Author: நலன் விரும்பி
கூட்டுறவு சங்கங்கள் – நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை- வடக்கு ஆளுநர்
கூட்டுறவு சங்கங்கள் – நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை- வடக்கு ஆளுநர்
வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்;றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தி கரமானதாக இல்லை என்று வட மாகாண தெரிவித்துள்ளார்.
இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதார வளர்;;ச்சியென்பது கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தே அமைந்துள்ளது. சீனாவிலுள்ள
பெரும்பாலான வங்கிகள் விவசாய வங்கிகளே. இத்தாலி நாட்டிலுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் கூட்டுறவுத்துறையினரதே. அங்கிருக்கும் இறைச்சி, பற்பசை உட்பட அனைத்தும் கூட்டுறவுத்துறையின் தாயாரிப்புக்களாவே
காணப்படுகின்றது. எனவே, கூட்டுறவுத்துறையென்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைகின்றது. ஆனால், நமது
மாகாணத்தில் அத்துறையொரு தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
வட மாகாணக் கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று வட மாகாண ஆளுநர்
திருமதி.பீ.எஸ்.எம்.சாளஸ் தலைமையில் (27-8-2020); ஆளுநர் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வட மாகாணப் பிரதம் செயலாளர், ஆளுநரின் செயலாளர், கூட்டுறவுத் திணைக்கள ஆணையாளர் கலந்துகொண்டனர்.
கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் கேட்டறிந்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் , கூட்டுறவே நாட்டுயர்வு என்று கூறுவார்கள். அவ்வடிப்படையில்
பார்த்தால் நமது மாகாணத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் வளர்ச்சியடையாமலும் சில
சங்கங்கள் இயங்காமலும் உள்ளதாக எனக்களிக்கப்பட்ட அறிக்கையினூடாக அறிந்துகொண்டேன். அப்படிப் பார்க்கும்போது மாகாண அரசு எவ்வளவு முயன்றும் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்பது எனக்குத் தெரியவில்லை. கூட்டு உறவாக இல்லாமல் தனிமனித சிந்தனையுள்ளவர்களாக நாமிருப்துதான் காரணமாக இருக்குமோவென நான் நினைக்கின்றேன்.
மக்களோடு இணைந்திருக்கும் ஒரு திணைக்களம் தான் இந்தக் கூட்டுறவுத் திணைக்களம். அதற்குப் பரந்த செயற்பாடுகளும் அதிகாரங்களும் இருக்கின்றன. அதனூடாகப் பல கடமைகள்
இருக்கின்றன. நமது பொருளாதாரத்தையும் தமத வர்த்தக செயற்பாடுகளையும் வளர்த்தெடுப்பதற்கான கடப்பாடு
கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு துறையின் செயற்பாடுகள் சீரான முன்னேற்றப் பாதையில் இல்லையென்பதே கவலையளிக்கின்ற விடயமாகவுள்ளது.
சீரழிந்துபோயிருக்கின்ற நமது மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டுமென்றால் மக்களோடு மக்களாகவிருக்கும் கூட்டுறவுத்துறையின் செயற்பாட்டில்தான் உள்ளது. தனிமனித
செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் தவிர்த்துப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களாக கூட்டுறவுத்துறையைச் சார்ந்தவர்கள் செயற்படவேண்டும். அப்போதுதான் மாகாணசபையின்
ஒத்துழைப்பை தொடர்ந்தும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க இயலும். கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியின்மை தொடர்பான தெளிவானதும் துள்ளியமானதுமான அறிக்கையை
கூட்டுறவுத்திணைக்கள ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் எனக்குப் சமர்ப்பிக்கவேண்டும்.
கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சியிலும் செயற்பாடுகளிலும் ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது உற்பத்தி மற்றும் தேவைகள் பற்றிய ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். நமக்குத் தேவையான அனைத்தையும்
கூடுமானவரை நாமே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். வெளியிலிருந்து கொள்வனவு செய்வதைக் குறைக்கவேண்டும். நமது உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தலையும் நாமே
செய்யவேண்டும். வெளிநபர்கள் அதைச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். தொழிற்துறைகள் வளரவில்லையென்றால் ஆணையாளர்களும் பணிப்பாளர்களும் அதற்குப் பொறுப்பேற்க
வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவுத் திணைக்களம் முன்னெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
ராம்ப் இனவெறிக்கு எதிராக மக்கள் போராட்டம்
ராம்ப் இனவெறிக்கு எதிராக மக்கள் போராட்டம்
அமெரிக்கா தலைநகரில் ஆளும், கிராம்பின் இனவெறிக்கு எதிராக
கறுப்பின மக்கள் உள்ளிட்டவர்கள் பெரும்,போராட்டத்தை நடத்தியுள்ளனர்
ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும் அரச அதிபர் டிரம்புக்கு
எதிராக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருவது ,எதிர்வரும் தேர்தலில் டிரம்ப் பலத்த தோல்வியை சந்திப்பார் என எதிர்பார்க்க படுகிறது

மத்தியதரை கடலில் 200 அகதிகளுடன் தத்தளிக்கும் கப்பல் – வீடியோ
மத்தியதரை கடலில் 200 அகதிகளுடன் தத்தளிக்கும் கப்பல் – வீடியோ
கறுப்பின ஆசிய நாட்டவர்களை தங்கிய படி பயணித்த அகதிகள் கபபிள் ஒன்று மத்திய தரை கடலில் சிக்கி தத்தளித்த வண்ணம் உள்ளது
மேற்படி கப்பல் வருகையை அறிந்த மீட்பு படையினர் அந்த
கப்பலில் இருந்து அகதிகளை மீட்டு கரையேற்றும் நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
குறித்த கப்பலில் சுமார் இருநூறு அகதிகள் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,
உள்நாட்டு போர் காரணமாக உயிர் அச்சுறுத்தலினால் இந்த அகதிகள்
அந்த நாடுகளை விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்
உடைந்து வீழ்ந்த உணவகம் 17 பேர் பலி – 28 பேர் காயம்
சீனாவின் Shanxi மாகாணத்தில் உள்ள இரட்டை அடுக்கு மாடி கொண்ட
உணவகம் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்தது
இதன் பொழுது அதற்குள் உணவருந்தி கொண்டிருந்த பதினேழு பேர் பலியாகினர்
இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர் ,இவர்களில் ஏழு பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த உணவகம் உடைந்து வீழ்ந்தமைக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை
இது குறித்த விசாரணைகள் தொடர்த வண்ணம் உள்ளது

சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்பாக சிறைகளில் நீண்ட காலமாக
தடுத்து வைக்க பட்டுள்ள மக்களை விடுதலை செய்ய கோரிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெரும் போராடட்ம ஒன்றை நடத்தினர்
இந்த கூடடகிற்கு பாரளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இரு காயந்திரன்களும் கலந்து கொண்டனர்
எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்க பட்டவர்களை விடுதலை
செய்திட கோரிய பொழுதும் அதனை ஆளும் அரசுகள் கருத்தில் எடுக்காது புதிய சிறை சாலைகளை அமைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்
கோடாலியுடன் கடைக்குள் புகுந்து மக்களை வெட்டிய நபர்
இன்று காலை பத்து மணியளவில் அவுஸ்ரேலியா Victorian shopping centre கடைத் தொகுதிக்குள் நபர் மக்கள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்
இதன் பொது இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில்
அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
குறித்த குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைக்கு உட்ப்படுத்த பட்டுள்ளார்
கார் ஒன்றுக்குள் இருந்தவர்களை அந்த கார் கண்ணாடியை உடைத்து
அதன் ஊடாக பலத்த வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் இந்த சண்டையை தடுக்க முயன்ற இருபது மக்களினாலும் இதனை தடுக்க முடியாது போனதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன
இந்த தாக்குதல் சம்பவத்திற்குரிய உடனடி காரணம் தெரியவரவில்லை ,விசாரணிக தொடர்ந்த வண்ணம் உள்ளன

லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது
லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது
லண்டன் Hounslow, Hillingdon and Ealing. பகுதியில் விசேட குற்ற தடுப்பு காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல் முற்றுகை
நடவடிக்கையில் சுமார் முப்பத்தி ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் ,கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை ,மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் என கண்டறிய பட்டுள்ளது
மேலும் இவர்கள் பயன் படுத்திய காருக்கு தானியங்கி முறையில் இலக்க தகடு மாறும் கார் பயன் படுத்தியதும் கண்டுபிடிக்க பட்டுள்ளது
கைதானவர்களிடத்தில் இருந்து இரண்டாயிரம் பவுண்டுகள் பணம் ,கத்திகள் ,துப்பாக்கிகள் ,மற்றும் போதைவஸ்து ,கஞ்சா என்பனவும் மீட்க பட்டுள்ளன
நீண்ட நாட்கள் போலீசார் இவர்களை பின்தொடர்ந்து கண்காணித்த பின்னர் இந்த முற்றுகை நடவடிக்கையில் களம் குதித்தனர்
தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இலங்கையில் இனப் பிரச்சினையை தீர்பதற்கு இதுவே தீர்வு
இலங்கையில் இனப் பிரச்சினையை தீர்பதற்கு இதுவே தீர்வு
அமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்துவிட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டுமென தெரிவித்த தமிழ் மக்கள் தேசிய
கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான மருந்து எனவும் தெரிவித்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“எனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கூறுவது என்னவென்றால் அவரின் வரலாற்று குறிப்புகள் காலங்கடந்தவை. அவர் வரலாற்றை படித்துவிட்டு அவர் வர வேண்டும்.
நான் பிரிவினைவாதத்தை கேட்கவில்லை பல்வகைத்தன்மையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே கூறுகிறேன். எனது உரை
தொடர்பில் நேர்மையாகவும், தொழில்முறையாகவும் நடந்துக்கொண்ட நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் நான் எதனையும் கூறப்போவதில்லை. எந்தவொரு
அரசாங்கமும் தமிழ் மக்களை துயரத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை.
முதலமைச்சருக்கான நிதி கூட மறுக்கப்பட்டது. அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எங்களது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கிறது. நிலையான சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கு இதுவே பொன்னான தருனம். யுத்தத்தை வெல்வது இலகு. ஆனால் சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே உண்மையான வெற்றி.
“ஒருமித்த” நாட்டுக்குப் பதிலாக “ஐக்கிய” நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன்
இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும்.
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ
விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள்
இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது முட்டாள்த்தனமானது.” எனவும் தெரிவித்தார்.
லண்டன் Ilford இல் 3 சிறுவர்கள் கடத்தல்- மக்களுக்கு எச்சரிக்கை
லண்டன் Ilford இல் 3 சிறுவர்கள் கடத்தல்- மக்களுக்கு எச்சரிக்கை
நேற்று லண்டன் இல்போர்ட் பகுதியில் மூன்று சிறுவர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் .
இந்த கடத்தடன் தொடர்பு பட்ட 21 மட்டும் 40 வயது நபர் கைது செய்ய பட்டுளள்னர்
சிறுவர்கள் தற்போது மீட்க பட்டுள்ளனர் .
குறித்த கடத்தல் தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மூன்று முஸ்லீம் சிறுவர் கடத்தல் ஏன் என்பதற்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
இம்ரான் சபி என்பவரே கடத்தல் சம்பவத்தின் முக்கிய நபர் என தெரிவிக்க படுகிறது ,
Nissan Qashqai registration PK13 ,என்ற காரினை குரைடன் பகுதியில் Coulsdon Road,கண்ணுற்றால் மக்கள் தமக்கு தகவல் தரும் படி போலீசார் அவசர வேண்டுதல் விடுத்துள்ளனர்
இந்த சிறார் கடத்தல் இடம்பெற்றதை கண்ணுற்ற மக்கள் 30 அழைப்பினை
அவசர மையத்திற்கும் அழைத்து தெரிவித்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இது மனித கடத்தல் மாபியா கும்பலா என உடனடியாக தெரிய வரவில்லை
லண்டன் மக்களே எச்சரிக்கை ,கடத்தல் கிறார்கள் உங்களை அருகில் இவ்விதம் நடமாட கூடும்
எச்சரிக்கையுடன் செயல் படுங்கள்

கடலில் செத்து மிதந்த 40 டொல்பின்
கடலில் செத்து மிதந்த 40 டொல்பின்
ஜப்பானிய எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட கசிவால் பல லட்சம் லீட்டர் ஒயில் கடலில் கலந்து
இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது
இவ்வேளை இந்த ஒயில் தாக்குதலில் சிக்கி நாற்பது டால்பின்கள் செத்து
மிதந்தன ,இந்த உயிரினங்கள் இறப்பிற்கு ஜப்பான் கப்பலே காரணம் என சுற்று சூழல் பாதுகாப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் வைரஸ் தாக்கத்தால் 85,000 பேர் பலியாவர்கள் – நிபுணர்க்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் வைரஸ் தாக்கத்தால் 85,000 பேர் பலியாவர்கள் – நிபுணர்க்கள் எச்சரிக்கை
பிரிட்டனில் ஆரம்பமாகும் குளிர்கால பகுதியில் சுமார் எண்பத்தி ஐந்தாயிரம்
பேர் கொரனோ வைரஸ் பரவல் தாக்கத்தினால் பலியாவர்கள் என புதிய புள்ளி விபர அறிக்கை வெளியாகியுள்ளது
நோய்த் தடுப்பு நிபுணர்கள் மூலம் இந்த விசேட அறிக்கை வெளியாகியுள்ளது
இவ்வேளை பாடசாலைகளை அரசு மீள் ஆரம்பிப்பது மிக பெரும் அப்பதான ஒன்றாக மாற்றம் பெறும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
அமெரிக்காவை போல பிரிட்டன் மீள பெரும் மனித பேரழிவை சந்திக்கும்
