லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது

Spread the love

லண்டனில் போலீசார் அதிரடி வேட்டை – 39 பேர் கைது

லண்டன் Hounslow, Hillingdon and Ealing. பகுதியில் விசேட குற்ற தடுப்பு காவல்துறையினர் நடத்திய திடீர் தேடுதல் முற்றுகை

நடவடிக்கையில் சுமார் முப்பத்தி ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் ,கடத்தல் ,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை ,மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்டவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

மேலும் இவர்கள் பயன் படுத்திய காருக்கு தானியங்கி முறையில் இலக்க தகடு மாறும் கார் பயன் படுத்தியதும் கண்டுபிடிக்க பட்டுள்ளது

கைதானவர்களிடத்தில் இருந்து இரண்டாயிரம் பவுண்டுகள் பணம் ,கத்திகள் ,துப்பாக்கிகள் ,மற்றும் போதைவஸ்து ,கஞ்சா என்பனவும் மீட்க பட்டுள்ளன

நீண்ட நாட்கள் போலீசார் இவர்களை பின்தொடர்ந்து கண்காணித்த பின்னர் இந்த முற்றுகை நடவடிக்கையில் களம் குதித்தனர்

தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *