Posted in உலக செய்திகள்

சீனாவில் விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பலி

சீனாவில் விபத்தில் 18 பேர் உடல் நசுங்கி பலி

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள சிலின் மாகாணம் புயூ நகரிலுள்ள

நெடுஞ்சாலையில் நேற்று காலை சரக்கு லாரி ஒன்று வேகமாக சென்று

கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடியது.

இதையடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் ஒன்றின் மீது லாரி

பயங்கரமாக மோதியது. அதன் பின்னரும் நிற்காமல் ஓடிய லாரி சாலையின்

நடுவே இருந்த தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு எதிர்திசையில் பாய்ந்தது.

அப்போது எதிர் திசையில் வந்த ஒரு மினி வேனுடன் லாரி நேருக்கு நேர் மோதியது.

இந்த சங்கிலி தொடர் விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி

பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்

பிரிட்டனில் -தாய் மகளை கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த கொடூரம்

பிரிட்டன் Burnley, Lancashire பகுதியில் நாற்பத்தி ஒன்பது வயது தாய் மற்றும்

14 வயது மகளை வீட்டுக்குள் புகுந்து கற்பழித்து அதன் பின்னர் அடித்து

காயப்படுத்தி பின்னர் வீட்டொடு எரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைங்களை ஏற்படுத்தியுள்ளது

தீயில் எரிந்துஇறந்தார்கள் என கருத பட்ட நிலையில் சடலங்கள் இரண்டின்

மீது மேற்கொள்ள பட்ட மருத்துவ சோதனையில் இருவரும் கற்பழிக்க

பட்டு கொடூரமாக தாக்க பட்டு கழுத்து நெரிக்க பட்டுள்ளது தெரியவந்துள்ளது

போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் 51 மற்றும் 56 வயது நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்களே இந்த படுபாதக செயலை புரிந்துள்ளது தெரிய வந்துள்ளது

இறந்தவரில் தாயார் மருத்துவர் என்பது குறிப்பிட தக்கது ,வீட்டுக்குள்

புகுந்து கற்பழித்து கொன்று வீட்டோடு எரித்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் திருச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் குண்டு எப்படி வெடித்தது மைத்திரியிடம் விசாரணை

இலங்கையில் குண்டு எப்படி வெடித்தது மைத்திரியிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்

விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாளை (06)

வாக்குமூலமளிக்க வருமாறு ஆணைக்குழுவால் அன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Posted in இலங்கை செய்திகள்

பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாகவழங்க படும் – கல்வி திணைக்களம்

பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாகவழங்க படும் – கல்வி திணைக்களம்

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு

விடயங்களை கவனத்தில் கொண்டு இலங்கை பரீட்சை திணைக்களத்தினால்

பரீட்சை சான்றிதழ்கள் இணையவழி ஊடாக வழங்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை திணைக்களத்திற்கு வரும் பொது மக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் அறிவிக்கும் வரையில் திணைக்களத்தினால் ஒரு நாள் மற்றும்

வழமையான சேவை கரும பீடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின்

1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு

தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்

வெளிநாடுகளில் இருந்து 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருந்த மேலும் 849 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

துபாயில் இருந்து நேற்று மாலை 400 பேர் வந்துள்ளனர். இவர்களுள் 7 சிறுவர்கள்

இடம்பெற்றுள்ளனர். மத்தளை விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஜப்பான் மற்றும் கட்டார் நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று

இலங்கை வரமுடியாமல் அந்த நாடுகளில் சிக்கியிருந்த 425 இலங்கையர்கள்

இன்று காலை கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை வந்தடைந்தனர்.

ஜப்பானில் தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்த 280 இலங்கையர்கள்

டோக்கியோ நகரில் இருந்து மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

தமிழ் நாடு சென்னையில் இருந்தும் 27 பேர் இலங்கை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் விமான நிலையங்களில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி வீடு திரும்பினார்

அமெரிக்க ஜனாதிபதி வீடு திரும்பினார்

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க ஜனாதிபதி

டொனால்ட் டிரம்ப் இன்று (05) வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் சிகிச்சை பெற்று வந்த வைத்தியசாலைக்கு

அருகாமையில் இருந்த ஆதரவாளர்களுக்கு வாகனத்தில் இருந்துகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் இரண்டாவது முறையாகவும்

ரம்மினால் காணொளி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. தாம் நலமுடன் இருப்பதாக இதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

மினுவாங்கொடை பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்கள்

ஊடாக வாகனங்கள் மூலம் பயணிக்க முடிந்த போதிலும் அந்த பிரதேசங்களில்

வாகனங்களை நிறுத்த முடியாது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்களில் மீண்டும் அறிவிக்கும்

வரையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவரேனும் திடீரென நோய்வாய்ப்பாட்டால் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம்

இன்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

பிரான்சில் சுட்டியலினால் அடித்து கொலை செய்ய பட்ட தமிழ் குடும்பம்

பிரான்சில் சுட்டியலினால் அடித்து கொலை செய்ய பட்ட தமிழ் குடும்பம்

பிரான்சில் ஒரே குடும்ப உறவுகளை சேர்ந்த ஐவர் சுட்டியலினால் அடித்து

கொலை செய்யப் பட்டுள்ளனர் .மேலும் ஐவர் மிக ஆபத்தான

நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்த கொலை குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றுள்ளதாக தமிழர்கள் மதியியல் பேச படுகிறது

போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேற்படி சமபவம் உலக அரங்கத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது குறிப்பிட தக்கது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

கொரோனாவால் – வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள் மரணம்

கொரோனாவால் – வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள் மரணம்

வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள், கொரோனாவால்

இதுவரை உயிரிழந்துள்ளனரென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ​ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கைப்

பணிப்பெண்ணொருவர், நேற்று முன்தினம் (1) கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில், உயிரிழந்துள்ளா​ரென, இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளரும் ஊடக பேச்சாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தொழிற்சாலையில், ​பணிபுரியும் 350 க்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்கள் கொரோனா

தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றும் ​அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2,600 இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

இலங்கையில் பெண்ணுக்கு கொரோனா: 60 பேருக்கு சுயதனிமை

கம்பஹா, திவுவுலுப்பிட்டியவில் ​39 வயதான பெண்ணுக்கு கொரோனா

வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அப்பெண், கொழும்பு

ஐடிஎச் க்கு மாற்றப்பட்டுள்ளார் என அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக அந்தப் பெண், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பிசிஆர்

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்தே, அப்பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இ​தேவேளை, அந்த வைத்தியசாலையைச் ​சேர்ந்த பணியாளர்கள் 15 ​​பேர் மற்றும் அப்பெண் கடமையாற்றிய நிறுவனத்தைச் சேர்ந்த 45

பேர் அடங்களாக 60 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

கொரோனா தொற்றாளர் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலைக்குப் பூட்டு

புதிய கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த

ஆடைத்தொழிற்சாலையில், 400 பேர் வரை சேவையாற்றுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொழிற்சாலை, மினுவாங்கொட- யக்காதுவ பிரதேசத்தில் உள்ள முன்னணி ஆடைத்தொழிற்சாலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ​கொரோனா தொற்றாளராக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண்ணுடன் ஒன்றாக பயணித்த, 40 பேர்,

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பெண்ணின் கணவர், அவரின் பிள்ளைகள் நால்வர் மற்றும் பெண்ணின் தந்தை ஆகியோர்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவரது ஒரு குழந்தை மூச்சு விடுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர் பணிபுரிந்த ஆடைத்தொழிற்சாலை தற்போது சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் சில இடங்களில் ஊரடங்கு

திவுலுப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய பொலிஸ. பிரிவுகளில்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு மீள அறிவிக்கும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுதொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது?

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது?

  • ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலிக்கூத்து – மனோ கணேசன் எம்பி
    1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள் இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல, பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும், இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன் வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

ஆயுதம் தூக்கியோரை தெற்கில் நினைவு கூற முடியமென்றால் ஏன், வடக்கில் முடியாது?

  • ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலிக்கூத்து – மனோ கணேசன் எம்பி
    1970/80 களில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் எதிராக ஆயுதம் தூக்கிய, ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள்
  • இன்று தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படும் போது, அதே வரப்பிரசாதம் வடக்கில் தமிழருக்கு இல்லை? இதனால், இந்த
  • அஈசாங்கம் இப்போது அடிக்கடி சொல்லும், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஒரு கேலி-கூத்தாக தெரிகிறது என தமிழ்
  • முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது டுவீடர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை அரசாங்கம் தனது கணிப்பீட்டின்படி “பயங்கரவாதிகள்” என்கிறது. அப்படியானால், 1970ம் , 80ம் ஆண்டு களில் இலங்கை அரசுக்கும், ராணுவத்துக்கும்

எதிராக ஆயுதம் தூக்கிய ஜேவிபியின் தேசப்பிரேமி இயக்க போராளிகள், “சிங்கள பயங்கரவாதிகள்கள்” ஆவர். இவர்கள் வருடாவருடம், தெற்கில் பகிரங்கமாக நினைவுகூறப்படுகிறார்கள்.

ஆனால், அதே வரப்பிரசாதம், தமிழர்களுக்கு இல்லை. “தமிழ் பயங்கரவாதிகளை” என்ற தமிழ் ஆயுததாரிகளை மட்டுமல்ல,

பலவேளைகளில் மரணித்த சாதாரண மக்களையே பகிரங்கமாக நினைவு கூற, தமிழர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இது இந்நாட்டில் நீண்ட நாளாக நடந்து வரும் ஒரு இரட்டை நிலைப்பாடு கொண்ட பாரபட்ச கொள்கை ஆகும். இதற்கு இடையில் இன்று இந்த அரசு, மேலும் ஒரு கொள்கையை பற்றி பேசி

வருகிறது. அதுதான், “ஒரே நாடு-ஒரே சட்டம்” என்ற கொள்கை ஆகும். இது இந்நிலைமையை இன்னமும் கேலி-கூத்தாக மாற்றி உள்ளது.

அதாவது, மறைந்த தமது உறவுகளை தமிழர் நினைவு கூறுவது மறுக்கபடுவதும், அதே உரிமை சிங்களவருக்கு வழங்கப்படுவதும்,

இந்நாட்டில் அரசின் இரட்டை கொள்கையின் அடிப்படையில் கேலி கூத்தாக அமைகிறது. மறுபுறம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இது பெரும் சோகமாக அமைகிறது.

இந்த இரட்டை கொள்கை உடன் முடிவுக்கு வரவேண்டும். இதுபற்றி தேசிய கலந்துரையாடல் நடைபெற வேண்டும். இதுபற்றி எவருடன்

வேண்டுமென்றாலும், மூன்று மொழிகளிலும் பகிரங்க விவாதம் நடத்த நான் தயார்.

Posted in உலக செய்திகள்

$206 மில்லியன் போதைவஸ்து மடக்கி பிடித்த மூன்று நாட்டு கடற்படை

$206 மில்லியன் போதைவஸ்து மடக்கி பிடித்த மூன்று நாட்டு கடற்படை –

கரபியன் பகுதியில் இருந்து அமெரிக்கா வழியாக நெதர்லாந்து

குரோனிங்கம் மற்றும் லண்டனுக்குள் கடத்தி வரப்பட்ட

இருநூற்றி அறுபது மில்லியன் பெறுமதியான போதைவஸ்தினை மூன்று

நாட்டு உளவுத்துறையினர் வழங்கிய தகவலை அடுத்து கடற்படையினர் மடக்கி பிடித்துள்ளனர்

தொடர்ந்து இந்த குழுவின் பின்னால் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்

சர்வதேச போலீசார் உதவியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றனர்

மில்லியன் போதைவஸ்து
மில்லியன் போதைவஸ்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பற்றி எரிந்த வீடு கருகி இறந்த தாய் ,மகள் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் Lancashire பகுதியில் காலை எட்டு நாற்பத்தி ஐந்து மணியளவில்

வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ,இதன் பொழுது அந்த வீட்டுக்குள்

வசித்து வந்த 49 வயதுடைய மருத்துவ பெண்மணி மற்றும் அவரது

மகள் 14 வயது ஆகியோர் உடல் கருகி பலியாகினர்

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

, விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி

பிரிட்டனில் அதிகரித்த கொரனோ 12,872பாதிப்பு – 49 பேர் பலி

பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குத்தல் திடீரென அதிகரித்துள்ளது ,


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 12,872 பேர்

பாதிக்க பட்டுள்ளனர் ,
மேலும் நாற்பத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்

இதன் பாதிப்பு மேலும் எதிர்வரும் இருவாரத்தில் இரட்டிப்பாக

அதிகரிக்கும் என மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

எதிர்வரும் வைகாசி மாதத்திற்குள் பிரிட்டனில் எண்பத்தி

ஐந்தாயிரம் பேர் மரண மாவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்

7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்

லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர். அவர்களை விடுவிக்க

வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

லிபியா நாட்டில் 7 இந்தியர்களை கடத்திய பயங்கரவாதிகள்
பயங்கரவாதி

வட ஆப்பிரிக்காவில் உள்ள நாடான லிபியாவில் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். அங்கு இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்களும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

லிபியாவில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அடிக்கடி வெளிநாட்டு தொழிலாளர்களை கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

இந்தநிலையில் லிபியாவில் பணிபுரிந்து வந்த 7 இந்திய தொழிலாளர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்று உள்ளனர்.

அவர்களை விடுவிக்க வேண்டுமென்றால் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்துக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள்.

கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் முன்னா சவுகான். இவர் உத்தரபிரதேச மாநிலம், குஷி நகர் மாவட்டம், கர்ஹியா பசந்த்பூர் கிராமத்தை சேர்ந்தவர்.

அவர் கடத்தப்பட்டது குறித்து உறவினர் லாலன் பிரசாத் கூறும்போது, “ முன்னா சவுகான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்

டெல்லியில இருந்து ஒரு நிறுவனம் மூலம் லிபியாவுக்கு வேலைக்கு சென்றார். அவரது விசா காலம் கடந்த மாதம் 13-ந் தேதியுடன்

முடிவடைந்துள்ளது. அன்று அவர் குடும்பத்தினருடன் போனில் பேசும்போது லிபியாவில் இருந்து விமானம் மூலம் 17-ந் தேதி டெல்லிக்கு வருவேன் என்று தெரிவித்தார்.

அதன்பின் அவர் பேசவில்லை. கடந்த 27-ந் தேதி நான் டெல்லி சென்று அவரை வேலைக்கு அனுப்பிய நிறுவனத்திடம் விசாரித்த

போது முன்னா சவுகானை தீவிரவாதிகள் கடத்தி விட்டனர் என்று தெரிவித்தனர். தீவிரவாதிகள் கேட்ட தொகையை நிறுவனமே செலுத்தும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

இதுகுறித்து லாலன் பிரசாத் டெல்லி போலீசில் புகார் செய்து உள்ளார். லிபியாவில் கடத்தப்பட்டுள்ள 7 இந்தியர்களை மீட்க

இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி
ரிப்பன் வெட்டி சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி

இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி

பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதை கருத்தில்கொண்டு, மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில்

சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி, அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது.

அதையடுத்து, கட்ட தொடங்கப்பட்ட ரோதங் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என்று பெயர் சூட்ட

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அரசு முடிவு செய்தது. எல்லை சாலை அமைப்பு, தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது.

சுரங்கப்பாதை

இதனையடுத்து அடல் சுரங்கப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பளித்தார்.

திறப்பு விழாவை தொடர்ந்து, லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிஸ்சு என்ற இடத்திலும், மற்றும் சோலங்கி பள்ளத்தாக்கிலும் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இது, உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும். 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை

மூலம் எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லலாம்.

இப்பாதை காரணமாக, சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும்

. பயண நேரம் 5 மணி நேரம் குறையும். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இது, இருவழி சுரங்கப்பாதை ஆகும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும்வகையில்

சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை
செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நபர் அடித்து கொலை -குளக்கரையில் வீசப்பட்ட சடலம்

யாழில் நபர் அடித்து கொலை -குளக்கரையில் வீசப்பட்ட சடலம்

அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து

போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரதீவு சிவன் ஆலய குளக்கரையிலேயே அவரது சடலம் இன்று

அதிகாலை கண்டறியப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகர் ரூபன் சர்மா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 22 பேர் கைது

வவுனியா பொலிஸார் நேற்று (02) மாலை மேற்கொண்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 3 மணிநேரத்தில் 22 நபர்களை கைது செய்துள்ளனர்.

“குற்றச்செயல்கள் அற்ற வவுனியாவை உறுவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி

பீ.ஆர்.மானவடுவின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைய வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று (02) மாலை மேற்கொள்ளப்பட்ட மூன்று மணிநேர விசேட நடவடிக்கையின் போது பெண்களுடன் பகிடிவதை குற்றச்சாட்டில் ஒருவரும், வழிப்பறி மற்றும் கொள்ளை குற்றச்சாட்டில் இருவரும்,

கேரளா கஞ்சாவுடன் நால்வரும், கரோயினுடன் ஒருவரும், நீதிமன்ற பிடியானை உத்தரவில் இருவரும், மதுபோதையில் வாகனம்

செலுத்திய குற்றச்சாட்டில் இருவரும் , சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேர், பொதுமக்கள் நடமாடும் பகுதியல் மதுபானம் அருந்திய

குற்றச்சாட்டில் நால்வரும் என 22 நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 நபர்களும் வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் அவர்களிடம் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்றிலையில்

ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.