இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo

Spread the love

இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo

அரசியல் இராஜதந்திர வழியில் தற்போது முன்னகர்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்ட நிலையில், தியாகதீபம் திலீபன்

மக்கள் எழுச்சியின் குறியீடாக இருப்பதோடு, இன்றைய தலைமுறைக்கு இரண்டு செய்திகளை அவனுடைய நினைவு

அறைகூவியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 33ம் நினைவேந்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய

நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் போராட்;டம் பெரும் நெருக்கடியினை சந்தித்திருந்த காலகட்டத்தில், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினை பயன்படுத்தி சிறிலங்கா அரசு, தமிழீழ

விடுதலைப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்ய எடுத்த முயற்சிகளை, லெப் கேணல் திலீபன் அகிம்சபை; போராட்டத்தின்

உச்சவடித்தினால் , தமிழீழ போராட்டத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவனாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளான்.

உயிரைக் கொடுத்து போராடும் வரலாறு விடுதலைப் புலிகளுக்கு உரியதாக இருந்தது. 2009,மேக்கு பின்னரான இக்காலத்தில்

உயிர்த்தியாகம் நிறைந்த போராடும் நிலை இல்லாது போயுள்ளது.இருப்பினும்
திலீபன் காட்டிய வழியில்

1 – மக்கள் மீது முன்வைத்து போராடுங்கள்

2 – எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதிஉச்ச கட்ட அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டத்து தயாராக இருங்கள்

என்ற இரண்டு செய்தியானது, மக்கள் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்துக்கு விசுவாசமாக, உண்மையாக இருந்து

போராடுமாறு, தியாக திலீபனின் வாழ்வும் ஈகமும் இன்றைய தலைமுறைக்கு அறைகூவல் விடுக்கின்றது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து நாம் தமிழர்கட்சி செந்தமிழன் சீமான், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, (கனடா) ரொரண்ரோ நகரசபை முன்னாள்

உறுப்பினர் நீதன் சான் உட்பட வட அயலர்லாந்து கட்சித் தலைவர் மற்றும் அமைப்பு பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய வணக்க நிகழ்வு இடம்பெற்றிருக்க, அமெரிக்காவின் நியு ஜெர்சி, பிரான்ஸ்,

பிரித்தானியா, ஜேர்மனி உட்பட பல இடங்களில் இருந்து வணக்க நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருந்தன.

கவிதைகள், பாடல்கள் இடம்பெற்றிருந்ததோடு, தியாகதீபன் திலீபன் உண்ணாவிரதகளத்தில் பங்காற்றியிருந்த முன்னாள் போராளி சிறி அவர்கள் அக்கால நினைவுகளை மீட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *