Posted in உலக செய்திகள்

15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை- தனிப்படை போலீசார் ம.பி. விரைவு

15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை- தனிப்படை போலீசார் ம.பி. விரைவு

சூளகிரி அருகே கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்று ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் விரைந்தனர்.

ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை- தனிப்படை போலீசார் ம.பி. விரைவு
விசாரணை நடத்திய போலீசார்

சென்னை பூந்தமல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு நேற்று முன்தினம் மதியம் 15 அட்டை பெட்டிகளில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

தனியார் நிறுவன செல்போன்களை ஏற்றி கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை பூந்தமல்லியை சேர்ந்த

சதீஷ்குமார் (வயது 29) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக கோவையை சேர்ந்த அருண் (26) என்பவர் உடன் வந்தார்.

இந்த கன்டெய்னர் லாரி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மேலுமலை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால்

மற்றொரு லாரியில் வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை திடீரென வழிமறித்தது. தொடர்ந்து அந்த கும்பல், டிரைவர்கள் சதீஷ்குமார், அருண் ஆகியோரை

ஆயுதங்களால் தாக்கியது. பின்னர் அவர்களது கை, கால்களை கட்டி சாலையோர புதரில் போட்டு விட்டு கன்டெய்னர் லாரியை கடத்தி சென்றது.

இந்த நிலையில் புதரில் கிடந்த டிரைவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டனர். இதையடுத்து டிரைவர்கள் 2 பேரும் சூளகிரி போலீஸ்

நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து டிரைவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, கன்டெய்னர் லாரியில் 15 பெட்டிகளில், 14,576

செல்போன்கள் இருந்ததாகவும், இவற்றின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி என்பதும், 10 பேர் கொண்ட மர்ம கும்பல் கன்டெய்னர் லாரியை வழிமறித்து கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டிரைவர்கள் 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே செல்போன்களுடன் கடத்தப்பட்ட

கன்டெய்னர் லாரி, சூளகிரியை அடுத்த அழகுபாவி தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது லாரியில் செல்போன்கள் எதுவும் இல்லை என்பதும், அந்த கும்பல் அவற்றை கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி ஆகியோர் நேரில்

சென்று விசாரணை நடத்தினர்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட

கொள்ளையர்களை பிடிக்க, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விசாரணையில் ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்களுடன் சென்ற கன்டெய்னர் லாரியை சென்னையில் இருந்தே ஒரு லாரி பின் தொடர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

பின்தொடர்ந்து வந்த லாரி போலியான பதிவு எண் கொண்டது என்பதும், போலி பதிவு எண் கொண்ட லாரி மத்திய பிரதேசத்தில் ஓடுவதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து 9 தனிப்படை போலீசார் செல்போன்களை கொள்ளை அடித்தவர்களை பிடிக்க மத்திய பிரதேசம் விரைந்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் 3 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

வவுனியாவில் 3 வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

வவுனியா- நெடுங்கேணி பிரதேசத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த மூவருக்கு கொரோனா தொற்று

ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் மூவரும் வவுனியா பொது வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 25 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

செய்யப்பட்டதையடுத்தே, குறித்த மூவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த ஒப்பந்த நிறுவனத்தால் தொடர்புடைய வவுனியா-

வேப்பம்குளம் பிரதேசத்தில் கொடுக்கல் வாங்கல் செய்துள்ள 3 வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

உடன் அமுலுக்கு வரும் வகையில்-கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்

உடன் அமுலுக்கு வரும் வகையில்-கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்கு அமுல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்குளி, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய,

முகத்துவாரம், புளுமெண்டல்ஆகிய பிரதேசங்களுக்கான தனிமைப்படுத்தும்

ஊரடங்கு சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

மறு அறிவித்தல் வரையில் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

கொழும்புக்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும்

நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

அலரி மாளிகையில் நவராத்திரி விழா

அலரி மாளிகையில் நவராத்திரி விழா

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப்

பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (2020.10.20) தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Nawarathri TT PMO Tamil News 019கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும்

முன்னெடுப்பதாக தெரிவித்த பிரதமர் இந்த நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து

நலன்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.Nawarathri TT PMO Tamil News 018

தொடர்ந்து இலங்கை இந்திய சமுதாய பேரவையினால் வழங்கப்படும் பாடசாலை மாணவர்கள் ஆறு பேருக்கான புலமைப்பரிசில்கள் பிரதமரினால் வழங்கி வைக்கப்பட்டது.Nawarathri TT PMO Tamil News 016

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

‘நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற பயணத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பித்திருக்கின்றோம்.

சட்டத்தை மதிக்கும் குணநலம் கொண்ட ஒழுக்கநெறியான சமூகம் ஒன்றினை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஆன்மீகத்

துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அவர்களுக்கான மத அனுட்டானங்களைச் சரிவரப்

பின்பற்றுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். இந்நாட்டில் இப்பொழுது, மக்களுக்குத் தமது மத அனுட்டானங்களைப் பின்பற்றுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது தாய் நாடான இலங்கை உட்பட, உலகில் எங்கெங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் நவராத்திரி விரதம்

மற்றும் பூஜை வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன. இந்துக்கள் அனைவரும் தாயாகப் போற்றுகின்ற சக்தியைப் போற்றி வழிபடும் நிகழ்வு ஒன்பது நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

நவராத்திரி விரதம் பார்ப்பதற்கு ஒரு கொண்டாட்டம் போல இருந்தாலும் ஒரு விரதமாகவே அனுட்டிக்கப்படுகிறது. அழிவு

இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத்தரும்

மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு.

ஒன்பது தினங்களின் பின்னர் பத்தாவது நாள் மிகவும் விசேடமான தினமாகும். அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாகவும் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும்

வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் திருநாளாகவும் பத்தாவது நாள் ‘விஜயதசமி’ திருநாள் அமைகின்றது.

இது அர்த்தமுள்ள நல்லதொரு பூஜை வழிபாடு, ‘கொலு’ வைப்பது இந்த வழிபாட்டில் சிறப்பான ஒரு விடயம். இந்த உலக உயிர்கள் எல்லாமே எல்லோர்க்கும் மேலான சக்தியாலேதான்

இயங்குகின்றன என்ற உண்மையை எங்களுக்குக்குச் சொல்லுகிறது. ஆலயங்கள், பாடசாலைகள், நிறுவனங்கள், வீடுகள்

என எல்லாத் துறைகளிலும் ‘கொலு’ வைத்து வழிபடும் இந்த நிகழ்வால் நாட்டில் சுபீட்சமும் சகவாழ்வும் இனிதே மலரட்டும் என பிரார்த்திப்போம்.

இன்று நம் தேசத்தில் மூன்றாவது அலையாக எழுவதற்கு எத்தனித்துக் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினை கொவிட் – 19. இது மக்களிடையே ஒரு பய உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தகைய பயங்கள் ஆன்மீக பலத்தினாலேதான் வெல்லப்பட வேண்டும். இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் முடிந்தளவு முயற்சித்து வருகின்றோம்.

இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்திலும் இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சமய விழுமியங்களை பாதுகாப்பதற்கு முன்வந்துள்ளோம்.

இதுவரை இருந்த இந்து அமைச்சர்கள் நவராத்திரி விழாவை தங்களது வீடுகளிலிருந்து கொண்டாடினர். அந்த இந்து

அமைச்சர்கள் போன்று நானும் நவராத்திரியை இந்து மத சம்பிரதாயங்களுக்கு ஏற்ப அனுஷ்டிக்கவுள்ளேன்.

இந்த நவராத்திரி தினத்தில் கொவிட் தொற்று இல்லாதொழிக்கப்பட்டு, அனைவரும் அனைத்து நலன்களையும்

வளங்களையும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து ‘உங்கள் எல்லோருக்கும் நவராத்திரி தின வாழ்த்துக்கள்’ என தமிழ் மொழியில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க

அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன்

இராமநாதன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகின்றது – சம்பந்தன் கொதிப்பு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தற்போதைய

அரசியலமைப்பு மாற்றபட வேண்டும் என்பதை வழியுறுத்தி 1994 ஆம்

ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் தற்போதைய அரசியல் யாப்பை நிராகரித்துள்ளனர்.

விசேடமாக தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பிற்கான ஆணையை முன்னிலைப்படுத்தியே வாக்களித்தனர்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை

நியமித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் அதிகாரம் ஒருவருக்கே வழங்குவதற்கு வழிவகை செய்கின்றது.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறை சுதந்திரமாக செயற்பட

வேண்டும் இதனையே அனைத்து மக்களும் விரும்புகின்றனர் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

சரியான கொள்கைகளின் அடிப்படையில் நாம் தீர்மானங்களை மேற்கொள்வோம். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு

களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு

களுத்துறை மாவட்டத்தில் 6 கிராம உத்தியோகத்தர் பரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில களுத்துறை மாவட்டத்தில் பின்வரும் கிராம உத்தியோகத்தர் பரிவுகள் மீண்டும் அறிவிக்கும்

வரையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெரிடப்பட்டிருப்பதாக COVID 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அகலவத்த பிரதேச செயலக பிரிவில்:
• அகலவத்த
• கோரக்கொட


• பெரகம
• தாபிலிகொட
• கெகுலண்தர வடக்கு

பாலிந்த நுவர பிரதேச செயலக பரிவில்:
• பெல்லன

Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் புலிகள் மீதான தடை நீக்கம் – லண்டன் முடிவு என்ன ..?

பிரிட்டனில் புலிகள் மீதான தடை நீக்கம் – லண்டன் முடிவு என்ன ..?

தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக பிரித்தானிய அரசு விதித்திருந்த தடை முறையற்றது என்ற நிலையில் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது

இதனை அடுத்து இவர்களினால் விதிக்க பட்ட தடையின் விதம் தொடர்பில் கருத்துரைத்த நீதிமன்றம் இந்த விடயத்தை

வெளியிட்டுள்ளது ,எனினும் தமிழர்கள் இதில் மகிழ்ச்சி கொள்ள கூடிய விடயமாக அமையுமா என்பது எதிர்வரும் 28 நாட்களுக்கு

இலங்கை அரசு மற்றும் பிரித்தானிய அரசு மேற் கொள்ள போகும் சட்ட நடவடிக்கைகளை வைத்தே தெரிய வரும்

எனினும் இந்த வழக்கின் தீர்ப்பு இத்தாலி மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் வழங்கியது போன்ற ஒன்றாக உள்ளது .எனினும்

தொடர்ந்து வரும் நாட்களில் நடக்க போகும் இராயத்தந்திர உறவுகளின் அடிப்படையில் எழப்போகும் மாற்றங்கள் ஆளும்

இலங்கை அரசின் நாடியை பிடித்தறியும் ஒன்றாக அமையும் எனலாம்

இந்த தடை தளர்த்த பட்டால் அது இலங்கை அரசுக்கு விழுந்துள்ள முதலாவது

இராயத்தந்திர அடியாகவும் ,அத்துடன் மீள தமிழர் தேசம் எழுச்சி கொள்ளும் நிலையை இது தோற்றுவிக்கும் எனலாம்

Posted in உலக செய்திகள்

சீனா வங்கியில் வாங்கி கணக்கு- மாட்டிய டிரம்ப்

சீனா வங்கியில் வாங்கி கணக்கு- மாட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா வங்கியில் கணக்கு வைத்திருப்பது தெரியவந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.

சீனாவில் உள்ள வங்கியில் டிரம்ப் கணக்கு வைத்துள்ளார் -நியூயார்க் டைம்ஸ் தகவல்

சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து அதிபர் டிரம்ப் விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை தூண்டி விட்டார்.

இந்த நிலையில் டிரம்பின் தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நிதி விவரங்கள் தொடர்பான ஆவணத்தை பெற்ற நியூயார்க் டைம்ஸ்,

அவருக்கு சீனா வங்கியில் கணக்கு உள்ளது என்பதை வெளியிட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னிடம் சீன வங்கிக் கணக்கு இருப்பதாக ஒப்புக்கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் ஜனாதிபதியானபோது, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க கூட்டாட்சி வரிகளில் 750 டாலர்கள் செலுத்தி உள்ளார்.

அவரது சீன வங்கிக் கணக்கு உள்ளூர் வரிகளில் 188,561 டாலர் செலுத்தியுள்ளது என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா வங்கி கணக்கானது டிரம்ப் இன்டர்நேஷனல் ஓட்டல் மேனேஜ்மென்ட் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் 2013 மற்றும் 2015 க்கு இடையில் உள்ளூர் வரிகளை செலுத்தி உள்ளது.

இது ஆசியாவில் ஓட்டல் ஒப்பந்தங்களுக்கான சாத்தியங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டதாக டிரம்ப் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Posted in உலக செய்திகள்

வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்

வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்

குறுங்கோள் பென்னுவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய விண்கலம் 4 ஆண்டு பயணத்திற்கு பிறகு குறுங்கோளில் தரையிறங்கியது.

4 ஆண்டு பயணத்திற்கு பிறகு பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக தரையிறங்கியது நாசா விண்கலம்


பென்னு குறுங்கோளில் தரையிறங்கிய விண்கலம்
வாஷிங்டன்:

பூமியில் இருந்து 330 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குறுங்கோள்களான பென்னுவை ஆய்வு செய்வதற்காக

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘ஓசிரிஸ்-ரெக்ஸ்’ எனப்படும் செயற்கை கோளை அனுப்பியது. 2016ம் ஆண்டு

அனுப்பப்பட்ட இந்த செயற்கைக் கோள், 2018ம் ஆண்டு பென்னு குறுங்கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்து சீராக பயணம் மேற்கொண்டது.

அதன்பின்னர் படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டு நேற்று பென்னு குறுங்கோளில் வெற்றிகரமாக

தரையிறங்கியது. பென்னு குறுங்கோளில் இருந்து பாறைத் துகள்களை ஆய்வுக்காக பூமிக்கு எடுத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஓசிரிஸ் ரெக்ஸ் செயற்கைக் கோளில் உள்ள இயந்திரக் கரங்கள் குறுங்கோளை துளையிட்டு பாறைத் துகள்களை எடுக்கத் தொடங்கியது. இதேபோல் தூசித் துகள்களையும் சேகரிக்கிறது.

Posted in உலக செய்திகள்

பாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

பாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்ளிட்ட 15 பலியானார்கள்

பாகிஸ்தான் தூதரகத்தில் கூட்ட நெரிசல் -பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலி
விசா விண்ணப்பம் வாங்க குவிந்த மக்கள்

ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க இன்று டோக்கன்

வழங்கப்பட்டது. இதற்காக அங்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட நெரிசலில் சிக்கி

பெண்கள் உள்பட 15 ஆப்கானிஸ்தானியர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எட்டு பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். கூட்டத்தில் நின்று இருந்த பல வயதானவர்களும் காயமடைந்தனர் என்று

தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள் மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும்

வேலைகளைப் பெறுவதற்காக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் செல்கின்றனர். இரு நாடுகளும் கிட்டத்தட்ட 2,600 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் வன்முறை, மத துன்புறுத்தல் மற்றும் வறுமையை விட்டு வெளியேறிய சுமார் 30 லட்சம்

ஆப்கானஸ்தான் அகதிகள் மற்றும் பொருளாதார குடியேறியவர்களை பாகிஸ்தான் கொண்டுள்ளது.

கூட்ட நெரிசலால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை !!

லண்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை !!

https://www.einpresswire.com/article/528834417/decision-of-the-appeal-against-ltte-ban-in-uk-is-tomorrow-wednesday-tgte

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட

வழக்கின் தீர்ப்பு நாளை புதன்கிழமை வெளிவருகின்றது என நாடுகடந்த தமிழீழ அராசாங்கத்தின் பிரதமர் பணிமனை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இர்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த

இருக்கின்றது. இதனை https://www.facebook.com/tgteofficial மற்றும் tgte.tv ஊடாக நேரடியாக காணமுடியும்.

இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து

மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline

Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

ஜனநாயகரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது.

பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையினை, சிறிலங்கா அரசு

தனது தமிழினஅழிப்பை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாக

கைக்கொள்கின்றது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கிட்டிய பாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை PHOTO

கிட்டிய பாதையை திருத்தி தருமாறு
மக்கள் கோரிக்கை PHOTO

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும்

பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு குன்றும் குழியுமாக சேற்றுடன் இருப்பதினால்

இதனை பயன்படுத்தி வரும் பெருந்தோட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த பாதையானது நுவரெலியா புஸ்ஸல்லாவ ஊடாக கலஹா

தெல்தோட்டை ஹேவாஹெட்ட கித்துல்கல ஊடாக கண்டி போன்ற இடங்களுக்கு செல்லும் ஒரு கிட்டடி பாதையாகும். தற்போது மேற்படி பிரதேசங்களுக்கு மக்கள் கம்பளை மற்றும் பேராதனை

கலஹா சந்திக்கு சென்றே செல்கின்றனர். இது இவர்களுக்கு நீண்ட நேரத்தையும் நீண்ட தூரத்தையும் அதிக செலவையும் கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் இந்த பாதை திருத்தி

அமைக்கப்படுமானால் இந்த பாதையை நாளாந்தம் பாவித்து வரும் மக்கள் பெரும் நன்மை அடைவர்.

தற்போது இந்த பாதையில் தனியார் வாகனங்கள் முச்சக்கரவண்டி ஆகியனவே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரச போக்குவரத்து

இங்கு இல்லை. இதனால் பாடசாலை மாணவர்களும் பெருந்தோட்ட தொழிலாளர்களும்; பாதித்து வருகின்றனர். குறித்த பாதையில் ஒரு

தொகுதி செப்பனிடப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பகுதி செப்பனிடப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு

சம்பந்தபட்டவர்கள் இந்த பாதையை திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது கட்;டாயமானதாகும்.

Posted in இலங்கை செய்திகள்

தெல்தோட்டையில் மரவெண்டிக்காய் photo

தெல்தோட்டையில் மரவெண்டிக்காய்

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் தெல்தோட்டையில் ஆசிரியர் கலாநிதி கே.பிரபாகரன் அவர்களின் வீட்டுத்தோட்டத்தில்

மரவெண்டிக்காய் பயிரிடப்பட்டு வெற்றிகரமாக விலைச்சல் பெறப்படுகின்றது.

வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம்

வினவிய போது. நண்பர் ஊடாக கிடைக்கபெற்ற விதையின் மூலம் ஆரம்பிக்கபட்டதாகவும் தற்போது இதன் விளைச்சல்

அதிகரித்துள்ளதாகவும் மாதம் ஒன்றுக்கு ஒரு மரத்தில் இருந்து நான்கு தொடக்கம் 05 கிலோ வரையிலான வெண்டிக்காய்

பெறப்படுவதாகவும் சமைக்கப்படும் கறியானது மிகவும் சுவையாகவும் சத்துள்ளதாக இருக்கின்றது என்று கூறினர்.

வெண்டையின் அறிவியல் பெயர் “எபில்மொஸ்கஸ் எஸ்குலென்டஸ்” செம்பருத்தி தாவர குடும்பத்தை சேர்ந்த

வெண்டை ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்டது என நம்படுகின்றது.

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான

தொடர்பு இருக்கிறதோ இல்லையோ சர்க்கரை அனீமியா ஆஸ்துமா கொலஸ்ட்ரால் மலச்சிக்கல் புற்றுநோய் நீரிழிவு வயிற்றுப் புண்

பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்) ஆற்றல் 33 கிலோ கலோரி கார்போஹைட்ரேட் 7.45 கிராம் கொழுப்பு 0.19 கிராம் புரதம் 2

கிராம்வைட்டமின் ஏ 36 மியூஜி வைட்டமின் சி 23 மி.கி. வைட்டமின் இ 0.27 மி.கி. வைட்டமின் கே 31.3 மியூஜி கால்சியம் 82 மி.கி. இரும்பு 0.62 மி.கி.

ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது.

கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக்

குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை

சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப்

பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல்,

வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியது.

Posted in இலங்கை செய்திகள்

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு : முத்தையா முரளிதரன் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு : முத்தையா முரளிதரன் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தமிழினப்படுகொலையினை நிராகரிப்பதோடு, தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்தினையும் இழிவுபடுத்தியவர் சிறிலங்கா

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக திரைநட்சத்திரம் விஜய் சேதுபதியின் நடிப்பில், தமிழ்நாட்டில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள முத்தையா

முரளிதரனை மையப்படுத்திய திரைப்படம் தொடர்பில், உலகத்தமிழர்களிடையே எழுந்துள்ள கண்டனக்குரல்கள்

தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமூகவலைத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்துப்பதிவிட்டுள்ளார்.

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், விளையாட்டையும்

அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in பிரான்ஸ் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான Eiffel Tower

அருகில் வைத்து இரு முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இந்த தாக்குதலில் சிக்கி இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்

காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

ஊத்தை அரபியர்கள் என பேசியவாறே இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது

கடந்த வாரம் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை செய்ய பட்டமைக்கு

பழிவாங்கும் இனவாத தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பிரான்சில் முஸ்லீம் பெண்கள்
பிரான்சில் முஸ்லீம் பெண்கள்
Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்

பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்

பிரிட்டனில் முகமூடி அணிந்த மர்ம மனிதர் ஒருவர் திடீரென Pizza Hut,

McDonald’s then Tesco கடைக்குள் புகுந்து அங்கு கெமிக்கல்

தாக்குதலை நடாத்தியுள்ளார் ,இதனால் இதுவரை பதின் ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

தொடர்ந்து அந்த பகுதிய அடித்து பூட்ட பட்டு மக்கள் அங்கிருந்து அப்புற

படுத்த பட்டுள்ளனர் ,தொடர்ந்து ஆயுத போலீசாரை குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

Upper Gornal, West Mids இது தீவிரவாத தாக்குதலா என தெரியவரவில்லை ,

போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

பிரிட்டனில் மக்கள் மீது
பிரிட்டனில் மக்கள் மீது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ அதிகம் -பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு

பிரிட்டனில் South Yorkshire முற்றாக அடித்து பூட்டு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது

பிரிட்டனின் முக்கிய பகுதியாக விளங்கும் South Yorkshire முற்றாக சிவப்பு

எச்சரிக்கை விடப்பட்ட நிலையில அடித்து பூட்ட பட்டுள்ளது


மக்கள் வீடுகளை விட்டு வெளியில் நடமாட முற்றாக தடை விதிக்க பட்டுள்ளது

தொடர்ந்து இது போன்ற நடை முறை லண்டன் நகரத்தில் இடம்பெற கூடும்

என எதிர்பார்க்க படுகிறது ,இந்த பகுதி இலக்கம் இரண்டில் உள்ளது ,அதாவது

அதிக நோயாளர்களை கொண்ட மாநகரமாக மாற்றம் பெற்றுள்ளது

சிவப்பு எசசரிக்கை எப்பொழுதும் இங்கு அறிவிக்க படலாம் என்பதே எதிர் பார்ப்பாகும்

Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைமாத்திரை- பெண் கைது

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைமாத்திரை- பெண் கைது

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை போதைமாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெதம்படமைன் எனப்படும் ஒரு வகை போதைப் பொருளை மிகவும் சூட்சுமமான முறையில்

மறைத்து, தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் இதனைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த பெண்ணொருவரே சுங்க திணைக்களத்தின் போதை கட்டுப்பாட்டு பிரிவின்

அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென, சுங்க

திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரின் பெயருக்கு, 4,048 போதை மாத்திரைகள்

பொதியிடப்பட்டு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

49 பேருக்கு கொரோனா-பேலியகொட மீன்சந்தை அடித்து பூட்டு

49 பேருக்கு கொரோனா-பேலியகொட மீன்சந்தை அடித்து பூட்டு

பேலியகொட மீன் சந்தை கட்டடத் தொகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே,

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென களனி சுகாதார அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் அதிகமானோர் பேலியகொட மீன்

சந்தைக்கு வருகைத் தருவதால், தொற்று நோய் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய,

நேற்று முன்தினம் (19) இங்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது, 49 பேருக்கு கொரோனா

தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் ஆரம்பம்

20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் ஆரம்பம்

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது நடைப்பெறுகின்றது.

இந்த விவாதம் நாளை வரை இடம்பெறவுள்ளது. 20 ஆவது அரசியல்

யாப்பு திருத்த விவாதத்தை ஆரம்பித்த நீதி அமைச்சர் அலி சப்ரி உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, குழுநிலையின்

போது 20 ஆவது அரசியல் யாப்பு சட்ட மூலத்திற்காக சமர்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள திருத்தங்களை இன்று மாலை 6.00 மணிக்கு

முன்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சபையில் அறிவித்தார்.

நீதி அமைச்சர் தனது உறையின் போது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு இன்று சேர்க்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திருத்தங்களின் சாரம்சங்களை தெளிவுப்படுத்தினார். அரசியல்

யாப்புக்கு பொருத்தமற்ற எந்த திருத்தங்களும் குழுநிலையின் போது தாம் சமர்ப்பிக்கப் போவதில்லை என அமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு

தெரிவித்து சபையில் செயல்பட்டு வருகின்றனர். 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக இன்றும்

எதிர்க்கட்சி ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள 05 மற்றும் 22 ஆவது சரத்துக்களை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கமைவாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாதிருப்பதற்கான சரத்து மற்றும் தேர்தல் காலப்பகுதியில்

பணிகளை மேற்கொள்வதற்கு அமைவான சரத்து நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.