கொரனோ எதிரொலி -வீடுகளுக்கு மருந்துகள் விநியோகம்
தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள
அரச மருந்தகங்களிலிருந்து (ஒசுசல), ஒன்லைன் மூலமாக
மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசேட அறிக்கையினூடாக இது தொடர்பில்
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, அரச தகவல் பணிப்பாளர் ஜெனரல் நாலக கலுவௌ தெரிவித்துள்ளார்.
மேற்படி அறிவித்தலுக்கு அமைவாக, ஒன்லைன் மூலமாக மருந்துகளை
விநியோகிப்பதை மீள ஆரம்பிக்குமாறு, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர்
ஜெனரல் டொக்டர் எஸ்.ஸ்ரீதரன் அரச மருந்தகங்களுக்குப் பணித்துள்ளார்.