ஜேர்மனியை சென்றடைந்த அனுர
Posted in இலங்கை செய்திகள்

ஜேர்மனியை சென்றடைந்த அனுர

ஜேர்மனிக்கு உத்யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அனுர இன்றைய தினம் ஜேர்மனியை சென்றடைந்துள்ளார்.

ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

இன்று முற்பகல் (11) பெர்லினின் பிராண்டன்பேர்க் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு, ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) தலைமையில் இன்று பிற்பகல் பெர்லினில் உள்ள பெல்வீவ் மாளிகையில் (Bellevue Palace) நடைபெறும். 

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருக்கும் (Frank-Walter Steinmeier) இடையில்

உத்தியோகபூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மின்சார கட்டணம் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் அதிகரிப்பு

மின்சார கட்டணம் அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சிறிய நுகர்வு மற்றும் 90 அலகுகளுக்கு குறைவான மதத் தலங்களுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தில் இந்த முறை எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 30 அலகுகளுக்கு குறைவான வீட்டு பிரிவிற்கு 8% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.75 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் இன்று நள்ளிரவு முதல் ரூ.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

30 – 60 அலகு பிரிவின் ஒரு அலகுக்கு இதுவரை இருந்த விலை 2 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன், அதன் ஒரு அலகின் புதிய விலை ரூ.8 ஆகும்.

அதன்படி, அந்த பிரிவின் மாதாந்திர கட்டணம் 10 ரூபாவால் அதிகரித்து ரூ.210 ஆக மாறியுள்ளது.

இதற்கிடையில், 61 – 90 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.240 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

91 – 120 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.360 ஆகும்.

121 – 150 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.600 ஆகும்.

121 – 180 அலகுகளுக்கான மொத்த கட்டண அதிகரிப்பு ரூ.840 ஆகவும், 180 அலகுகளுக்கு மேல் உள்ள பிரிவிற்கு ரூ.2020 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வீட்டு பிரிவில் மின்சாரக் கட்டணத் திருத்தம் ரூ.20 லிருந்து ரூ.2020 ஆகவும் அதிகரித்துள்ளது.

180 அலகுகளுக்கு மேல் உள்ள வழிபாட்டுத் தலங்களுக்கான மாதாந்திர நிலையான கட்டணங்களில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்பதுடன், அலகுகளுக்கான கட்டணம் மட்டுமே அதிகரிக்கும்.

பெரிய தொழிற்சாலைகள், ஹோட்டல்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் ரூ. 5,000 அப்படியே காணப்படுவதுடன், மாதாந்திர விண்ணப்பக் கட்டணம் மட்டும் ரூ. 100 அதிகரிக்கும்.

அதன்படி, மேற்கண்ட பிரிவில் ரூ.23 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.28 ஆகவும், ரூ.13 ஆக நிலவிய ஒரு அலகின் கட்டணம் ரூ.15 ஆகவும், ரூ.11 ஆக நிலவிய ஒரு அலகு கட்டணம் ரூ.12 ஆகவும் அதிகரிக்கும்.

அதன்படி, கட்டண அதிகரிப்பு 50 சதம் முதல் ரூ.9 வரை அதிகரித்து, மாதாந்திர வீத அதிகரிப்பு ரூ.50 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி

இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி

கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

கொழும்பில் இருந்து மும்பை நோக்கி ‘எம்.வி. வான ஹை 503’ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது.

அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று கப்பலின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

கப்பலில் இருந்த கொள்கலன்களுக்கும் தீ பரவியதால், அவற்றில் சில பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதனால் சரக்கு கப்பலில் இருந்த கப்டன் உள்பட 22 பேர் உயிர் தப்பிக்க கடலில் குதித்தனர். இதனால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அழிக்கல் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விமானம் மூலமும் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ். சூரத் ஈடுபட்டது. இதனைத்தொடர்ந்து நடுக்கடலில் தத்தளித்த 18 பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு

ஐ.என்.எஸ். சூரத் கப்பல் மூலம் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பனம்பூரில் உள்ள புதிய மங்களூரு கப்பல் துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

மீட்கப்பட்டவர்களில் 6 பேர் காயம் அடைந்திருந்தனர். அவர்களில் 2 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்தது. இதையடுத்து அவர்கள் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 12 பேர் காயமின்றி தப்பினர்.

கடலில் மாயமான மீதமுள்ள 4 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணியில் டிரோன்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டவர்கள் சீனாவை சேர்ந்த 8 பேர், தைவானை சேர்ந்த 4 பேர், மியான்மரை சேர்ந்த 4 பேர், இந்தோனேசியாவை சேர்ந்த 2 பேர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் கேரள கடல் பகுதியில் தீப்பிடித்து எரியும் சிங்கப்பூர் சரக்கு கப்பல் தற்போது வெடித்துச் சிதறும் அபாயத்தில் உள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளதால் வெடித்துச் சிதறலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கப்பலில் தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. இந்திய கடற்படையின் கப்பல்கள் மற்றும் கடலோர காவல்படையின் விமானங்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றன.

ஒருவேளை வெடிப்பு ஏற்பட்டால், கேரளக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில், சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள்

முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி

முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி

பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இன்றைய தினம் (11) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நோயாளர் காவு வண்டியின்றி வைத்தியசாலை நிர்வாகம் காணப்பட்டதால்

உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது பெற்றோரும் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறையால் இதுபோன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு,

நோயாளர்களும் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

மாணவியின் நிலை தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இன்று காலை உடையார்கட்டில் உள்ள பாடசாலைக்குச் சென்ற இந்த மாணவி உடல்நலக் குறைவு ஏற்பட, உடனடியாக பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னர் மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாணவியை கொண்டு செல்வதற்காக, நோயாளர் காவு வண்டியை எதிர்பார்த்து மாணவியும் பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.

அதன் பின் சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை, அவ்வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியரிடம் சென்று, நோயாளர் காவு வண்டிக்காக தாம் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதற்கு அந்த வைத்தியர், வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை காணப்படுவதாக கூறியதோடு, காத்திருக்க கடினமெனில்,

சுய விருப்பத்தின் பேரில், சொந்த செலவில் மாணவியை அழைத்துச் செல்லுமாறும் மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.

அதன் பின், மாணவியை அவரது தந்தை, தன் சொந்த செலவில் மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது,

மாஞ்சோலை வைத்தியசாலை வளாகத்தில் நோயாளர் காவு வாகனங்கள் பல நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வசதியற்ற நோயாளர்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்

கண்டியில் விபத்து நால்வர் படுகாயம்

கண்டியில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் நால்வர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டி, கட்டுகஸ்தோட்டை வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் ஒன்று வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதியதில்

இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு

திடீர் குழி கண்டியில் போக்குவரத்து பாதிப்பு

திடீரென தண்டவாளத்தில் ஏற்பட்ட குழியினால் போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பித்துள்ளது.

கண்டியில் ரயில் மார்க்கத்தில் திடீரென குழி ஒன்று ஏற்பட்டுள்ளமையினால் கண்டி மற்றும் பேராதனை நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கண்டி நோக்கிச் செல்லும் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டி நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும்

ரயில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் திணைக்கள கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இந்த திடீரென தோன்றிய குழியை உடனே கவனித்ததனால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும், இதனைக் கவனிக்காது விட்டிருக்கப்படுமாயின் விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் என மக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

அந்தக் குழியை சீர்திருத்தி, மீண்டும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரணில் இன்று சிஐடயில் ஆயர்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் இன்று சிஐடயில் ஆயர்

ரணில் இன்று சிஐடயில் ஆயர்

ரணில் இன்று சிஐடயில் ஆயர் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

அளித்துள்ளதுடன், அதற்கமைய முந்தைய அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இது தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்புக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு

தமிழரசின் மேயர்தொடர்பில் வௌியான அறிவிப்பு ,யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பதில் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கட்சி மட்டத்தில் யாழ் மாநகர சபை மேயர் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரும் யாழ் மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ் மாநகர சபைக்கான மேயர், துணை மேயர் தெரிவுகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன விபத்தில் 3பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் 3பேர் பலி

வாகன விபத்தில் 3பேர் பலி

வாகன விபத்தில் 3பேர் பலி ,நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வீதி விபத்துகளில் இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாங்குளம், அம்பன்பொல மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

மாங்குளம் – முல்லைத்தீவு வீதியில் உள்ள ஒலுமடு பகுதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, பாலத்தின் கொங்கிரீட் தூணில் மோதியதில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் பாலத்தின் அடியில் உள்ள ஆற்றில் விழுந்து இறந்தார்.

உயிரிழந்தவர் பரந்தன் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கமுவ-மொரகொல்லாகம வீதியில் உள்ள வலத்வெவ பகுதியில், மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வடிகானில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த செலுத்துனர், எஹெட்டுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவர் அபோகமவைச் சேர்ந்த 65 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கொழும்பு-கண்டி வீதியில் உள்ள தொலங்கமுவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று மற்றொரு முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முயன்றபோது, ​​சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல், அது வீதியில் கவிழ்ந்து எதிரே வந்த ஒரு கெப் வண்டியில் மோதியது.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இறந்தவர் நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரியவந்துள்ளது.

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம்

கண்டி ரயில் சேவை இடைநிறுத்தம் ,கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ஆராய்ச்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கண்டி நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்போரா காரணமாக இந்த ரயில்கள் தற்பொழுது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சீர் செய்யப்பட்ட பின்னர் வளமை போன்று ரயில்வே சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அந்த துணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த திடீர் சாலை தடைப்பட்டதனால் பயணிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்..

தமது தொழில் பற்றி வேகமாக ஈடுபட்டு வருவதாக விரைவில் இந்த சேவைகள் நிகழும் வழமைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பு கஞ்சி கடையில் இடம் பெற்று வருகின்ற ரயில் சேவை அதிகமான மக்கள் பயணித்து வருவதும் கண்டு கொழும்பு கடையிலான சேவைகளும் பலமான பாதிப்புக்கு உள்ளாக கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கு குளிர்ந்த பயணிகள் பெரும் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்

மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன் ,குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (09) ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் உடல், நீதவான் பரிசோதனைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான கணவனை கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கீதா கோபிநாத் இலங்கை விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

கீதா கோபிநாத் இலங்கை விஜயம்

கீதா கோபிநாத் இலங்கை விஜயம்

கீதா கோபிநாத் இலங்கை விஜயம் ,சர்வதேச நாணய நிதியத்தின் முதல் துணை நிர்வாக இயக்குநர் கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான

சீர்திருத்தங்கள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்த விஜயம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களுடன் சந்திப்பு நடத்தி, IMF

இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி (Extended Credit Facility) மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாநிதி கீதா கோபிநாத், 2022 ஜனவரி 21 முதல் IMF இன் முதல் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்னர், 2019 முதல் 2022 வரை IMF இன் தலைமை பொருளியலாளராக பணியாற்றினார்.

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
Posted in இலங்கை செய்திகள்

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது ,இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு

வெசாக் தினத்தைமுன்னிட்டு கைதிகள் விடுவிப்பு ,வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலை அதிகார மையங்கள் தெரிவித்திருக்கின்றன.

சிறைச்சாலை குற்றச்சாட்டு

ஆண்டுதோறும் சிறைச்சாலைகளில் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் .நன்னடத்தை காரணமாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

அவ்விதம் வெசாக் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.

சிறைச்சாலை அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள்.

விடுதலை செய்ய நடவடிக்கை

நற்சான்றிதழ் அடிப்படையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் .விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

விடுதலை செய்யப்பட்டு அவரது குடும்பங்கள் இளைய வாய்ப்புகள் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மக்களுக்கு மிக பெரும் நெருக்கடியை விடுவித்து பிரிந்த உறவுகளுடன் சேரும் நிலைக்கு தள்ளி மகிழ்வை வழங்கி வருகிறது .

இதுவே இன்றைய காலத்தின் முன்னோடி தேவையாக உள்ளதாக பார்க்க முடிகிறது .

ஆப்கான் விமான தளத்தில் தாக்குதல் வந்து இடம்பெற்றுள்ளதாக ஆப்கான் செய்திகள் தற்போது தெரிவித்துள்ளன. தலிபான்கள் வசம் சிக்கி இருக்கிற இந்த விமானத்தில் மீது ஐஎஸ் படைகள் திடீரென நுழைந்து துப்பாக்கி தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

போராட்டம் நடத்த 27பேருக்கு தடை

போராட்டம் நடத்த 27பேருக்கு தடை ,போராட்டம் நடத்துவதற்கு 27 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாய்க்கு போலீசார் தெரிவித்துள்ளனர் .

நீதிமன்றத்தினால் நேற்று இந்த 27 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

தையிட்டி திச விகாரையில் இன்று நாளையும் போராட்டம் செய்ய வேண்டாம் என்று இந்த தடை உத்தரவு அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணிகளில் அடாத்தாக புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ அரசியல்வாதிகள் குறித்து ,எச்சரித்து வருகின்ற நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது .

நாடளாவ ரீதியில் தமிழ் பகுதிகளில் புத்தக விகாரர்களின் நிறுவி சிங்களமயமாக்கும் நடவடிக்கையில் ,இலங்கை ஆளுமை அதிகார வர்க்கங்கள் முனைந்து வருகின்றனர் .

அந்த வகையில் தற்பொழுது தமிழரின் யாழ்ப்பாண பகுதி ,தையிட்டியில் இந்த புத்தக விகாரை அமைத்ததற்கு எதிராக பல கட்சிகள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தும் வந்தனர்.

அவ்வாறான நிலையில் தமிழர் பகுதி சிங்களமயமாக்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் ,அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை அடுத்து மல்லாக நீதிமன்றத்தின் விசேட உத்தரவின் கோவில் தற்பொழுது இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயக வழிக்கு நீதிமன்றங்களும் தடையாக இருக்கிறதா இந்த கேள்வி இதன் உனக்கு எழுப்பப்பட்டுள்ளது மக்கள் தெரிவிக்கின்றனர் .

பொலிசார் மீது தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

தாக்குதல் பொலிசார் மீது

தாக்குதல் பொலிசார் மீது

தாக்குதல் பொலிசார் மீது 5சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகம் அவர்களை தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த போலீசார் மீது போதைவஸ்து நோக்கி துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் பாடத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது எடுத்தேன் குறித்த சந்தேகம் அவர் பெருவழிப் போலீசார்னார் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மீது அவர்களை தேடிச் சென்ற காவலதுசாரியினர் மீது தாக்குதல் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

போத வஸ்து பாவனைகள் எமது நாட்டிலே அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான சந்தேகம் அவர்கள் போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது நீதிமன்றத்தில் பாரம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இதற்கு முன்னரும் இவ்வாறு போலீசார் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

மேற்படி சம்பவம் இலங்கை உள்ள செய்திகளும் தலைப்புச் செய்திகள் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட தக்கது .

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்
Posted in இலங்கை செய்திகள்

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண்

இறந்து 8நிமிடங்களில் உயிர்பெற்ற பெண் ,கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார் 8 நிமிடங்கள்

மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர், தனது நினைவு மறுபக்கத்தில் இருந்த அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரியானா, தனது உடல் “கைவிட்ட” நிலையில், மருத்துவ ரீதியாக இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.

அப்போது, “தயாராக இருக்கிறீர்களா?” என்று கேட்கும் ஒரு குரலை கேட்டதாகவும், பின்னர் முழு இருளில் மூழ்கியதாகவும் கூறினார்.

அவரது ஆன்மா உடலில் இருந்து பிரிந்து, காலமற்ற ஒரு பரிமாணத்தில் மிதந்ததாக உணர்ந்தார்.

திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன்

“நான் திடீரென உடலில் இருந்து பிரிக்கப்பட்டேன். என் மனித உருவை நினைவில் கொள்ளவில்லை.

முற்றிலும் அசையாமல் இருந்தேன், ஆனால் முழுமையாக உயிருடன், விழிப்புடன், முன்பை விட அதிகமாக உணர்ந்தேன்.

வலி இல்லை, ஆழமான அமைதியும் தெளிவும் மட்டுமே இருந்தது,” என அவர் விவரித்தார்.

பிரியானா, “மரணம் ஒரு மாயை, ஏனெனில் நமது ஆன்மா ஒருபோதும் இறப்பதில்லை. நமது நினைவு உயிருடன் இருக்கிறது.

அந்த நிலையில், நமது எண்ணங்கள் யதார்த்தத்தை வடிவமைக்கின்றன,” என்று கூறினார்.

இந்த அனுபவம், மனித வாழ்க்கையின் தற்காலிக மற்றும் புனிதமற்ற தன்மையை உணர வைத்ததாகவும், ஒரு உயர்ந்த புலனறிவு அல்லது இருப்பு நம்மை வழிநடத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரியானாவின் நிலை, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா, கழுத்து, உடல், மற்றும் கைகளை பாதிக்கும் அரிய நரம்பியல் கோளாறாகும், இது திடீர் தசை இழுப்புகளையும் சுருக்கங்களையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும், அறிகுறிகளை நிர்வகிக்க மருந்துகள் உதவலாம்.

2017இல், அவரது உடலில் சோடியம் அளவு ஆபத்தான அளவிற்கு (115 மில்லி ஒவ்வொரு லீற்றர்) குறைந்து, இதயம் 8 நிமிடங்களுக்கு நின்றது.

மரணத்திற்கு அருகிலுள்ள அனுபவங்கள் (NDEs) சிக்கலானவை மற்றும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை.

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பல்கேரியாவில் உள்ள 25 மருத்துவமனைகளில் 567


நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வு, இதயம் நின்ற பிறகும் மூளை செயல்பாடு 60 நிமிடங்கள் வரை தொடரலாம் எனக் கண்டறிந்தது.

இந்த ஆய்வு, மறுசீரமைப்பு (CPR) நடைபெறும் போது EEG மூலம் மூளை அலைகளை பதிவு செய்து, 40% நோயாளிகளுக்கு நினைவு தொடர்பான மூளை செயல்பாடு இருப்பதை உறுதிப்படுத்தியது.

பிரியானாவின் வாழ்க்கை

இந்த அனுபவம் பிரியானாவின் வாழ்க்கையை மாற்றியது. “என்னை பயமுறுத்தியவை இனி என்னை ஆட்டிப்படைக்கவில்லை, நான் துரத்தியவை இனி முக்கியமாகத் தோன்றவில்லை,”

என அவர் கூறினார். மரணத்திற்கு அருகிலுள்ள இந்த அனுபவம், அவருக்கு மரண பயத்தை அகற்றி, ஆன்மீக தெளிவை அளித்ததாக தெரிவித்தார்.

கொழும்பு வீதியில் பேரூந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்

பேரூந்து விபத்து கொழும்பு வீதியில்,புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில், புத்தளம் பௌத்த மத்தியஸ்தானத்திற்கு அருகில் நேற்று (09) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த விபத்தில்

உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள வியாபார நிலையத்திற்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து

தனியார் பேருந்து விபத்து

புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஜமீல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸாருக்கும், புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திலும் வைத்தியசாலையிலும் மரண விசாரணையை மேற்கொண்ட புத்தளம் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டார்.

விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம்

பிரேத பரிசோதனையில், விபத்தினால் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டு, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் தலைமையக பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா
Posted in இலங்கை செய்திகள்

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா

பொகவந்தலாலையில் அறுவருக்கு சிக்கன்குன்யா ,பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்கன்குன்யா தொற்றியிருப்பது இனங்காணப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை, மாவட்ட மருத்துவமனையில் பணிபுரியும் 06 தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சிக்கன்குனியா நோய் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு திட்டம் திங்கட்கிழமை (09) அன்று

தொடங்கப்பட்டது என்று பொகவந்தலாவை மாவட்ட மருத்துவமனையின் மருத்துவர் ஏ.எஸ்.கே. ஜெயசூரியா தெரிவித்தார்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 06 தொழிலாளர்களும் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஊழியர்களுக்கு தற்போது சிகிச்சை

மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய மாவட்ட மருத்துவ அதிகாரி, இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட சுகாதார இயக்குநருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அலுவலக அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் கொசு ஒழிப்பு திட்டத்தைத் திங்கட்கிழமை தொடங்கினர் என்றும் மேலும் கூறினார்.

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ,2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 236.60 பில்லியன் ரூபாவால்

அரச வருமானத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு ,2025 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் அரச வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2024 வருடத்தின் முதல் மாதங்களில் 1,218.07 பில்லியனாக இருந்த அரச வருமானம், இந்த வருடத்தின் முதல்
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில

அதிகரித்து 1,454.67 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது. இது 19.42% சதவீத அதிகரிப்பாகும்.

2025 ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் 463.19 பில்லியன் ரூபா வரி மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமாகும். குறிப்பாக அந்த மாதத்தில் வாகன

இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் காரணமாக இவ்வாறு வரி வருமானம் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.