Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து
மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து
மஹிந்தானந்த மனுத்தாக்கல் சிறைத்தண்டனையை எதிர்த்து ,உயர் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன்
ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
அதற்கமைய, குறித்த வழக்கு விசாரணையில் அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்
உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில
CIDயில் முன்னிலையானார் கம்மன்பில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஊடகங்களுக்குப் கருத்து வௌியிட்ட உதய கம்மன்பில, மேற்படி 323 கொள்கலன்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பான முடிவுகளை எடுத்த அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் இருப்பதாகவும், இது தொடர்பாக
வெளிநாட்டு பயணத் தடையை விதிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தன்னிடம் உண்மையான சாட்சியங்கள் இருப்பதாகவும், ஆதாரங்கள் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை ஒருபோதும் கூற மாட்டேன் என்றும்,
இந்த விடயத்தில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கம்
வேலைநிறுத்த போராட்டத்தில் மருத்துவர்கள் சங்கம்
அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனி சேவை அரசியலமைப்பை அமுல்ப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதைத் தொடங்கத் தவறியது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று காலை 6 மணிக்கு இந்த வேலைநிறுத்தம் ஆரம்பமானது.
அதன் தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார, இது அனைத்து அரச கால்நடை அலுவலகங்களின் பணிகளுக்கும் இடையூறு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.
இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில்
இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் ,இராணுவத்திலிருந்து விலகியவர்களை பொலிஸ் துறையில் இணைக்க திட்டம்
இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது
சிகரெட் கடத்தியவர் விமானநிலையத்தில் கைது ,வெளிநாட்டில் இருந்து இலங்கை காட்டுநாயக்க விமலின் ஊடாக சீக்ரெட் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவரிடம் 2700 தொகையான சிகரெட்டுக்கள் கொண்டுவரப்பட்ட பொழுது, இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கூலிக்காக வேலை செய்தாரா அல்லது இதன் அடிப்படையில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றன .
அதி விலை உயர்ந்த சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் என்பது மிகப்பெரும் வாடிக்கையான ஒரு கடத்தல் நாடகமாக இருக்கலாம் எனவும், அதனை சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தால் மட்டுமே ஏனைய விடிய எங்களுக்கு தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் இவர் கடத்தலில் ஈடுபட்டுள்ள செய்ய ;ல் மாபியாக்கள் உள்ளதாக நம்ப படுகிறது .
தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருவதும் ,பெரும்தொகையான சிகரெட்டுகள் தங்க என்பன சிக்கிக் கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடத்தல்களின் பின்புலத்தில் அரசியல்வாதிகள் பாதாள உலகம் குழு இருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் இன்று வந்து சிக்கிய 20 வயது வாலிபர் எதன் அடிப்படையில் எங்கிருந்து இந்த சிகரெட் கொண்டு வந்தார் என்பது தொடர்பாக முழுமையான தகவல் வெளியாகவில்லை.
தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளாக்கப்பட்டு வருகிறது . பின்னர் நீதிமன்றத்தில் பார்ப்படுத்த படும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகிறது.
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

35 ஆண்டுகளின் பின் யாழில் ஆரம்பித்த சேவை
35 ஆண்டுகளின் பின் யாழில் ஆரம்பித்த சேவை
35 ஆண்டுகளின் பின்னர் மீளவும் யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சேவைகள்.
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பொதிகள் சேவைகள் 35 ஆண்டுகளுக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை (08) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
குமார ஜெயக்கொடி ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டு குறித்த சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அதேவேளை, புகையிரத நிலையத்தில் நூலகம் ஒன்றினையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து புகையிரத நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
நிகழ்வில், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் ஆகியோரும்,
தேசிய மக்கள் சக்தியின் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு
பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு
பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு ,பாடகர் பாவேந்தன் பிறந்தநாள் நிகழ்வு தமிழகத்தில் அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழீழ தேசிய பாடகராக விளங்கும் பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் பேரணான பாவேந்தன் அவர்கள் ,கடந்த ஏழாம் தேதி தனது 24 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறார்.
பல பாடல்களை மிக அருமையாக மதுர குரலால் பாடி வருகின்ற அன்பு தம்பி ,ஆருயிர் தோழன், எங்கள் தமிழ் ஆசான மகனாக விளங்கும், இளங்கோ செல்லப்பாவின் புதல்வன பாவேந்தன் ,இன்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.

எதிரி இணையத்தின் ஊடாக ,வன்னிடிக் டாக் என்பன இணைந்து 100 பாடல்கள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள் .

அதற்கு உயிர் கொடுத்து குரல் கொடுத்து தூணாக நிற்கிறவர் வேறு யாருமில்லை இந்த பாவேந்தன் தான்.
இதுவரை 20 பாடல்கள் வெளிவந்திருக்கிறது .வன்னிமைந்தன் டிக் டாக் ஊடாகவும் எதிரி இணையத்தின் ஊடாகவும் வெளியிட செய்யப்பட்டுள்ளது.

10 பாடல் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்கள் .அதற்கு காரணமானவர் வேறு யாரும் அல்ல இந்த பாவேந்தன் தான்.
அவ்வாறான ஒரு துடிப்புள்ள இளைஞன் பலரை உருவாக்கி ,அவர்களை இந்த அகிலத்தில் எங்கள் தமிழ் தேசத்தின்பால் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் அசையாத கொள்கை கொண்டவர் அவர்.
தேனிசை செல்லப்பா அவருடைய பேரன் என்கின்ற பெருமையை பெற்றுக்கொண்ட அன்புத்தம்பி பாவேந்தன் ,இன்று பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்.
அவருக்கு உலகத் தமிழர்கள் சார்பாகவும், உலகம் எல்லாம் பரந்து வாழ்கிற தமிழர்களும் வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இன்றைய நாளில் எதிரி இணையமும் வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் இணைந்து அவருக்கு தமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது வீட்டில் இடம்பெற்ற காட்சிகள் எமது கிடைக்கப்பெற்றுள்ளன .அவற்றை இங்கே பதிவிடுகிறோம்.
நன்றி அன்பு தம்பி என்றும் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறோம் .
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. – நன்றி வன்னி மைந்தன் –
- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார்
வன்னிமைந்தன் யார் பாடகர் பாவேந்தன் இப்படி சொல்கிறார் ,வாழ்ந்து கொண்டிருக்க கூடிய என் அன்பு நிறைந்த தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் நான் உங்கள் பாவேந்தர் இளங்கோவன் பேசுகிறேன் .
என்னுடைய பிறந்தநாள் என்று வாழ்த்து தெரிவித்து உங்கள் அத்தனை பேருக்கும் என் அன்பும் நன்றியும் அதுமட்டுமில்லாமல் இந்த குறுஞ்செய்தியில் நான் ஒருவருக்கு நன்றி சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன் .
கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதிய வன்னி மைந்தன்
கந்தகக் காடு எனும் ஒப்பற்ற பாடலை எழுதி அதை என் நாவின் மூலம் இவ்வுலகரியச் செய்து என் அன்பு நிறைந்த அண்ணன் திரு வண்ணி மைந்தன் அவர்களுக்கு தான் இந்த இடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் .
ஏன் அப்படின்னா நான் கந்தக காட்சிகளைப் பாடுவதற்கு முன்னாடி எத்தனையோ பாடல்கள் பாடியிருக்கிற ஏராளமான பாடல்கள் மட்டும்தான் என்னை உலகிற்கு ஒரு இசைக் கலைஞராக ஒரு பாடகளாவது அறிமுகப்படுத்தியது.
அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை அதற்கு என் அண்ணன் பண்ணி மைந்தன் அவர்களுக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
அந்தப் பாடலுக்குப் பிறகு அவர் எடுத்துக் கொண்ட ஒரு அளப்பெரிய முயற்சி உண்மையிலேயே போற்றுதற்குரியது அந்த பாடல் வழியாக ஒரு இரண்டு மாதங்கள் இருப்போம் அந்தப் பாடலுக்கு பின்னாடி அண்ணன் வண்டி மைந்தன் அவர்கள் உருவாக்கிய ஏராளமான பாடல் ஆசிரியர்கள் இருக்காங்க .
ஏராளமான பாடல் தயாரிப்பாளர்|பாடலாசிரியர்களை உருவாககிய வன்னி மைந்தன்
ஏராளமான பாடல் தயாரிப்பாளர்களுக்காக அவர்கள் எல்லாம் உருவாவதற்கு முக்கிய காரணம் என்னவென்று அவர்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை .
பொதுவாக அத்தனை பேரும் ஒருங்கிணைச்சு செயல்படுவது அப்படிங்கறது அவ்வளவு எளிதான ஒரு விடயம் இல்லை .
அதுலயும் பாடல் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து செயல்படுவது அப்படிங்கறது அவ்ளோ சுலபல்ல .
பாடல் ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தி அத்தனை பாடல் தயாரிப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி அவர்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைத்து அவர்களை ஊக்குவித்து அவர் அவருடைய எதிரி இணையம் மூலம் அவர் செய்து கொண்டிருக்கக்
கூடிய மகத்தான பணிக்கு என்னுடைய ஆதரவும் என் அப்பா இளங்கோ செல்லப்பா தாத்தா தேனிசை செல்லப்பா அவர்களுடைய ஆதரவும் என்றைக்கும் அந்த வன்னி மைந்தன் அவர்களுக்கு நிச்சயம் இருக்கும் .
அண்ணன் வன்னி மைந்தன் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்து பாடல் ஆசிரியர்கள் மற்றும் பாடல் தயாரிப்பாளர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் என் அன்பு நிறைந்த நல்வாழ்த்துக்கள் .
ஆதரவும் அன்பும் மற்றும் உலகத் தமிழர்களாகிய நீங்கள் சமீப காலங்களில் வெளிவந்து என்னுடைய பாடல்களுக்கு எல்லாம் ஏராளமான அன்பையும் ஆதரவையும் அள்ளிக் கொடுத்து உங்கள் அத்தனை பேரையும் என் மனதில் வைத்து நன்றியோடு நின்று கொண்டிருக்கிறேன்.
என்பதை எந்த விதமான சந்தேகமும் இல்லை இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து பாடல்கள் வெளியாக உள்ளன என் அன்பு நிறைந்த உறவுகளாகிய நீங்கள் அப்பாடல்களை எல்லாம் கேட்டு அதை பகிர்ந்து உங்களின் பேராதரவை தந்தீர்கள் .
என் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய பேரன்பு மிக்க அத்தனை உறவுகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி விரைவில் சந்திக்கிறேன் அடுத்த பாடல் ஓடு நன்றி வணக்கம்
இவ்வாறு பாடகர் தேனிசை செல்லப்பாவின் பேரன் பாவேந்தன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார் .
காணொளியை பார்க்க இதில் அழுத்துங்கள்
55 பேருக்கு எதிராக வழக்கு
55 பேருக்கு எதிராக வழக்கு
55 பேருக்கு எதிராக வழக்கு ,மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக பொலிஸார் முன்னரே அறிவித்திருந்த போதிலும், அதைப் புறக்கணித்து மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், காத்தான்குடி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 21 வயது இளைஞர் ஒருவர், சமீபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது
T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது
T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கிடையில், எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகநத்த பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கோடாவுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய எத்திமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, போரா 12 வகை துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) மாலை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.
சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுத்த சோதனையில், குறித்த துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்கதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு
நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு
நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு ,நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்
என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிதி மோசடி
கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப” இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.
ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை
ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது?
சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.
எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்- என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்
1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,1200பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியபண்டார, ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளிடம் வினவியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, நாட்டில் சுமார் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, இதன்போது கருத்து தெரிவித்த ரயில்வே திணைக்களத்தின் இயந்திரவியல் பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் கே.கே. ஹேவாவிதாரண, 5 புதிய ரயில் பெட்டிக் கட்டமைப்புகளை கொள்முதல் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.
அந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டவை என கே.கே. ஹேவாவிதாரண தெரிவித்தார்.
டெங்கு சிக்குன்குனியா நோய்
டெங்கு சிக்குன்குனியா நோய்
டெங்கு சிக்குன்குனியா நோய் ,பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சு சிறப்பு வழிகாட்டல் பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
விசேட ஆய்வுகளின் போது பாடசாலை வளாகத்தில் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலையின் அதிபருக்கு எதிராக
சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அந்த வழிகாட்டல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பு
பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்படுவதற்கு, முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017
ஆகிய சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக, புதிய வழிகாட்டல் பத்திரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அனைத்து பாடசாலை வளாகங்களையும் நும்புகள் பெருகாதவாறு பராமரிக்க, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத
வகையில் உகந்த உள் செயற்திட்டமொன்றை உருவாக்கி செயல்படுத்துவதற்கு இதன்மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் அதிபர்கள்
இது தொடர்பாக, அனைத்து அரச மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், பிரிவெனாக்களின் பரிவேனாதிபதிகள், தேசிய
கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் மாகாணத்தில் உள்ள ஏனைய கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் போது, வளாகத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள்
பதிவாகினால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி
ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி
ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி ,ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பொலநறுவை பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் குளிக்கச் சென்ற பொழுது ,இந்த நண்பர் குழு நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது நாலு பேர் நேர்கில் மூழ்கி இறந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த பகுதி போலீசார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளார்கள் .
இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி வருகின்ற அதிர்ச்சி ஊட்டும் திடுக்கிடும் தாக்குதல் வெளியாகியிருக்கின்றன.
நாள்தோறும் இவ்வாறு நீராடி செல்லும் மக்களை நேரில் மூழ்கி இறப்பதாக புதிய தகவல் தெரிவிக்கின்றன .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
நண்பர் கூட்டமாக இணைந்து நீராட சென்ற பொழுது இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதனால் அந்த கிராம பகுதியில் அந்த குடும்பத்துடன் கண்ணீரில் தவித்து வருகின்றது .
நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
நிலவுக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் அதனை இழக்க நேரிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2024 YR4′ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.
அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.
நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும்.
நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது. இல்லையெனில், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும்.
நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இது இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும்.
உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகிறது.
கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம். நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
HKU5 வௌவால் வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
HKU5 வௌவால் வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சீனாவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கரோனா வைரஸ் – HKU5-CoV-2 – மிகச் சிறிய மரபணு மாற்றத்தின் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஆபத்தான வகையிலான தொற்றாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புதிய வகை வைரஸ், Covid-19 ஐ விட அதிக அளவிலான விலங்குகளை பாதிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும்,
விலங்குகளிடையே பரவுவதற்கும், மனிதர்களுக்கு மாறுவதற்கும் அதிக சாத்தியக்கூறு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த வைரஸ் மனித உடலில் உள்ள மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் உள்ள ACE2 செல்களில் இணையக்கூடிய
ஒரு சிறிய மாற்றம் மூலமே பரவக்கூடியதாக மாறும் வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. HKU5-CoV-2, மனித உடலின் மூச்சுவாய்கள் மற்றும் குடல்களில் உள்ள செல்களைத் தாக்கி, அந்த இடங்களில் வளர்வதும் குறிப்பிடத்தக்கது.
மர்மமான மற்றும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட மெர்பெகோவைரஸ்கள் என்ற குழுவைச் சேர்ந்த HKU5 மற்றும் MERS-CoV வகைகள், மிகவும் ஆபத்தானவை.
MERS (Middle East Respiratory Syndrome) வைரசால் பாதிக்கப்படும் மக்களில் சுமார் 35% பேர் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.
2012 முதல், 27 நாடுகளில் MERS வைரஸ் பரவியதில் 858 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பொதுவாக ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.
HKU5-CoV-2 பொதுவாக蝙ாபாடுகளில் கண்டறியப்பட்டது. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டபோது, சில விஞ்ஞானிகள் இதன் ஆபத்தை மிகைப்படுத்த வேண்டாம் என எச்சரித்தனர்,
ஏனெனில் இது SARS-CoV-2 போல எளிதாக மனித செல்களில் நுழையக்கூடியதாக இல்லை என அவர்கள் கூறினர்.
HKU5-CoV-2, 2019 ஆம் ஆண்டு Covid-19 பரவலுக்குத் தொடக்கமாக இருந்தது என்று கூறப்படும் சீன ஆய்வகத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளால் முதன்முதலில் களத்தில் கண்டறியப்பட்டது.
இந்த புதிய வைரஸ் தொடர்பான அறிக்கைகள் உலகம் முழுவதும் கவலைக்குரிய எச்சரிக்கைகளை உருவாக்கியுள்ளன.
தற்போது, இது மனிதர்களுக்கு பரவக்கூடிய திறனை வளர்த்து, மற்றொரு உலகளாவிய பரவலை (Pandemic) உருவாக்கக்கூடிய நிலைக்கு செல்லக்கூடும் என்பதால்,
தெளிவான கண்காணிப்பும், முன்கூட்டிய ஆய்வும் அவசியம் என உலக சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ,
இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில்
கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த புதைகுழிகள், 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு பின்னர்,
இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999ம் ஆண்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே உள்ளன.
அப்போது, 15 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதில் சிலர் கண்ணை கட்டிய நிலையில் மற்றும் கைகளைக் கட்டிய நிலையில் இருந்தனர்,
இது அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கிறது.
இந்த புதுப்பட்ட கண்டுபிடிப்பு, கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிக்கொணர்கிறது.
அதே நேரத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் நீதியின் தேடலை மீண்டும் தூண்டுகிறது. மாற்றம் மற்றும் நியாயத்தை எதிர்பார்க்கும் குடும்பங்கள், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.
இந்த நிலையில், சரியான மற்றும் முழுமையான விசாரணைகள் நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்
கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்
கைதுகளுக்கு பயந்து அரசியல்வாதிகள் பலர் பெளத்த விகாரைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் பல,
விகாரைகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரசு அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி தேரரை சந்தித்து, அப்பகுதியின் முன்னணி துறவிகளைச் சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.
இதேபோல், இந்தியாவுக்குச் சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.
பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசு அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் விபத்து ஒருவர் பலி
யாழில் விபத்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி
விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார்.
மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்.
இதன்போது, சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது
எதிர்த் திசையில் வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில்
மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர் மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
தண்ணி விற்பனை 5 லட்சம் ரூபா அபராதம்
தண்ணி விற்பனை 5 லட்சம் ரூபா அபராதம்
தண்ணீர் போத்தல் ஒன்றுக்கு 10 இலாபம் வைத்து விற்றவருக்கு ஐந்து இலட்சம் ரூபா பராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி – கலவானை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
70 ரூபாய் விலையை கொண்ட 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை 80 ரூபாய்க்கு விற்றதற்காக கலவானை நீதிவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.
பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதிவான் 100,000 ருபாய் அபராதம் விதித்துள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவு நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர், MRP விதிமுறைகளை மீறி, 80 ருபாயான 500 மில்லி குடிநீர் பாட்டிலை 150 ருபாய்க்கு விற்றதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து முறையிடுமாறு நுகர்வோர் விவகார ஆணையகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.













































