Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு விமானத்தில் வந்த பலருக்கு கொரோனா

வெளிநாட்டு விமானத்தில் வந்த பலருக்கு கொரோனா

கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்டி​ருந்த 22 பேருக்கு, நேற்று (31) கொரோனா தொற்று உறுதி

செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவ்வாறு உறுதி

செய்யப்பட்டவர்களும் கட்டாரிலிருந்து வருகைத் தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் கட்டாரிலிருந்து 398 பேர் ஒ​ரே விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாகவும் இவ்வாறு வந்த 54

பேருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2,868 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு

வெளியேறியுள்ளதுடன், 191பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      444 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

      444 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்

      விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

      இதில் 18 பெண்களும் உள்ளடங்குவதாகவும், சிறைச்சாலைகளில்

      இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பெயர்ப் பட்டியல் விசாரணைக்கு

      உட்படுத்தப்பட்ட பின்னர், கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை

      எடுத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார

      உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

      சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியை கவனத்தில்

      கொண்டு சிறு குற்றங்களுக்காக விளக்கமறியலில்

      வைக்கப்பட்டிருந்தவர்களே இவ்வாறு விடுதலை

      செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம்

        குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02 இல் ஆரம்பம்

        வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்குதல் செப்டெம்பர் 02இல் ஆரம்பம்

        தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.

        வறுமை நிலையில் உள்ள ஒரு இலட்சம் குடும்பத்திற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 02ஆம் திகதி ஆரம்பம்.

        அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி

        பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்.

        • கீழ்வரும் தகைமைகளின் அடிப்படையில் தொழில் வாய்ப்பு.
        • எவ்வித கல்வித் தகைமையும் இல்லாத அல்லது க.பொ.த சாதாரண தரத்தை விடவும் குறைந்த கல்வி நிலையில் உள்ளவர்களும் பயற்சி பெறாதவர்களும்.


        • விண்ணப்பம் கோரப்படும் தினத்தில் 18 வயதிற்கு குறைவாகவும் 40 ஐ விட அதிகமாகவும் இருக்காமை.


        • சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு தகுதி இருந்தும் பெறாத குடும்பத்தின் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல் அல்லது சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பத்தில் தொழிலற்ற உறுப்பினராக இருத்தல்.


        • வயது முதிர்ந்த, நோயாளியான பெற்றோர் அல்லது ஊனமுற்ற உறுப்பினரைக் கொண்ட குடும்பத்தில் உறுப்பினராக இருத்தல்.
        • விண்ணப்பிக்கும் பிரதேசத்தில் நிலையான வசிப்பிடத்தை கொண்டவர்.

         பயிற்சிக்காக தெரிவு செய்தல்.
        • ஒரு குடும்பத்தில் மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகளைக் கொண்ட ஒரு விண்ணப்பதாரி மாத்திரம் கவனத்தில் எடுக்கப்படும்.
        • விண்ணப்பதாரிகள் வசிக்கும் பிரதேசங்களில் நிலவுகின்ற

        தொழில் வாய்ப்புக்கள் மற்றும் விண்ணப்பதாரி கேட்டுள்ள பயிற்சி துறைகள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து, குறித்த தொழில் பயிற்சிக்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.


        • தாம் வசித்துவரும் பிரதேசத்தில் அல்லது அதற்கு அருகில் உள்ள பயிற்சி நிலையங்களில் பயிற்சி வழங்கப்படும்.
        • சிறப்பான பயற்சியின் பின்னர் வசிக்கும் பிரதேசத்தில் அல்லது அருகில் உள்ள பிரதேசத்தில் தொழில் வழங்கப்படும்.

         சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்
        • 6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த

        பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத

        சம்பளம் (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு.

        10 வருடகால சிறப்பான தொடர் சேவை காலத்தை நிறைவு செய்ததன் பின்னர் அரசின் ஓய்வூதியம் வழங்கப்படும்.

        குறித்த துறைகளுக்கான தொழில் வழங்குதல் மேலே குறிப்பிடப்பட்ட வரையறைகளுக்குள் மாத்திரம் இடம்பெறுவதோடு

        , தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி திடீர் பேச்சு

        கோட்டாவுடன் அமெரிக்கா பாதுகாப்பு மந்திரி திடீர் பேச்சு

        அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் வு. எஸ்பர் (Mark Esper), ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

        ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது Twitter பகத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

        இந்த தொலைபேசி உரையாடலின்போது கொரோனாத் தொற்றை வெற்றிகரமாக

        கையாண்டமை மற்றும் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு அவர்

        ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துக்களையும் தெரிவிததுள்ளார்.

        இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் ,

        பயங்கரவாத ஒழிப்பு மற்றும் இந்து சமூத்திர பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்

        20ஆவது அரசியலமைப்பு திருத்தம் – வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில்

        20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

        ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று ,டம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் ,துபற்றி

        தெரிவிக்கையில் திருத்த சட்ட மூலத்தை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

        ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியலில் வலுவான சக்தியாக மாறியுள்ளது. பசில் ராஜபக்ஷ மூன்றில் ,ரண்டு

        பெரும்பான்மை அதிகாரத்தின் மூலம் கட்சிக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தந்துள்ளார். நாட்டின் சகல பகுதிகளிலும்

        அதிகாரத்தை கைப்பற்றி பெரமுனவை அனைத்து மக்களுக்குமான கட்சியாக மாற்றுவது கட்சியின் ,லக்காகும் என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்

        Posted in இலங்கை செய்திகள்

        தமிழின கொலையாளி மரணம் – மகிழ்ச்சியில் தமிழர்கள்

        தமிழின கொலையாளி மரணம் – மகிழ்ச்சியில் தமிழர்கள்

        முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக

        அனுமதிக்கப்பட்டார். மூளையில் கட்டியை அகற்ற ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார்.

        அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. நுரையீரல் தொற்றை சரிசெய்ய தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

        இன்று காலை ராணுவ ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில் நேற்று முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நுரையீரல் தொற்று காரணமாக

        உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செப்டிக் அதிர்ச்சியில் உள்ளார். இந்த ஆபத்தான நிலையில் இருந்து அவர் மீண்டு வருவதற்காக,

        மருத்துவ நிபுணர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில், வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார்’ என கூறப்பட்டுள்ளது.

        இந்நிலையில், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.

        இவர் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தத்தை முன் நின்று நடத்தியவர் ,இவரது மரணம் ஈழ தமிழர்கள் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

        Posted in பிரித்தானிய செய்தி

        பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்

        பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்

        பிரிட்டன் Banwen in Neath Port Talbot, South Wales பகுதியில் சட்டவிரோதமாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது

        மேற்படி நிகழ்வில் மூவாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்

        இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்

        இதன் பொழுது அங்கு வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது

        மேலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இருவருக்கும் தலா பத்தாயிரம் பவுண்டுகள் விகிதம் இருபதாயிரம் தண்டம் வழங்க பட்டுள்ளது

        மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு நூறு முதல் ஆயிரம் தண்டமும் வழங்க பட்டுள்ளது

        பிரிட்டனில் புதிதாக அமூல் படுத்த பட்டுள்ள சட்ட நகர்வில் முப்பது பேருக்கு

        மேல் பாட்டி நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள முடியாது அவ்வாறு கலந்து

        கொண்டால் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவருக்கு பத்து ஆயிரம் தண்டமும்

        ,அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயிரம்பவுண்டுகளும் தண்டம் வழங்க படும் என்பதாக சட்டம் அமுலில் உள்ளது குறிப்பிட தக்கது

        பிரிட்டனில் பாட்டி
        பிரிட்டனில் பாட்டி
        Posted in பிரித்தானிய செய்தி

        லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது

        லண்டனில் விமான கடத்தல் முறியடிப்பு -,தீவிரவாதிகள் கைது

        லண்டன் விமான நிலையத்தில் இருந்து பயணிகளை காவியபடி பயணித்த Lauda விமானம் ஒன்று

        Vienna,நோக்கி பறந்து கொண்டிருந்தது ,அவ்வேளை அதில் பயணித்த இத்தாலி மற்றும் குவைத் நாட்டை சேர்ந்த இருவரும் கழிவறைக்குள் சென்றுள்ளனர் .

        நீண்ட நேரமாகி அவர்கள் அதனை விட்டு வெளியில் வராது அதற்குள் இருந்து சந்தேகத்திற்கு இடமான வேலைகளை செய்துள்ளனர் .


        இதனால் பதட்டமான பயணிகள் கதறிய படி போலீசாருக்கும் ,விமானிக்கு தகவல் அளித்தனர்

        விரைந்து செயல் பட்ட விமானி தமது விமானத்தில் பாதுகாப்புக்கு அச்சறுத்தல் உள்ளதாக விமான கட்டு பாட்டறைக்கு தகவல் அனுப்பினார்
        .
        உடனடியா இரண்டு போர் விமானங்கள் குறித்த விமானத்தை சுற்றிவளைத்தன

        அந்த போர் விமானங்கள் உதவியுடன் விமானம் லண்டன் ஸ்டாண்டாட் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்க பட்டது

        மேற்படி விமானத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட இரண்டு நபர்களும் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டனர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்

        இவர்கள் விமானத்தை கடத்தவோ அல்லது விமானத்தை அமெரிக்கா இரட்டை கோபுர பாணியில் ஏதாவது செய்திட முனைத்திருக்க கூடும் என நம்ப படுகிறது

        தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

        லண்டனில் விமான கடத்தல்
        லண்டனில் விமான கடத்தல்
        Posted in உலக செய்திகள்

        உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்

        உணவில் நஞ்சு 25 பேர் பாதிப்பு – நோர்வேயில் பயங்கரம்

        நோர்வேயில் சட்ட விரோதமாக இடம்பெற்ற விருந்து பாட்டி ஒன்றில்
        இருபத்தி ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர்

        இவர்கள் உண்ட உணவில் நஞ்சு ஊறிய நிலையில் இருபத்தி ஐந்து

        பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஐவர் அப்பதான நிலையில் உள்ளனர்


        இதில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது

        குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

        Posted in இலங்கை செய்திகள்

        ரணில் மீது விசாரணை – கோட்டா அரசு அதிரடி நகர்வு

        ரணில் மீது விசாரணை – கோட்டா அரசு அதிரடி நகர்வு

        2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் பிரதமர்

        ரணில் விக்கிரமசிங்க, இன்று (31) ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்

        ஆஜராகியுள்ளாரென அந்த ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

        ஜனாதிபதி விசாரணை ஆ​ணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, இந்த மாதம் 21ஆம் திகதி முன்னாள்

        பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட்டிருந்த போதும், அன்றைய தினம் தன்னால் வரமுடியாது என்றும், இன்றே தன்னால்

        ஆஜராக முடியுமென ரணில் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

        உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில்

        கலந்து​கொண்டிருந்தமை தொடர்பாக வாக்குமூலமளிக்கவே இன்று அழைக்கப்பட்டுள்ளதாகவும் ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் வாகனங்கள், விலை திடீரென அதிகரிப்பு

        இலங்கையில் வாகனங்கள், விலை திடீரென அதிகரிப்பு

        இலங்கையில் வாகனகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டு பட்டால் தற்போது

        இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை அதிகரிக்க பட்டுள்ளது

        வாகன இறக்குமதியை அரசு குறைத்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        லெபனான் குண்டு வெடிப்பு 24 இலங்கையர்கள் பாதிப்பு

        லெபனான் குண்டு வெடிப்பு 24 இலங்கையர்கள் பாதிப்பு

        லெபனானில் இடம்பெற்ற கூட்னு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி

        இருபத்தி நான்கு இலங்கையர்கள் பாதிக்க பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

        காயமடைந்த அனைவரையும் இலங்கைக்கு அழைத்து வரும்

        நடவடிகை தீவிர படுத்த பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு

        கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு

        பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கிழக்கு தமிழர்களுக்கான ஒரே ஒரு பலமான குரல் நாம் மாத்திரமே என்பது

        எமது மக்களுக்கு நன்றாக தெரியும் என தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

        துறைநீலாவணையில் நேற்று முன்தினம் (29) சனிக்கிழமை நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

        துறைநீலாவனை பொது மக்களும் துறையூர் முற்போக்கு தமிழர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு மலர் மாலைகள் அணிவித்து,

        பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவம் அழிக்கப்பட்டது. இதன்போது மேலும் அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசிய

        கூட்டமைப்பில் இருக்கும் போதே நாங்கள் முற்போக்கு தமிழர் அமைப்பு என்று சகல போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அது அனைவருக்கும் தெரியும், அதனால்

        தான் எமது மக்கள் இம்முறை கட்சியை பார்க்காமல் எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றி பெறச் செய்து மீண்டும் பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளார்கள்.

        கடந்த காலங்களில் சிலர் கூறியிருந்தார்கள் நான் வீட்டில் கேட்டதனால்தான் வெற்றிபெற்றிருந்தேன் என்று, அப்படியானால் இம்முறை நாம் எப்படி வெற்றிபெற்றோம், இவை அனைத்தும்

        வீட்டிற்கு கிடைத்த வாக்குக்களா, எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை பொறுத்தவரை உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலை நாங்கள் இந்த

        மாகாணத்தில் கட்டியெழுப்பவேண்டும். இந்த மாவட்டத்தில் 58.9 வீதமாகவிருந்த நாங்கள் தற்போது 38.6 வீதமாக இருக்கின்றோம். எமது இன, வள, பொருளாதாரம் போன்ற பல்வேறுபட்ட துறை

        சார்ந்த வளர்ச்சி என்பது ஒரு அசமந்த போக்கில்தான் தமிழர்களை பொறுத்தவரையில் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலைமை

        மாற்றியமைக்கப்படவேண்டும். இதனடிப்படியில் ஆரோக்கியமான ஒரு அரசியலை நாம் இந்த மாகாணத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.

        இந்த மாகாணத்திலே பல பிரச்சனைகளோடு, வேதனைகளோடு, சவால்களோடு இருக்கின்ற ஒரே ஒரு சமூகமென்றால் அது தமிழ் சமூகமாகத்தான் இருக்கும். இதை யாரும் மறுக்கவும் முடியாது

        மறைக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு எமது மக்கள் எமக்குத் தந்த அங்கீகாரத்தைக் கொண்டு பிரதமர் அவர்களுடைய வழிகாட்டலில் பொதுஜன பெரமுன கட்சியின்

        தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அவர்களது நெறிப்படுத்தலில் இந்த தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு எமக்கு கிடைத்துள்ளது. இந்த

        அமைச்சின் ஊடாக நாங்கள் எமது மக்களை பாதுகாப்பதுடன், எமது பணிகளை நாடு பூராகவும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்..

        Posted in இலங்கை செய்திகள்

        போலீசார் திடீர் தேடுதல் வேட்டை – 400 பேர் கைது

        போலீசார் திடீர் தேடுதல் வேட்டை – 400 பேர் கைது

        மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் பொலிஸார்

        மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் சட்டவிரோத

        செயற்பாடுகள் தொடர்பில் 400 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

        கெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய 171 தேடுதல் நடவடிக்கைகள்

        மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 171 பேர் சந்தேகத்தின் பேரில்

        கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 94 பேர் கைது

        செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        மக்களுக்கு தனி வீடுகளை வழங்குவோம் -ஜீவன் தொண்டமான முழக்கம்

        மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்.’ – என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

        கலைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள்

        வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம் என்றும்

        அவர் கூறினார்.thumbnailசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார

        நிலையத்தில் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு (30.08.2020) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

        இந்நிகழ்வின் போது ரம்பொடை சௌமியமூர்த்தி தொண்டமான் கலாச்சார நிலையத்தின் அழகியற் கல்லூரி மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.thumbnail JEEvan

        thondaமலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தினோம். எனினும், மாடி வீடு, மாடி வீடு என அது தொடர்பில் தவறான கருத்து

        பரப்பட்டுவருகின்றது. கூரைக்கு பதிலாக ‘கொங்ரீட்’ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே,

        போலித்தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும்.

        சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பிலும்

        கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம்

        Posted in இலங்கை செய்திகள்

        பொலிஸ் வேட்டை – 28 ஆண் பெண்கள் கைது

        பொலிஸ் வேட்டை – 28 ஆண் பெண்கள் கைது

        பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபாசாரம் ஒன்றில் போதைப்பொருள்களுடன் இருந்த 28 இளைஞர், யுவதிகளை அக்மீமன பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

        இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 26 இளைஞர்களும் 2 யுவதிகளும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் மாத்தளை,

        அநுராதபுரம், மொரட்டுவ, அம்பாறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

        கராப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு

        கைதுசெய்யப்பட்ட அனைவரும் விஷ போதைப்​பொருள்களை பயன்படுத்தியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை

        மீறியமை ஆகியவற்றின் கீழ், இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்

        கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
        Posted in இலங்கை செய்திகள்

        பதுளையில் போதையில் குழந்தையை சுட்ட தந்தை

        பதுளையில் போதையில் குழந்தையை சுட்ட தந்தை


        அதிக மதுபோதையில் இருந்த தந்தையொருவர், இரண்டு வயதான தனது மகன் மீதும் தன் மதும் கட்டுத்ததுப்பாக்கியால் சுட்டதால்,

        இருவரும் பலத்த காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

        இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பசறை- பிபிலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தந்தையே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

        இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிக மதுபோதையில் இருந்ததாகத் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில்

        மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        கண்டியில் உணரப்பட்ட அதிர்வு – நில நடுக்கம் அல்ல

        கண்டியில் உணரப்பட்ட அதிர்வு – நில நடுக்கம் அல்ல

        கண்டியில் நேற்றிரவு உணரப்பட்ட அதிர்வு நில நடுக்கம் அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

        கண்டியில் ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில்

        மக்கள் நேற்றிரவு 8.38 அளவில் ஒரு வகையான சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.

        இது குறித்து தலாத்துஓயா பொலிசாருக்கு மக்கள் அறிவித்தனர்

        இதுதொடர்பாக புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் தெரிவிக்கையில் ,குறிப்பிட்ட இந்த

        பிரதேசங்களில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டனர்.

        குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று இன்று பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும்

        புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் மேலும் தெரிவித்தது.

        Posted in இலங்கை செய்திகள்

        காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு

        காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு

        இந்தியாவில் இருந்து காரைநகர் கடல்வழியாக இலங்குக்குள் ஐந்து கிலோவுக்கு

        மேற்பட்ட தங்கத்தை கடத்திவர முற்ப்பட்ட பொழுது அவை கடற்படையினரின்

        தீவிர ரோந்து கண் காணிப்பினால் முறியடிக்க பட்டுள்ளதாக வடக்கு கடல் படை தலைமையகம் அறிவித்துள்ளது

        இந்த கடத்தலை மேற்கொண்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக சிங்கள கடற்படையினர் தெரிவித்துள்ளனர்

        Posted in இலங்கை செய்திகள்

        கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது

        கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது

        இலங்கை தலைநகர் அருகில் அமைந்துள்ள கட்டு நாயாக்க சர்வதேச

        விமான நிலையம் மீள் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக முக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார்

        கொரனோ நோயின் தாக்குதல் அச்சறுத்தல் உள்ளபோதும் வெளிநாடுகளில்

        இருந்து இலங்கைக்குள் நுழைபவர்க்ள அடையாளம் காணப்பட்டால் அவர்கள்

        தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் விடுதலை செய்யும் சுழற்றி முறையினை அரசு கையாள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

        வீழ்ந்து கிடக்கும் பொருளாதரத்தை இத்துடன் நிமிர்த்தி விட இலங்கை ஆளும் அரசு முயற்சிப்பது குறிப்பிட தக்கது