கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் ,சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு:

கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடைஇ வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதறைஃமுகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

No posts found.
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் - போதை பொருள் விற்ற பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கி இந்த போதைப்பொருள் சோதனைகள்
தொடரும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No posts found.
சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்
Posted in இலங்கை செய்திகள்

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ் ஊடகவியலாளர் பா.நிரோஸால் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில்,

முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியது.

1111/2022 என்கிற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்தன தலைமையில் இன்று (04)
பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்திருந்தது.

விரைவில் இராணுவ வழங்க போகும் பொய் சாட்சியம் இங்கே வெளியாக உள்ளது .

No posts found.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 21ஆம் திகதி,
நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்நிறைவடையும்.

No posts found.
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
Posted in இலங்கை செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை

இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விலைகள் பின்வருமாறு,

12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 4,409/= ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 1,770/= ரூபாவாகும்.

2.3 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 38
ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 822/= ரூபாவாகும்.

No posts found.
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம், 8ம் திகதி ஞாயிறன்று ஹட்டனில் நடைபெறும்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம்,
எதிர்வரும் 8ம் திகதி ஞாயிறன்று நண்பகல் 12.30 மணிக்கு ஹட்டன் கிருஷ்ண பவன் விடுதியில் நடைபெறும்.


இக்கூட்டத்தில், தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பிலும்,


நடப்பு அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No posts found.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தது.

நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய உதவிப் பொதுச் செயலாளர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.

இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கு நீண்டகால அடிப்படையில் முன்னேறுவதற்கும் நாட்டின் எதிர்காலப் பயணத்தை உறுதி செய்வதற்கும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழு ஏற்றுக்கொண்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

பாராளுமன்ற அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நாட்டின் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடத்தும் கலந்துரையாடல்

என்பன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பிரதிநிதிக் குழுவுக்கு விளக்கமளித்ததுடன், தூதுக்குழு அந்த நடவடிக்கைகள் தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்தது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொழம்பகே,
உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No posts found.
மகிந்த ராஜபக்சா சம்பந்தர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த ராஜபக்சா சம்பந்தர் சந்திப்பு

மகிந்த ராஜபக்சா சம்பந்தர் சந்திப்பு

இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் , தமிழ் இனக் கொலையாழியுமான ,மகிந்த ராஜபக்சா ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தருடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பாட்டர் .

வட கிழக்கு தமிழர் பிரச்னை மற்றும் ,அரசியல் தீர்வு தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக ,கூட்டமைப்பு அறிக்கை விட்டுள்ளது .

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலை தொடர்பான விடயங்கள் ,ஐக்கிய நாடுகள் சபையில் இறுக்கம் அடையும் நிலை ஏற்படலாம் என்பதும் ,இவ்வேளை கோட்டா ,மகிந்தா சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படலாம் என்பதால் ,தற்போது இலங்கை தமிழர் தீர்வு திட்டம் தொடர்பாக பேச ஆரம்பித்துள்ளன .

No posts found.
இலங்கையில் 395 யானைகள் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 395 யானைகள் பலி

இலங்கையில் 395 யானைகள் பலி

இலங்கை காடுகளில் வசித்து வந்த காட்டு யானைகள் 395 பலியாகியுள்ளது .

மின்சார வேலிகள் மற்றும் தந்தை வேட்டை உள்ளிட்ட, குற்றச்செயல்களில் ஈடு படுவர்களினாலும் ,யானைகள் வேட்டையாட பட்டுள்ளன .

இதனால் இலங்கையில் 395 யானைகள் பலியாகியுள்ளதாக, இலங்கை வனவள பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது .

இலங்கை வரும் உல்லாச பயணிகள், அதிக ம் யணைகளை விரும்பி பார்த்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்
Posted in இலங்கை செய்திகள்

குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்

குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்

இலங்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் நோக்கில் ,இலங்கை காவல்துறையினருக்கு புதிய ,போதை பொருள் சோதனை கருவிகள் வழங்க பட்டுள்ளன .

வெளிநாட்டுகளில் உள்ள கருவிகள் போல இவை காணப்படுகின்றன .

இலங்கையில் இடம் பெறும் ,அதிக விபத்துக்களை தடுப்பதற்கு இந்த கருவிகள்,வழங்க படுகின்றன .

இதன் மூலம் இலங்கையில் ஏற்படும் , வீதி விபத்துக்களை தடுக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது .

No posts found.
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இளம்பெண்ணை கற்பழித்த காவல்துறை சிப்பாய்

யாழில் இளம்பெண்ணை கற்பழித்த காவல்துறை சிப்பாய்

யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 17 வயது இளம் பெண் ஒருவரை, 31 வயதுடைய காவல்துறை சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .

மகளின் நடத்தையில் சநதேகம் கொண்ட பெற்றோர் நடத்திய விசாரணையில் மேற்படி விடயம் அம்பலமானது .

ஒருவருடத்திற்கு முன்னர் காவல்துறை சிப்பாய் ,குறித்த பெண்ணை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது .

இதனை அடுத்து குறித்த சிப்பாய் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப் பட்டுளளார் .

கைதான காவல்துறை சிப்பாய் மன்னார் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது .

No posts found.
பிரதமரின் தலைமையில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு புதிய பேருந்து
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து கட்டணம் குறைப்பு

பேருந்து கட்டணம் குறைப்பு

அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 10 சதவீதத்தினால் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.

No posts found.
மாணவியை கற்பழித்த ஆசிரியருக்கு 5 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

104 பேரை கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்

104 பேரை கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்

நாடு ஒன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோது யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.

இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18 ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.

104 பேரை கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்

சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.

டிசம்பர் 19 ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம்

பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், நாடு ஒன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையிலேயே ஜனவரி 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதே நீதவான் இந்த உத்தரவையிட்டார்.

No posts found.
சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு

சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நாம் அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளவும், அதேபோன்று தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (03) குறித்த அமைச்சின் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விடயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்கலாம் என்றார்.

இந்நிகழ்வில், அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன்,
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்,
நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (திருமதி)
எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அபு அலா –

No posts found.
ஈரானில் 1957 kg போதைவஸ்து கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி

கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணியினை முன்னிட்டு விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று (03) இடம்பெற்றது.

கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.

அதன் முன்னேற்பாடாக குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டியில் 75 மாணவர்கள் பங்குபற்றி தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.

போட்டியின் நிறைவில் முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No posts found.
இலங்கை தொடர்ந்து உதவுவோம் சீனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி

32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி

நாட்டின் உணவு உற்பத்திகளில் 32 வகைளை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில் இந்த உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

29 வகையான கடற்றொழில் நீரியல் உற்பத்தி இதில் அடங்குகின்றன. சீன அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 இலங்கை நிறுவனங்கள் இவற்றின் ஏற்றுமதியாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி

சீனாவுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி பொருட்களை பரிசோதித்தல் எள்ளிட்ட விடயங்களுக்காக , சீன அரசாங்கத்தின் சுங்க

பகுதிக்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்தில் அமைச்சர் இந்தவியடங்களை குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:

  1. இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளை பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனை பணிமுறை முன்னேற்பாடு

எமது நாட்டிலிருந்து 33 வகையான உணவுற்பத்திகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீனக் குடியரசின் பொதுச் சுங்க நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவற்றில் 29 உற்பத்திகள் நீரியல் வள உற்பத்திகளாக காணப்படுவதுடன், சீனக் குடியரசில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கம்பனிகளில் 38 கம்பனிகள் குறித்த ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவுக்கு நீரியல் வள உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும்,


மற்றும் ஊக்குவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கையிலிருந்து
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளைப் பரிசோதித்தல்,
தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான


அறிவியல் சோதனைப் பணிமுறை முன்னேற்பாடு (Protocol),
சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் மற்றும் இலங்கை ஜனநாயக
சோசலிச குடியரசின் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில்

கையொப்பமிடுவதற்காக
கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No posts found.
நையீரியாவில் குண்டு வெடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நையீரியாவில் குண்டு வெடிப்பு

நையீரியாவில் குண்டு வெடிப்பு

நையீரியாவில் இராணுவத்தின் ரோந்து அணியை இலக்கு வைத்து, குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் சிக்கி மூன்று இராணுவத்தினர் ,மேலும் ஒரு துணை படை ஒட்டு குழு சிப்பாயும் பலியாகியுள்ளார் .

நையீரியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும், உள் நாட்டு போர் காரணமாக, பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .

யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்

யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்

இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நாய்களின் ,
கடிக்கு உள்ளான நிலையில் சிசு ஒன்று சடலமாக மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு சிசுவாக மீட்க பட்ட பெண் குழந்தை ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .

இதன் பொழுது அந்த பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில்,வசித்து வந்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இந்த சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
விபத்தில் தந்தை மகன் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தந்தை மகன் பலி

விபத்தில் தந்தை மகன் பலி

இலங்கை காட்டுவன பகுதியில் ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த
.தந்தை மற்றும் மகன் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர் .

சாரதியின் கட்டு பாட்டை இழந்த ஊந்துருளி மரத்துடன் மோதி விபத்தில் சிக்கியது .


இதன் போதே 26 வயதுடைய மகன் மற்றும் தந்தை ஆகியோர் பலியாகினர்.

No posts found.
யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்

யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்

இலங்கை யாழ்ப்பாணத்தில் போதை பொருளுக்கு,
அடிமையான பெண்கள் ,அதனை தொடராக பெற்றிட ,
பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகியுள்ளது .

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,
கண்காணிக்க பட்ட பொழுது ,இந்த இளம் பெண்கள் ஏழுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

யாழில் போதைபொருள் வாங்கிட விபச்சாரம் புரிந்த பெண்கள் 7 பேர் சிக்கினர்

இலங்கை இராணுவத்தின் வசம் தமிழர் தாயாக பகுதிகள்,
பறிபோன நிலையில் ,இவ்விதமான போதைப்பொருள் மற்றும் ,
பாலியல் ,குழு மோதல்கள் அதிகரித்து வருகிறது .

ஈழ தமிழ் வாலிபங்களின் சிந்தனையை திசை திருப்பி ,
கலப்பு இன கலாசாரம் மற்றும் கலப்பினத்தை உருவாக்கும் நோக்குடன் ,
இவ்வ்விதமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக,
தமிழ் சமூக ஆர்வலர்கள் ,
அவர் தம் கருத்துக்களை முன் வைத்து வருவதுடன் ,
இதுவிடயமான தமது ஆழ்ந்த கவலைகளையும் வெளியிட்டுள்ளனர் .

No posts found.