Author: நலன் விரும்பி
ஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது
ஏழு மில்லியன் கஞ்சா மடக்கி பிடிப்பு – பலர் கைது
Dublin Port பகுதியில் பிரிட்டனை சேர்ந்த இருவர் மற்றும் Dublin னை சேர்ந்த
இருவர் உள்ளிட்டவர்கள் மறைத்து வைத்திருந்த 352 கிலோ கஞ்சா மீட்க
பட்டுள்ளது .இதன் மொத்த பெறுமதி சுமார் ஏழு மில்லியன்
என தெரிவிக்க பட்டுள்ளது
கைதானவர்களிடம் தொடர்விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும்
வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
பண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு
பண்டாரவளை ஞாயிறு சந்தைக்குப் பூட்டு
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, பண்டாரவளை ஞாயிறு சந்தையை நடத்துவது மறுஅறிவித்தல்
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பண்டாரவளை நகரசபை தலைவர் ஜனக்க நிஷாந்த ரத்நாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில், பண்டாரவளையிலுள்ள கிராமங்கள், தோட்டங்களுக்கு
அறிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
வெல்லவாய, வெலிமடை, ஹப்புத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து அதிகளவான
விவசாயிகள், பண்டாரவளை ஞாயிறு சந்தைக்கு மரக்கறிகளைக் கொண்டுவந்து
விற்பனை செய்வதாகவும் அத்துடன், நுகர்வோர் உட்பட பெரும்ளவானோர்
இந்தச் சந்தையால் பயனடைகின்றனர் என்றும் தெரிவித்த அவர், அவர்களது
சுகாதார பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே மறுஅறிவித்தல் வரை ஞாயிறு சந்தையை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
களுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு
களுத்துறை, கொழும்பில் மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு
மேலும் சில பொலிஸ் பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல்
ஊரடங்குச் சட்டம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தெமட்டகொட, மருதானை பொலிஸ் பிரதேசங்களுக்கு மறு அறிவித்தல்
வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக
கொவிட்-19 வைரஸைத் தடுக்கும் மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் பயாகல, பேருவல, அளுத்கம
ஆகிய பிரதேசங்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்
நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும்- பீதியில் மக்கள்
நாடு முழுவதும் முடக்க நிலை பிறப்பிக்கப்படும் என சிலர் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
அவ்வாறு நாட்டை முழுமையாக முடக்குவதற்கான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்பவில்லை என்று பொலிஸ் ஊடகப்
பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்போது 50 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே அமுற்படுத்தப்பட்டிருப்பதாக
தெரிவித்த அவர், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் மக்கள் வீடுகளில் தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படாத பகுதிகளில் உள்ள மக்களும் அவசியமற்ற பிரயாணங்களைத் தவிர்த்து
வீடுகளில் தங்கியிருக்குமாறும் பொலிஸ் ஊடகச் பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.
38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது
38 பேர் சிங்கள கடற்படையினாரால் கைது
2020 அக்டோபர் 15 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், கடற்படையினர் மற்றும்
காவல்துறையினர் இனைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும்
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் போல்டர் துடுவ, பவுல் துடுவ, கோபால்புரம், நயாரு ஆகிய கடற்பகுதிகளிலும்இ கொடுவமட களப்பு பகுதியிலும் மேற்கொண்டுள்ள
நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தியும், மின்சார விளக்குகளைப் பயன்படுத்தியும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில்
ஈடுபட்ட 28 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன 07 டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் பல மீன்பிடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இதற்கிடையில், வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் உச்சமுனாய் தீவுக்கு வட மேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில்
ஈடுபட்ட 08 நபர்கள் ifJnra;ag;gl;ldu;. 02 டிங்கி படகுகள் மற்றும் சில சுழியோடி பொருட்களுk; கைப்பற்றப்பட்டன
மேலும், மன்னார் பொலிஸாருடன் ஒருங்கிணைந்து வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை
நடவடிக்கையின் போது சங்குகள் சேகரிக்கும் இடமொன்றில் இருந்து 70 மிமீ க்கும் குறைவான விட்டம் கொண்ட 60
சங்குக்களுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். மேலும்,அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 1814 சங்கு ஓடுகளை சட்டவிரோதமான
முறையில் சேகரித்து வைத்திருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 21 முதல் 55 வயது வரையிலான பொடுவக்கட்டு, குச்சவேலி, சாண்டிபே, நிலாவேலி, இக்பார் நகர், கோக்கிலாய், கந்தக்குலிய, கல்பிட்டி மற்றும்
இருக்குளம்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு இயக்குநர்களிடம், முல்லைதீவ், குச்சவேலி, கல்பிட்டி மீன்வள ஆய்வாளர்களிடம் மற்றும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

கொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொரனோவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு
கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இன்று அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட்
#தொற்றுக்குள்ளான நோயாளி என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்தார்.
இந்த நோயாளி 56 வயதைக் கொண்ட பெண் ஆவார். அத்தோடு குளியாப்பிட்டி, ஊரலிய, கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான
இவர் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன், நோய் நிலைமை அதிகரித்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.
இது இலங்கையில் பதிவான 15ஆவது கொவிட் நோயாளியின் மரணமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
பிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு
பிரித்தானியாவில் எல்.ரி.ரி.ஈ.அமைப்பு மீதான தடை நீக்கப்படுவதை நன்கு கவனித்து வருவதாக அரசாங்கம் தெரிவிப்பு
ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
ஐக்கிய இராச்சியத்தில் எல்.ரீ.ரீ.ஈ. இன் தடை மீதான மேன்முறையீடு
ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் 2020 அக்டோபர் 21 ஆந் திகதிய
திறந்த தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 மார்ச் 08 ஆந் திகதியிட்ட ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க செயலாளரின் தீர்மானத்தை எதிர்த்து எல்.ரீ.ரீ.ஈ. முற்போக்கு அமைப்பால் 2019 மே மாதம் தாக்கல்
செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பிரதிபலிப்பாக அமையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு
ஆணைக்குழுவின் இந்த தீர்மானமானது, 2000 ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின்
(எல்.ரீ.ரீ.ஈ.) மீதான தடையை நீக்குவதற்காக குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த நடவடிக்கைகளுக்கான ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இல்லாத காரணத்தினால், நேரடியான
பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள முடியவில்லையாயினும், தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து
பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது.
தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளுக்கும்
சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், இங்கிலாந்தில் இடம்பெறும் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமான அவதானங்களை செலுத்தும்.
வன்முறையைத் தூண்டி, நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படும் எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தங்களுடன் இணைந்த குழுக்களின்
எச்சங்கள் வெளிநாடுகளில் செயலில் உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான போதுமான சான்றுகள் இலங்கை அரசாங்கத்திடம் காணப்படுகின்றன. இலங்கையின் தேசிய
பாதுகாப்பு மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அவதானமாக இருப்பதுடன், பயங்கரவாதத்திற்கு
எதிரான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எப்பொழுதும் தனது ஆதரவுகளை வழங்கும்.
வெளிநாட்டு அமைச்சு
கொரனோ எதிரொலி -வீடுகளுக்கு மருந்துகள் விநியோகம்
கொரனோ எதிரொலி -வீடுகளுக்கு மருந்துகள் விநியோகம்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள
அரச மருந்தகங்களிலிருந்து (ஒசுசல), ஒன்லைன் மூலமாக
மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அறிக்கையினூடாக இது தொடர்பில்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அரச தகவல் பணிப்பாளர் ஜெனரல் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிவித்தலுக்கு அமைவாக, ஒன்லைன் மூலமாக மருந்துகளை
விநியோகிப்பதை மீள ஆரம்பிக்குமாறு, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர்
ஜெனரல் டொக்டர் எஸ்.ஸ்ரீதரன் அரச மருந்தகங்களுக்குப் பணித்துள்ளார்.
கொரனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ,558 ஆக உயர்வு
கொரனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ,558 ஆக உயர்வு
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-10-23 06:31:27
6287
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
2712
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
3561
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
14
இறப்பு எண்ணிக்கை
இதேவேளை, திவுலபிற்றி கொவிட் கொத்தில் நேற்றிரவு வரை பதிவான மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து
558 ஆகும். நேற்றைய தினம் 259 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றொதுக்கல் மத்திய நிலையங்களில் உள்ள மினுவாங்கொட பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களில் இரண்டு பேரும் பேலியகொட மீன் சந்தையில் 182
பேரும் மேலும் 75 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டிருப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளைஇ கொவிட்-19 தொற்றுக் காணரமாக 14 ஆவது மரணம் நேற்று சம்பவித்தது. மொத்த கொரோனா தொற்றாளர்களின்
எண்ணிக்கை நேற்று வரை 6 ஆயிரத்து 287 வரை அதிகரித்துள்ளது. மேலும் 2 ஆயிரத்து 712 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று
வருகின்றனர். 3 ஆயிரத்து 561 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், அதிரும் இலங்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், அதிரும் இலங்கை
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 309 பேர், நேற்றையதினம்
இனங்காணப்பட்டனர். அதில், 188 பேர், பேலியகொட மீன்பிடி சந்தையைச்
சேர்ந்தவர்கள் ஆவர். என கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
பேலியகொட மீன் சந்தையில் இனங்காணப்பட்ட 188 பேரில், 79 பேர் கொழும்பு,
53 பேர் களனி, 09 பேர் வத்தளை, களுபோவிலயைச் சேர்ந்த அறுவர், தெமட்டகொடையில்
15 பேர், கடவத்தையில் எழுவர், கிரிபத்கொட மற்றும் மொரட்டுவ பகுதியில்
தலா மூவரும், கொட்டாஞ்சேனையில் நால்வரும் வெல்லம்பிட்டியவில் 9 பேரும் அடங்குகின்றனர்.
ரிஷாட், ஹக்கீமை நீக்க ஐ.ம.ச மந்திராலோசனை
ரிஷாட், ஹக்கீமை நீக்க ஐ.ம.ச மந்திராலோசனை
முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியூதீன் மற்றும் ரவூப் ஹக்கீம்
ஆகியோரை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இடைநிறுத்த சஜித் பிரேமதாஸ அறிவுறுத்தியுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்
பிரேமதாஸ தலைமையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியூதீன் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள்,
அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி
பிரிட்டனில் நாள் ஒன்றுக்கு 90,000 ஆயிரம் பேர் கொரனோவால் பாதிப்பு -189 பேர் பலி
பிரிட்டனில் இந்த வாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 53,000 and 90,000 பேர் கொரனோ
நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக நோய் தடுப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
இதுவே கடந்த வாரம் முதல் நாற்பத்தி மூவாயிரம் முதல் எழுபத்தி நான்காயிரம், பேர் பாதிக்க பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 189 பேர் பலியாகியுள்ளனர்
என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது ,எனினும் இழப்பு இதைவிட அதிகமாகும் என ஏதிர் பார்க்க படுகிறது
இவ்விதம் தொடர்ந்து செல்லும் எனின் எதிர் வரும் நான்கு வாரத்திற்குள்
பிரிட்டன் முழுவதுமான லொக்கடவுன் நிலைக்கு செல்லும் என்பது நமது கணிப்பாகும்
கனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo
கனடாவில் சிக்கிய $143 மில்லியன் கஞ்சா தோட்டம் – photo
கனடா ஒன்ராரியோ மாகாணத்தில் சட்டவிரோதமாக வளர்க்க
பட்ட கஞ்சா தோட்டம் பொலிஸாரின் திடீர் முற்றுகையில் சிக்கியது
மேற்படி தோட்டத்தில் இருந்தும் ,அந்த குழுவினர் தங்கியிருந்த வீடுகளில்
இருந்தும் சுமார் முப்பத்தி ஏழு ஆயுதங்கள் மற்றும் எழுபத்தி ஐந்தாயிரம் டொலர்கள் என்பன மீட்க பட்டுள்ளன .
மேலும் 192 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் பல முக்கிய புள்ளிகள் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது ,
இவர்கள் பாவனைக்கு உட்படுத்திய ஆடம்பர கார்களும் மீட்க பட்டுள்ளன

பறந்த விமானத்தில் பலியான கொரனோ நோயாளி பெண்
பறந்த விமானத்தில் பலியான கொரனோ நோயாளி பெண்
அமெரிக்காவில் Spirit Airlines flight விமானத்தில் பறந்து கொண்டிருந்த
பெண்மணி ஒருவர் அமெரிக்காவை உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளார்
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளை ,நோயின்
தாக்குதல் உக்கிரத்தால் பலியாகியுள்ளார்
குறித்த விமானத்தில் பயணித்தவர் முப்பது வயதுடைய பெண்மணி என
தெரிவிக்க பட்டுள்ளது ,இதனால் அந்த விமானம் போக்குவரத்தில்
இருந்து தற்காலிகமாக இடை நிறுத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது

மீன்கள் உண்டால் கொரோனா வைரஸ் – பீதியில் இலங்கை மக்கள்
மீன்கள் உண்டால் கொரோனா வைரஸ் – பீதியில் இலங்கை மக்கள்
மீன்கள் ஊடாக கொரோனா வைரஸ் பரவுமா என்பது தொடர்பில் இதுவரை
எவ்வித ஆய்வுப்பூர்வமான தகவல்களும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அதனால் மீன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை”
என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
மீன்களை தொட்ட பின்னர் கைகளை சரியாக கழுவினால், அந்த சந்தர்ப்பங்களில்
முகத்தை தொடுவதை தவிர்த்துக்கொண்டால் நோய் பரவுவதை தவிர்க்க முடியும்” என, சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது
அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது
நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்த 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் நாட்டின் எந்தவொரு தரப்பிற்கும்
நன்மைகள் கிடைக்கவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
20ஆவது அரசியல் யாப்பு திருத்தம் மீதான விவாதம் இரண்டாவது நாளாக தற்பேபது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
விவாதத்தில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், 19ஆவது திருத்தத்தின் கீழ் பல்வேறு தரப்புக்கள் மீதும்
பொறுப்புக்கள் சுமத்தப்பட்டாலும், அவர்களுக்கு பொறுப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் கிடைக்கவில்லை. மக்கள்
பெரும் எதிர்பார்;ப்புடன் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவதில் இது பெரு தடையாக அமைந்துள்ளது.
50 சதவீத பங்குகளைக்கொண்ட அரசு சார் நிறுவனங்களில் கணக்காய்வாளருக்கு உள்ள அதிகாரத்திற்கு பாதிப்பு ஏற்படாதவகையிலேயே நாம் தற்போது நடவடிக்கை
மேற்கொண்டுள்ளளோம். அதிகார சமநிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்hர். அதிகார சமநிலை அளவுக்கு மீறினால் அது நாட்டுக்கு பயனுள்ளதாக அமையாது
பொறுப்புக்களை நடைமுறை ரீதியில் அமுல்படுத்த 19ஆவது அரசியல் அமைப்பின் கீழ் அதிகாரங்கள் வழங்கப்படாமை
சிக்கலானதாகும் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ:
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் மூலம் அதிகார சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், இந்த திருத்தமானது, தனி
நபர்களை மையமாகக் கொண்ட அதிகார போராட்டத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. சரியான அரசியல் இலக்குகள்
அற்றவர்களே 19ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அஞ்சுகின்றனர்.
இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம்
இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம்
இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார். இவர் 50 வயதான பெண் நோயாளி ஆவதுடன்
குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர். கடந்த 17ஆம் திகதி குளியாப்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த பெண் நாட்பட்ட நோயாளி; என்ற ரீதியில்
அவதிப்பட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட நாட்பட்ட நோயின் பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் பதிவான 14 ஆவது கொவிட் தொற்றுக்குள்ளானவரின்
மரணம் இது என தொற்று நோயியல் விசேட வைத்தியர் சுதத் சமரவீர அவர்கள் உறுதி செய்துள்ளார்.
இலங்கையில் 20 தாவது சட்ட மூலம் நிறைவேற்றம் – குடும்ப ஆட்சி நீடிப்பு
இலங்கையில் 20 தாவது சட்ட மூலம் நிறைவேற்றம் – குடும்ப ஆட்சி நீடிப்பு
இலங்கையில் ஆளும் மகிந்த சகோதர ஆட்சியில் கொண்டு
வரப்பட்ட இருபதாவது சட்ட மூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறை வேற்ற பட்டுள்ளது
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 20ஆவது அரசியல் யாப்பு திருத்தச்
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்ப மீதான வாக்கெடுப்பில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன.
திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட
மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் மூலம் நல்லாட்சி அரசு கொண்டு வந்த அதிகாரங்கள் செயல் இழக்க பட்டுள்ளன .
பெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா?
பெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா?
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெரிய ஏரியில் ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன.
பெரம்பலூர் அருகே கிடைத்தது டைனோசர் முட்டையா?
குன்னம் பெரிய ஏரியில் டைனோசர் முட்டை போல் காணப்படும் படிமங்கள்
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு பின்புறமுள்ள ஓடையில் புதைந்திருந்த கல் மரம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. 5 மீட்டர் நீளமுடைய இந்த கல் மரமானது சுண்ணாம்பு பாறை
ஒன்றில் புதைந்த நிலையில் உள்ளது. அதன் மேற்பகுதி மட்டும் வெளியில் தெரிகிறது. மேலும் ஓடையில் சிறுசிறு கிளைகள் போன்ற அமைப்புடைய மரத்துண்டுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.
ஏற்கனவே இது போன்ற கல்மரம் பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூரில் உள்ளதை கடந்த 1940-ம் ஆண்டில் எம்.எஸ்.கிருஷ்ணன்
என்ற புவியியல் ஆய்வாளர் பதிவு செய்தார். அதன் பின்னர் பல்வேறு கல் மரத்துண்டுகள் இந்த பகுதியின் சுற்று வட்டார கிராமங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்மரமும், சாத்தனூர் கல்மரத்தை போன்றதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆலத்தூர்
வட்டத்தில் மட்டுமே காணக்கிடைக்கப்பெற்று வந்த இந்த வகை கல்மரத்துண்டுகள் தற்போது குன்னம் கிராமத்தில்,
முதன்முறையாக ஓடையில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் செயல்பட்டாளர் ரமேஷ் கருப்பையா தெரிவித்தார்.
இதேபோல் குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது.
மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன. அதனை புவியியல்
ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கடல்வாழ் நத்தைகளின் படிமங்களையும், உருண்டை வடிவிலான படிமங்களையும் வருவாய்த்துறையினர் கைப்பற்றி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
மேலும் குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர்
அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள்
கிடைக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தீபாவளியையொட்டி வசூல் வேட்டை நடந்த கனிம வளத்துறை துணை இயக்குனரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 100 பவுன் நகை, ரூ.4 லட்சம் சிக்கியது.
அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
பவானியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்திய பெருமாள் வீடு
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் 2-வது தளத்தில் கனிம வளத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில்
தீபாவளி வசூல்வேட்டை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை
லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் சிலர் ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார், அலுவலகம் முழுவதும் சோதனையிட்டனர்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 11 மணி வரை நடைபெற்றது. இதில் ரூ.1 லட்சத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.
அதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
கனிமவளத்துறை துணை இயக்குனர் பெருமாள் திண்டுக்கல் ராஜீவ்நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். எனவே,
அவரை ராஜீவ்நகரில் இருக்கும் வீட்டுக்கு அதிகாலை 2.30 மணிக்கு போலீசார் அழைத்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு காலை 5.30 மணி வரை சோதனை நடைபெற்றது. அப்போது வீட்டில் இருந்த ரூ.4 லட்சத்து 10 ஆயிரம் சிக்கியது. அந்த பணம் கணக்கில் வராதது என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கனிம வளத்துறை துணை இயக்குனர் பெருமாள் மற்றும் அலுவலக ஊழியர் செல்வமணி ஆகியோர் மீது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
துணை இயக்குனர் பெருமாளின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் பவானி கவுண்டர்நகர் ஆகும். எனவே, அவருடைய சொந்த ஊரில் இருக்கும் வீட்டிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதுகுறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மதியம் 2 கார்களில் பவானி கவுண்டர்நகருக்கு சென்று பெருமாளின் வீட்டில்
அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பெருமாளின் மனைவி எழிலரசி இருந்தார்.
சுமார் 5 மணி நேரம் வீடு முழுவதும் நடத்திய சோதனையில் 100 பவுன் நகைகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து அந்த நகைகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.







