் இருக்கலாம் என அமெரிக்க வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் கூறியுள்ளார்.
அண்டை நாடுகளின் மீது படையெடுப்பதற்கு எதிராக மாஸ்கோவை எச்சரிக்கும் வகையில், இந்த மாத தொடக்கத்தில் வியன்னாவில் தனது ரஷ்ய கூட்டாளியை சந்தித்த ஷெர்மன், புடின் நடவடிக்கைகளால் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி பாதிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு
ஈரானுக்கு கடத்த பட்ட ஆயுதங்கள் மடக்கி பிடிப்பு
ஈரானுக்கும் அதன் எல்லையோர வழியாக கடத்த பட்ட அதி நவீன ஆயுதங்கள் ஈரான் போலீசார்
நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் பொழுது மீட்க பட்டுள்ளது
இரண்டு வாகனங்கள் ஊடக மறைத்து எடுத்து வரப்பட்ட பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளது
,இந்த ஆயுத கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .இவ்வாறு
கைதானவர்க்ளுக்கு ஈரானில் தூக்கு தண்டனை வழங்குவது குறிப்பிட தக்கது
சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
சீன கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
தென் சீன கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா விமான தாங்கி
கப்பல் ஒன்றில் தரை இறங்க முற்பட்ட fc 35 ரக விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து மூழ்கியது
இதன் பொழுது அதில் இருந்த விமானி உலங்கு வானூர்தி மூலம் காப்பாற்ற பட்டுள்ளார்
அதே கப்பலில் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு மாலுமிகள் காயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
பிரிட்டன் பிரதமர் பார்ட்டி விசாரணைகளை ஆரம்பித்துள்ள போலீஸ்
பிரிட்டன் ஆளும் பிரதமர் British Prime Minister Boris Johnson’s கொரனோ லொக் டவுன் காலத்தில்
நூறு பேரை அழைத்து பார்டி நடத்தினார்
மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் லண்டன் மெட்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
விசாரணை முடிவில் நீதி துறை மூலம் ஆளும் பிரதமர் சிறை செல்வாரா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல் விமானங்கள் – பதட்டம் அதிகரிப்பு
உக்கிரேனில் ரஷியா படைகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
,இதனை அடுத்து நேட்டோ படைகள் மேலதிக இராணுவ கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளன
இரு நாட்டு கூட்டு இராணுவ படைகள் அந்த நாடு, மற்றும் எல்லையில் குவிக்க பட்டுள்ளதால்
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது
ஐ எஸ் வெறியாட்டம் 120 பேர் படுகொலை
ஐ எஸ் வெறியாட்டம் 120 பேர் படுகொலை
சிரியாவின் Hasaka பகுதியில் ஐ எஸ் படிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்
இரு தரப்பு படைகள் உள்ளிட்ட நூற்றி இருபது பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
தொடர்ந்து மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளது ,தொடரும் பத்து வருடங்களுக்கு மேலான
மோதலில் 30 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளமை குறிப்பிட தக்கது
சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
சீனாவில் பாரிய நில நடுக்கம் – மக்கள் ஓட்டம்
இன்று சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்கத்தின் அளவு 5.8 ஆக
பதிவாகியுள்ளது
எனினும் இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
மக்கள் பீதியில் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
உக்கிரேன் எல்லையில் பதட்டம் குவிக்க படும் ரஷியா இராணுவம்
உக்கிரேன் எல்லையில் பதட்டம் குவிக்க படும் ரஷியா இராணுவம்
உக்கிரேன் எல்லையில் ரயில்களில் இருந்து ரசியா இராணுவத்தின் ஆயுத வண்டிகள் இறக்க பட்டு
குவிக்க பட்டு வருவதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
ரசியா உக்கிரேன் மீது திடீர் போர் நடவடிக்கை மேற்கொண்டு அந்த நாட்டை கைப்பற்றலாம் என்ற பீதி நிலவி வருகிறது
இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன
அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி
அமெரிக்காவில் எகிறிய கொரனோ மரணம் -2,777 பலி
அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் சுமார் 2,777 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் அதே நாளில் 779,036 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதே போன்று பிரிட்டனில் 288 பேர் பலியாகியும் ,95,787 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார
அமைச்சு தெரிவித்துள்ளது
பாடசாலைக்குள் மாணவன் சுட்டு கொலை
பாடசாலைக்குள் மாணவன் சுட்டு கொலை
அமெரிக்கா Maryland high school வளாகத்தில் மாணவன் ஒருவர் ஆயுத தாரி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு கொலை செய்ய பட்ட நபர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்ய பட்டு விளக்கக்க மறியலில் வைக்க பட்டுள்ளார்
இந்தியாவில் பற்றி எரிந்த அடுக்குமாடி 7 பேர் மரணம் -15 பேர் காயம்
இந்தியாவில் பற்றி எரிந்த அடுக்குமாடி 7 பேர் மரணம் -15 பேர் காயம்
இந்தியா மும்பை பகுதியில் அடுக்கு மாடியில் ஏற்பட்ட திடீர் தி விபத்தில் சிக்கி ஏழுபேர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த தி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மதம் மாற வற்புறுத்தியதால் – தற்கொலை புரிந்த 17 வயது பெண்
மதம் மாற வற்புறுத்தியதால் – தற்கொலை புரிந்த 17 வயது பெண்
மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.
மதம் மாறும்படி வற்புறுத்தியதே லாவண்யாவின் தற்கொலைக்கு காரணம்- சித்தி பகிரங்க குற்றச்சாட்டு
லாவண்யாவின் சித்தி சரண்யா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை
செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். லாவண்யாவின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர். லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, டுவிட்டரில் #JusticeforLavanya என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.
பின்னர் லாவண்யாவின் சித்தி சரண்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மதமாற்றம் செய்யக்கோரி 2 ஆண்டுகளாக லாவண்யாவை வற்புறுத்தி வந்தனர். விடுதி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லியும்
பாத்திரம் கழுவச் சொல்லியும் தொந்தரவு செய்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்திருக்கிறாள். மதம் மாறச்சொல்லி வற்புறுத்திய 2
பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். எங்கள் பெண்ணுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லண்டன் வேக சாலையில் பற்றி எரிந்த லொறி
லண்டன் வேக சாலையில் பற்றி எரிந்த லொறி
லண்டன் கென்ட் M25 வேகா சாலையில் லொறி ஒன்று திடீரென பற்றி எரிந்துள்ளது
காலை 7,30 மணிக்கு இந்த சம்பவம், இடம்பெற்றுள்ளது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்த பொழுது லாரியின் இயந்திரபகுதி எரிந்து நாசமாகியுள்ளது
இந்த தீ பற்றலுக்குறிய காரணம் தெரியவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
இந்த சமப்வதினால் சிலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது
அமெரிக்காவில் கொரானாவுக்கு 2008 பேர் மரணம்
அமெரிக்காவில் கொரானாவுக்கு 2008 பேர் மரணம்
அமெரிக்காவில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த
தினம் மட்டும் 2008 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 470,575 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதேபோல பிரிட்டனில் 330 பேர் பலியாகியும் 107,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை
அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிய பெண்ணுக்கு தூக்கு தண்டனை- பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு
பாகிஸ்தான் கோர்ட்
பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் அவதூறு குறுஞ்செய்தியையும் மற்றும் கேலி சித்திரத்தையும் வெளியிட்டதாக கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக அனீகா ஆதிக்குக்கு பாகிஸ்தான் ராவல்பிண்டி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
சாகும் வரை அவரை தூக்கிலிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை
சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை:
சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பினால் 5 ஆண்டு சிறைத்தண்டனையும், பெரும் அபராதமும் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு சவுதி அரேபியாவில் வெளியாகி உள்ளது.
சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை: சவுதி அரேபியாவில் அதிரடி
சவுதி அரேபியா
ரியாத் :
சமூக ஊடகங்களில் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது என்பது பல்வேறு நாடுகளில் அரங்கேறி வருகிறது. இது சமூகத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.
இதே போன்றதொரு நிகழ்வு, சவுதி அரேபியாவில் பொங்கல் பண்டிகை நாளில் (14-ந் தேதி) நடந்தது.
அன்று அங்கு தலைநகர் ரியாத்தின் புறநகரில் கே-பாப் இசைக்குழுவின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் அன்றைய தினம் அங்கு பெரும் காற்று வீசியதை அடுத்து அந்த இசை நிகழ்ச்சி கடைசி நிமிடத்தில் ரத்தானது.
இதனால் புறநகர் பகுதி மைதானத்தில் இருந்து வீடு திரும்ப முடியாமல் ரசிகர்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
அப்போது சமூக ஊடகங்களில் சிறுமிகள் காணாமல் போய்விட்டதாகவும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பீதியை ஏற்படுத்தின.
இதையொட்டிய ஹேஷ்டேக்குகள் அதிகரித்து, ஆபத்தின் உணர்வை பன்மடங்காக பெருக்கியது. இதில் உண்மை இன்னும் தெளிவாக தெரியவரவில்லை.
அங்கு இருந்ததாக கூறுகிற பலரும், இது போன்ற சம்பவங்கள் நடக்கவில்லை என்றும், இக்கட்டான நிலையிலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் கூறி உள்ளனர்.
ஆனாலும், பெண்களைத் துன்புறுத்துவதாக கூறப்படும் ஆண்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அந்த ஆண் படங்களில் சில சமூக ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்ற நிலையில், பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான தகவல்களுக்கு அது மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்தது.
ஆனாலும் சவுதி அரேபிய பொழுதுபோக்கு ஆணையத்தின் தலைவர் துர்கி அல் ஷேக், பெண்கள் துன்புறுத்தல் பற்றிய அறிக்கைகள் முற்றிலும் தவறானவை என்று பல டுவிட்டர் பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டார்.
சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டவர்கள் அல்லது ஆன்லைனில் விவாதங்கள் வெளியிட்டவர்களில் சிலர் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் கணக்குகளை மூடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை ஆதாரம் இன்றி வெளியிடுவதை முடிவுக்கு கொண்டு வர அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.
அங்கு இனி யாரேனும் ஆதாரம் இன்றி சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எக்ஸ்ரே மூலம் கொரோனா பரிசோதனை
எக்ஸ்ரே மூலம் கொரோனா பரிசோதனை
எக்ஸ்ரே மூலம் கண்டறியப்படும் கொரோனா பரிசோதனை 98 சதவீதம் துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எக்ஸ்ரே மூலம் கொரோனா பரிசோதனை- ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தகவல்
ஒமைக்ரான் வைரசால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலமாகவே இதன் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக ஆர்.டி.பி.சி.ஆர். மற்றும் ஆர்.டி.ஏ. துரித பரிசோதனை முறைகள் என பல வகைகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் எக்ஸ்ரேவை பயன்படுத்தியும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக் கழக விஞ்ஞானிகள் எக்ஸ்ரே கதிர்களை பயன்படுத்தி ஒருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பதை கண்டறியும் வழியை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு நபருக்கு வைரஸ் இருப்பதை கணிக்க செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்துகின்றனர்.
கொரோனா வைரஸ்
எக்ஸ்ரே மூலம் கண்டறியப்படும் கொரோனா பரிசோதனை 98 சதவீதம் துல்லியமாக இருப்பதாக ஸ்காட்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெஸ்ட் ஸ்காட்லாந்து பல்கலைக் கழக விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது:-
பி.சி.ஆர். சோதனையை விட எக்ஸ்ரே சோதனை வேகமாக இருக்கும். கொரோனாவை கண்டறிய விரைவான மற்றும் நம்பகமான கருவிகளின் தேவை நீண்டகாலமாக உள்ளது.
கொரோனா நோயாளிகள், ஆரோக்கியமானவர்கள் மற்றும் நிமோனியா உள்ளவர்கள் ஆகியோருக்கு சொந்தமான சுமார் 3,000 படங்களின் ஸ்கேன்களை ஒப்பிடுவதற்கு எக்ஸ்ரே தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஆனாலும் நோய் தொற்றின் ஆரம்ப கட்டங்களில் எக்ஸ்ரேவில் கொரோனா அறிகுறிகள் தெரியவில்லை. எனவே பி.சி.ஆர். சோதனைகளை முழுமையாக மாற்ற முடியாது. எங்களது ஆய்வை விரிவுபடுத்த திட்ட மிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்
157mph வேகத்தில் பறந்த கார் – துரத்திய கார்
லண்டன் கென்ட் டாட்போர்ட் பகுதி வேக சாலையில் பயணித்த கார் ஒன்று சுமார் 157mph
வேகத்தில் பயணித்துள்ளது
மேற்படி காரின் வேகத்தை கண்காணித்த சாலையோர கமரா குறித்த சாரதிக்கு டிக்கட் அனுப்ப
பட்டுள்ளதுடன் புள்ளியும் பறிக்க பட்டுள்ளது
இந்த வருடத்தில் குறித்த பகுதியில் பயணித்த ஐந்தாவது வேகமாக ஓடிய கார் இதுவாக பதிய
பெற்றுள்ளது
நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்
நில நடுக்கத்தில் சிக்கி 22 பேர் மரணம்
இன்று Afghanistan தெற்கு பகுதியில் இடம்பெற்ற திடீர் நில நடுக்கத்தில் சிக்கி இருபத்தி இரண்டு
பேர் பலியாகியுள்ளனர்
மேலேயும் உடைமைகள் பல சேதமடைந்துள்ளன
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

















