Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

பிரிட்டனில் சிறார் பாடசாலையில் கொரனோ தொற்று – அடித்து பூட்ட பட்ட பாடசாலை

பிரிட்டனில் லக்கடவுன் முடிவுற்று மீள மக்கள் இயல் புநிலைக்கு திரும்பிட வைக்கும் முகமாக பாடசாலைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

இவ்வேளை Thorpe Primary School in Idle, Bradford, பகுதியில் உள்ள

ஊழியர் ஒருவர் கொரனோ நோயினால் அடையாளம் காணப்பட்ட நிலையில்

,அந்த சிறார் பாடசாலை மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது,கொரனோ நோயினை கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ,மனித

உயிரிழப்ப்பு இன்றி பிரிட்டன் இயல்புக்கு திரும்பும் வரை தமது பிள்ளைகளை

பாடசாலைக்கு அனுப்பிட மாட்டோம் என பெற்றோர்கள் உறுதியாக தெரிவித்து

வரும் நிலையில் ,திறக்க பட்ட பாடசாலை சில நாட்களில் அடித்து பூட்ட பட்டுள்ளது

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,ஆளும்

பிரதாமரை மக்கள் திட்டியவண்ணம் தமது கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரனோவால் 11 பேர் பலி

      இலங்கையில் கொரனோவால் 11 பேர் பலி

      இலங்கையில் பறவை வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை பதினொரு பேர் பலியாகியுள்ளனர் .இவ்வாறு

      பலியானவர்களது சடலங்கள் உரிய முறை பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்ய பட்டுள்ளன

      மேலும் இந்த நோயானது பரவாது தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் புதிதாக 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்

          இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் புதிதாக 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்

          இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்சிக்கி

          கடந்த தினம் பத்து பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதரஅமைச்சு அறிவித்துள்ளது

          மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க பட்டு

          தனிமை படுத்த பட்ட பலர் ,நோயின்றி குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்ட வண்ணம் உள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              துப்பாக்கியுடன் இளம் பெண் கைது – விசாரணைகள் தீவிரம்

              துப்பாக்கியுடன் இளம் பெண் கைது – விசாரணைகள் தீவிரம்

              இலங்கை சிலாபத்துறை பகுதியில் இளம் பெண் ஒருவர் துப்பாக்கி

              ஒன்றை மாறுது வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய பட்டுளளார்

              அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,தொடர்ந்து இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  தேர்தலை நடத்த அவசர படும் – கோத்தபாய

                  தேர்தலை நடத்த அவசர படும் – கோத்தபாய

                  சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள்

                  ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

                  தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள்

                  சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு தேஷப்பிரிய தெரிவித்தார்.

                  ஜுன் மாதம் 1ஆம் திகதியான இன்றைய வாக்காளர் தினம் தொடர்பாகவும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது

                  தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

                  1980 அம் ஆண்டு இலக்க 44 வாக்காளர்களை பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் இலங்கையில் வாக்குரிமையாளர் ஆவதற்கு

                  தகுதிகளைக் கொண்டவர்கள் பதிவு செய்யப்படுவார்கள். இந்த சட்டத்திற்கு அமைவாக குறிப்பிட்ட தினத்தில் 18 வயதை பூர்த்தி

                  செய்தல், ஏதாவது ஒருமுகவரியில் பதிவை கொண்டிருத்தல், இலங்கை பிரஜைக்கான ஏனைய தகுதி நீக்கங்களுக்கு

                  உட்படாதவராக இருந்தால் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதியுண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

                  இதில் குறிப்பிட்ட திகதி; ஜுன் மாதம் 1ஆம் திகதி என்பதினால் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர்களின் தினமாக பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக வைபவ ரீதியாக

                  கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வாக்காளராவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பல்வெறு

                  வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
                  இருப்பினும் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலினால் அந்த வருடத்தில் ஜுன் மாதம்

                  1ஆம் திகதியன்று இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு முடியாமல் போனது. இதே போன்று இந்த வருடத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட ஊழுஏஐனு 19 தொற்று பரவவதை

                  கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இம்முறையும் இந்த வைபவத்தை

                  கொண்டாடுவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முடியாமற்போனது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தி;ல் வாக்காளர்

                  பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே உங்களுக்கு வாக்களிப்பதற்கு உரிமை கிட்டும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

                  பாராளுமன்றம் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்து

                  பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் பெரும்பாலானோர் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்கின்றனர். நாம் தற்பொழுது அதாவது தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி

                  சட்டத்தரணியூடாக கௌரவ உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளோம். ஜுன் மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்ற விடயத்தை. தேர்தலை நடத்தவதற்கு பொருத்தமான

                  தினத்தை குறிப்பிடுவதில் சட்ட ரீதியிலான தடை ஏற்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழு இதற்காக வேறொரு தினத்தை குறிப்பிடும்.

                  சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைவாக முடிந்தவரையில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் விருப்பமாகும். இந்த தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைக்கும்

                  தேவை. தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை. ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றமொன்று இடம்பெற வேண்டும் என்பது

                  அத்தியாவசியமாகும் என்பதை ஆணைக்குழு மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றது. இதன் மூலம் நாம் இப்பொழுது

                  மேற்கொண்டு வரும் அரசியல் யாப்பு பணிகளை அவ்வாறே மேற்கொள்ளுவோம்.

                  தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப செயற்பாடுகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை நாம் சுகாதார பணியாளர் சபை உறுப்பினர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த

                  எதிர்பார்த்துள்ளோம். என்பதினால் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கூடுதலான காலம் தேவையாகவுள்ளது. ஜுன் மாதம் 2ஆம்

                  வாரத்தில் இறுதியளவில் 3ஆம் வாரம் மத்திய பகுதியில் இவற்றை பூர்த்தி செய் முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். சட்ட ரீதியிலான தடை ஏற்படாமல் இருந்தால் தேர்தலை நடத்தவதற்கு எம்மால்

                  முடியும் சுகாதார வைத்திய ஆலோசனை தொடர்பில் எமக்கு கிடைத்த வழிகாட்டிகளுக்கு அமைவாக தேர்தலை எவ்வாறு

                  நடத்துவது என்பது தொடர்பில் . நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.. 60 தொடக்கம் 70 நாட்கள் காலப்பகுதி தேவைப்படும். எனெனில் முன்னரிலும் பார்க்க கூடுதலான

                  பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பதினாலாகும். இருப்பினும் பணியாளர் சபையினர் தங்கியிருந்து கடமைகளை மேற்கொள்ளக்கூடிய மணித்தியாலங்கள்

                  வரையறுக்கப்பட்டிருப்பதனால் முகக்கவசத்தை அணிதல் போன்றவற்றினால் கூடுதலான காலம் தேவைப்படுகிறது. தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்தும் தேவை

                  ஆணைக்குழவிற்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாம் எதிர்பார்த்தோம் 650 தொடக்கம் 700 கோடி ரூபா செலவில் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியுமென்று

                  சுகாதார பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தல் ஏனைய சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைவாக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டால் செலவு ஓரளவு

                  அதிகரிக்கக்கூடும். இருப்பினும் இந்த அதிகரிக்கும் தொகையை திறைசேறி மூலம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  இருப்பினும் இந்த சுகாதார நிலைமை சிறப்பாக அமைந்தால் சட்ட தடைகள் இல்லையாயின் மிக விரைவில் கூடிய விரைவாகவும் இந்த தேர்தலை நடத்துதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


                  இதன் முழுமையான காணொளி , குரல் பதிவு கீழ்கண்ட லிங்கின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      டெங்கு நோய் பரவுவலை கட்டுப்படுத்த நடவடிக்கை – கோட்டா பணிப்பு

                      டெங்கு நோய் பரவுவலை கட்டுப்படுத்த நடவடிக்கை – கோட்டா பணிப்பு

                      மழையுடன் கூடிய காலநிலை தணிகையில் டெங்கு ஆட்கொல்லி தீவிரமாக பரவக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்தத்

                      தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாகாண ஆளுநருக்கும், உள்ளுராட்சி

                      நிறுவனத் தலைவர்களுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

                      வருடந்தோறும் மேல் மாகாணத்தில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்படுவது வழக்கம். இந்த மாகாணத்திற்கு

                      வெளியிடங்களிலிருந்து பெருமளவு ஆட்கள் வருகிறார்கள். இவர்கள் நோய்க் காவிகளாக வெளியேறிச் செல்லலாம். எனவே,

                      மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

                      எதிர்காலத் திட்டங்களை வகுக்கும் நோக்கத்துடன், டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார்.

                      இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒப்பீட்டளவில் குறைவான டெங்கு நோயாளிகளே இனங்காணப்பட்டதாக சுகாதார

                      அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். நோய் பரவுவதற்கான காரணிகளை விபரித்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான

                      ஆலோசனைகளையும் சுகாதார அதிகாரிகள் முன்வைத்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          பிரிட்டனில் திடீரென இடிந்து வீழ்ந்த வீடு – தப்பிய குடும்பம்

                          பிரிட்டனில் திடீரென இடிந்து வீழ்ந்த வீடு – தப்பிய குடும்பம்

                          பிரிட்டன் Eastchurch, Isle பகுதியில் 195 ஆயிரம் பவுண்டுகள்

                          பெறுமதியான பங்காள வீடு ஒன்று திடீரென கடலுக்குள் இடிந்து வீழ்ந்துள்ளது

                          கடல் கரை பகுதியில் அமைய பெற்றிருந்த மேற்படி வீட்டில் ,எயமானி

                          வீட்டுப்பெண் ஒருவர் வைன் குடித்த படி அமர்ந்து இருந்துள்ளார்

                          அவ்வேளை வீட்டின் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளது ,அதிர்ச்சியில் இருந்து

                          மீளாத அவர் விழி திறப்பதற்குள் ஏனைய பகுதிகளும் இடிந்து வீழ்ந்துள்ளன

                          எனினும் பிற குடும்ப உறவுகள் எவரும் இந்த் இடி பாடுகளுக்குள் சிக்கி கொள்ளவில்லை ,தெய்வாதீனமாக தப்பித்து கொண்டனர்

                          மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .மக்களே உசார் ,இப்படி உங்களுக்கும் நடக்கலாம் .

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                              பிரிட்டனில் வீட்டுக்குள் இருவரை வெட்டி கொன்ற கொடூரன்

                              இன்று திங்கட்கிழமை பிரிட்டன் Wessex Road பகுதியில் மதியம் at 2.45pm


                              மணியளவில் படுகொலை செய்ய பட்ட தகவல் போலீசாருக்கு பறந்தது .

                              சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன தமது விரைவு சேவையை தொடங்கின

                              சம்பவ இடத்தில பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில் மீட்க

                              பட்டார் ,மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

                              இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,மேற்படி படு

                              கொலையை புரிந்த முப்பது வயது நபர் கைது செய்யப் பட்டுள்ளார் .

                              சமீப காலங்களாக பிரிட்டனில் இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in உலக செய்திகள்

                                  ஐரோப்பாவுக்கு உல்லாச பயணிகள் வருவதற்கு அனுமதி – கொரனோ தாக்கம் இல்லையாம்

                                  ஐரோப்பாவுக்கு உல்லாச பயணிகள் வருவதற்கு அனுமதி – கொரனோ தாக்கம் இல்லையாம்

                                  கொரனோ நோயின் தாக்குதலும் காரணமாக ஐரோப்பாவின் பொருளாதாரம் மிக பெரும் சரிவை சந்தித்துள்ளது .