எனவும் ,அது பெரும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது
குளிர்காலத்தில் நோயானது அதிகம் பரவும் என்பதால் இவ்வேளை
இந்த நோயின் தாக்குதல் அதிகரிக்கும் என்பது நிபுணர்கள் கணிப்பாக உள்ளது
பிரிட்டனில் கொரனோ அபாயம் – மீள அடித்து பூட்டும் நெருக்கடி
பிரிட்டனில் கொரனோ அபாயம் – மீள அடித்து பூட்டும் நெருக்கடி
பிரிட்டனில் இரண்டாவது கொரனோ அலை முந்தையை பாதிப்பபை விட மிக மோசமாக இருக்குமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மக்கள் வீடுகளை விட்டு வெளியில் அதிகம் நடனமாடி திரிவதால் இந்த
நோயானது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என அது எச்சரிக்கை விடுத்துள்ளது
விரைவில் மீள முக்கிய ஆபத்தான பகுதிகளை அடித்து பூட்டுதல் ,அல்லது
தேசிய அளவில் சட்டங்கள் இறுக்கமாக நடைமுறை படுத்தும்
நிலைக்கு அரசு செல்லும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்ட பட்டுள்ளது
மக்களே வீதிகளில் தேவையற்று உலாவாதீர்கள் ,முகக் கவசம் இன்றி
பொது இடங்களில் உலவி திரியாதீர்கள் என்பது ஏற்புடமையாகிறது
நோயினை கட்டு படுத்தவும் ,பாதிப்பபை குறைக்கவும் அரச நடவடிக்கை விரைவில் ஆரம்பமாக உள்ளது
வவுனியாவில் அவசரமாக கூடும் தமிழர் கட்சி – மாவை பதவி பறி போகுமா ..?
வவுனியாவில் அவசரமாக கூடும் தமிழர் கட்சி – மாவை பதவி பறி போகுமா ..?
இன்று வவுனியாவில் தமிழரசு கட்சி அவசரமாக கூடி தேத்தல் தோல்வி தொடர்பில் ஆராய்கிறது
,இந்த தோல்விக்கு மாவையே காரணம் என கூட்டப்பட்டு வரும் நிலையில்
மாவை தலைவர் பதவி பிடுங்க பட்டு சிறிதரன் அதற்கு நியமிக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இதனால் இந்த கூட்டமும் இக முக்கியன ஒன்றாக பார்க்க படுகிறது
இன்று இதன் முடிவுகள் தெரியவரலாம் ,
பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொலை -சிங்கள காவல்துறை அராயகம்
பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொலை -சிங்கள காவல்துறை அராயகம்
நேற்று இரவு குற்றவாளி என அடையாள படுத்த பட்ட ஒருவரை
கைது செய்ய போலீசார் சென்ற வேளை அவர் அங்கருந்து தப்பிக்க முயன்றுள்ளார்
இதன் பொழுது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இவரது மரணம் தொடர்பில் கருத்துரைத்த போலீசார் ,பலவேறு பட்ட குற்ற
செயல்களுடன் தொடர்பு பட்ட நபரே
இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்
செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்
செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் பிச்சை எடுத்து தனது
வாழ்வாதாரத்தை போக்கி வந்த 62 வயது பிச்சை காரர் ஒருவருக்கு
பெண் பிச்சை காரர் ஒருவருக்கும் இடையில் கருத்து முரண் பாடு ஏற்பட்டது
இதனால் ஆத்திரமுற்ற பெண் பிச்சை காரர் தனது செருப்பால் சரமாரியாக தாக்கினார்
இதில் வயதானவர் பரிதாபகரமாக பலியானார்
கொலை குற்ற சாட்டில் பெண் பிச்சை காரி கைது செய்ய பட்டுள்ளார்
மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும்
ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில்
ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு – இந்தியா அமெரிக்காவை முந்தியது
கொரோனா பாதிப்பு – இந்தியா அமெரிக்காவை முந்தியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,021 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 லட்சத்து 63 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 62,550 -ஆக அதிகரித்துள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றில் இந்தியா அமெரிக்காவிலும் பார்க்க முன்னிலையில் காணப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவில் முதல்முறையாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 77,266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது.
உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 76,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; அதே கால அளவில் 1,021 உயிரிழந்துள்ளனர். இதனால்
ஒட்டுமொத்தமாக கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 62,550 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்து தற்போது நாடு முழுவதும் 7,52,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று
பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளோரின் எண்ணிக்கை 26,48,999 ஆகவும் உள்ளது.
அமெரிக்காவில் ஜூலை மத்தியில் உலகிலேயே மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 77,255 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டதே இதுவரை அதிகபட்ச கொரோனா பாதிப்பாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை
பிரிட்டனில் லொறியில் 39 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை
பிரிட்டனில் லொறி ஒன்றுக்குள் அடைத்து வைத்து வியட்நாம் நாட்டவர்களை கடத்தி வந்த நாப்பது வயதுடைய ஐயர்லாந்த்
நாட்டை சேர்ந்த நபர் கொலை குற்ற சாட்டுக்கு உள்ளான நிலையில் நீதி விசாரணையை எதிர் கொண்டு வந்தார்
தற்போது அவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் கால மரண தண்டனை
வழங்க -படலாம் என எதிர்பார்க்க படுகிறது
முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்
முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்
நடந்து முடிந்த ஒன்பதவது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆசனங்கள் எதனையும் பெறாது தோற்று போனது
இந்த தோல்வியை அடுத்து தற்பொழுது அதன் கட்சி தலைவர்
ரணில் விக்கிரமசிங்கா தலைமை பதவியில் இருந்து விலக
வேண்டும் எனவும் .தலைவர் கரு ஜெயசூரிய நியமிக்க பட வேண்டும் என கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது
ஆனால் ரணில் தானே தான் தலைவர் என தொடர்ந்தும் அடம் பிடித்து வருகின்றார்
ரணில் பதவி விலகினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கும் நிலைக்கே அவர் செல்ல கூடும் என நம்ப படுகிறது
போதையில் தவறான சாலையில் கார் ஓடி சென்ற பெண்
போதையில் தவறான சாலையில் கார் ஓடி சென்ற பெண்
அவுஸ்ரேலியாவின் மிக நீண்டா வேக சாலையாக விளங்கி வரும் major Brisbane வீதியில் பெண் ஒருவர்
தவறான சாலை திசையில் காரினை செலுத்தி சென்றுள்ளார்
ஒருவழி சாலையாக உள்ள இந்த சாலையின் வழியே இவர் இவ்விதம் காரினை செலுத்தி சென்றது
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது,
காவல் துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து பறந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சென்றனர் ,
எனினும் குறித்த பெண் விபத்துக்கள் எதிலும் சிக்காது தப்பித்து கொண்டார்
நேர் எதிர் திசையில் இவ்வாறு வேகமாக காரினை செலுத்தி சென்ற பொழுதும்
அந்த சாலையில் பயணித்த வாகான ஓட்டிகள் சாதுரியமாக செயல் பட்டதால் பெரும் விபத்து தடுக்க பட்டுள்ளது
தற்போது குறித்த பெண்ணின் தவறான கார் ஓட்டும் காட்சிகள் காணொளி வாயிலாக போலீசார் வெளியிட்டுள்ளனர்
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது










