லஞ்சம் பெற்ற PHI கைது
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற PHI கைது

லஞ்சம் பெற்ற PHI கைது

லஞ்சம் பெற்ற PHI கைது ,ஹோட்டல் உரிமத்தைப் புதுப்பிக்க 200,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற ​​பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவெல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள்

ஐ ம சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்கள் ,2025ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இந்நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.

இதன் பிரகாரம், மாத்தளை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரோஹினி குமாரி விஜயரத்ன கவிரத்ன, அநுராதபுர மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார, புத்தளம் மாவட்டத் தலைவராக

பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, காலி மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, கம்பஹா மாவட்டத் தலைவராக

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, குருநாகல் மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, களுத்தறை மாவட்டத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா நியமிக்கப்பட்டனர்.

ஏனைய மாவட்டங்களுக்கான அடுத்த தொகுதி நியமனங்கள் கிட்டிய நாட்களில் வழங்கி வைக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பிரசன்னமாகி இருந்தார்.

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பாதி எரிந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு ,கடவத்தை – கணேமுல்ல அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இன்று (15) காலை அடையாளம் தெரியாத பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இடத்தில் நேற்று (14) இரவு 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குறித்த நபரின் சடலம் அங்கு கொண்டு வந்து போட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம்

அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறை தற்காலிகமாக நிறுத்தம் ,அரச காணிகளுக்கு இலவச பத்திரம் வழங்கும் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூகப் பாதுகாப்பு, குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்வாழ்வைக் கருத்தில் கொண்டு புதிய முறையின் மூலம் பத்திரம் வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என்று, அவர் மேலும் கூறியுள்ளார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தீர்ப்பு ,உள்ளூராட்சி சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் பிரிவு 12 (பி), அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை பாராளுமன்றத்தில் முன்வைத்த சபாநாயகர், எஞ்சிய சரத்துகள் அரசியலமைப்புக்கு அமைவாக உள்ளதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சற்று நேரத்திற்கு முன்னர், பாராளுமன்றதலதில் தெரிவித்தார்

தலை துண்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி

எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி

எம் பியின் வாகனம் மோதியதில் மோட்டார் ஓட்டி பலி ,பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, மாதம்பே பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​

மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம்பேயிலிருந்து தோப்புவ நோக்கி பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, மாதம்பே பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​

மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக கொஸ்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதம்பேயிலிருந்து தோப்புவ நோக்கி பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது

மோதியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், பாராளுமன்ற உறுப்பினரின் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன்

காதலி மறுத்ததால் தவறான முடிவெடுத்த காதலன் ,29 வயது நபர் ஒருவர், காதலர் தினத்தன்று யாழ்ப்பாணம் வருவதற்கான தனது விருப்பத்தை தனது காதலி மறுத்ததாகக் கூறப்பட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்த சம்பவம் கிளிநொச்சியில் உள்ள புளியம்பொக்கணையில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் மிகுந்த மன உளைச்சலில் இருந்த இவர் , தோட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டார்.

நிராகரிப்பால் ஏற்பட்ட மன உளைச்சலால் அந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தங்கள் மகன் ஒரு உறவில் இருந்ததாகவும், காதலர் தினத் திட்டங்களை காதலி மறுத்தது மட்டுமல்லாமல், அவரைத் திட்டியதால் மனம் உடைந்ததாகவும் பெற்றோர் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி

நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி

நீர் விநியோகம் துண்டிப்பு செய்தி பொய்யானா செய்தி ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில்

வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தி தொடர்பிலான விசாரணையின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் உள்ள

மற்றுமொரு இடத்தில் நிலுவைத்தொகை செலுத்தப்படாததன் காரணமாக நேற்று (13) நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்ததாக சபை கூறியுள்ளது.

ஆனால் அந்த இடம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் அல்ல என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவரிடம் நீர் வழங்கல் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் மேற்கொண்ட

விசாரணையின் போது, ​​முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அந்த இடத்தில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு ஒக்டோபரில் அந்த இடத்தை விட்டு வெளியேறினர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தரோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அந்த இடத்தில் உள்ள நீர் விநியோகத்தில்

உள்ள தண்ணீரை பயன்படுத்தமாட்டார்கள் என பாதுகாப்பு அதிகாரி கூறியதாகவும், நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த இடத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதிக்கோ அல்லது அவரது பாதுகாப்பு

உத்தியோகத்தர்களுக்கோ எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

92 லட்சம் ரூபாய் மோசடி இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

எம் பியின் தம்பி விபத்தில் கைது

எம் பியின் தம்பி விபத்தில் கைது

எம் பியின் தம்பி விபத்தில் கைது ,தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சகோதரர், விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) காலை, கொஸ்வத்த – ஹல்ததுவன பிரதேசத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல், பாராளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பாராளுமன்ற உறுப்பினரின் கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

வாகனத்தின் சாரதியான பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை

நாமலின் சட்ட பரீட்சை சிஐடி விசாரணை ,பாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டக் கல்லூரிப் பரீட்சைக்கு சட்டவிரோதமாகத் தோன்றியமை குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பாஸ்டன்லங்கா சமூக ஊடக வலையமைப்பில் ஒளிபரப்பான நேர்காணலில் கூறப்பட்ட உண்மைகளின் அடிப்படையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இரண்டு வழக்கறிஞர்களின் உதவியுடன் சட்டக் கல்லூரியில்

நடைபெற்ற தேர்வுக்கு ஆஜராகி சட்டவிரோதமாக சட்டப் பட்டம் பெற்றதாகக் கூறி, ”லஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான சிட்டிசன் பவர்” என்ற அமைப்பு குற்றப் புலனாய்வுத் துறையில் (சிஐடி) புககர் அளித்துள்ளது.

மேற்கண்ட சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி இது தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் துறை பணிப்பாளருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் (ஐஜிபி )அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது

துப்பாக்கியுடன் காணாமல் போன கான்ஸ்டபிளின் பெற்றோர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது

இந்தியாவில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது ,சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (12) இரவு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

குறித்த நபர், கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக தேடப்படும் சந்தேக நபர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் ஆதரவின்றி பாராளுமன்றம் செல்லும் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை

நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை

நாமல் விவகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை .இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட

நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது, சட்டவிரோதமான முறையில் சம்பாதித்ததாகக் கூறப்படும் 15 மில்லியன் ரூபாய் தொகையை என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட்

நிறுவனத்தின் (NR Consultancy (Pvt) Ltd) நிறுவனத்தில் முதலீடு செய்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் பிற சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடிந்து விட்டதாகவும், வழக்குன் குற்றச்சாற்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சி.டி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, வழக்கை ஆகஸ்ட் 07ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு முதலில் ‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் போது, நித்ய சேனானி சமரநாயக்க, சுஜானி போகல்லாகம மற்றும் என்.ஆர் கன்சல்டன்சி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாகப் பணியாற்றிய சுதர்ஷன கணேகொட ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ , பாராளுமன்ற உறுப்பினராகப்

பணியாற்றியபோது சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் 15 மில்லியனை ரூபாய் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் இந்த வழக்கு குற்றம் சாட்டியுள்ளது

இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்

இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம்

இலங்கை அச்சுத் திணைக்களத்தில் பதற்றம் ,ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கும் பல ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அரசு அச்சுத் திணைக்களத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழியர்கள் உணவகத்தில் சாப்பிட மறுத்ததால், வெளியில் இருந்து உணவு வாங்க வளாகத்தை விட்டு வெளியேற பாதுகாப்பு அதிகாரி அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதம் தொடங்கியது.

தகராறின் போது, ​​பாதுகாப்பு அதிகாரி காவலர் அறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து ஊழியர்களையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரி பொரளை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார்.

காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்
Posted in இலங்கை செய்திகள்

காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்

காதலர் தினம் பெற்றோர்களே அவதானம்

காதலர் தினம் பெற்றோர்களே அவதானம் ,உலகம் முழுவதும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த தினத்தை வர்த்தகர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர்.

அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள காதலர் தினத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காதலர் தினத்தன்று இளைஞர், யுவதிகளை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுதல், சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துதல், மோசடிகளில் ஈடுபடுதல், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.

காதலர் தினத்தன்று இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களிலிருந்து இளைஞர்களும் யுவதிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
Posted in இலங்கை செய்திகள்

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம் ,நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க கூறியுள்ளதாவது,

தற்போது அதிகாலை வேளையில் நிலவும் குளிரான காலநிலையும் தொடரக்கூடும்.

அத்துடன், நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே சிறியளவில் மழை வீழ்ச்சி பதிவாகினாலும், வெப்பமான காலநிலை தொடரும்.

மழை பெய்வதற்கு ஏற்ற அளவிலான திறன் கொண்ட மேகங்களின் உருவாக்கம் குறைவாகக் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்
Posted in இலங்கை செய்திகள்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

ஏப்ரல் மாதத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம்

உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது அவ் தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இவ் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு இத்தேர்தலானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இக்குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் பங்குபற்றியதாகவும் அவர் தெரிவித்தார்

தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு

தையிட்டியில் போராட்டம் இன்றும் முன்னெடுப்பு ,தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (11) பி.ப 4.00 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இப்போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்று ( 12) புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும்.

இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளனர்.

எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித்

சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை கோரினார் சஜித் ,இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிஸ் தூதர் சிரி வால்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது.

சந்திப்பின் போது, ​​இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களுக்கு சுவிஸ் அரசாங்கத்தின் அதிகபட்ச உதவியை பிரேமதாச கோரினார். புதைபடிவ எரிபொருட்களிலிருந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு

மாறுவதற்கான சுவிட்சர்லாந்தின் 2023 சட்டத்தை அவர் பாராட்டினார், இது காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதில் ஒரு வரலாற்று நடவடிக்கை என்று விவரித்தார்.

இலங்கையின் சமீபத்திய மின்வெட்டு குறித்துப் பேசிய பிரேமதாச, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை அளிக்குமாறு தானும் மற்றவர்களும் அரசாங்கத்தை பலமுறை வலியுறுத்தியதாகக் கூறினார்.

மின்சார நுகர்வு மற்றும் எரிசக்தி உற்பத்தியில் உள்ள பொருத்தமின்மையால் ஏற்படும் அமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மின்வெட்டுக்கு வழிவகுத்தன என்று அவர் விளக்கினார். நிர்வாகம் புறக்கணித்துள்ள பேட்டரி எரிசக்தி சேமிப்பு

அமைப்புகள் (BESS) மற்றும் பம்ப் செய்யப்பட்ட சேமிப்பு மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கான அவசரத் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

சுவிஸ் தூதரிடம் ஆதரவைக் கோரிய பிரேமதாச, தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கும் எதிர்கால மின்வெட்டைத் தடுப்பதற்கும் அரசாங்கம் உடனடியாக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற

உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​எம்.பி.க்கும் இரண்டு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வனப்பகுதியில் தீப்பரவல்
Posted in இலங்கை செய்திகள்

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல் ,பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது அது பரவலாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.