                                  நாடுகள் திண்டாடி வருகிறது ,இதனை சமப்படுத்திட உல்லாச பயணிகள் ,விமான சேவைகள் இயக்க வேண்டும் அதனால்

                                  ,தற்போது நோயின் தாக்குதல் வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும் வழமை போல உல்லாச பயணிகள் எமது நாடுகளுக்கு வந்திட அனுமதிக்க படுகிறது .

                                  நாடுகள் இயல்பு நிலைக்கு வந்து விட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு முடிவை வெளியிட்டுள்ளது

                                  எதிர்வரும் வாரங்கள் முதல் இந்த பயணிகள் வருகை அதிகரிக்குமாம் .

                                  என்னங்கடா இது தினம் தோறும் மக்கள் இறந்த வண்ணம் இருக்கின்றனர் ,இவ்வாறு இருக்க ,அரசு பணத்தை இலக்கு வைத்து

                                  மக்களை கொலை செய்ய துடிப்பதாக மக்கள் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      புஸ்ஸல்லாவையில் காணமல் போன சிறுவன் மீட்பு பெற்றோரிடம் கையளிப்பு

                                      புஸ்ஸல்லாவையில் காணமல் போன சிறுவன் மீட்பு
                                      பெற்றோரிடம் கையளிப்பு

                                      புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தை சேர்ந்த எம். உமர்டீன் (வயது 10) என்ற சிறுவன் நேற்று (31) காலை 9.00 மணி முதல் காணாமல்

                                      போய் உள்ளமை தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸில் முறைபாடு செய்பட்டிருந்தது.

                                      இந் நிலையில் இந்த சிறுவன் இரட்டைபாதை நீவ்பிகொக் தோட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைக்கபெற்று பின் சிறுவனை

                                      பொலிஸ் விசாரணைகள் ஊடாக இன்று (01) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுவன் வீட்டுக்கு அழைத்து செல்லபட்டுள்ளான்.

                                      குறித்த சிறுவன் கண்டி நுவரெலியா பிரதான வீதியில் இருப்பதை கண்டு நீவ்பிகொக் தோட்டத்தை சேர்ந்த நல்லுள்ளம் படைத்த

                                      ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பெற்றோர்கள் தொடர்பிலான விடயங்களை சிறுவனிடம் கேட்ட பொழுது

                                      முன்னுக்கு பின் முரனான தகவல்களை வழங்கியதால் சிறுவனை உரியவர்களிடம் ஒப்படைக்க கால தாமதம் ஏற்பட்டு உள்ளது இந்த சிறுவன் தனது ஊர் பொகவந்தலாவ என்றும் கூறியுள்ளார்.

                                      எது எவ்வாறாயினும் சிறுவனை பாதுகாத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க எடுத்த முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

                                      புஸ்ஸல்லாவையில் காணமல்
                                      புஸ்ஸல்லாவையில் காணமல்
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          மலையக அரசியல்வாதிகளே அறிக்கை வேண்டாம் செயலே வேண்டும்.

                                          மலையக அரசியல்வாதிகளே அறிக்கை வேண்டாம் செயலே வேண்டும்.

                                          எமாற்ற நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்…..

                                          ஊடகவியலாளர் என்ற வகையில் மலையக அரசியல் தொடர்பில் சில கருத்துகளை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன் (பா.திருஞானம் – 0777375053)

                                          தற்போது மலையகத்திற்கு தேவை பழிவாங்கும் அரசியல் அல்ல. நான் பெரிதா நீ பெரிதா என்று போட்டி போடும் அரசியலும் அல்ல

                                          இவ்வாறான அரசியல் காரணமாக பாதிக்கபட்டது மலையக பெருந்தோட்ட மக்களே இதை நான் அனுபவ ரீதியாக உணர்ந்தவன்.

                                          தற்போது மலையகத்தில் அரசியலில் இடைவெளி ஒன்று உருவாகி உள்ளது. மக்களின் நாடி துடிப்பில் சில சலசலப்பு காணப்படுகின்றது.

                                          இந்த நாடியை சரியாக பிடித்து அரசியல் செய்பவர்களே பொருத்தமாணவர்களாவர். நான் சொல்லுவது தான் சரி நான்

                                          சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றும் நானே தலைவன் நான் பெற்றி பெற்றுவிட்டேன் என்று என்ணினால் அது பகல் கனவாகவே இருக்கும்.

                                          தற்போது மலையகத்தில் படித்தவர்கள் இருக்கின்றார்கள் இவர்களை ஏமாற்ற முடியாது. தொழிலாளர்கள் கூட எல்லா

                                          விடயங்களும் தெரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இதை எல்லாம் விட இளைஞர்கள் துடிப்பாகவும் விபரமாகவும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

                                          ஆரம்பத்தில் சில அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியவர்களாகவும் பொய் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றியவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

                                          தற்போது மக்கள் இதற்கு பதில் கொடுக்கும் அளவிற்கும்.முன்னேறி உள்ளனர். ஊடகங்களில் அறிக்கை கொடுத்து விட்டால் தான் சரி என்று சொல்பவர்களும் முகபுத்தக அரசியல் செய்பவர்களே

                                          அதிகமாக இருக்கின்றனர். வாக்காளர்கள் எல்லாவற்றையும் கவனமாக பார்த்து வருகின்றனர் சில முடிவுகளையும் முன் கூட்டியே எடுத்தும் விட்டனர்.

                                          அதேபோல் மலையகத்தில் ஊடகத்துறையும் திறமாக செயற்பட்டு வருகின்றது. இந் நிலையில் சிந்தித்து செயற்பட வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும்.

                                              Posted in உலக செய்திகள்

                                              துருக்கிய இராணுவ நிலைகள் மீது எறிகணை தாக்குதல்கள் – அகோர சமர்

                                              துருக்கிய இராணுவ நிலைகள் மீதுஎறிகணை தாக்குதல்கள் – அகோர சமர்

                                              சிரியாவின் அரச இராணுவத்தினரால் ,அந்த அரசுக்கு எதிராக போராடி வரும் துருக்கிய அதரவு கிளர்ச்சி படைகள்

                                              நிலைகொண்டுள்ள Latakia நிலைகள் மீது அகோர ஆட்டிலறி எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது

                                              இந்த தாக்குதலில் பல டசின் கிளர்ச்சி படைகள் பலியாகி உள்ளனர் என

                                              மேலும் இதே பகுதியில் இரு பகுதிக்கு இடையில் பரஸ்பர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                              துருக்கிய இராணுவ
                                              துருக்கிய இராணுவ
                                                  Posted in உலக செய்திகள்

                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட செய்த மக்களுக்குள் புகுந்த டங்கர் லொறி -அதிர்ச்சி video

                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட செய்த மக்களுக்குள் புகுந்த டங்கர் லொறி -அதிர்ச்சி video

                                                  அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவரை காலில் போட்டு நசித்து கொன்ற

                                                  வெள்ளையர் காவல் துறையின் இனவெறி செயலை அடுத்து மக்கள் போராட்டங்கள் வெடித்து பறக்கின்றன

                                                  இவ்வாறு போராட்டத்தை நடத்திய மக்கள் உள்ளே டாங்கர் லொறி ஒன்று

                                                  வேகமாக உடபகுந்துள்ளது ,சாரதி மக்களினால் சுற்றிவளைக்க பட்டு கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார் ,இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                                                  இது திட்டமிடப்பட்ட செயலாக பார்க்க படுகிறது

                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட
                                                  அமெரிக்காவில ஆர்ப்பாட்ட
                                                  https://twitter.com/i/status/1267235342182219776
                                                  Posted in உலக செய்திகள்

                                                  பிரிட்டனில் திறக்க பட்ட பாடசாலை – டீச்சர் ,மாணவர்கள் வரவில்லை -அரசுக்கு பெரும் தோல்வி

                                                  பிரிட்டனில் திறக்க பட்ட பாடசாலை – டீச்சர் ,மாணவர்கள் வரவில்லை -அரசுக்கு பெரும் தோல்வி

                                                  பிரிட்டனில் பாடசாலைகள் மீள திறக்க பட்டுள்ளன ,இவ்வாறு

                                                  திறக்க பட்ட பாடசாலைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்க வேண்டும் என்ற விதி நிர்ணயிக்க பட்டுள்ளது

                                                  அவ்வாறு பின்பற்றப்படும் பொழுதும் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் ,மாணவர்கள் வரவு பலத்த அடியாக வீழ்ச்சி கண்டுள்ளது

                                                  பாடசாலைகள் திறக்க பட்டால் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என ஆளும் அரசு

                                                  துடிக்கிறது ,ஆனால் மக்களோ கொரனோ நோயின் தாக்குதலுக்கு முடிவு

                                                  கட்ட படும் பொழுதே மீள வருவோம் ,பிள்ளைகளை அனுப்புவோம் என அடித்து கூறி வருகின்றனர் .

                                                  இந்த மக்கள் செயல் பாடுகள் ஆளும் அரசுக்கு பெரும் அடியாக இடம்பெற்றுள்ளது ,அரசின் செயல் பாட்டு அறிவிப்பு பெரும் தோல்வியில் முடிந்துள்ளது

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களை மத்தள விமான நிலையம் மூலமாக அனுப்பிட முடிவு

                                                      வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களை மத்தள விமான நிலையம் மூலமாக அனுப்பிட முடிவு

                                                      வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரில் அதிகமானவர்களை எதிர்காலத்தில் மத்தள விமான நிலையம்

                                                      மூலமாக அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்தார்.

                                                      கொரியாவில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டு விடுமுறைக்காக தாய்நாட்டுக்கு வந்த பணியாளர்கள் விடுமுறை முடிந்த நிலையில்

                                                      மீண்டும் நேற்று கொரியா நோக்கி செல்வதற்காக மத்தள விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் அவர்கள் மத்தியில் பணியகத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

                                                      வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மீள புத்துயிரூட்டும் வகையில் பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பில்

                                                      ஈடுபடுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.

                                                      அமைச்சர் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு இணங்கவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஒரு தொகுதியினர் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

                                                      தென்கொரியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் விடுமுறைக்காக தாய்நாட்டுக்கு வந்திருந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் உரிய தினத்தில்

                                                      மீண்டும் தென் கொரியாவுக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. அவர்களை மீண்டும் தமது தொழில் தளங்களுக்கு

                                                      அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாகவே நேற்று அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

                                                      இந்த நிலையில் அவர்கள் அந்த நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தொழில்களில்

                                                      ஈடுபடுவர். அதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் கொரிய நாட்டின் மனித வள அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்துள்ளன.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          இஸ்ரேல் அமைப்பினால் கடற்படைக்கு பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடை

                                                          இஸ்ரேல் அமைப்பினால் கடற்படைக்கு பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடை

                                                          நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு

                                                          தேவையான பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

                                                          நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில்

                                                          கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும்,

                                                          இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன.

                                                          அதன் படி கடந்த மே 30 ஆம் திகதி கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு பல பாதுகாப்பு மருத்துவ

                                                          உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்காக அமைப்பின்

                                                          துணைத் தலைவர் திருமதி மெடில்டா சில்வா உட்பட சில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

                                                          கடற்படைத் தளபதி குறித்த பொருட்களை ஏற்றுக்கொண்டு, ஹெலசரண

                                                          இஸ்ரேல் அமைப்பின் அனைத்து நபர்களுக்கும் கடற்படை சார்பில் தனது நன்றியைத் தெரிவித்தார்.

                                                          இஸ்ரேல் அமைப்பினால்
                                                          இஸ்ரேல் அமைப்பினால்
                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

                                                              நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

                                                              கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகுசேவைகள் இன்றிலிருந்து வழமைக்குத்

                                                              திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார்.

                                                              நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும். வட.தாரகை காலை 8 மணிக்கு

                                                              குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகாட்டுவானை வந்தடையும் என தெரிவித்த பிரதேச

                                                              செயலாளர், ஏனைய படகு சேவைகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

                                                              மேலும் கொரனோ தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணியே பொதுமக்கள் படகுகளில் பயணிக்க வேண்டியுள்ளதன்

                                                              காரணமாக மேலதிக படகு சேவைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சத்தியசோதி சுட்டிக்காட்டினார். தற்போது

                                                              நெடுந்தீவு பகுதிக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக மேலதிக படகுசேவை நெடுந்தீவில் இருந்து

                                                              குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

                                                              குமுதினி, வட தாரகை போன்றவை வழமை போன்று தமது சேவையில் ஈடுபடும் எனவும் சமூக இடைவெளி பேணப்படுவதன்

                                                              காரணமாக மேலதிக படகு சேவையும் இடம்பெறவுள்ளதாகவும் சத்தியசோதி மேலும் தெரிவித்துள்ளார்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

                                                                  ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

                                                                  இலங்கை போக்கவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பஸ் வண்டிகளை இன்று தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

                                                                  இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம்

                                                                  வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.

                                                                  இதேவேளை, ரயில் பயணங்களையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக

                                                                  ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று 33 ரயில் பயணங்களை

                                                                  முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.

                                                                  நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவையினை

                                                                  வழமை போன்று முன்னெடுப்பது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                                                      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                                                      லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்

                                                                      லண்டனில் தமிழர் வீட்டில் பாட்டி – உள்ளே புகுந்த பொலிஸ் – 1000 பவுண்டு தண்டம்

                                                                      லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த சிசுவுக்கு முப்பத்தி ஓராம் நாள் விசேட நிகழ்வு இடம்பெற்றுள்ளது

                                                                      இதன் பொழுது அங்கு முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கெடுத்தனர் ,

                                                                      இங்கு மக்கள் திடீரென கூடியதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அயல் வீட்டார், காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

                                                                      விரைந்து வந்த காவல்துறை அணியினர் அங்கு பங்கு கொண்ட மக்களை சுற்றிவளைத்தனர்

                                                                      கொரனோ நோயின் பொழுது அத்துமீறி சட்டவிரோதமாக அரசின் அறிவுறு த்தலை மதியாது பாட்டி வைத்தமையாலும்

                                                                      ,அவ்வேளை அங்கு சமுக இடைவெளியை பின்பற்ற மறுத்து பெரும் திரளாக மக்கள் கூடியதாலும் கடுப்பான போலீசார்

                                                                      அந்த நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு வருக்கும் தலா ஆயிரம் பவுண்டுகள் தண்ட பணம் அறவிட்டுள்ளனர் ,இலங்கை ரூபாயில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்களாகும்

                                                                      மேற்படி பணத்தினை எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்குள் இவர்கள் செலுத்த வேண்டும்

                                                                      தவறின் அது இரட்டிப்பாகும் ,அவற்றையும் ,செலுத்த தவறினால் அவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தும் விதியுள்ளது

                                                                      நாடு கடந்து அகதிகளாக வந்த தமிழர்கள் இந்த இழி நிலை செயல் கண்டு ஒட்டு மொத்த தமிழினமும் வெட்கி தலை குனிகிறது

                                                                      எவ் வேளை யார் இறப்பார்கள் என்ற பீதி நிலை தொடரும் வேளை ,முட்டாள்கள் போல இந்த செயலை அந்த குடும்பத்தினர் புரிந்துள்ளனர்

                                                                      பிரிட்டனில் நாள்தோறும் 400 க்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் இதுவரை 38,489 பேர் பலியாகியுள்ளனர்

                                                                      ஒருவர் எடுத்த முடிவினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர்இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட இதனை சிந்திக்கவில்லையா ..?


                                                                      லண்டன் காவல்துறையின் இந்த அளப்பரிய சேவைக்கு தமிழர் மானுட சமூகம் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது

                                                                      இது போன்ற செயல் இத்தாலியிலும் இடம்பெற்றமை குறிப்பிட தக்கது ,

                                                                      மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என்ற கொட்டு வாசம் அனைத்து பகுதியிலும் வெளியிட பட்டு வரும் நிலையிலும் அதையும் மீறி இப்படி ஒரு நிகழ்வா …?

                                                                      நட்டத்தில் ஓடும் அரசுக்கு பல்லாயிரம் பவுண்டுகளை வருமானமாக வழங்கிய மாண்பு மிகு தமிழர்கள்

                                                                      எங்கே செல்கிறது எம் தமிழர் சமூகம் ..?பிரிட்டனில் இதுவரை 140 தமிழர்கள் இந்த நோயினால் பலியானதாக தகவல் ஒன்று வலம் வருகின்றமை குறிப்பிட தக்கது

                                                                      லண்டனில் தமிழர் வீட்டில்
                                                                      லண்டனில் தமிழர் வீட்டில்
                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

                                                                          ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

                                                                          இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்; தலைவரும் அமைச்சருமான அமர்ர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் 05.55 மணியளவில் நோர்வூட்

                                                                          சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியில் சங்கமமாகியது. கடந்த 26 ஆம் திகதி காலமான அமைச்சர்

                                                                          ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு

                                                                          பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமை அலுவலக சௌமிய பவனில் வைக்கப்பட்டு அதனையடுத்து அவரது சொந்த ஊரான

                                                                          வௌண்டனுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டக்கலைக்கு கொண்டுவரப்பட்டு இ.தொ.கவின்

                                                                          தொழில்பயிற்சி நிலையமான CFL இல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிக்கிரியைகள் நடைபெற்ற நோர்வூட் மைதானத்துகுள் குறிப்பிட்ட

                                                                          எண்ணிக்கையிலானோரேஅனுமதிக்கப்பட்டிருந்ததால் மைதானத்துக்கு வெளியில் தேயிலை மலைகளில் இருந்தும், சமூகவலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடாக

                                                                          தோட்டங்களில் இருந்தும் தமது தலைவரின் இறுதி பயணத்தை கண்ணுற்றனர். இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து அட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான்

                                                                          விளையாட்டு அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று

                                                                          மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலித்தினர். இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

                                                                          உரையாற்றினார்.அதன்பின்னர் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான மகாநாயக்க தேரர், இந்து மதகுரு, இஸ்லாம் மௌலவி, அருட்தந்தை ஆகியோர் ஆன்மீக உரை நிகழ்த்தினர்.

                                                                          அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடின்றி சேவையாற்றிய தலைவர் எனவும் பாராட்டினர். சர்வமத தலைவர்களின் உரைகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்

                                                                          அனுதாப செய்தி மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆனுதாப செய்தி, மத்திய மாகாண ஆளுநரால் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன்

                                                                          தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுதாப உரை இடம்பெற்றது. அமரர். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல்

                                                                          பயணத்தை பாராட்டிய பிரதமர், இறுதி சந்திப்பின்போது தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து

                                                                          பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இரங்கல் உரையாற்றினார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள

                                                                          எதிர்க்கட்சிகளின் சார்பில் நவீன் திஸாநாயக்க அனுதாப உரையாற்றினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் சார்பில் பாராளுமன்ற

                                                                          உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றினார். ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தின் சார்பில் ஜீவன் தொண்டமான் நன்றியுரை ஆற்றினார். நுவரெலியா

                                                                          மாவட்டத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

                                                                          ஆறுமுகன் தொண்டமானின்
                                                                          ஆறுமுகன் தொண்டமானின்