Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்
பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்
தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்
இளவரசர் ஆண்ட்ரூ
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டார். ஆனால் அவர் தன்மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என கடந்த மாதம் நியூயார்க் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்தது.
இதனிடையே ராணி 2-ம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70-வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், அரச குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கை சுமுகமாக தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.120 கோடி) வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை தொடர்ந்து, சட்டநடைமுறைகளை பின்பற்றி 30 நாட்களுக்குள் வழக்கை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை – புட்டீன் அறிவிப்பு
ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம் எமக்கு இல்லை – புட்டீன் அறிவிப்பு
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்த நிலையில் ரசியா
உக்கிரேன் மீது தாக்குதலை மேற்கொண்டு ஐரோப்பா மீதும் தாக்குதலை நடத்த கூடும்
என எதிர் பார்க்க பட்டது ஆனால் தாம் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தும் நோக்கம்
தமக்கு இல்லை என ரசியா அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார்
உக்கிரேன் மீதான தாக்குதல் இராணுவ குவிப்பு ஐரோப்பாவுக்கும் விடுக்க பட்ட எச்சரிக்கையாகவே பார்க்க படுகிறது
பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்
பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்
பிரான்ஸ் Saint-Laurent-de-la-Salanque பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தி விபத்தில் சிக்க ஏழு பேர் பலியாகினர்
மேலும் சிலர் தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
முடங்கியது டுவிட்டர்- அவதியில் மக்கள்
முடங்கியது டுவிட்டர்- அவதியில் மக்கள்
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாக டுவிட்டர் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
திடீரென முடங்கியது டுவிட்டர் வலைதளம் – அவதியடைந்த பயனாளர்கள்
டுவிட்டர் வலைதளம்
உலகம் முழுவதும் நள்ளிரவு டுவிட்டர் சமூக வலைதள சேவை திடீரென முடங்கியது. இந்தியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து உள்பட பல்வேறு
நாடுகளில் இந்த பாதிப்பு காணப்பட்டது. இதனால், அவதியடைந்த டுவிட்டர் பயனாளர்கள் புகாரளித்தனர்.
ஒரு மணி நேரத்திற்கும் பிறகு டுவிட்டர் வலைதளம் செயல்பாட்டிற்கு வந்தது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.
ட்வீட்களை இடுகையை தடுக்கும் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது,
நிலைமை சீரடைந்து விட்டதாகவும் டுவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும் தொழில்நுட்ப கோளாறுக்கு பயனாளர்களிடம் டுவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியது.
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா
உக்கிரேன் எல்லையில் 10 நாள் போர் ஒத்திகை நடத்தும் ரசியா பதட்டம் அதிகரிப்பு
ரசியா இராணுவம் Belarus, பகுதியில் பத்து நாள் இராணுவ போர் ஒத்திகையில் ஈடுபடுகிறது
இந்த திடீர் முற்றுகை போரினால் ரசியா ,உக்கிரேனுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நேட்டோ படைகள் ரசியாவின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது செயல்படுவதால்
இராணுவ நடவடிக்கை மூலம் ரசியாவை பாதுகாக்க புட்டீன் முனைந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டனில் இளம் பெண்ணை கற்பழித்த 10 பேர் கைது
லண்டன் Folkestone and Canterbury பகுதியில் 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில்
12 வயதுடைய சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
தொடர்ந்து இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவர்கள் குற்றவாளிகள் என
அடையாளம் காண பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
மண் சரிவு
மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால் செய்யப்பட்டவை என்பதால் 60க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவில் அடித்து செல்லப்பட்டன. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர்
உயிரிழந்துள்ளனர். 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலும், காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண் சரிவு
இந்நிலையில், பெரேரா நகராட்சியின் மேயர் கார்லோஸ் மாயா, அப்பகுதியில்
தொடர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், உயிரிழப்புகளை தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
மேலும், கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டியூக், மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
லண்டன் வீதியில் கழன்று ஓடிய காரின் சக்கரம்
லண்டன் வீதியில் கழன்று ஓடிய காரின் சக்கரம்
லண்டன் எம் 2 Faversham பகுதி வேக சாலையில் பயணித்த கார் ஒன்றின் சக்கரம்
காரினை விட்டு கழன்று ஓடியாதல் அந்த சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பபட்டது
இதனால் அந்த சாலையின் ஒரு வழி லேன் அடித்து மூடப்பட்டது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரினை மீட்டு அந்த சாலையின் வாகன நெரிசலை நீக்கினர்
இந்த சம்பவத்தால் சில மணி நேரம் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்
லண்டன் Nelson Road, Gillingham பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
தலைகீழாக கவிழ்ந்தது ,
அவ்வேளை ,சாரதி காரின் கூரைக்குள் சிக்கிய தவித்து கொண்டிருந்தார்
விரைந்து வந்த அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்
ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒத்த விபத்து இது என்பது குறிப்பிட தக்கது
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார் -சிக்கிய பெண்
லண்டன் கென்ட் Horsmonden Road in Brenchley பகுதியில் காலை பத்து முப்பது
மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பட்டாடை இழந்து
தலைகீழாக கவிழ்ந்தது ,இதன் பொழுது அந்த காரை செலுத்தி சென்ற [பெண் அதற்குள் சிக்கி கொண்டார்
விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காரின் கதவுகளை வெட்டி அதற்குள் சிக்கி இருந்த பெண்ணை மீட்டனர்
சிறு காயங்களுடன் உயிர் தப்பிய பெண்மணி Tunbridge Wells மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார்
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்த வண்னம் உள்ளது
எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்
எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்
ஒருவரை திருமணம் செய்த சில நாட்களுக்குப் பிறகு நகைகள் மற்றும் பணத்துடன் அவள் தப்பிச் சென்று விடுவாள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எட்டு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது
எட்டு ஆண்களை ஏமாற்றிய பெண் கைது
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஊர்மிளா அஹிர்வார். 28 வயதான அவருக்கு ரேணு ராஜ்புத் என்ற மறுபெயரும் உண்டு. வசதியான ஆண்களை வளைத்து பிடித்து மயக்கி
திருமணம் செய்து கொள்வதும் பின்னர் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக் கொண்டு ஓடுவதுதான் இவரது வேலை.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், கோட்டா, மத்திய பிரதேசத்தின் தாமோ மற்றும் சாகர் ஆகிய இடங்களிலும் இவ்வாறு ஏமாற்றிய வந்துள்ளார். ஊர்மிளா அஹிர்வார் மீதான புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் சியோனி மாவட்டத்தை சேர்ந்த தஷ்ரத் படேல் என்ற நபரை 8 வதாக திருமணம் செய்து கொண்ட ஊர்மிளா, காரில் அவரது கிராமத்திற்கு புறப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி அவர் கீழே இறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த பாக்சந்த் கோரி என்பவர் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
இதையடுத்து மணமகன் படேல் தன்னிடம் கொடுத்த பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கல்யாண பெண் ஊர்மிளா வழக்கம் போல் தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து அறிந்த காவல்துறையினர் அவரை விரட்டிப் பிடித்துக் கைது செய்தனர். திருமண மோசடிக்கு உதவியதாக அர்ச்சனா ராஜ்புத், பாக்சந்த் கோரி, அமர் சிங்
ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓம்டி காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.எஸ்.பாகேல் தெரிவித்துள்ளார். விசாரணையில் ஏழு ஆண்களை ஏமாற்றியதை ஊர்மிளா ஒப்புக் கொண்டார்.
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்
கடந்த நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது.
பணத்தை அள்ளி குவிக்கும் கூகுளின் தாய் நிறுவனம்- பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் வர்த்தக நேரத்திற்கு பிறகு 8%-க்கும் மெல் அதிவேகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து
அந்நிறுவனம் தனது பங்குகளை 1-க்கு 20 என்ற வகையில் பிரித்து தரவுள்ளது. ( ஆல்பபெட்டின் ஒரு பங்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 19 பங்குகள் கிடைக்கும்.)
இதன்மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும் ஆல்பபெட்டின் பங்குகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வணிக நிபுணர்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நான்காவது காலாண்டில் ஆல்பாபெட்டின் விற்பனை 32% உயர்ந்து 7500 கோடி டாலராக உயர்ந்தது. சாதாரண நுகர்வோர் ஆடை மற்றும் பொழுதுபோக்குப் பொருட்களை கூகுளில் தேடுகின்றனர்.
சில்லறை வணிகம், நிதி, பொழுதுபோக்கு மற்றும் பயண விளம்பரதாரர்கள் அதிக
விளம்பரத்திற்காக செலவிடுகிறார்கள். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று பலரையும் இணையதளத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
வணிகர்கள் அதிகம் டிஜிட்டல் விளம்பரங்களில் செலவிட விரும்புகின்றனர். கூகுள்
நிறுவனம் இணைய விளம்பரங்களில் இருந்தே அதிகம் வருமானம் ஈட்டுகிறது. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சி கணிக்க முடியாததாக இருக்கிறது.
இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல
நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம்.
பார்ப்பதற்கு வித்தியாசமாக தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் இருந்தாலும் இப்படி பேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன.
நம்மை சுற்றியுள்ள பலர் சில நேரங்களில் தனக்குத்தானே பேசிக்கொள்வதை பார்த்திருப்போம். சில சமயங்களில் நாமே இவ்வாறு செய்திருக்கலாம். பார்ப்பதற்கு
வித்தியாசமாக இருந்தாலும் இப்படிபேசிக்கொள்வது உளவியல் ரீதியாக நல்லது என ஆய்வுகள் கூறுகின்றன. தனக்குத்தானே பேசிக்கொள்ளும் வழக்கம் பற்றிய தகவல்கள் சில
சுய பேச்சு
சுயபேச்சு மனநோய் அல்ல என்பது உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வதாகும். இது ஆழ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் எண்ணங்கள் நம்பிக்கைகள், கேள்விகள் மற்றும் யோசனைகளை வெளிப்படுத்துகிறது.
சுய பேச்சு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் இருக்கலாம். இதன் பெரும் பகுதி உங்கள் ஆளுமையைப்பொறுத்தது. னக்கு தானே நீங்கள் தன்னம்பிக்கை மிகுந்தவராக இருந்தால்
உங்கள் பேச்சு மிகவும் நபிக்கையூட்டுவதாக அமையலாம். அவநம்பிக்கையாளராக இருந்தால் எதிரிமறையானதாக இருக்கலாம்.
எதிர்மறையான பேசிக்கொள்ளுதல் சுயபேச்சை முயற்சியின் மூலம் நேர்மறையானதாக மாற்றி கொள்ள முடியும். இது மன உளைச்சலைச் தடுக்கும். நேர்வழி காட்டும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் மனநோய் அல்ல
ஒரு வேலையை செய்வதற்காக உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்வது தானே உங்கள் லட்சியத்தை அடைவதற்காக யோசனைகளை கூறித்கொள்வது, செய்த தவறுகளுக்காக உங்களை நீங்களே திட்டிக்கொள்வது. இனி அத்தகைய தவறுகள்
செய்யக்கூடாது என்று தட்டிக்கொடுத்து கொள்வது, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளை குறித்து நினைவுபடுத்தி கொள்வது போன்றவை நேர்மறையான தனக்கு தானே பேசிக்கொள்ளும் சுயபேச்சு ஆகும்.
நன்மைகள்
சுயபேச்சு, தனக்கு தானேசெயல்திறன் மற்றும் பொது வாழ்வை மேம்படுத்தும். எடுத்துக்காட்டாக
விளையாட்டு வீரர்கள் சுய பேச்சு அவர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவும் மனநோய் என்பதை சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
சுய பேச்சால் உயிர்ச்சத்து பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வலி குறையும். இதய ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.
தனக்குள் பேசும் நேர்மறையான சுய பேச்சு உள்ளவர்கள் மனநல திறன்களை கொண்டிருப்பார்கள். சவால்களை தீர்க்கவும், வித்தியாசமாக சிந்திக்கவும், கஷ்டங்கள்
, சவால்கள் திறமையாக சமாளிக்கவும் உதவுவதாக வல்லுநல்கள் கூறுகிறார்கள். சுய பேச்சு மன அழுத்தம், பதற்றத்தின் தீங்கு தரும் விளைவுகளை குறைக்கும் சக்தி வாய்ந்தது.
மனநோய் சுயபேச்சு எண்ண ஓட்டங்களை சீராக்குகிறது. மனதை கட்டுப்படுத்துகிறது.
இலங்குகளை அடைய உதவுகிறது. தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் செய்யும் வேலையை சிறப்பாக செய்ய ஊக்குவிக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி செயலாற்ற வைக்கிறது.
உன்னால் முடியும், முயற்றி செய், வெற்றி நிச்சயம் போன்ற வாக்கியங்களை தனக்கு தானே பேசிக்கொள்ளுதல் நேர்மறையான சுயபேச்சு, வாழ்வில் சிறந்த இடத்தை அடைவதற்கு உதவுகிறது.
அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அமைச்சர் அனிதா சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு தொடரப்பட்ட பணமோசடி வழக்கின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சிதறிய கட்டுப் பாட்டு அறை
வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சிதறிய கட்டுப் பாட்டு அறை
இதில் மிக முக்கிய அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது
இந்த தாக்குதலை அடுத்து நாடுகளுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது
பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்
பாரிய நில நடுக்கம் ஓடிய மக்கள்
தெற்கு ஈரானில் 3.3 என்கின்ற அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது ,இதன் போது
வீடுகள் குலுங்கி உடைந்து வீழ்ந்தன ,மக்கள் பீதியில் வீதிகள் ஓடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இது போன்ற பாரிய நில அதிர்வால் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
அவுஸ்ரேலியாவுக்குள் காருக்குள் புகுந்த ரயில் – தப்பிய பெண்
அவுஸ்ரேலியாவுக்குள் காருக்குள் புகுந்த ரயில் – தப்பிய பெண்
அவுஸ்ரேலிய குயின்லாந் பகுதியில் உள்ள ரயில்வே கடவை ஒன்றில் கார் ஒன்று சிக்கியது
இதன் போது அதன் வழியாக பயணித்த ரயில் அந்த காரை இடித்து தள்ளியவாறு சென்றது
இதன் பொழுது தெய்வாதீனமாக அந்த சாரதி தப்பினார் ,ஆனால் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளது
மேற்படி காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த கட்டடங்கள்
வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த கட்டடங்கள்
தெற்கு ஈராக் பகுதியில் உள்ள கட்டம் ஒன்றில் ரொக்கட் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் அந்த கட்டடம் பற்றி எரியும் காட்சிகள் வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது
எனினும் இந்த தாக்குதலில் மக்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது
லண்டன் வீதியில் மனித மலம் – கொதித்தெழுந்த எம்பி
லண்டன் வீதியில் மனித மலம் – கொதித்தெழுந்த எம்பி
லண்டன் கென் பகுதியில்; லொறிகள் மற்றும் மினி பஸ்களை என்பன தரித்து விடும்
தரிப்பிடம் முறையாக அமையாததால் அங்கு மனித மலம் வீதிகளில் காண
படுவதாகவும் , அதனை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படுவதான புதிய குற்ற சாட்டை பாரளுமன்றில் எம்பி ஒருவர் முன் வைத்துள்ளார்
வெளிநாடுகளில் இருந்து உள்ளே நுழையும் வாகன தரிப்பிடங்கள் முறையாக
பராமரிக்க பட்டு அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்க பட வேண்டும் என்பது இவரது கொதிப்பாக அமைய பெற்றுள்ளது
லண்டனுக்கு வந்த சோதனை.
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் வீதியில் மனித சடலம் – விசாரணைகள் ஆரம்பம்
லண்டன் M20 வேகசாலையில் மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நபர் கொலை செய்ய பட்டு இருக்கலாம் என கருத படுகிறது
மேற்படி குற்ற செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என கருத படும் மூவர் அப்பகுதியில் கைது செய்ய போட்டுள்ளாராம்
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இறந்த நபரது குடும்பத்திற்கு தகவல் வழங்க பட்டுளளது





















